12-06-2005, 01:03 AM
இன்று இலண்டனில் "சுனாமி" பற்றி BBC இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிலே அவர்கள் எங்கள் பெண் கடற்புலிகளையும் நேர்காணல் செய்திருந்தார்கள். முன்னர் நாம் சுனாமி அனர்த்தத்தின்போது "ரிரிஎன்" தொலைக்காட்சியில் பார்த்த சில காட்சிகளும் ஒளிபரப்பாகின. அவற்றை மீண்டும் பார்த்தபோது நெஞ்சத்தை என்னவோ செய்தது, கண்களில் நீர் மீண்டும் முட்டியது. எமது "ரிரிஎன்" இருந்திருக்காது விட்டிருந்தால் நாம் பலவற்றைப் பார்த்திருக்க முடியாது. தாம் செய்கின்ற தவறுகளை மறைப்பதற்காகவே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். இவையொன்றும் எமக்குப் புதிதல்ல. நேருக்குநேர் நின்று வெல்ல முடியாமல் தமது நயவஞ்சக சுூழ்ச்சிகளால் வெல்ல முனைகிறார்கள் அவ்வளவுதான். ஆனால் நீதியும், நேர்மையும் ஒருபோதும் தோற்காது.

