Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிடித்த சில கவிகள்...
#1
<b>கனவும்...கவியும்...</b>

நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!

அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி!
இந்த முறை
நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்!
அதனால் எழுந்து ஓட முடியாது
என்ற தைரியத்தில்!
காலையில் நாட்குறிப்பு இருந்தது!
வரிகள் இல்லை! - அடடா
பேனாவில் மையில்லை!

அதற்கு அடுத்த நாளும்
அதே கனவு
அதே வரி
குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை
கண்ணாடிப் போட்டு
உறுதிப்படுத்தியப் பின்
உறங்கிப் போனேன்!
மறுநாள் காலையில்
என் கையெழுத்து
எனக்கே புரியவில்லை!

இன்றைக்கு அந்த வரிகளை
கனவில் கண்டவுடன்
எழுந்து அமர்ந்து
முழுதாய் கவிதை எழுதி
முடித்தப் பின்னரே
உறங்கப் போகவேண்டும்!
உறுதியுடன் கண்ணயர்ந்தேன்!

அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்! :? :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி தமிழோவியம்
..
....
..!
Reply


Messages In This Thread
பிடித்த சில கவிகள்... - by ப்ரியசகி - 12-02-2005, 06:50 PM
[No subject] - by Vishnu - 12-04-2005, 09:25 PM
[No subject] - by Jenany - 12-05-2005, 10:41 AM
[No subject] - by RaMa - 12-07-2005, 08:24 AM
[No subject] - by ப்ரியசகி - 02-04-2006, 05:24 PM
[No subject] - by Rasikai - 02-04-2006, 10:30 PM
[No subject] - by RaMa - 02-05-2006, 06:06 AM
[No subject] - by starvijay - 02-07-2006, 04:29 AM
[No subject] - by ப்ரியசகி - 02-19-2006, 06:57 PM
[No subject] - by Eelam Angel - 02-19-2006, 11:59 PM
[No subject] - by RaMa - 02-20-2006, 06:18 AM
[No subject] - by சந்தியா - 02-22-2006, 10:52 AM
[No subject] - by Unnavan - 02-23-2006, 06:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)