12-01-2005, 10:06 AM
தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்துக்கு
உதவிடும் நாளிதழ் உதயன்
புலிகளின் குரல் புகழாரம்
தமிழத்தேசியக் கருத்துருவாக்கத்துக்கு உதவிடும் நாளிதழ் உதயன்' இவ்வாறு உதயனுக்கு' புகழாரம் சூட்டியுள்ளது. புலிகளின் குரல்' வானொலி. 20 ஆவது அகவையைப் பூர்த்தி செய்துள்ள உதயனுக்கு' வாழ்த்துத் தெரிவித்து புலிகளின் குரல்' வானொலி நேற்றிரவு தனது 9 மணிச் செய்தியில் வாழ்த்துச் செய்தி ஒன்றை ஒலிபரப்புச் செய்தது. அந்தச் செய்தியில்:
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் தமிழ்த் தேசிய நாõளேடுகளில் ஒன்றான "உதயன்' நாளேடு தனது 20 ஆண்டு சேவையை நிறைவுசெய்து 21 ஆம் ஆண்டில் கால்பதித்துள்ளது.
சிறிலங்கா அரசினதும் படைகளதும் ஒட்டுக்குழுக்களினதும் நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கும் மத்தியில் "உதயன்' நாளேடு தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.
1985 முதல் வெளிவரும் "உதயன்' நாளேடு 1987 இல் இந்திய இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலரை இழந்தது.
இதனால் முதற்தடைவையாக "உதயன்' அப்போது மூன்றுமாதங்கள் வெளிவராது நின்றது.
1988 இல் தமிழ்த் துரோகக் கும்பல் இந்தியப் படையின் துணையுடன் அதன் அச்சு இயந்திரங்களைக் கைப்பற்றிச் சென்றதாலும் யாழ்ப்பாணத்தில் நாளேடுகளைத் தடைசெய்ததாலும் 137 நாள்கள் உதயன் வெளிவரவில்லை.
1990 இல் "உதயன்' சிறிலங்கா வான் படைத் தாக்குதலுக்கு உள்ளானது.
1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போதும் இந்த நாளேடு 81நாள்கள் வெளிவரவில்லை.
அதன் பின்னர் வெளிவந்த "உதயன்' சிறிலங்கா இராணுவ ஆக்கிமிப்புக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கருத்தையும் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளையும் தெரிவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டது. அதனால் அதன்மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
2000 இல் குறிப்பிட்ட காலத்திற்கு "உதயன்' சிறிலங்கா அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. எதிரிகளுக்கு மத்தியில் உதயன் நாளேடு, 20 ஆண்டுகளைக் கடந்த 27ஆம் நாள் பூர்த்தி செய்தது.
20 ஆண்டுகாலப் பகுதியை பூர்த்தி செய்து 21 ஆம் ஆண்டில் கால் பதித்து இயங்கும் உதயன் நாளேட்டிற்கு "புலிகளின் குரல்' வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
உதவிடும் நாளிதழ் உதயன்
புலிகளின் குரல் புகழாரம்
தமிழத்தேசியக் கருத்துருவாக்கத்துக்கு உதவிடும் நாளிதழ் உதயன்' இவ்வாறு உதயனுக்கு' புகழாரம் சூட்டியுள்ளது. புலிகளின் குரல்' வானொலி. 20 ஆவது அகவையைப் பூர்த்தி செய்துள்ள உதயனுக்கு' வாழ்த்துத் தெரிவித்து புலிகளின் குரல்' வானொலி நேற்றிரவு தனது 9 மணிச் செய்தியில் வாழ்த்துச் செய்தி ஒன்றை ஒலிபரப்புச் செய்தது. அந்தச் செய்தியில்:
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் தமிழ்த் தேசிய நாõளேடுகளில் ஒன்றான "உதயன்' நாளேடு தனது 20 ஆண்டு சேவையை நிறைவுசெய்து 21 ஆம் ஆண்டில் கால்பதித்துள்ளது.
சிறிலங்கா அரசினதும் படைகளதும் ஒட்டுக்குழுக்களினதும் நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கும் மத்தியில் "உதயன்' நாளேடு தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.
1985 முதல் வெளிவரும் "உதயன்' நாளேடு 1987 இல் இந்திய இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலரை இழந்தது.
இதனால் முதற்தடைவையாக "உதயன்' அப்போது மூன்றுமாதங்கள் வெளிவராது நின்றது.
1988 இல் தமிழ்த் துரோகக் கும்பல் இந்தியப் படையின் துணையுடன் அதன் அச்சு இயந்திரங்களைக் கைப்பற்றிச் சென்றதாலும் யாழ்ப்பாணத்தில் நாளேடுகளைத் தடைசெய்ததாலும் 137 நாள்கள் உதயன் வெளிவரவில்லை.
1990 இல் "உதயன்' சிறிலங்கா வான் படைத் தாக்குதலுக்கு உள்ளானது.
1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போதும் இந்த நாளேடு 81நாள்கள் வெளிவரவில்லை.
அதன் பின்னர் வெளிவந்த "உதயன்' சிறிலங்கா இராணுவ ஆக்கிமிப்புக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கருத்தையும் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளையும் தெரிவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டது. அதனால் அதன்மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
2000 இல் குறிப்பிட்ட காலத்திற்கு "உதயன்' சிறிலங்கா அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. எதிரிகளுக்கு மத்தியில் உதயன் நாளேடு, 20 ஆண்டுகளைக் கடந்த 27ஆம் நாள் பூர்த்தி செய்தது.
20 ஆண்டுகாலப் பகுதியை பூர்த்தி செய்து 21 ஆம் ஆண்டில் கால் பதித்து இயங்கும் உதயன் நாளேட்டிற்கு "புலிகளின் குரல்' வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
" "

