06-22-2003, 09:43 AM
உலகின் கண்களைக் கவராமல் வன்னியில்
இ ன்று உலகிலே ஒருபுறம் கொடிய ஆட்கொல்லி நோய்களாலும் மறுபுறம் யுத்தங்களின்போது விதைக்கப்பட்ட மிதிவெடிகளினாலும் மக்கள் பாதிப்புற்று அழிவதும், அங்கவீனராவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி விட்டது. செவ வாய் வரையும் சென்று ஆராயுமளவிற்கு வளர்ந்துவிட்ட விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்திலும் இந்த ஆட்கொல்லி நோய்களை வெல்லமுடியாமல் இருப்பது விந்தைதான். ஆனால், இரண்டாவதாகக் குறிப்பிட்ட 'வெடிபொருள்' அபாயத்தினின்றும் மக்களைக் காப்போம் என்ற சர்வதேச அமைதிபேணும் நிறுவனங்களின் ஒருமித்த வாக்கியம் வன்னியில் வெறும் வாக்கியமாகத் தொக்கி நிற்பது அதனைவிட விந்தைதான்.
இத்தருணத்திலும் தாரை, தப்பட்டைகளின் ஓசையின்றி, ஆரவாரமின்றி வன்னிமக்களின் சுபீட்சமான எதிர்கால வாழ்வுக்காக மிதிவெடிகளை அகற்றும் மனிதநேயப்பணியொன்று 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டு செவ வனே தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றது. எவ வித இராணுவ நோக்கங்களுமின்றி மக்களை வெடிபொருள் அபாயத்தினின்றும் நீக்கி, அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு வழிசமைப்பது என்ற ஒன்றையே தமது தாரக மந்திரமாகக் கொண்டு கண்ணிவெடியகற்றும் பிரிவினர் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் பிரத்தியேக இராணுவத் தயாரிப்புக்களின் முதல் கொள்வனவாளனான சிறீலங்காவினால் பலதரப்பட்ட மிதிவெடிகளும் கொள்முதல் செய்யப்பட்டு வன்னி மண்ணின் எல்லையெங்கும், குறித்த வரையறைகளை மீறி, இனங்காண முடியாத மர்ம ஒழுங்கமைப்பில் பல இலட்சம் மிதிவெடிகளும், கண்ணிவெடிகளும் வகைதொகையின்றி விதைக்கப்பட்டுள்ளன. இன்று ஒப்பீட்டளவில் தென்னாசியாவின் 'மிதிவெடிக் களஞ்சியம்' வன்னி மண்ணென்றால் அதில் மிகையேதுமில்லை எனக் கூறுமளவிற்கு இங்கு மிதிவெடிகள் மலிந்து பரந்து காணப்படுகின்றன. என்ன நோக்கத்திற்காக இதனை விதைத்தார்களோ அதன் பயனின்றி, இது நாள்வரை அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கும், அங்க இழப்புகளுக்கும் காரணமாகி அதன் பணியை செவ வனே நிறைவேற்றி வந்துள்ளது. விதைக்கப்பட்ட மிதிவெடிகளால் பாதிப்படைவதற்கு தமிழன் என்ற தகுதி மட்டும் போதும் என்ற சிறீலங்கா இனவாத அரசின் கபடநோக்கம் இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?
தமிழீழப் பிரதேசங்களான மணலாறு தொடக்கம் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, மாங்குளம், கனகராயன்குளம், இரணைஇலுப்பைக்குளம், முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியமடு, பள்ளமடு, ஆகிய மக்களின் வாழ்விடங்களை ஊடறுத்து ஒரு தொகுதியாகவும் ஆனையிறவைச் சூழவும் சுட்டதீவு, பரந்தன், திருவையாறு, பன் னங்கண்டி, ஊரியான், தட்டுவன்கொட்டி ஆகிய மக்கள் வாழ்விடங்களை ஊடறுத்து, இன்னோர் தொகுதியாகவும் இம்மிதிவெடிகள் காணப்படுகின்றன. இதுநாள்வரை வன்னி மக்கள் தமது நாளாந்தப் பணி எதனைச் செய்வதாக இருந்தாலும் அதனை நிறைவேற்றிவிட்டு தாம் உயிருடன் திரும்புவோமா என்ற அச்ச உணர்வுடன்தான் தமது நாளாந்த வாழ்வினை ஓட்டிவந்தார்கள். எங்கு திரும்பினாலும் மிதிவெடி அச்சுறுத்தல்.
மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு தனது பணியைத் தொடங்கியது. வன்னி மண்ணில் உள்ள அனைத்து மிதிவெடிகளையும் உடன் அகற்றுதல் சாத்தியமற்று இருப்பினும் மக்கள் வாழ்விடங்களை சூழவுள்ள மிதிவெடிகளை உடன் அகற்ற முடிவு செய்தது. அதன்படி, இரண்டாவது தொகுதியாகக் கூறப்பட்ட கிளிநகரைச் சூழ்ந்த, மிகுதியாக மக்கள் வாழ்விடமாக இருந்த பகுதிகள் மிதிவெடியகற்றும் பணிக்கு முன்னுரிமைப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாங்குளம், ஒலுமடு, நெடுங்கேணி பகுதிகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
இன்றைவரை 82,000ற்கும் மேற்பட்ட மிதிவெடிகளும் பல்லாயிரக்கணக்கான அபாயகரமான வெடிபொருட்களும் மீட்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 37,600,000 சதுர மீற்றர் மிதிவெடி வயல்களாக இருந்த நிலப்பரப்பு மக்கள் வாழ்விடமாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இப்பகுதிகளில் மேலும் உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதிக்கு முன்னர் ஏற்பட்ட மிதிவெடி விபத்துக்கள், உயிரிழப்புகள், அங்கவீனர்களின் தொகையுடன் ஒப்பிடும்போது, தற்போது பாதிப்புற்றோர் தொகை இல்லை என்று கூறுமளவிற்கு முன்னேற்றம் காணப்படுகிறது. அலட்சியப் போக்கில் இடம்பெறும் ஒருசில விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ வொரு வன்னிவாழ் தமிழ் மகனும் தனது சொந்தப் பாதங்களுடன் இன்று நடமாடுவதைக் கண்ணுற்று 'மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் ஒவ வொரு அங்கத்தவனும் தனக்குள் புளகாங் கிதம் அடைகின்றான்'
இருப்பினும் இவ அங்கத்தவன் ஒவ வொருவனும் இம்மக்களுக்காக நாளாந்தம் சேற்றிலும், தண்ணீரிலும், முட்புதர்களிலும், பற்
றைகளிலும், கல்போன்ற கரடான நிலத்திலும், சுடுமணலிலும், வெய்யில், மழை எனப்பாராது கயிற்றின் மேல் நடப்பது போன்றும் கரணம் தப்பினால் நிச்சயம் மரணம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மனிதாபிமானப் பணியை ஆற்றி வருகின்றான். இம்மனிதாபிமானப் பணியில் தன்னலம் கருதாது செயற்பட்ட லிங்கம் என்ற தொண்டன் தனது உயிரையே அர்ப்பணித்ததையும் இன்னொருவர் தனது காலினை இழந்ததையும் நாம் மறக்கக்கூடாது. அந்த அனுபவத்துடன் மேலதிக அனாவசிய இழப்புக்களைத் தவிர்த்து இன்னமும் உரத்துடனும் உத்வேகத்துடனும் தனது பணியைச் செய்துவந்தாலும் அவர்கள் உள்ளங்களில் உள்ள ஏக்கங்களும், மனக்கு முறல்களும் ஏராளம் ஏராளம்.
மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் ஒவ வொரு அங்கத்தவனதும் குடும்பச்சுமையும் ஏழ்மையும் சொல்லிலடங்காது. இந்நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தம்மாலியன்ற அளவில், தமது நிர்வாகச் செலவுகளை மட்டுப்படுத்தி இப்பணியிலீடுபடும் 150 தொண்டர்களுக்குமான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கிவருவதை இவ விடத்தில் சுட்டிக்காட்டுவது நன்றாகும். உலகில் ஏனைய உள்நாட்டு யுத்தங்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச நிறுவனங்களின் மிதிவெடியகற்றும் தொண்டர்களுக்கு பணியின்போது, நவீன தொழில்நுட்ப மிதிவெடி கண்டறி சாதனங்கள் (ஆநுவுயுடு னுநுவுநுஊவுநுசுளு), பாதுகாப்பு அங்கிகள், முகமூடிகள், காலணிகள் என்பனவும் அதியுயர் மாதாந்தக் கொடுப்பனவும் இதர காப்புறுதி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், இவ வசதிகளை நினைத்துப்பார்க்க முடியாத நிலையில் தற்போது வன்னி மண்ணில் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் மக்களுக்காற்றும் பணி எந்தவகையிலும் குறைந்ததோ சளைத்ததோ அல்ல. இம்மாபெரும் மனிதநேயப்பணி சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பினும் மக்கள் மனங்களால் மறக்கப்படமுடியாததாகவுள்ளது.
இவர்களின் மனிதாபிமானப்பணியை பலமுறை பார்த்து, மெச்சி, வியந்ததுடன், தமிழீழத்தில் மிதிவெடியகற்றும் தொண்டர்களை, அவர்களால் அகற்றப்பட்ட 65,000 மிதிவெடிகளுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துச்சென்ற சர்வதேச நிறுவன அங்கத்தவர்கள் வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிட்டமை வேதனை தரும் விடயமாகும். இவர்களின் பாராமுகத் தன்மை மிதிவெடியகற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்நாட்டு யுத்தம் நடைபெறும் பலநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒரு மிதிவெடியை அகற்றுவதற்கான நிர்வாகச் செலவாகப் பயன்படுத்தும் உலக நிறுவனங்கள், வசதிகள் ஏதுமின்றி பொதுநல நோக்கு ஒன்றுக்காக செயற்பட்டு வரும் இத்தொண்டர்களின் சேவையை பொறுத்துக்கொள்ள முடியாம லும் இருக்கலாம். ஏன் சிறீலங்காவின் ஆட்சியின் கீழுள்ள யாழ். மண்ணில்கூட 'சிம்பாவே' கண்ணிவெடியகற்றும் பிரிவினர் எதை விதைத்துச் சென்றனர் என்பதை உலகே அறியும்.
வன்னி மண் அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்குவதாகக் காரணம் காட்டி உதவமறுக்கும் சர்வதேச நிறுவனங்களால் இம் மனித நேயப்பணியை அங்கீகரிக்க முடியவில்லை. யாழ். மண்ணில் அதிநவீன மிதிவெடியகற்றும் கருவிகளுடன் சகலவசதிகளுடனும் செய்துமுடிக்கப்பட்ட பணியையும், மரபுவழி 'முள்' உபகரணங்களுடன் எதுவித நிர்வாகச் செலவுமின்றி இங்கு நிகழும் பணியையும் ஒப்பிட்டாவது முடிவெடுப்பார்களா? மனிதாபிமானப்பணி எங்கு நடைபெறுவது என்பது முக்கியமல்ல. எப்படி நடக்கிறது என்பதே முக்கியம். இதனை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் புரிந்துகொண்டு செயற்பட்டால் 'மனிதநேயம்' என்பதற்கான சரியான வரைவிலக்கணம் பாதுகாக்கப்படும்.
தமிழீழ மண்ணில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்த கண்ணிவெடியகற்றும் பிரிவினர் இன்றுவரை 82,000 மிதிவெடிகளையும், 47,144 பீரங்கி எறிகணைகளையும் 86 டாங்கி எறிகணைகளையும் 34 சு.ஊ.டு எறிகணைகளையும் 2119 சு.P.பு எறிகணைகளையும் 1633 துப்பாக்கி எறிகணைகளையும் 8,388 கைக்குண்டுகளையும் 86 வாகன மிதிவெடிகளையும் 360 யம்மிங் மிதிவெடிகளையும் 929 கிளைமோர் கண்ணிவெடிகளையும் 211 இடறு கண்ணிவெடிகளையும் 118 டோப்பிடோக்களையும் 781 அலேட் கண்ணிவெடிகளையும் 11 விமானக் குண்டுகளையும் 43 உயர்சக்தி வெடிமருந்து அடைக்கப்பட்ட கொள்கலன்களையும் 27 துப்பாக்கிகளையும் அகற்றியுள்ளனர் என்பதும் அவற்றை எந்தவொரு தரப்பினரும் மீளப்பயன்படுத்த முடியாதவாறு பொதுமக்கள் முன்னிலையில் அழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்னியில் செயற்பட்டுவரும் இந்த மனித நேயத் தொண்டர்கள் 37,600,000 சதுர மீற்றர்கள் பிரதேசத்தை, எந்த நவீன கருவிகளும் இல்லாமலே கண்ணிவெடியகற்றி மக்கள் வாழிடங்களாக்கியுள்ளனர். இதேவேளை சகல நவீன தொழில்நுட்பங்களுடனும் செயற்பட்டுவரும் யாழ். மண்ணில் 230,000 சதுர மீற்றர்கள் பிரதேசம் மட்டுமே இதுவரை கண்ணிவெடியகற்றப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் 998 மிதிவெடிகளையும் 384 வெடிபொருட்களையுமே அவர்கள் கண்டுபிடித்து செயலிழக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999இல், உலக மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணிக்காக, ஐ.நா.வின் கண்ணிவெடி செயற்பாட்டுப்பிரிவால் 16 உலக நாடுகளுக்கென 568 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது. ஆயினும் வன்னிமண்ணுக்காக ஒரு சதம் கூட எந்த அமைப்புக்களும் ஒதுக்காத நிலையில் ஒரு மிதிவெடி அகற்றுவதற்காக 185 இலங்கை ரூபாக்கள் செலவில் இப்பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழக முன்னெடுத்து வருவது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும்.
வன்னி மண்ணில் நடைபெறும் இம்மனிதநேயப்பணி உலகின் கவனத்தை ஈர்க்காவிட்டாலும் அதனால் அப்பாவித் தமிழ் மக்கள் அடையும் நன்மைகள் மிக உச்சமானவை. மிதிவெடி அகற்றும் பணி ஆரம்பமாவதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புக்கள் பலமடங்காக தற்போது குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டிநிற்கின்றன. 1999 காலப்பகுதியில் வருடத்திற்கு 14 ஆக இருந்த இறப்புக்கள் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் 05 ஆகவும், மிதிவெடியால் ஏற்படும் காலிழப்புக்கள் 77 இலிருந்து 20 ஆகவும், கண் இழப்புக்கள் 13 இலிருந்து 04 ஆகவும், கை அல்லது கால்களில் விரல்களை இழந்தவர்கள் தொகை 17 இலிருந்து 05 ஆகவும் கடுமையான உடற்காயத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை 77 இலிருந்து 32 ஆகவும் குறைவடைந்துள்ளது. இவ வாறாக ஒரு வருடத்தில் மொத்த விபத்துக்கள் 198 ஆக இருந்த நிலை மாறி தற்போது வெறும் 66ஆக வீழ்ச்சி அடைந்துள்ள தென்றால் அந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் இந்தத் தொண்டர்களையே சாரவேண்டும்.
இவ வாறாக, களமுனையில் படுதோல்வியைச் சந்திக்கும் சிறீலங்கா அரசபடைகள் தங்கள் பலவீனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அப்பாவித் தமிழ் மக்களை குறிவைத்து வேண்டுமென்றே வெடிக்கக்கூடிய நிலையில் விட்டுச் செல்லும் இந்த வெடிபொருட்களின் அபாயத்தில் இருந்து தமிழ்மண் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருப்பதற்கு முற்றுமுழுதாக துணைநிற்கும் இந்தத் தொண்டர்களின் செயற்பாடு என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டியது. எதிரியின் நிழல் ஆக்கிரமிப்பாக தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் இந்த வெடிபொருட்கள் இனிமேலும் தமிழீழ மக்களைப் பலியெடுப்பதை இந்த மனித நேயப்பணியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலகம் கண்டும் காணாத நிலையில் முகம் திருப்பிக் கொண்டாலும் தமது மக்களுக்காக இவர்கள் தங்கள் உயிர்களையும் அங்கங்களையும் அர்ப்பணித்து தம்பணியைத் தொடரவே போகின்றார்கள்.
இ ன்று உலகிலே ஒருபுறம் கொடிய ஆட்கொல்லி நோய்களாலும் மறுபுறம் யுத்தங்களின்போது விதைக்கப்பட்ட மிதிவெடிகளினாலும் மக்கள் பாதிப்புற்று அழிவதும், அங்கவீனராவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி விட்டது. செவ வாய் வரையும் சென்று ஆராயுமளவிற்கு வளர்ந்துவிட்ட விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்திலும் இந்த ஆட்கொல்லி நோய்களை வெல்லமுடியாமல் இருப்பது விந்தைதான். ஆனால், இரண்டாவதாகக் குறிப்பிட்ட 'வெடிபொருள்' அபாயத்தினின்றும் மக்களைக் காப்போம் என்ற சர்வதேச அமைதிபேணும் நிறுவனங்களின் ஒருமித்த வாக்கியம் வன்னியில் வெறும் வாக்கியமாகத் தொக்கி நிற்பது அதனைவிட விந்தைதான்.
இத்தருணத்திலும் தாரை, தப்பட்டைகளின் ஓசையின்றி, ஆரவாரமின்றி வன்னிமக்களின் சுபீட்சமான எதிர்கால வாழ்வுக்காக மிதிவெடிகளை அகற்றும் மனிதநேயப்பணியொன்று 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டு செவ வனே தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றது. எவ வித இராணுவ நோக்கங்களுமின்றி மக்களை வெடிபொருள் அபாயத்தினின்றும் நீக்கி, அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு வழிசமைப்பது என்ற ஒன்றையே தமது தாரக மந்திரமாகக் கொண்டு கண்ணிவெடியகற்றும் பிரிவினர் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் பிரத்தியேக இராணுவத் தயாரிப்புக்களின் முதல் கொள்வனவாளனான சிறீலங்காவினால் பலதரப்பட்ட மிதிவெடிகளும் கொள்முதல் செய்யப்பட்டு வன்னி மண்ணின் எல்லையெங்கும், குறித்த வரையறைகளை மீறி, இனங்காண முடியாத மர்ம ஒழுங்கமைப்பில் பல இலட்சம் மிதிவெடிகளும், கண்ணிவெடிகளும் வகைதொகையின்றி விதைக்கப்பட்டுள்ளன. இன்று ஒப்பீட்டளவில் தென்னாசியாவின் 'மிதிவெடிக் களஞ்சியம்' வன்னி மண்ணென்றால் அதில் மிகையேதுமில்லை எனக் கூறுமளவிற்கு இங்கு மிதிவெடிகள் மலிந்து பரந்து காணப்படுகின்றன. என்ன நோக்கத்திற்காக இதனை விதைத்தார்களோ அதன் பயனின்றி, இது நாள்வரை அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கும், அங்க இழப்புகளுக்கும் காரணமாகி அதன் பணியை செவ வனே நிறைவேற்றி வந்துள்ளது. விதைக்கப்பட்ட மிதிவெடிகளால் பாதிப்படைவதற்கு தமிழன் என்ற தகுதி மட்டும் போதும் என்ற சிறீலங்கா இனவாத அரசின் கபடநோக்கம் இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?
தமிழீழப் பிரதேசங்களான மணலாறு தொடக்கம் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, மாங்குளம், கனகராயன்குளம், இரணைஇலுப்பைக்குளம், முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியமடு, பள்ளமடு, ஆகிய மக்களின் வாழ்விடங்களை ஊடறுத்து ஒரு தொகுதியாகவும் ஆனையிறவைச் சூழவும் சுட்டதீவு, பரந்தன், திருவையாறு, பன் னங்கண்டி, ஊரியான், தட்டுவன்கொட்டி ஆகிய மக்கள் வாழ்விடங்களை ஊடறுத்து, இன்னோர் தொகுதியாகவும் இம்மிதிவெடிகள் காணப்படுகின்றன. இதுநாள்வரை வன்னி மக்கள் தமது நாளாந்தப் பணி எதனைச் செய்வதாக இருந்தாலும் அதனை நிறைவேற்றிவிட்டு தாம் உயிருடன் திரும்புவோமா என்ற அச்ச உணர்வுடன்தான் தமது நாளாந்த வாழ்வினை ஓட்டிவந்தார்கள். எங்கு திரும்பினாலும் மிதிவெடி அச்சுறுத்தல்.
மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு தனது பணியைத் தொடங்கியது. வன்னி மண்ணில் உள்ள அனைத்து மிதிவெடிகளையும் உடன் அகற்றுதல் சாத்தியமற்று இருப்பினும் மக்கள் வாழ்விடங்களை சூழவுள்ள மிதிவெடிகளை உடன் அகற்ற முடிவு செய்தது. அதன்படி, இரண்டாவது தொகுதியாகக் கூறப்பட்ட கிளிநகரைச் சூழ்ந்த, மிகுதியாக மக்கள் வாழ்விடமாக இருந்த பகுதிகள் மிதிவெடியகற்றும் பணிக்கு முன்னுரிமைப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாங்குளம், ஒலுமடு, நெடுங்கேணி பகுதிகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
இன்றைவரை 82,000ற்கும் மேற்பட்ட மிதிவெடிகளும் பல்லாயிரக்கணக்கான அபாயகரமான வெடிபொருட்களும் மீட்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 37,600,000 சதுர மீற்றர் மிதிவெடி வயல்களாக இருந்த நிலப்பரப்பு மக்கள் வாழ்விடமாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இப்பகுதிகளில் மேலும் உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதிக்கு முன்னர் ஏற்பட்ட மிதிவெடி விபத்துக்கள், உயிரிழப்புகள், அங்கவீனர்களின் தொகையுடன் ஒப்பிடும்போது, தற்போது பாதிப்புற்றோர் தொகை இல்லை என்று கூறுமளவிற்கு முன்னேற்றம் காணப்படுகிறது. அலட்சியப் போக்கில் இடம்பெறும் ஒருசில விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ வொரு வன்னிவாழ் தமிழ் மகனும் தனது சொந்தப் பாதங்களுடன் இன்று நடமாடுவதைக் கண்ணுற்று 'மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் ஒவ வொரு அங்கத்தவனும் தனக்குள் புளகாங் கிதம் அடைகின்றான்'
இருப்பினும் இவ அங்கத்தவன் ஒவ வொருவனும் இம்மக்களுக்காக நாளாந்தம் சேற்றிலும், தண்ணீரிலும், முட்புதர்களிலும், பற்
றைகளிலும், கல்போன்ற கரடான நிலத்திலும், சுடுமணலிலும், வெய்யில், மழை எனப்பாராது கயிற்றின் மேல் நடப்பது போன்றும் கரணம் தப்பினால் நிச்சயம் மரணம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மனிதாபிமானப் பணியை ஆற்றி வருகின்றான். இம்மனிதாபிமானப் பணியில் தன்னலம் கருதாது செயற்பட்ட லிங்கம் என்ற தொண்டன் தனது உயிரையே அர்ப்பணித்ததையும் இன்னொருவர் தனது காலினை இழந்ததையும் நாம் மறக்கக்கூடாது. அந்த அனுபவத்துடன் மேலதிக அனாவசிய இழப்புக்களைத் தவிர்த்து இன்னமும் உரத்துடனும் உத்வேகத்துடனும் தனது பணியைச் செய்துவந்தாலும் அவர்கள் உள்ளங்களில் உள்ள ஏக்கங்களும், மனக்கு முறல்களும் ஏராளம் ஏராளம்.
மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் ஒவ வொரு அங்கத்தவனதும் குடும்பச்சுமையும் ஏழ்மையும் சொல்லிலடங்காது. இந்நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தம்மாலியன்ற அளவில், தமது நிர்வாகச் செலவுகளை மட்டுப்படுத்தி இப்பணியிலீடுபடும் 150 தொண்டர்களுக்குமான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கிவருவதை இவ விடத்தில் சுட்டிக்காட்டுவது நன்றாகும். உலகில் ஏனைய உள்நாட்டு யுத்தங்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச நிறுவனங்களின் மிதிவெடியகற்றும் தொண்டர்களுக்கு பணியின்போது, நவீன தொழில்நுட்ப மிதிவெடி கண்டறி சாதனங்கள் (ஆநுவுயுடு னுநுவுநுஊவுநுசுளு), பாதுகாப்பு அங்கிகள், முகமூடிகள், காலணிகள் என்பனவும் அதியுயர் மாதாந்தக் கொடுப்பனவும் இதர காப்புறுதி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், இவ வசதிகளை நினைத்துப்பார்க்க முடியாத நிலையில் தற்போது வன்னி மண்ணில் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் மக்களுக்காற்றும் பணி எந்தவகையிலும் குறைந்ததோ சளைத்ததோ அல்ல. இம்மாபெரும் மனிதநேயப்பணி சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பினும் மக்கள் மனங்களால் மறக்கப்படமுடியாததாகவுள்ளது.
இவர்களின் மனிதாபிமானப்பணியை பலமுறை பார்த்து, மெச்சி, வியந்ததுடன், தமிழீழத்தில் மிதிவெடியகற்றும் தொண்டர்களை, அவர்களால் அகற்றப்பட்ட 65,000 மிதிவெடிகளுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துச்சென்ற சர்வதேச நிறுவன அங்கத்தவர்கள் வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிட்டமை வேதனை தரும் விடயமாகும். இவர்களின் பாராமுகத் தன்மை மிதிவெடியகற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்நாட்டு யுத்தம் நடைபெறும் பலநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒரு மிதிவெடியை அகற்றுவதற்கான நிர்வாகச் செலவாகப் பயன்படுத்தும் உலக நிறுவனங்கள், வசதிகள் ஏதுமின்றி பொதுநல நோக்கு ஒன்றுக்காக செயற்பட்டு வரும் இத்தொண்டர்களின் சேவையை பொறுத்துக்கொள்ள முடியாம லும் இருக்கலாம். ஏன் சிறீலங்காவின் ஆட்சியின் கீழுள்ள யாழ். மண்ணில்கூட 'சிம்பாவே' கண்ணிவெடியகற்றும் பிரிவினர் எதை விதைத்துச் சென்றனர் என்பதை உலகே அறியும்.
வன்னி மண் அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்குவதாகக் காரணம் காட்டி உதவமறுக்கும் சர்வதேச நிறுவனங்களால் இம் மனித நேயப்பணியை அங்கீகரிக்க முடியவில்லை. யாழ். மண்ணில் அதிநவீன மிதிவெடியகற்றும் கருவிகளுடன் சகலவசதிகளுடனும் செய்துமுடிக்கப்பட்ட பணியையும், மரபுவழி 'முள்' உபகரணங்களுடன் எதுவித நிர்வாகச் செலவுமின்றி இங்கு நிகழும் பணியையும் ஒப்பிட்டாவது முடிவெடுப்பார்களா? மனிதாபிமானப்பணி எங்கு நடைபெறுவது என்பது முக்கியமல்ல. எப்படி நடக்கிறது என்பதே முக்கியம். இதனை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் புரிந்துகொண்டு செயற்பட்டால் 'மனிதநேயம்' என்பதற்கான சரியான வரைவிலக்கணம் பாதுகாக்கப்படும்.
தமிழீழ மண்ணில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்த கண்ணிவெடியகற்றும் பிரிவினர் இன்றுவரை 82,000 மிதிவெடிகளையும், 47,144 பீரங்கி எறிகணைகளையும் 86 டாங்கி எறிகணைகளையும் 34 சு.ஊ.டு எறிகணைகளையும் 2119 சு.P.பு எறிகணைகளையும் 1633 துப்பாக்கி எறிகணைகளையும் 8,388 கைக்குண்டுகளையும் 86 வாகன மிதிவெடிகளையும் 360 யம்மிங் மிதிவெடிகளையும் 929 கிளைமோர் கண்ணிவெடிகளையும் 211 இடறு கண்ணிவெடிகளையும் 118 டோப்பிடோக்களையும் 781 அலேட் கண்ணிவெடிகளையும் 11 விமானக் குண்டுகளையும் 43 உயர்சக்தி வெடிமருந்து அடைக்கப்பட்ட கொள்கலன்களையும் 27 துப்பாக்கிகளையும் அகற்றியுள்ளனர் என்பதும் அவற்றை எந்தவொரு தரப்பினரும் மீளப்பயன்படுத்த முடியாதவாறு பொதுமக்கள் முன்னிலையில் அழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்னியில் செயற்பட்டுவரும் இந்த மனித நேயத் தொண்டர்கள் 37,600,000 சதுர மீற்றர்கள் பிரதேசத்தை, எந்த நவீன கருவிகளும் இல்லாமலே கண்ணிவெடியகற்றி மக்கள் வாழிடங்களாக்கியுள்ளனர். இதேவேளை சகல நவீன தொழில்நுட்பங்களுடனும் செயற்பட்டுவரும் யாழ். மண்ணில் 230,000 சதுர மீற்றர்கள் பிரதேசம் மட்டுமே இதுவரை கண்ணிவெடியகற்றப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் 998 மிதிவெடிகளையும் 384 வெடிபொருட்களையுமே அவர்கள் கண்டுபிடித்து செயலிழக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999இல், உலக மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணிக்காக, ஐ.நா.வின் கண்ணிவெடி செயற்பாட்டுப்பிரிவால் 16 உலக நாடுகளுக்கென 568 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது. ஆயினும் வன்னிமண்ணுக்காக ஒரு சதம் கூட எந்த அமைப்புக்களும் ஒதுக்காத நிலையில் ஒரு மிதிவெடி அகற்றுவதற்காக 185 இலங்கை ரூபாக்கள் செலவில் இப்பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழக முன்னெடுத்து வருவது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும்.
வன்னி மண்ணில் நடைபெறும் இம்மனிதநேயப்பணி உலகின் கவனத்தை ஈர்க்காவிட்டாலும் அதனால் அப்பாவித் தமிழ் மக்கள் அடையும் நன்மைகள் மிக உச்சமானவை. மிதிவெடி அகற்றும் பணி ஆரம்பமாவதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புக்கள் பலமடங்காக தற்போது குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டிநிற்கின்றன. 1999 காலப்பகுதியில் வருடத்திற்கு 14 ஆக இருந்த இறப்புக்கள் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் 05 ஆகவும், மிதிவெடியால் ஏற்படும் காலிழப்புக்கள் 77 இலிருந்து 20 ஆகவும், கண் இழப்புக்கள் 13 இலிருந்து 04 ஆகவும், கை அல்லது கால்களில் விரல்களை இழந்தவர்கள் தொகை 17 இலிருந்து 05 ஆகவும் கடுமையான உடற்காயத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை 77 இலிருந்து 32 ஆகவும் குறைவடைந்துள்ளது. இவ வாறாக ஒரு வருடத்தில் மொத்த விபத்துக்கள் 198 ஆக இருந்த நிலை மாறி தற்போது வெறும் 66ஆக வீழ்ச்சி அடைந்துள்ள தென்றால் அந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் இந்தத் தொண்டர்களையே சாரவேண்டும்.
இவ வாறாக, களமுனையில் படுதோல்வியைச் சந்திக்கும் சிறீலங்கா அரசபடைகள் தங்கள் பலவீனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அப்பாவித் தமிழ் மக்களை குறிவைத்து வேண்டுமென்றே வெடிக்கக்கூடிய நிலையில் விட்டுச் செல்லும் இந்த வெடிபொருட்களின் அபாயத்தில் இருந்து தமிழ்மண் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருப்பதற்கு முற்றுமுழுதாக துணைநிற்கும் இந்தத் தொண்டர்களின் செயற்பாடு என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டியது. எதிரியின் நிழல் ஆக்கிரமிப்பாக தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் இந்த வெடிபொருட்கள் இனிமேலும் தமிழீழ மக்களைப் பலியெடுப்பதை இந்த மனித நேயப்பணியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலகம் கண்டும் காணாத நிலையில் முகம் திருப்பிக் கொண்டாலும் தமது மக்களுக்காக இவர்கள் தங்கள் உயிர்களையும் அங்கங்களையும் அர்ப்பணித்து தம்பணியைத் தொடரவே போகின்றார்கள்.

