11-30-2005, 02:47 AM
Quote:ஐயா திரு எங்கே பொய்விட்டீர்கள்? ததேதோ(தமிழ் தேசிய தொலைக்காட்சி) பார்த்தீர்களா? என்ன சொன்னார்கள்? 2நாட்களுக்கு மேலாக உங்களை காணவில்லை பதில் கிடைத்துவிட்டதா?
தமிழ்த்தேசியத் தொலைக்காட்சியை பார்க்க இங்கு எனக்கு வசதியில்லை. காரணம் என்னிடம் சொந்தமாக தொலைக்காட்சிப்பெட்டி இல்லை. அதனால் என்ன சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் எவரும் 1990ல் தான் மாவீரர் நாள் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டதாகச் சொல்லியிருக்க மாட்டார்கள்.இம்முறை வெளியாகியுள்ள விடுதலைப் புலிகள் இதழில் கூட 1989ல் தான் மாவீரர் நாள் ஆரம்பிக்கப்பட்டது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலே வானம்பாடி அவர்கள் இணைத்துள்ள தெளிவான விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
மற்றப்படி 'மக்கள்மயப்படுத்தப்பட்ட" மாவீரர் வார நிகழ்வுகள் 1990ல் நடந்தது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொண்டு, எனது தவறுக்கு மன்னிப்பும் கோரியிருப்பதைத் தாங்கள் கண்கொண்டுபார்க்கவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
இங்கே நான் எழுப்பிய வினா 1989ல் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வை 1990ல் பிரகடனப்படுத்தப்பட்டதாக எவ்வாறு எழுதலாம் என்பதே.
இந்த வினாவிற்குச் சற்றும் பொருத்தமில்லாத விடை 'மக்கள் ஆதரவுடன்" எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற விவகாரம். வேண்டுமானல் 1989ல் பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 முதல் முழுஅளவில் மக்கள்மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருக்கவேண்டும் என்பதை எனது இரண்டாவது பதிவிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
<b>1989ல் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதைத் தாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். 1990முதல் மக்கள்மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதை நானும் ஏற்றுக்கொண்டுள்ளேன்
[b]பணிவுடன் திரு</b>

