11-27-2005, 04:42 PM
Quote:இல்லை அது திலீபனின் நினைவுதினம். மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். தவறு மீண்டும் தவறாக கூடாது
திருஞானசேகரம் ஆசிரியர் அவர்களது வழிகாட்டலில் நாம் மேற்கொண்டது தாங்கள் குறிப்பிட்டதுபோல தியாகி திலீபனின் நினைவுநாள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றி
இங்கே மேலுள்ள எனது பதிவில் நான் சுட்டிக்காட்ட விளைவது ''தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை <b>1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி </b>வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.''என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்தே.
பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு 1990 என்று குறிப்பிடுவது தவறு.
அது அப்படியே செய்தித்தாள்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டு வரலாறு தவறாகப் பதிவு செய்யப்படும் அவலம் நேரக்கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
<b>பணிவுடன் திருமகள்</b>

