11-27-2005, 12:56 PM
thiru Wrote:Quote:உண்மையில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் தான் விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தனர். அதே ஆண்டு விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்.
ஆனால் மக்கள் எழுச்சியுடன் 1990 ஆம் ஆண்டு முதல் தான் கொண்டாடுகின்றனர்
தாங்கள் குறிப்பிட்டதுபோல அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 1990 முதல் இதனைப் பிரகடனப்படுத்தியதாகத்தானே அவர்கள் அங்கே செய்தி போட்டிருக்கிறார்கள்.
1989 மாவீரர் தின ஏற்பாடுகளில் எமக்குத் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த காலஞ்சென்ற தமிழ் ஆசான் திருஞானசேகரம் அவர்களின் வழிகாட்டலில் நாம் ஈடுபட்டிருந்தோம். 1989லேயே மக்கள் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
திருஞானசேகரம் ஆசிரியர் அவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகள் காரணமாக சாவடைந்தார்.
எனவே 1990ல்தான் மக்கள் ஆதரவுடன் கொண்டாடப்பட்டது என்ற கருத்தினையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது.
வேண்டுமானால் ஆக்கிரமிப்பு அகன்று, மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டாடிய நிகழ்வாக 1990 ஆம் வருடத்திய மாவீரர் தினத்தினைக் கூறலாம்
அது அவ்வாறிருக்க எவருடனும் பொருதுவது எனது விருப்பமல்ல. எனினும் வழுக்கள் ஏற்படும்போது சம்பந்தப்பட்டவர்கள்- அது நானாகக் கூட இருக்கலாம்- அதனைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் இத்தகைய பதிவுகளின் காரணம்.
<b>அன்புடன் திரு.</b>
[size=24]தமிழ் தேசிய தொலைக்காட்சியில் இப்போது நேரடியாக நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் கு.வீரா நான் கூறியதை போல் தான் கூறியுள்ளார்.
" "

