06-22-2003, 09:41 AM
வன்னியில் நடைபெற்றுவரும் வனவள
பாதுகாப்பு செயற்பாடுகளும், மீள்வன
மாக்கல் திட்டமும் பற்றிய ஓர் ஆய்வு.
வனம்:
இது வன்னியின் வளம், வன்னியின் பிரதான இயற்கை வளமான காடுகள் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதியை நிறைத்திருக்கின்றன. வன்னியின் பிரதான வருமானம் தரும் மூலதனமாகவும், அழகும் வனப்பும் தரும் இயற்கையின் கொடையாகவும் அமைந்து, தமிழீழத்திற்கு தனிச் சிறப்பையும் கவர்ச்சியையும் வழங்கி வருவதும், இந்தப் பசுங்காடுகளே.
ஆனால், இவ இயற்கையின் கொடை மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்பு இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னமே சிங்களப் பெரும்பான்மையினரால் முடுக்கிவிடப்பட்டது. வடக்கு கிழக்கை தன்னுடைய பிரதேசம் என்று கூறிவந்தாலும் கூட, சிங்கள அரசு தனது பெரும்பான்மை இனத்தின் நுகர்வுத் தேவைக்காக தனது பிரதேச வனவளத்தைப் பயன்படுத்தாமல் அந்நிய தேசமெனக் கருதி, தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள வனத்தையே அழித்து தனது நுகர்வுத் தேவையைப் புூர்த்தி செய்து வந்தது. இது மட்டுமல்லாமல் 70 களில் மேற்கொள்ளப்பட்ட மீள் காடாக்கலின்போது வன்னிப் பிரதேசத்திற்கு ஒத்துவராத நிலக்கீழ் நீரையும் மண்வளத்தையும் அதிகம் உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச்சூழலை பெரும் வரட்சிநிலையிற்கு இட்டுச்செல்லக்கூடிய யுூக்கலிப்டஸ் அதாவது சஞ்சீவி இன மரங்களை கபட நோக்கில் பெரும் தொகையில் வன்னியில் நடுகைசெய்தது.
தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்து ஆளவேண்டும் என்று அவாப்படும் அதிகாரவர்க்கத்தினர், அவ வாசை கைகூடாத பட்சத்தில் அப்பிரதேசங்களை அழித்துச்சிதைத்துச் சுடுகாடாக்கிவிடும் அசிங்கமான நடவடிக்கைகளில் கைதேர்ந்தவர்களாகவே திகழ்கின்றனர். யுத்தத்தை காரணம் காட்டி, தமிழர் செறிந்த குடியிருப்புக்களையும் நகர்ப்புறங்களையும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களால் தரைமட்டமாக்கியதும் தொடர்ந்தும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதும் வெளிஉலகிற்கு தெரியவராத விடயங்களல்ல. குடியிருப்புக்கள் மீது குண்டுகளைக்கொட்டி, அவற்றை பெற்றுவிடாமல் இருப்பதைத் தடுக்கும் நெடுங்கால நயவஞ்சக நோக்கோடு, தமிழர் பிரதேசங்களின் அடிப்படை இயற்கை வளங்களையும், அழித்தொழிக்கத் தொடங்கியிருக்கின்றது. தமிழீழ மக்கள் தங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், சுயதேவைகளைப் புூர்த்தி செய்து சொந்தக் காலில் நிற்பதற்கும் ஆதாரமாக அமைகின்ற இயற்கை வளங்களை இனங்கண்டு அவற்றினை சூறையாடுவதோடு நின்றுவிடாமல், தமக்கு கிட்டாதவை தமிழருக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கோடு செற்பட்டு வருகின்றது. இந்த வகையில்தான் வன்னியின் பிரதான வளமான இயற்கைக் காடுகள் சிங்கள ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டன. நாட்டின் பெரும்பகுதி மக்களின்தேவைக்கான மொத்த காட்டு மரங்களும் வடபகுதிக் காடுகளில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டன. குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மணலாறு ஆகிய பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கும் பாரிய வனங்களிலிருந்தே தேக்கு, முதிரை, சமண்டலை போன்ற பெறுமதிமிக்க மரங்கள் இயற்கையின் சமநிலையைப் பாதிக்கக்கூடிய விதத்தில் வகைதொகையின்றிச் சாய்க்கப்பட்டன. இவற்றில் இருந்து பெறப்படும் பாரிய மரக்குற்றிகள் மற்றும் பலகைகள் தென்பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
அழகான, வளமான தமிழீழ வனங்கள்
தமிழர் தாயக நிலப்பரப்புகளில் உள்ள வனங்களை அழித்துவிட்டு இவ விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காலத்துக்குக் காலம் நிறுவப்பட்டு வந்தன. மணலாறு மாவட்டத்தில் வெலிஓயா, ஜனகபுர மற்றும் பதவியா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இவைதவிர, வன்னிப் பெருநிலப்பரப்பினை ஊடறுத்து காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வன்னியின் வனவளம் அழிக்கப்பட்டது. இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பநாட்களில் மணலாற்றில் மேற்கொள்ளப்பட்ட 'ஏழு சக்திகள்' மற்றும் 'மின்னல்' வன்னியில் மேற்கொள்ளப்பட்ட 'வன்னிவிக்கிரம' போன்ற நடவடிக்கைகளின்போது முதன்முறையாக, வன்னிக்காடுகள் பெருமளவில் சரியத் தொடங்கின. தொடர்ந்து மூன்றாம் ஈழப்போர் ஆரம்பமானதன் பின்னர் என்றுமில்லாதவாறு மூர்க்கமான போர் வன்னியில் மையங்கொண்டது. வன்னிப்பெருநிலத்தை ஊடறுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட 'எடிபல' மற்றும் 'ஜெயசிக்குறு' ஆகிய நடவடிக்கைகளின் போதே ஈழ வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு வன்னியின் வனவளம் அழியத் தொடங்கியது. மழையெனப் பொழிந்த இராணுவத்தின் எறிகணை வீச்சில் சரிந்தன மரங்கள். இராணுவப் பாதுகாப்பு என்ற பெயரில் காப்பரண்களுக்கும் பதுங்குகுழிகளுக்கும் இராணுவ வேலிகளுக்குமென எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. மணலாறு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம், மாங்குளம், மன்னார் என பல்லாயிரம் சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்ட காட்டுப்பகுதியைக் கைப்பற்றிய படையினர் இயற்கையின் சமநிலையில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தத்தக்க வகையில் வனவளத்தை அழித்தனர். வன்னியின் பல்வேறு பிரதேசங்களிலும் நடுகை செய்யப்பட்டிருந்த தேக்கு மரங்கள் அவற்றின் இளவயதிலேயே இராணுவத்தினரால் வெட்டிச் சாய்க்கப்பட்டன. வளம் செறிந்த வன்னிமண்ணை வரட்சியும் வெறுமையும் நிறைந்த பாலைநிலமாக மாற்றிவிடும் நீண்ட கால சதித்திட்டத்தின் ஆரம்பமாகவே இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு நகர்த்தப்பட்டன.
இவை மட்டுமன்றி, தமிழீழ தாயக நிலப்பரப்பின் வனவளம் திருட்டுத்தனமாக ஆக்கிரமிப்பு இராணுவத்தால் சுரண்டப்பட்டது. வன்னிப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத் தளபதிகள் நாம் ஆக்கிரமித்த பெருநிலப்பரப்பிலுள்ள பெறுதற்கரிய பெறுமதிமிக்க மரங்களை வகைதொகையின்றி அரிந்து தென்னிலங்கைக்குக் கடத்தினர். இத்திருட்டுத்தனமான சுரண்டல் நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி மீட்கப்பட்டபின்னர், மரங்கள் அரியப் பயன்படும் அரிதளங்கள் பல பெருங்காடுகளின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டன. வன்னிமண்ணின் வனவளம் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பெருமளவில் சுரண்டப்பட்டமையை இவ அரிதளங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தவிர, நகரங்களில் வாழ்ந்த மக்கள் காட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமையாலும் இடப்பெயர்வுகள் அதிகரித்துக் காணப்பட்டமையாலும், அவர்களுக்கான வாழ்விடங்களை அமைப்பதற்காக தமிழீழ மக்கள் விரும்பியோ விரும்பாமலோ மரங்களை வெட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதுகூட, இயற்கை வன அழிப்புக்கு தமிழீழ மக்களையே கருவியாக பயன்படுத்தி, தமிழீழ மண்ணை பாலைவனமாக்கும் சிறீலங்கா இராணுவத்தின் மறைமுகமான நடவடிக்கையின் பரிமாணங்களே.
பசுமைப் போர்வையில்லாத புூமி உயிரினங்கள் வாழ எவ வகையிலும் உகந்ததல்ல. வனவளத்தை அழிப்பதானது நாட்டின் வளநிலையையும் காலநிலையையும் பாதிப்பதோடு மண் வளம் குன்றிப்போகவும் வழிசமைக்கிறது என்பதை நன்கறிந்திருந்த போதும், போர் மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்தமையால் தமிழீழ தாயகத்தின் வனவளம் அத்துமீறி அழிக்கப்படுவதையோ அல்லது சுரண்டப்படுவதையோ தமிழ் மக்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஆனால், தொண்ணுhறுகளின் பின்னான காலப்பகுதியில் தாயக நிலப்பரப்பில் அத்துமீறிய காடழிப்பு மற்றும் சுரண்டல்களைத் தடுப்பதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த சுதந்திர தேசமொன்றைச் சமைப்பதற்காக, அர்ப்பணிப்புக்களினதும் தியாகங்களினதும் அடித்தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தனித்துவமான தலைமை இது பற்றிச் சிந்திக்கத் தவறவில்லை. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் தமிழீழ விடுதலைப் போரின் உன்னத குறிக்கோள் தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலம் ஒன்றாகவே இருக்கும்போது, தாயகத்தை கட்டியெழுப்பும் தூர நோக்கிலான சிந்தனைகளை கொண்டிருப்பது யதார்த்தமான விடயமாகின்றது. எனினும் யுத்த புூமியில் இராணுவ நகர்வுகளை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் தலைவன், தனது மக்களின் எதிர்கலத்தையும் அவர்கள் வாழப்போகின்ற தேசம் பல்துறையிலும் தன்னிறைவுடன் திகழ்வதற்கான தூரநோக்கான திட்டமிடலையும் சமநேரத்தில் முன்னெடுத்து வருவது வியப்படையவைக்கும் விடயம்தான்.
தாயக நிலப்பரப்பில் அத்துமீறிய காடழிப்பைத் தடுப்பதற்கும் ஏற்கனவே காடழிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை செவ வனே மேற்கொள்ளும் நோக்கில் 1994ஆம் ஆண்டு தமிழீழ வனவள பாதுகாப்புப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. காடுகள் அழிக்கப்படுவதை இயன்றவரை தடைசெய்தல், மீள்வனமாக்கல் திட்டங்கள் மூலம் இயற்கைச் சமநிலையைப் பாதுகாத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளையும் வனவள பாதுகாப்புப் பிரிவு செயற்படுத்தி வருகிறது. இலங்கை வனத்திணைக்களம் 1982இல் மேற்கொண்ட புள்ளிவிபர ஆய்வுகளின்படி வன்னிப் பெருநிலப்பரப்பில் மட்டும் 375854 ஹெக்ரெயர் காடுகள் பேணப்பட்டு வந்தன. இது இலங்கையின் ஒட்டுமொத்த காடுகளில் 36.6 வீதமாக இருந்தது. ஆனால், இராணுவ ஆக்கிரமிப்பின்போது காடழிப்பு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து 36.6 வீதமாக இருந்த வன்னிக் காடு 18.2 வீதமான வீழ்ச்சியடைந்துள்ளமையை வனவளப் பாதுகாப்புப் பிரிவின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ வீழ்ச்சி வீதம் தொடருமானால் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு எழில்கொஞ்சும் வன்னிவள நாடு பாலை நிலமாக மாறும் நிலைகூடத் தோன்றலாம். இதனைக் கருத்திலெடுத்த வனவளப்பாதுகாப்புப் பிரிவு மரங்களைப் பாதுகாக்கும் மகத்தான பணியுடன் கூடிய மீள்வனமாக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வன்னிப் பகுதியில் எந்த மூலை முடுக்கிலாவது காட்டுமரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவது வனவள பாதுகாப புப் ப}h}வினரால் தடுக்கப் படுகிறது. வன்னியில் அனைத்துக் காகளும் பயிற்றுவிக்கப்ப பயிற்றுவிக்கப்பட்ட காடு பேணல் அலுவலர்களால் பராமரிக்கப்படு கிறது. அக்காடுபேணும் அலுவலர்களின் அனுமதியுடனும் நிபுணத்துவம் சார் வழி காட்டலுடனும் காட்டில் காணப்படும் மரங் கள், அவற்றின் பரம்பலிற்கும் முதிர்ச்சிக்குமேற்ப இயற்கைச் சூழலின் சமநிலையைப் பாதிக்காவண்ணம் வெட்டப்பட்டு வன் னியின் பலபகுதிகளிலுமுள்ள வனவளப் பாதுகாப்புப் பிரிவின் மரமடுவங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பிரதேச hPதியாக அமைக்கப்பட்டுள்ள மரமடுவங்களால் மக்களின் மரத்தளபாட மற்றும் மரத் தேவைகள் புூர்த்திசெய்யப்படுகின்றன.
இவை தவிர, வனவளப் பாதுகாப்புப் பிரிவினரின் ஆழுகைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்விடங்களில் அல்லது மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் உள்ள பயன்தரு மரங்களை பிரதேச வனவளப் பாதுகாப்புப் பிரிவினரது அனுமதியின்றி வெட்டுவதும், முற்றாகத்தடை செய்யப்படுகின்றது. காடுகள் அழிக்கப்படுவதை முற்றாகத் தடுக்கவேண்டியதன் அவசியம், மனிதனின் வாழ்க்கை வட்டத்தில் காடுகளின் பங்கு, மீள்வனமாக்கலின் இன்றியமையாத தேவை இயற்கைச் சமநிலையைப் பாது காப்பதில் காடுகளின் பங்கு என்பவை தொடர்பான புூரண கருத்துக்களை மக்களுக்கு வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ வாறாக மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காடழிப்பைத் தடுப்பதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் தமிழீழ வனவளப் பாதுகாப்புப்பிரிவு 1994ஆம் ஆண்டு தொடக்கம் மீள் வனமாக்கல் திட்டங்களை அதிசிரத்தையோடு முன்னெடுத்து வருகின்றது. 1994 ஆம் ஆண்டு வன்னியின் வெள்ளமலைப் பகுதியில் 340 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் 120,100 தேக்கு, சமண்டலை, மலைவேம்பு ஆகிய நாற்றுக்களை நடுகைசெய்ததைத் தொடர்ந்து, ஈழத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் தமிழீழ வனவளப்பாதுகாப்புப் பிரிவின் மகத்தானபணி ஆரம்பமானது.
இராணுவ நடவடிக்கைகளாலும் திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகளாலும் தமிழீழ வனவளம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. 1994ஆம் ஆண்டிலிருந்து வருடாவருடம் மழை காலத்தை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பரட்டைக்காடுகள் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தேக்கு, வேம்பு, மலைவேம்பு, சவுக்கு, சமண்டலை, எக்கேசியா போன்ற பயன்தரு மரக்கன்றுகளை நடுகைசெய்து வருகின்றது. மீள்வனமாக்கல் திட்டம் செயற்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து வருடமொன்றுக்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் வன்னியின் பல பாகங்களிலும் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
1994 தொடக்கம் இன்றைவரை நடுகை செய்யப்பட்ட சுமார் 1,550,200 பல்வகைப்பட்ட மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ வாறாக, 2010 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் நடுகை டிசெய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளில் 75 வீதமானவை மட்டுமே வெற்றியளித்துள்ளன. 1994இன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளாலும் காட்டு விலங்குகளாலும் சில சந்தர்ப்பங்களில் நடுகை செய்யப்படும் மரக்கன்று குறிப்பிட்ட பிரதேச மண் பாங்கிற்கு ஏற்புடையதாக அமையாததாலுமே நடுகைத்திட்டங்கள் அனைத்தும் புூரண வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீதியோர நடுகைத் திட்டங்களாக, வன்னியின் முக்கிய வீதிகளின் இருமருங்குகளிலும் பயன்தரு மரங்கள் நடுகை செய்யப்பட்டு தொடர் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை மருங்கு நடுகைத் திட்டங்களாக, அம்பலப்பெருமாள்-துணுக்காய் சாலை, ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்புச் சாலை, வவுனியா-மாங்குளம் சாலை, மாங்குளம்-மல்லாவிச் சாலை ஆகிய சாலையோரங்களில் நடுகை செய்யப்பட்டுள்ளது.
இவ வாறான மீள்நடுகைகளுக்கான நாற் றுக்கள், உள்@ரில் கிடைக்கப்பெறும் பல் வகை இனங்களையும் சேர்ந்த நல்லின விதைகள் சேகரிக்கப்பட்டு அவ விதைகள் வன வளபாதுகாப்புப் பிரிவின் நாற்றுப் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தகுந்த முறையில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பற்றைக்காடுகள், வெட்டவெளிகள் மற்றும் காடழிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களை இனங்காணும் வனவளபாதுகாப்புப் பிரிவினர் அப்பகுதியில் உள்ள மண்ணை ஆய்வுக்குட்படுத்தியபின் குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மண்பாங்கிற்கு ஏற்ப அப்பகுதிகளில் நடுகை செய்வதற்கெனத் தெரிவுசெய்யப்பட்ட நாற்றுக்களை நடுகை செய்து வருகின்றார்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சனத்தொகை, அபரிமிதமான அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழிற்புரட்சி காரணமாக உலகம் இன்று தனது பசுமைப் போர்வையை இழந்துகொண்டிருக்கிறது. இன்று, வல்லரசு நாடுகள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட பல வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் திடீரென ஞானம் பிறந்தவர்கள் போல காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் மீள்வனமாக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கிச் செயற்பட்டு வருகின்றார்கள்.
ஆனால், வன்னியில் வாழும் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் பல்வேறுபட்ட தடைகளுக்கும், நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுக்கும் அதேநேரம், வருமுன் காக்கும் நடவடிக்கையாக வன்னி மக்களின் புூரண ஆதரவோடு தமிழீழ வனவள பாதுகாப்புப் பிரிவு தன்னாலான மீள் காடாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தாயகத்தின் வளங்களைச் சுரண்டிச் சென்று, தமது தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், தமிழீழ தாயகத்தின் வளங்களை அழிப்பதன் மூலம், குறிப்பாக வன்னியின் வனவளத்தை அழிப்பதன் மூலம் நீண்டகால hPதியில் தமிழீழ தேசத்தின் இயற்கைச் சமநிலையைக் குழப்பத்திற்குள்ளாக்கி, தமிழர் புூமியை வரண்ட பாலைவன நிலைக்கு தள்ளிவிடும் நோக்கில் தொடர்ந்தும், செயற்பட்டுவரும் சிங்களத்திற்கு தமிழீழ மக்கள் கொடுத்த தீர்க்கமான பதில்தான் தமிழீழ வனவள பாதுகாப்புப் பிரிவின் மீள்வனமாக்கல் திட்டங்கள். பாரம்பரியமான தமிழர் தாயகப் பிரதேசத்தை வளங்களற்ற, மக்கள் வாழத் தகுதியற்ற சுடுகாடாக மாற்றிவிடத் துடிக்கும் சிங்கள அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமான வியுூகங்களாக, மீள்நடுகைத் திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் அதேநேரம் வனவளத்தை திட்டமிட்டு ஆக்கபுூர்வமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் வரும் தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவின் செயற்பாடுகள் அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெறவேண்டியவை.
தமிழீழ தாயகத்தில் பலதசாப்தங்களாக நடைபெற்றுவரும் தேசத்தை மீட்கும் புனித விடுதலைப் போரானது, பல்வேறுபட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிரான புரட்சிகளையும் தன்னுள் அடக்கியிருப்பதை பல ஆய்வாளர்கள் உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும், செல்வந்த நாடுகளில் ஜெனீவா மாநாடு போன்ற பெருமெடுப்பில் ஆராயப்படுகின்ற சூழல் மாசடைதலுக்கெதிரான யுத்தத்தையும் பசுமைப் புரட்சியையும் தன்னகத்தே கொண்டிருப்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பாதுகாப்பு செயற்பாடுகளும், மீள்வன
மாக்கல் திட்டமும் பற்றிய ஓர் ஆய்வு.
வனம்:
இது வன்னியின் வளம், வன்னியின் பிரதான இயற்கை வளமான காடுகள் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதியை நிறைத்திருக்கின்றன. வன்னியின் பிரதான வருமானம் தரும் மூலதனமாகவும், அழகும் வனப்பும் தரும் இயற்கையின் கொடையாகவும் அமைந்து, தமிழீழத்திற்கு தனிச் சிறப்பையும் கவர்ச்சியையும் வழங்கி வருவதும், இந்தப் பசுங்காடுகளே.
ஆனால், இவ இயற்கையின் கொடை மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்பு இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னமே சிங்களப் பெரும்பான்மையினரால் முடுக்கிவிடப்பட்டது. வடக்கு கிழக்கை தன்னுடைய பிரதேசம் என்று கூறிவந்தாலும் கூட, சிங்கள அரசு தனது பெரும்பான்மை இனத்தின் நுகர்வுத் தேவைக்காக தனது பிரதேச வனவளத்தைப் பயன்படுத்தாமல் அந்நிய தேசமெனக் கருதி, தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள வனத்தையே அழித்து தனது நுகர்வுத் தேவையைப் புூர்த்தி செய்து வந்தது. இது மட்டுமல்லாமல் 70 களில் மேற்கொள்ளப்பட்ட மீள் காடாக்கலின்போது வன்னிப் பிரதேசத்திற்கு ஒத்துவராத நிலக்கீழ் நீரையும் மண்வளத்தையும் அதிகம் உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச்சூழலை பெரும் வரட்சிநிலையிற்கு இட்டுச்செல்லக்கூடிய யுூக்கலிப்டஸ் அதாவது சஞ்சீவி இன மரங்களை கபட நோக்கில் பெரும் தொகையில் வன்னியில் நடுகைசெய்தது.
தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்து ஆளவேண்டும் என்று அவாப்படும் அதிகாரவர்க்கத்தினர், அவ வாசை கைகூடாத பட்சத்தில் அப்பிரதேசங்களை அழித்துச்சிதைத்துச் சுடுகாடாக்கிவிடும் அசிங்கமான நடவடிக்கைகளில் கைதேர்ந்தவர்களாகவே திகழ்கின்றனர். யுத்தத்தை காரணம் காட்டி, தமிழர் செறிந்த குடியிருப்புக்களையும் நகர்ப்புறங்களையும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களால் தரைமட்டமாக்கியதும் தொடர்ந்தும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதும் வெளிஉலகிற்கு தெரியவராத விடயங்களல்ல. குடியிருப்புக்கள் மீது குண்டுகளைக்கொட்டி, அவற்றை பெற்றுவிடாமல் இருப்பதைத் தடுக்கும் நெடுங்கால நயவஞ்சக நோக்கோடு, தமிழர் பிரதேசங்களின் அடிப்படை இயற்கை வளங்களையும், அழித்தொழிக்கத் தொடங்கியிருக்கின்றது. தமிழீழ மக்கள் தங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், சுயதேவைகளைப் புூர்த்தி செய்து சொந்தக் காலில் நிற்பதற்கும் ஆதாரமாக அமைகின்ற இயற்கை வளங்களை இனங்கண்டு அவற்றினை சூறையாடுவதோடு நின்றுவிடாமல், தமக்கு கிட்டாதவை தமிழருக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கோடு செற்பட்டு வருகின்றது. இந்த வகையில்தான் வன்னியின் பிரதான வளமான இயற்கைக் காடுகள் சிங்கள ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டன. நாட்டின் பெரும்பகுதி மக்களின்தேவைக்கான மொத்த காட்டு மரங்களும் வடபகுதிக் காடுகளில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டன. குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மணலாறு ஆகிய பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கும் பாரிய வனங்களிலிருந்தே தேக்கு, முதிரை, சமண்டலை போன்ற பெறுமதிமிக்க மரங்கள் இயற்கையின் சமநிலையைப் பாதிக்கக்கூடிய விதத்தில் வகைதொகையின்றிச் சாய்க்கப்பட்டன. இவற்றில் இருந்து பெறப்படும் பாரிய மரக்குற்றிகள் மற்றும் பலகைகள் தென்பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
அழகான, வளமான தமிழீழ வனங்கள்
தமிழர் தாயக நிலப்பரப்புகளில் உள்ள வனங்களை அழித்துவிட்டு இவ விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காலத்துக்குக் காலம் நிறுவப்பட்டு வந்தன. மணலாறு மாவட்டத்தில் வெலிஓயா, ஜனகபுர மற்றும் பதவியா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இவைதவிர, வன்னிப் பெருநிலப்பரப்பினை ஊடறுத்து காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வன்னியின் வனவளம் அழிக்கப்பட்டது. இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பநாட்களில் மணலாற்றில் மேற்கொள்ளப்பட்ட 'ஏழு சக்திகள்' மற்றும் 'மின்னல்' வன்னியில் மேற்கொள்ளப்பட்ட 'வன்னிவிக்கிரம' போன்ற நடவடிக்கைகளின்போது முதன்முறையாக, வன்னிக்காடுகள் பெருமளவில் சரியத் தொடங்கின. தொடர்ந்து மூன்றாம் ஈழப்போர் ஆரம்பமானதன் பின்னர் என்றுமில்லாதவாறு மூர்க்கமான போர் வன்னியில் மையங்கொண்டது. வன்னிப்பெருநிலத்தை ஊடறுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட 'எடிபல' மற்றும் 'ஜெயசிக்குறு' ஆகிய நடவடிக்கைகளின் போதே ஈழ வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு வன்னியின் வனவளம் அழியத் தொடங்கியது. மழையெனப் பொழிந்த இராணுவத்தின் எறிகணை வீச்சில் சரிந்தன மரங்கள். இராணுவப் பாதுகாப்பு என்ற பெயரில் காப்பரண்களுக்கும் பதுங்குகுழிகளுக்கும் இராணுவ வேலிகளுக்குமென எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. மணலாறு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம், மாங்குளம், மன்னார் என பல்லாயிரம் சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்ட காட்டுப்பகுதியைக் கைப்பற்றிய படையினர் இயற்கையின் சமநிலையில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தத்தக்க வகையில் வனவளத்தை அழித்தனர். வன்னியின் பல்வேறு பிரதேசங்களிலும் நடுகை செய்யப்பட்டிருந்த தேக்கு மரங்கள் அவற்றின் இளவயதிலேயே இராணுவத்தினரால் வெட்டிச் சாய்க்கப்பட்டன. வளம் செறிந்த வன்னிமண்ணை வரட்சியும் வெறுமையும் நிறைந்த பாலைநிலமாக மாற்றிவிடும் நீண்ட கால சதித்திட்டத்தின் ஆரம்பமாகவே இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு நகர்த்தப்பட்டன.
இவை மட்டுமன்றி, தமிழீழ தாயக நிலப்பரப்பின் வனவளம் திருட்டுத்தனமாக ஆக்கிரமிப்பு இராணுவத்தால் சுரண்டப்பட்டது. வன்னிப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத் தளபதிகள் நாம் ஆக்கிரமித்த பெருநிலப்பரப்பிலுள்ள பெறுதற்கரிய பெறுமதிமிக்க மரங்களை வகைதொகையின்றி அரிந்து தென்னிலங்கைக்குக் கடத்தினர். இத்திருட்டுத்தனமான சுரண்டல் நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி மீட்கப்பட்டபின்னர், மரங்கள் அரியப் பயன்படும் அரிதளங்கள் பல பெருங்காடுகளின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டன. வன்னிமண்ணின் வனவளம் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பெருமளவில் சுரண்டப்பட்டமையை இவ அரிதளங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தவிர, நகரங்களில் வாழ்ந்த மக்கள் காட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமையாலும் இடப்பெயர்வுகள் அதிகரித்துக் காணப்பட்டமையாலும், அவர்களுக்கான வாழ்விடங்களை அமைப்பதற்காக தமிழீழ மக்கள் விரும்பியோ விரும்பாமலோ மரங்களை வெட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதுகூட, இயற்கை வன அழிப்புக்கு தமிழீழ மக்களையே கருவியாக பயன்படுத்தி, தமிழீழ மண்ணை பாலைவனமாக்கும் சிறீலங்கா இராணுவத்தின் மறைமுகமான நடவடிக்கையின் பரிமாணங்களே.
பசுமைப் போர்வையில்லாத புூமி உயிரினங்கள் வாழ எவ வகையிலும் உகந்ததல்ல. வனவளத்தை அழிப்பதானது நாட்டின் வளநிலையையும் காலநிலையையும் பாதிப்பதோடு மண் வளம் குன்றிப்போகவும் வழிசமைக்கிறது என்பதை நன்கறிந்திருந்த போதும், போர் மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்தமையால் தமிழீழ தாயகத்தின் வனவளம் அத்துமீறி அழிக்கப்படுவதையோ அல்லது சுரண்டப்படுவதையோ தமிழ் மக்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஆனால், தொண்ணுhறுகளின் பின்னான காலப்பகுதியில் தாயக நிலப்பரப்பில் அத்துமீறிய காடழிப்பு மற்றும் சுரண்டல்களைத் தடுப்பதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த சுதந்திர தேசமொன்றைச் சமைப்பதற்காக, அர்ப்பணிப்புக்களினதும் தியாகங்களினதும் அடித்தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தனித்துவமான தலைமை இது பற்றிச் சிந்திக்கத் தவறவில்லை. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் தமிழீழ விடுதலைப் போரின் உன்னத குறிக்கோள் தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலம் ஒன்றாகவே இருக்கும்போது, தாயகத்தை கட்டியெழுப்பும் தூர நோக்கிலான சிந்தனைகளை கொண்டிருப்பது யதார்த்தமான விடயமாகின்றது. எனினும் யுத்த புூமியில் இராணுவ நகர்வுகளை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் தலைவன், தனது மக்களின் எதிர்கலத்தையும் அவர்கள் வாழப்போகின்ற தேசம் பல்துறையிலும் தன்னிறைவுடன் திகழ்வதற்கான தூரநோக்கான திட்டமிடலையும் சமநேரத்தில் முன்னெடுத்து வருவது வியப்படையவைக்கும் விடயம்தான்.
தாயக நிலப்பரப்பில் அத்துமீறிய காடழிப்பைத் தடுப்பதற்கும் ஏற்கனவே காடழிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை செவ வனே மேற்கொள்ளும் நோக்கில் 1994ஆம் ஆண்டு தமிழீழ வனவள பாதுகாப்புப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. காடுகள் அழிக்கப்படுவதை இயன்றவரை தடைசெய்தல், மீள்வனமாக்கல் திட்டங்கள் மூலம் இயற்கைச் சமநிலையைப் பாதுகாத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளையும் வனவள பாதுகாப்புப் பிரிவு செயற்படுத்தி வருகிறது. இலங்கை வனத்திணைக்களம் 1982இல் மேற்கொண்ட புள்ளிவிபர ஆய்வுகளின்படி வன்னிப் பெருநிலப்பரப்பில் மட்டும் 375854 ஹெக்ரெயர் காடுகள் பேணப்பட்டு வந்தன. இது இலங்கையின் ஒட்டுமொத்த காடுகளில் 36.6 வீதமாக இருந்தது. ஆனால், இராணுவ ஆக்கிரமிப்பின்போது காடழிப்பு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து 36.6 வீதமாக இருந்த வன்னிக் காடு 18.2 வீதமான வீழ்ச்சியடைந்துள்ளமையை வனவளப் பாதுகாப்புப் பிரிவின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ வீழ்ச்சி வீதம் தொடருமானால் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு எழில்கொஞ்சும் வன்னிவள நாடு பாலை நிலமாக மாறும் நிலைகூடத் தோன்றலாம். இதனைக் கருத்திலெடுத்த வனவளப்பாதுகாப்புப் பிரிவு மரங்களைப் பாதுகாக்கும் மகத்தான பணியுடன் கூடிய மீள்வனமாக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வன்னிப் பகுதியில் எந்த மூலை முடுக்கிலாவது காட்டுமரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவது வனவள பாதுகாப புப் ப}h}வினரால் தடுக்கப் படுகிறது. வன்னியில் அனைத்துக் காகளும் பயிற்றுவிக்கப்ப பயிற்றுவிக்கப்பட்ட காடு பேணல் அலுவலர்களால் பராமரிக்கப்படு கிறது. அக்காடுபேணும் அலுவலர்களின் அனுமதியுடனும் நிபுணத்துவம் சார் வழி காட்டலுடனும் காட்டில் காணப்படும் மரங் கள், அவற்றின் பரம்பலிற்கும் முதிர்ச்சிக்குமேற்ப இயற்கைச் சூழலின் சமநிலையைப் பாதிக்காவண்ணம் வெட்டப்பட்டு வன் னியின் பலபகுதிகளிலுமுள்ள வனவளப் பாதுகாப்புப் பிரிவின் மரமடுவங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பிரதேச hPதியாக அமைக்கப்பட்டுள்ள மரமடுவங்களால் மக்களின் மரத்தளபாட மற்றும் மரத் தேவைகள் புூர்த்திசெய்யப்படுகின்றன.
இவை தவிர, வனவளப் பாதுகாப்புப் பிரிவினரின் ஆழுகைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்விடங்களில் அல்லது மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் உள்ள பயன்தரு மரங்களை பிரதேச வனவளப் பாதுகாப்புப் பிரிவினரது அனுமதியின்றி வெட்டுவதும், முற்றாகத்தடை செய்யப்படுகின்றது. காடுகள் அழிக்கப்படுவதை முற்றாகத் தடுக்கவேண்டியதன் அவசியம், மனிதனின் வாழ்க்கை வட்டத்தில் காடுகளின் பங்கு, மீள்வனமாக்கலின் இன்றியமையாத தேவை இயற்கைச் சமநிலையைப் பாது காப்பதில் காடுகளின் பங்கு என்பவை தொடர்பான புூரண கருத்துக்களை மக்களுக்கு வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ வாறாக மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காடழிப்பைத் தடுப்பதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் தமிழீழ வனவளப் பாதுகாப்புப்பிரிவு 1994ஆம் ஆண்டு தொடக்கம் மீள் வனமாக்கல் திட்டங்களை அதிசிரத்தையோடு முன்னெடுத்து வருகின்றது. 1994 ஆம் ஆண்டு வன்னியின் வெள்ளமலைப் பகுதியில் 340 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் 120,100 தேக்கு, சமண்டலை, மலைவேம்பு ஆகிய நாற்றுக்களை நடுகைசெய்ததைத் தொடர்ந்து, ஈழத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் தமிழீழ வனவளப்பாதுகாப்புப் பிரிவின் மகத்தானபணி ஆரம்பமானது.
இராணுவ நடவடிக்கைகளாலும் திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகளாலும் தமிழீழ வனவளம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. 1994ஆம் ஆண்டிலிருந்து வருடாவருடம் மழை காலத்தை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பரட்டைக்காடுகள் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தேக்கு, வேம்பு, மலைவேம்பு, சவுக்கு, சமண்டலை, எக்கேசியா போன்ற பயன்தரு மரக்கன்றுகளை நடுகைசெய்து வருகின்றது. மீள்வனமாக்கல் திட்டம் செயற்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து வருடமொன்றுக்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் வன்னியின் பல பாகங்களிலும் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
1994 தொடக்கம் இன்றைவரை நடுகை செய்யப்பட்ட சுமார் 1,550,200 பல்வகைப்பட்ட மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ வாறாக, 2010 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் நடுகை டிசெய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளில் 75 வீதமானவை மட்டுமே வெற்றியளித்துள்ளன. 1994இன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளாலும் காட்டு விலங்குகளாலும் சில சந்தர்ப்பங்களில் நடுகை செய்யப்படும் மரக்கன்று குறிப்பிட்ட பிரதேச மண் பாங்கிற்கு ஏற்புடையதாக அமையாததாலுமே நடுகைத்திட்டங்கள் அனைத்தும் புூரண வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீதியோர நடுகைத் திட்டங்களாக, வன்னியின் முக்கிய வீதிகளின் இருமருங்குகளிலும் பயன்தரு மரங்கள் நடுகை செய்யப்பட்டு தொடர் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை மருங்கு நடுகைத் திட்டங்களாக, அம்பலப்பெருமாள்-துணுக்காய் சாலை, ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்புச் சாலை, வவுனியா-மாங்குளம் சாலை, மாங்குளம்-மல்லாவிச் சாலை ஆகிய சாலையோரங்களில் நடுகை செய்யப்பட்டுள்ளது.
இவ வாறான மீள்நடுகைகளுக்கான நாற் றுக்கள், உள்@ரில் கிடைக்கப்பெறும் பல் வகை இனங்களையும் சேர்ந்த நல்லின விதைகள் சேகரிக்கப்பட்டு அவ விதைகள் வன வளபாதுகாப்புப் பிரிவின் நாற்றுப் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தகுந்த முறையில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பற்றைக்காடுகள், வெட்டவெளிகள் மற்றும் காடழிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களை இனங்காணும் வனவளபாதுகாப்புப் பிரிவினர் அப்பகுதியில் உள்ள மண்ணை ஆய்வுக்குட்படுத்தியபின் குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மண்பாங்கிற்கு ஏற்ப அப்பகுதிகளில் நடுகை செய்வதற்கெனத் தெரிவுசெய்யப்பட்ட நாற்றுக்களை நடுகை செய்து வருகின்றார்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சனத்தொகை, அபரிமிதமான அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழிற்புரட்சி காரணமாக உலகம் இன்று தனது பசுமைப் போர்வையை இழந்துகொண்டிருக்கிறது. இன்று, வல்லரசு நாடுகள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட பல வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் திடீரென ஞானம் பிறந்தவர்கள் போல காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் மீள்வனமாக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கிச் செயற்பட்டு வருகின்றார்கள்.
ஆனால், வன்னியில் வாழும் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் பல்வேறுபட்ட தடைகளுக்கும், நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுக்கும் அதேநேரம், வருமுன் காக்கும் நடவடிக்கையாக வன்னி மக்களின் புூரண ஆதரவோடு தமிழீழ வனவள பாதுகாப்புப் பிரிவு தன்னாலான மீள் காடாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தாயகத்தின் வளங்களைச் சுரண்டிச் சென்று, தமது தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், தமிழீழ தாயகத்தின் வளங்களை அழிப்பதன் மூலம், குறிப்பாக வன்னியின் வனவளத்தை அழிப்பதன் மூலம் நீண்டகால hPதியில் தமிழீழ தேசத்தின் இயற்கைச் சமநிலையைக் குழப்பத்திற்குள்ளாக்கி, தமிழர் புூமியை வரண்ட பாலைவன நிலைக்கு தள்ளிவிடும் நோக்கில் தொடர்ந்தும், செயற்பட்டுவரும் சிங்களத்திற்கு தமிழீழ மக்கள் கொடுத்த தீர்க்கமான பதில்தான் தமிழீழ வனவள பாதுகாப்புப் பிரிவின் மீள்வனமாக்கல் திட்டங்கள். பாரம்பரியமான தமிழர் தாயகப் பிரதேசத்தை வளங்களற்ற, மக்கள் வாழத் தகுதியற்ற சுடுகாடாக மாற்றிவிடத் துடிக்கும் சிங்கள அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமான வியுூகங்களாக, மீள்நடுகைத் திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் அதேநேரம் வனவளத்தை திட்டமிட்டு ஆக்கபுூர்வமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் வரும் தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவின் செயற்பாடுகள் அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெறவேண்டியவை.
தமிழீழ தாயகத்தில் பலதசாப்தங்களாக நடைபெற்றுவரும் தேசத்தை மீட்கும் புனித விடுதலைப் போரானது, பல்வேறுபட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிரான புரட்சிகளையும் தன்னுள் அடக்கியிருப்பதை பல ஆய்வாளர்கள் உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும், செல்வந்த நாடுகளில் ஜெனீவா மாநாடு போன்ற பெருமெடுப்பில் ஆராயப்படுகின்ற சூழல் மாசடைதலுக்கெதிரான யுத்தத்தையும் பசுமைப் புரட்சியையும் தன்னகத்தே கொண்டிருப்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

