06-22-2003, 09:39 AM
வில்லுக்குளத்துப் பறவைகள் -சம்பவம்-12
என்ன படிக்கின்றாய்?' கேள்வி தெறித்தது.
'இளநிலை வர்த்தகப் பட்டப்படிப்பு'
'உனது பாடத்திட்டத்தைச் சொல்?'
நான் துணுக்குற, 'நான் எனது வர்த்தக
முதுநிலைப் பட்டப்படிப்பை பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தவன், ஆகையால் நீ சொல்' என்றார்.
சொல்லி நான் முடிக்க, அவன் ஒரு சிறு இராஜநடைபோட்டான். திரும்பி மீண்டும், 'நான் நீ படிப்பதனை ஏற்றுக்கொள்கிறேன்.
உனது பட்டப்படிப்புக்கு முன்னால் புலியின்
ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டதனை
ஏன் மறைக்கின்றாய்?'
ஊர் ஊராக இருக்காதோ என்ற பயம், சைக்கிளை வேகம் வேகம் எனச் செலுத்த எதிர்ப்பட்ட புன்னகை மனிதர்களின் விசாரிப்புகளால் வெல்லப்பட்டது. பஸ்சிலிருந்து இறங்கி இரவல் சைக்கிளில் வீடு போனதும் எதிர்கொண்ட அம்மா, ஆச்சரியத்தின் விளிம்பில் ஆழ்ந்தார்.
'எப்படியும் நீ வருவாலு}. எத்தனை பேர் எத்தனை கதைகளைச் சொன்னாலும்' கண்கள் கலங்க அம்மா.
சற்றே நிலைகலங்க, எனக்கு 'சரிலு} சரி.. தேத்தண்ணி எங்கே?' என்ற அதிகாரக் கட்டளையாலேயே உணர்வுகளை வெல்லமுடிந்தது. பட்டுக்குஞ்சம் போல மினுமினுப்பும், பளபளப்பும் கொண்டிருந்த சின்னத்தம்பிக்கு, வானத்தில் செல்லுகின்ற ஏதோவோர் விமானம் அண்ணனைச் சுமந்து வரும் என்ற நம்பிக்கை உறுதியான சந்தோஸம். தூர நின்றான். பின் நெருங்கி, இவ வளவு நாளும் வீட்டாரின் உரையாடல்களில் ஒரு குழப்பமான உருவாய் இருந்த அண்ணனை நோக்கிப் பின் கட்டிக் கொண்டான்.
எனக்கு அழலாம் போலிருந்தது. இத்தனை நெகிழ்வை இவ வரிய சொத்தை எங்களிலொருவன் என்ற hPதியில் மீண்டும் ஆதரவாக உயரும் கரங்களை, அள்ளியணைப்பதையே பாரம்பரியமாய்க் கொண்டிருக்கும் இவர்களை எப்படி நான்கு வருடங்கள் சந்திக்காதிருக்க என்னால் முடிந்தது?
'இது என் பகைவனுக்குக்கூட நேரக்கூடாது'
அம்மா இந்த நான்கு வருடத்தினுள்ளே தனக்கு நேர்ந்தவற்றை, மேற்கண்ட முத்தாய்ப்புடன் ஆரம்பித்தார். 'நீ காட்டின வழியிலை தம்பியவை இரண்டும் புலியெண்டு போயிட்டுது. அவன் வள்ளல் அப்பள வியாபாரி. உனக்கடுத்த சனியன் சென்டரியாம். நான் எவ வளவு அழுதிருப்பன்லு}. எவ வளவு கெஞ்சியிருப்பன்லு}. அண்டைக்கு இந்தியன் ஆமி ஸெல்லடி தொடங்கிவிட்டான். அவன் என்ன சிலோன் ஆமிமாதிரியேலு}. மழை பொழிஞ்ச மாதிரி.. என்ரை ஐயோ! குமரன் கடைசித் தம்பியையும் கூட்டிக்கொண்டு மல்லாகத்துக்கு கொண்டு போட்டான். கொப்பரும் அங்கைதானேலு}. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. சிலோன் ஆமி வீடுகளைத் தரைமட்டமாக்கி அழிவு பண்ணினாலும்லு}. அப்பா அவங்கள் பரவாயில்லை ஸெல் பட்டு என்னோடை படிச்ச செல்லம்மாவின்ர கடைசிப் பிள்ளை ஏழு வயது தான்ரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஒரு வழியுமில்லைலு}லு}. என்ன மந்திரமோ மாயமோ மூண்டு இடத்திலை கொஞ்சம் கொஞ்சமா வெடிச்சது. இண்டைக்கும் தாய் செல்லத்துக்கு விசர் மாதிரித்தான். பெத்த பிள்ளை இரத்தம் பெருக்கிச் சாகிறதைலு}லு} ஐயோலு}. நல்ல காலம் என்னை அதுக்குள்ளை தாசன் வந்து கூட்டிக்கொண்டு போட்டான்'
எனக்குப் பெரிய நிம்மதி உண்டானது. ஐந்து ஆண் பிள்ளைகளிருந்தும் துணைக்கு யாருமில்லாது அம்மா தவித்த நேரத்தில இந்த அவலமும் நேர்ந்திருப்பின்லு}. அம்மாவுக்காக நீண்ட வராந்தா வெளிகளில், தலை நிலம் நோக்க நடந்து, றயசன எண்களை வெறித்து, கட்டில்களை ஆராய்ந்து நெருங்கினாலும் அம்மாலு}. எனது அம்மாவின் புன்னகைக்கு என்ன நிச்சயம்லு}.. கண்ணிலே மழலையொன்று குருதி சொட்ட கொஞ்சம் கொஞ்சமாய்ச் செயலிழப்பது நிறைந்து பயமுறுத்தியது.
'தாசண்ணையை இப்ப எங்கை வைச்சிருக்கிறாங்கள்?' எனக்கு அண்ணரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
நீங்கள் என் அண்ணரைப் பார்த்திருப்பீர்கள், என்னைப் போலவேதான் உருவம். அசல் தோட்டக்காரன் என்பது முகத்தில், உடம்பில், செயல்களில் பொறிக்கப்பட்டிருக்கும். என்னைவிட இரண்டு வயது பெரியவன். அப்பாவின் சொந்தத் தமையனின் கடைசி மகன். பள்ளிக்கூடம் சென்று வருவதைவிட சந்தைக்குப் போய்வருவது இலாபகரமானது என்பது அவனது தத்துவம். திருவிழாக் காலங்களில் அவனது சேமிப்பு வெளிவரும், நான் ஒரு காசாளர் போலப் பின்வருவேன். ஒன்றுக்கு நாலு எனும் ஒருவகைச் சூதாட்டம் ஆடி அண்ணன், பெரும்பாலும் கைக்காசில் கால் பங்கை இழப்பார், வெற்றியோ தோல்வியோ கையிலிருக்கும். மிகுதிப் பணத்தை அண்ணர் செலவளிக்கையில் ஊரிலுள்ள ஊதாரிகளெல்லாம் தோல்வியை ஏற்றுக்கொள்வர்.
அப்படியான என் அண்ணரைச் சந்திக்க நான் 'கியுூவரிசையில்' காத்திருந்தேன். கூட எனது பாதுகாப்பிற்காக நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட என் தந்தையார். எழுத்து மூலமான விண்ணப்பம் தாண்டி, எனது முகம் மீது கொண்ட காதலால் அமைதிப்படை அதிகாரி நேரடி விசாரணையைத் தொடங்கினான். அப்பாவின் அரச சேவகமும் எனது சென்னைக் கல்லூரியின் அடையாள அட்டையும் காப்பாற்றியது. அண்ணரைப் பார்ப்பதற்குள் ஆயிரம் தடைகள். ஒரு கொட்டகையில் இறுதியில் உட்காரவைக்கப்பட்டு, 'ஐந்து நிமிடங்கள் தான்' என்பதை கொச்சைத் தமிழில் 'நானும் தமிழறிவேன்' என்று வெற்றிப் புன்னகை இழைய ஒரு 'அமைதி காப்பவர்' அறிவுறுத்தினார்.
'தம்பியை எப்படியாவது வெளியில கொண்டாந்திடு'
தாசனின் அண்ணர் பிரான்சிலிருந்து ரெலிபோனில் அடிக்கடி உச்சரித்த வாசகங்கள் அண்ணரைப் பார்க்கப்பார்க்க அந்நினைவே முட்டி மோதியது. சம்பாஸனையில் நான் சலித்துப்போனேன். தனது அடையாள அட்டையைக்கூட அண்ணர் தொலைத்துவிட்டார். அதுபற்றிய பெரிய கவலையில்லாது 'வெளிநாட்டுக்குப் போக என்னாலை ஏலாது. அடுத்தமுறை என்ரை அம்மாவோட வா, முடிஞ்சா வடைசுட்டு எடுத்துவரச் சொல்லு. போன முறையைவிடக் கொஞ்சம் அதிகமாய், அப்பதான் எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடலாம்'
சற்று இடைவெளிக்குப் பின். 'நீ முயற்சித்துப் பார்லு}.. வெளியிலை வந்தும்லு}.. இந்த அடி வேண்டின பிறகுலு}. வெளிநாட்டுக்குலு}'
திரும்பிக்கொட்டகை நோக்கி நடந்தான். கைவிடப்பட்ட முன்னாள் அரச மருத்துவமனைக் கட்டடமே இவர்களின் சிறைமுகாமாக மாறியிருந்தது. சீமெந்துத் தொழிற்சாலையின் புகையாலும், கடற்கரையோரமாக செயற்கைத் துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதாலும் புகை சூழ்ந்த, செம்மண் முகங்கிளறும் வனமாகி, 'அசுத்தப்பகுதி' என்ற கிhPடத்தைச் சுற்றுவட்டாரம் சூடியிருந்தது.
ஒரு கிழமை ஆனது. உறவினர், நண்பர்களென்று உறவுகளை மீண்டும் புனரமைக்கும் காலம். அண்ணருடைய விடுதலையும், மீண்டும் இந்தியா திரும்புகையில் அவரையும் உடனழைத்துச் செல்ல வேண்டுமென்பதுவும் ஓயாத அலைச்சலுக்குத் தூண்டுகோலாகின. ஒரு வழியாக ஆங்கிலத்தில் தட்டெழுத்துச் செய்யப்பட்ட அண்ணரின் நிலவரம், அவரில்லாது குடும்ப ஜீவனப்பாட்டை உறுதி செய்யும் விவசாயம் கைவிடப்பட்டிருப்பது, தாயார் நோய் வாய்ப்பட்டிருப்பது, அவரை விடுதலை செய்யும் பட்சத்தில் எமது குடும்பமே எத்தனை 'கிலோகிராம் நன்றிக் கடன்' உடையவராய் மாறுகின்றது போன்ற விபரங்களை உள்ளடக்கி, கீழே பிரசைகள் குழுவினர் மற்றும் விதானையார் ஒப்பமிட்டிருந்தார்கள். கூனிக்குறுகி விடுதலை வேண்டும் இக்கடிதத்தில் ஒப்பமிட்ட இன்னொருவரான என்பெரிய தந்தையார் கூடவர இராணுவ மேலதிகாரியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. முகத்தில் மாபெரிய கடமைக் கனல் சூழ்ந்திருக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த அவர் சற்று நேரத்தின் பின்னால் எம்மை உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார். அவர் ஒரு வட இந்தியராக இருக்கலாமென்பதைத் தோற்றம் உறுதி செய்தது. கூடவே இருந்த மலபார் ரெஜிமென்ட் அதிகாரி, அவரின் பேச்சின் சாராம்சத்தைத் தமிழிலும் நீட்டி முழங்கினார். இவ வாறான வெத்து வெட்டுக்கள் நிறையப் பெற்ற அவரின் பேச்சின் சாராம்சமென்னவோ கொஞ்சம்தான். 'புலிகளின் தொல்லை மிகவும் மோசமாயுள்ளது. ஆனாலும் இவரை விடுதலை செய்துவிடலாம், முதற்படியாக ஏதாவதொரு ஆயுதத்தை ஒப்படைக்க வேண்டும், விடுதலைக்கு விலையாக தானாகவே தேசப் பிரஸ்டத்தை கைதி மேற்கொள்ள வேண்டும்.
வெளியில் வந்தபோது பெரியப்பா நிறையவே சோர்ந்துபோயிருந்தார். கொஞ்சம் சதைப்பற்றான தொந்தி விழுந்த உடலமைப்பு, தலையில் வழுக்கை விழுந்திருப்பினும் வெண்முடிகள் எண்ணக்கூடக் கிடைக்காது. இவரது இளமையின் ரகசியம் 'தேசிய பானம்' என வீட்டார் சொல்லிக்கொள்வர். ஓய்வு பெற்ற விமானப்படைச் சிற்றூழியர் அவர். விமானப்படை தந்த மிடுக்கில் அந்நாளில் செய்த சண்டித்தனத்தின் சான்றாக, அரைக்காற்சட்டைப் போலீசிடமிருந்து பிடுங்கியெடுத்த சிறு குண்டாந்தடி அவரது வாசஸ்தலத்தின் அலங்காரச் சின்னங்களில் முதன்மையானது இவ வகைப்பட்ட எனது பெரிய தந்தையார் இன்றைய நாளில் புயலிலடிபட்ட பஞ்சாகியிருந்தார். இவரது ஈடாட்டத்தின் மையமானது, வயோதிபத்தைவிடவும் இயக்கம் சார் சண்டியர் முன் இவர்களது வீரம் தோற்றோடியதே ஆகும். இவரது உலகறிவு இவரை ஒதுங்குவதே மாரியாதையெனப் போதித்தது போலும்! முன்பெல்லாம் இலங்கையின் நாடாளுமன்ற நாற்காலிகளிலும் புரட்சிப் புூக்கள், புூத்துக்குலுங்குமெனப் பறையறிவித்த இடதோ வலதோ, ஏதோவொரு கொம்யுூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராயிருந்தவர். முதலில் ஈழப்போராட்டம் என வருகையில், பழைய பாரம்பரியம் காக்க செஞ்சூரியனுக்காய் வக்காலத்து வாங்கி அலுத்ததாலோ அல்லது புத்திர பாசம் உச்சம் பெற்றதாலோ செயல்வீரர்களை வாரியணைத்துக்கொண்டார்.
வீட்டு வாசலை நாம் நெருங்கியபோது, எமதூர்ப் பிரமுகர்களிலொருவரான மகாதேவன் மாஸ்ரர் 'என்னாச்சு?' என்றபடி வரவேற்க, சால்வைத் துண்டால் முகத்தைத் துடைத்தபடி, பெரியப்பர் சலிப்புடன் செருமிக்கொண்டார்.
'அப்பவே இந்த விடுபேயன்களுக்குச் சொன்னனான், இந்தியாவை இவை ஏமாத்தலாமெண்டு நினைப்பதுலு}. தந்திரோபாயமும் மண்ணாங்கட்டியும்லு} அவன் ஆயுதம் கொடுத்தால் வாங்கின உங்கடை மதி எங்கை? புலிகளாவது இடைக்கிடை இந்தியா பற்றி ஏதோ சொன்னாங்கள்லு}. ஹ{ம்லு}.'
நான் தலைகுனிந்து நிலம் நோக்கத் தொடங்கினேன். மாஸ்ரர் ஒரு அந்தநாளைய இந்தியப் பட்டதாரியாகையால், இந்தியாவின் பெருமை அவரின் பெருமையென ஆகி வெகுகாலம். மேலும் இன்றைய சூழலில் அவரது வாதத்தின் நியாயம்லு}லு}
தலை நிமிர்ந்ததோர் வாழ்வு சமைத்திட
நிமிர்ந்த தலை மட்டும் கொண்டுல வினோர்
குனிந்திடல்லு} குனிந்திடல் மேலும்
குன்றுதல்.. கடனேலு}.
மகாதேவரானவர் சுருட்டிற்கு உயிர்கொடுக்க பெரியப்பா ஆரம்பித்தார். 'என்ரை குரங்குக்கு எத்தனை நாள் சொல்லியிருப்பன் ஓடடா இனிமேலாவதுலு} எங்காவது தொலையெண்ணக் கேட்டானேலு} அம்மா! அண்டைக்கவங்கள் அடிச்ச அடிலு}'
இவ வாறாக அண்ணர் கைதானது, அமைதிப்படையினரின் புலிவேட்டை இவை குறித்து ஒரு விவரணச் சித்திரத்தை உருவாக்கினார் பெரியப்பா. பெரும்பாலும் அவரது தொனி முடியுமோலு}.. முடியாதோலு} சண்டையிடல் ஒன்றே தீர்வென்பதை உட்கிடையாக்கியது. ஆனால் மகாதேவருக்கோ அவரது அறிவு, மலையைச் சாய்க்க முயல்வதைப் போன்றதொரு செயலே இந்தியாவை எதிர்ப்பது என வக்காலத்து வாங்க வைத்தது. மற்றோரின் துரோகத்தையும் எள்ளிநகையாடிய பின் அரசியல் தீர்வுக்காய் அங்கலாய்த்தார். இன்னமும் கொஞ்சம் கூடுதல் உரிமைகள் வேண்டும், அதிகாரம் யாவும் அநியாயத்தை எதிர்த்து உயிர் தந்தவர்க்கே எனப் பிரலாபித்தார். பெரியப்பா, திலீபன் அணுஅணுவாய் உயிர்விட ஆக்கிரமிப்பாளர் அநுட்டித்த அலட்சியத்தை நினைவுகூர்ந்தார். எல்லோருமாக இரட்சிப்பாளரென வரவேற்ற பயல்கள், ஆரம்பத்தில் எல்லாம் இராணுவம்தான் என்ற உருவெடுத்து, இல்லையில்லை தாம் கொஞ்சம் மாபெரிய சாத்தான்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கொண்ட நரவேட்டையின் வடுக்களை நினைத்துக் கோபமும் பதற்றமும் கொண்டு, 'இனியும் பேச்சுவார்த்தைலு} ! விடும் மாஸ்ரர் உந்தக் கதையை' என முற்றுப்புள்ளியிட்டார்.
இவ வாறான இருவேறு கருத்துக்களின் ஆதிக்கம் எங்குமிருந்தது. என் பழைய நண்பனும் பல்கலைக்கழக மாணவனுமான ரவியும் இதனை அடிக்கடி சொல்லிக் கொண்டான். அவனோடு பேசுகையில், 'எல்லாம் நிகழ்ந்து முடிந்தாலும் என்னதான் மாற்றம் நிகழ்ந்து விட்டது?' என்று சலித்துக்கொண்டதற்கு நிதானமாக அவன் சொன்னான். 'எதிரியைப்பற்றி இப்போது சனங்கள் அறிய ஆவலோடுள்ளனர். hசிப்பு என்பது வெறும் பொழுது போக்காக இப்போதில்லை' என்றான்.
உண்மைதான்! மிகக்குறுகிய காலங்களிலேயே அந்நியர் அதற்கும் மேலாக ஆக்கிரமிப்பாளன் எனத் தன்னைத்தானே எதிரி தோலுரித்துக்கொண்டான். நண்பனும் நானும் பனைமரங்கள் அணிவகுத்த அச்சாலை விளிம்பிலுள்ள கோவிலின் தேர்முட்டி மறைவிலிருந்து கீழிறங்கினோம். இன்னமும் ஏழு நாட்களில் பயணம் என்பதை நான் நினைவுகூர, அவன், தனது பல்கலைக்கழகம் திறக்கும் வரைக்கும் படிப்பதற்காக ஏதாவது புத்தகங்கள் வாங்கியனுப்பிவிடுலு} அது என்று திறக்குமோ? யார் யாரெல்லாம் அதை மூடுவரோ? எனப் பண்ணிசைத்து தான் செல்லும் வழி குறித்து எச்சரித்து விடை தந்தான்.
வயல்வெளியில் காற்று ஊஞ்சலிட, புல்லுக் கடகமும் கலப்பைகளும் தலையிலும் தோளிலுமாக மாடுகளை வழிநடத்தி வருபவர்கள் பாடல் இசைக்க, இன்னுமொரு மாலை எனதூரில் முடிவடையும் நேரம் வயல்வெளியைத் தாண்டுகையில் சிறுபெண்ணொருத்தி, 'ஆமிக்காரன் செக்கிங்' என எச்சரித்தாள். 'எங்க?' என, நகர்ந்தபடி பதில் சொன்னாள். முன்பெல்லாம் இலங்கை இராணுவத்தை ஏமாற்ற நாம் நடமாடிய ஒழுங்கைகளினூடாக வீடு திரும்ப எத்தனித்தேன் அம்மா கண்ணுள் வந்தார்.
'தம்பி முன்னைமாதிரி ஒழுங்கைகளை நம்பாதை, கூர்க்காக்காரன் நாயோட நாயாய்ப் பத்தை வழிய படுத்துக் கிடக்கிறான்'
வருவது வரட்டுமென நேராகவே வந்து 'செக்போஸ்ட்' தாண்டி பெரிய ரோட்டில ஏறியபோது கைதட்டல், அதட்டும் கூச்சல் கேட்டது. திரும்பி அழைத்தவரிடமே போனேன். அமைதிகாப்போர் வரிசைக் கிரமத்தை வலியுறுத்த, முகம் மறைக்கப்பட்ட 'தலையாட்டிகள்' ஏற இறங்க எல்லோரையும் அளந்து பார்த்து, அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒரு பெரியவர், வயல் வேலையை முடித்து வருபவர் போலும்! அடையாள அட்டை கேட்கப்பட்டது. அடையாள அட்டையை எடுத்துக்கொடுத்தார். அடுத்தாக அவர் கேட்ட கேள்வி படையினரின் பெயரை 'அறியாமை காப்பவர்கள்' என மாற்றப்போதுமானது. வேறொன்றுமல்ல, 12 எண்கள் கொண்ட அடையாள அட்டையின் இலக்கங்களைச் சொல்லுமாறு பணிக்கப்பட்டார். வேலைக் களைப்போடு திரும்பிய மனிதனுக்கு எப்படி இருக்கும்? சரமாரியாகத் திட்டல் மழை பொழிந்தார். அமைதியின் காவலருக்கோ ஆவேசம் வந்துவிட்டது. "வுசயளெடயவந வாளை" என்று ஒரு இளைஞனுக்குக் கட்டளையிட்டார். அவ விளைஞன் "ஐ ன'ழவெ மழெற நுபெடiளா" என்றான். 'அப்போ நீ பேசியதுலு}.? அதுதான் ஆங்கிலம்லு}.' படுகொச்சையான ஆங்கிலப் பதப்பிரயோகத்துடன், இளைஞனின் வயிற்றில் சப்பாத்துக் காலால் மிகக் கடுமையாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது. காந்தியின் சீடரின் அரசல்லவோ! முதியோர் வதை வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளனர் போலும்! நினைக்க எனக்குச் சிரிப்பு வந்தது. இந்தக் கூத்தை தூர இருந்து அவதானித்த அமைதிப் படைத் தலைவர் நெருங்கி வந்து, எல்லோர் முகத்தையும் ஆராயத் தொடங்கினார்.
எனது முறை வருமுன்னாலே அத்தர்மதேவன் சிலருக்கு விடுதலை வழங்கினார். சிலரை ஓரமாகச் சென்று உட்காரும்படி கட்டளையிட்டார். என்னை ஏற இறங்கக் கண்களால் அளவிட்டார். ஆங்கிலத்தில் 'நீயொரு புலியைப்போல உடையணிந்திருக்கிறாய்' என முணுமுணுத்தார். உள்ளே வரும்படி கட்டளையிட்டுவிட்டு முன் நடக்க, பலியாடாகத் தொடர்ந்தேன். சக மண்ணின்மைந்தர்கள் அநுதாபமாக என்னை ஏறிடவும், நெஞ்சு முழுவதும் அச்சம் வியாபிக்க, கால்கள் ஏனோதானோவென அசைந்தன. நான் தயாராக வைத்திருந்த எனது தேசிய மற்றும் சென்னைக் கல்லூரியின் அடையாள அட்டைகளை நீட்டினேன். வாங்கி ஆராய்ந்தவர் தேசிய அடையாள அட்டையைத் தூக்கிப் பிடித்து, 'இது போலி' என உறுமினார். பின் இரண்டையுமே அருகில் நின்ற ஜீப்பொன்றின் 'போனட்டில்' போட்டுவிட்டு, சாவதானமாகத் தேநீரைச் சுவைக்க ஆரம்பித்தார்.
சிறிய இடைவெளியின் பின்னால் நானும் ஆங்கிலத்தில் 'நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் கல்வி பயிலுமொரு மாணவன்' எனக் கூறினேன்.
'என்ன படிக்கின்றாய்?' கேள்வி தெறித்தது.
'இளநிலை வர்த்தகப் பட்டப்படிப்பு'
'உனது பாடத்திட்டத்தைச் சொல்?'
நான் துணுக்குற, 'நான் எனது வர்த்தக முதுநிலைப் பட்டப்படிப்பை பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தவன், ஆகையால் நீ சொல்' என்றார்.
சொல்லி நான் முடிக்க, அவன் ஒரு சிறு இராஜநடைபோட்டான். திரும்பி மீண்டும், 'நான் நீ படிப்பதனை ஏற்றுக்கொள்கிறேன். உனது பட்டப்படிப்புக்கு முன்னால் புலியின் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டதனை ஏன் மறைக்கின்றாய்?'
நான் திகைத்துப்போனேன். ஒருவாறாக நான் 10 ஆவது வரை அருகிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஒப்பேற்றியதை, பின் 1983 இறுதியிலேயே இந்தியா சென்று உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்ததை அவனுக்கு விளக்கினேன்.
'நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகின்றேன். உனது ஊரிலே புலி நடமாட்டம் எப்படி?'
நான் துணுக்குற்று, ஊருக்கு வந்து இரண்டு கிழமைகளே ஆனமையால் நானறியேன் ஏதும் பராபரமே எனத் தாள் பணிந்தேன்.
'ஆகா! அவ வாறாயின் நீ புலி'
என்னை மீறி எனது கால் கைகள் படபடக்க ஆரம்பித்தன. படிப்பறிவும் சரளமான உளவறிவும் வாய்க்கப்பெற்ற இந்த அதிகாரி, மறுபுறத்தில் ஒரு தரங்கெட்ட மூன்றாந்தர அணுகுமுறைகளையும் கையாளக்கூடிய இராணுவத்தினனே என்பதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் 'நீ புலியேதான்லு} உனதூரிலே இன்னமும் புலிகளுண்டுலு} நீ மனம் வைத்தால் மார்க்கமுண்டு'
நான் பணிவாக 'இல்லை ஐயா, நான் ஒரு இலங்கை அரச சேவகரின் பிள்ளை, கல்வியொன்றுதான் எனது நோக்கம்' என வலியுறுத்த, அவன் தடாலெனச் சிநேகபுூர்வமானான்.
'சரி என்னோடு வந்து ஒரு கம்பெனி கொடுலு}.'
'இல்லை ஐயா, எனது குடும்பத்தினர் மத நம்பிக்கை மிகுந்தோர்'
'அவ வாறாயின் நீ புலிலு} புலிதான் மதுபானம் அருந்தாது' என அமைதிப்படைத் தளபதி கத்தினார்.
இவ வாறாக நாடகம் நீண்டது. இறுதியில், 'தொலைபயலேலு}லு} இந்தியா செல்ல முன் வந்து உனது கல்லூரி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள், நான் கொஞ்சம் சென்னையைத் தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும்'
நான் வீடு திரும்புகையில் உடைகள் யாவும் வேர்வையில் நனைந்திருந்தன. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் மெல்ல விசயத்தைச் சொன்னேன்.
'நல்லகாலம் கடவுள் காப்பாற்றியது. நாளைக்கே கொழும்புக்குப் போயிடு'
சொன்ன அம்மாவை முறைத்தேன். அம்மா குரல்தள தளக்க, நாலுவருசத்துக்குப் பிறகு வந்து நீ அடிவாங்கலு}லு} நீ எந்த முகாமிலையெண்டு நாங்கள் தேடியலையலு}. ' அம்மா இப்போது அழவே தொடங்கிவிட்டார்.
தூங்கலாமெனச் சரிந்தேன், பட்டகாயமொன்றின் ரணம் கிளறப்பட மேலும் மேலும் யாரோ கிண்டுவதைப் போலத் தலைவலித்தது. சிறைக்கொட்டடியில் அண்ணர் சொன்னது நினைவில் உறுத்தியது. 'இந்த அடி வாங்கிய பின் இனியென்ன வெளிநாடு' ஏதோவொரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் வருவதுபோல, பச்சைநிற வண்டிகள் படையெடுத்து, வீட்டைச் சூழ்ந்ததாகப் பிரமை தோன்றியது. அம்மாவின் நிம்மதிக்காகவேனும் நாளை கொழும்பு போவதே உசிதமென்று தோன்றியது. தொலைவில் சில வேட்டொலிகள் கேட்டது.
'கிழக்குப் பக்கமாகத்தான் கேட்குது. நாளைக்கு அந்த இடம் அவ வளவுதான்'
எழுந்து யன்னல் பக்கம் போய் அம்மா பார்த்தார். அமைதி காக்கும் சிறு கும்பலொன்று ஒழுங்கையில் அலங்க மலங்க விழித்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தது!
என்ன படிக்கின்றாய்?' கேள்வி தெறித்தது.
'இளநிலை வர்த்தகப் பட்டப்படிப்பு'
'உனது பாடத்திட்டத்தைச் சொல்?'
நான் துணுக்குற, 'நான் எனது வர்த்தக
முதுநிலைப் பட்டப்படிப்பை பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தவன், ஆகையால் நீ சொல்' என்றார்.
சொல்லி நான் முடிக்க, அவன் ஒரு சிறு இராஜநடைபோட்டான். திரும்பி மீண்டும், 'நான் நீ படிப்பதனை ஏற்றுக்கொள்கிறேன்.
உனது பட்டப்படிப்புக்கு முன்னால் புலியின்
ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டதனை
ஏன் மறைக்கின்றாய்?'
ஊர் ஊராக இருக்காதோ என்ற பயம், சைக்கிளை வேகம் வேகம் எனச் செலுத்த எதிர்ப்பட்ட புன்னகை மனிதர்களின் விசாரிப்புகளால் வெல்லப்பட்டது. பஸ்சிலிருந்து இறங்கி இரவல் சைக்கிளில் வீடு போனதும் எதிர்கொண்ட அம்மா, ஆச்சரியத்தின் விளிம்பில் ஆழ்ந்தார்.
'எப்படியும் நீ வருவாலு}. எத்தனை பேர் எத்தனை கதைகளைச் சொன்னாலும்' கண்கள் கலங்க அம்மா.
சற்றே நிலைகலங்க, எனக்கு 'சரிலு} சரி.. தேத்தண்ணி எங்கே?' என்ற அதிகாரக் கட்டளையாலேயே உணர்வுகளை வெல்லமுடிந்தது. பட்டுக்குஞ்சம் போல மினுமினுப்பும், பளபளப்பும் கொண்டிருந்த சின்னத்தம்பிக்கு, வானத்தில் செல்லுகின்ற ஏதோவோர் விமானம் அண்ணனைச் சுமந்து வரும் என்ற நம்பிக்கை உறுதியான சந்தோஸம். தூர நின்றான். பின் நெருங்கி, இவ வளவு நாளும் வீட்டாரின் உரையாடல்களில் ஒரு குழப்பமான உருவாய் இருந்த அண்ணனை நோக்கிப் பின் கட்டிக் கொண்டான்.
எனக்கு அழலாம் போலிருந்தது. இத்தனை நெகிழ்வை இவ வரிய சொத்தை எங்களிலொருவன் என்ற hPதியில் மீண்டும் ஆதரவாக உயரும் கரங்களை, அள்ளியணைப்பதையே பாரம்பரியமாய்க் கொண்டிருக்கும் இவர்களை எப்படி நான்கு வருடங்கள் சந்திக்காதிருக்க என்னால் முடிந்தது?
'இது என் பகைவனுக்குக்கூட நேரக்கூடாது'
அம்மா இந்த நான்கு வருடத்தினுள்ளே தனக்கு நேர்ந்தவற்றை, மேற்கண்ட முத்தாய்ப்புடன் ஆரம்பித்தார். 'நீ காட்டின வழியிலை தம்பியவை இரண்டும் புலியெண்டு போயிட்டுது. அவன் வள்ளல் அப்பள வியாபாரி. உனக்கடுத்த சனியன் சென்டரியாம். நான் எவ வளவு அழுதிருப்பன்லு}. எவ வளவு கெஞ்சியிருப்பன்லு}. அண்டைக்கு இந்தியன் ஆமி ஸெல்லடி தொடங்கிவிட்டான். அவன் என்ன சிலோன் ஆமிமாதிரியேலு}. மழை பொழிஞ்ச மாதிரி.. என்ரை ஐயோ! குமரன் கடைசித் தம்பியையும் கூட்டிக்கொண்டு மல்லாகத்துக்கு கொண்டு போட்டான். கொப்பரும் அங்கைதானேலு}. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. சிலோன் ஆமி வீடுகளைத் தரைமட்டமாக்கி அழிவு பண்ணினாலும்லு}. அப்பா அவங்கள் பரவாயில்லை ஸெல் பட்டு என்னோடை படிச்ச செல்லம்மாவின்ர கடைசிப் பிள்ளை ஏழு வயது தான்ரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஒரு வழியுமில்லைலு}லு}. என்ன மந்திரமோ மாயமோ மூண்டு இடத்திலை கொஞ்சம் கொஞ்சமா வெடிச்சது. இண்டைக்கும் தாய் செல்லத்துக்கு விசர் மாதிரித்தான். பெத்த பிள்ளை இரத்தம் பெருக்கிச் சாகிறதைலு}லு} ஐயோலு}. நல்ல காலம் என்னை அதுக்குள்ளை தாசன் வந்து கூட்டிக்கொண்டு போட்டான்'
எனக்குப் பெரிய நிம்மதி உண்டானது. ஐந்து ஆண் பிள்ளைகளிருந்தும் துணைக்கு யாருமில்லாது அம்மா தவித்த நேரத்தில இந்த அவலமும் நேர்ந்திருப்பின்லு}. அம்மாவுக்காக நீண்ட வராந்தா வெளிகளில், தலை நிலம் நோக்க நடந்து, றயசன எண்களை வெறித்து, கட்டில்களை ஆராய்ந்து நெருங்கினாலும் அம்மாலு}. எனது அம்மாவின் புன்னகைக்கு என்ன நிச்சயம்லு}.. கண்ணிலே மழலையொன்று குருதி சொட்ட கொஞ்சம் கொஞ்சமாய்ச் செயலிழப்பது நிறைந்து பயமுறுத்தியது.
'தாசண்ணையை இப்ப எங்கை வைச்சிருக்கிறாங்கள்?' எனக்கு அண்ணரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
நீங்கள் என் அண்ணரைப் பார்த்திருப்பீர்கள், என்னைப் போலவேதான் உருவம். அசல் தோட்டக்காரன் என்பது முகத்தில், உடம்பில், செயல்களில் பொறிக்கப்பட்டிருக்கும். என்னைவிட இரண்டு வயது பெரியவன். அப்பாவின் சொந்தத் தமையனின் கடைசி மகன். பள்ளிக்கூடம் சென்று வருவதைவிட சந்தைக்குப் போய்வருவது இலாபகரமானது என்பது அவனது தத்துவம். திருவிழாக் காலங்களில் அவனது சேமிப்பு வெளிவரும், நான் ஒரு காசாளர் போலப் பின்வருவேன். ஒன்றுக்கு நாலு எனும் ஒருவகைச் சூதாட்டம் ஆடி அண்ணன், பெரும்பாலும் கைக்காசில் கால் பங்கை இழப்பார், வெற்றியோ தோல்வியோ கையிலிருக்கும். மிகுதிப் பணத்தை அண்ணர் செலவளிக்கையில் ஊரிலுள்ள ஊதாரிகளெல்லாம் தோல்வியை ஏற்றுக்கொள்வர்.
அப்படியான என் அண்ணரைச் சந்திக்க நான் 'கியுூவரிசையில்' காத்திருந்தேன். கூட எனது பாதுகாப்பிற்காக நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட என் தந்தையார். எழுத்து மூலமான விண்ணப்பம் தாண்டி, எனது முகம் மீது கொண்ட காதலால் அமைதிப்படை அதிகாரி நேரடி விசாரணையைத் தொடங்கினான். அப்பாவின் அரச சேவகமும் எனது சென்னைக் கல்லூரியின் அடையாள அட்டையும் காப்பாற்றியது. அண்ணரைப் பார்ப்பதற்குள் ஆயிரம் தடைகள். ஒரு கொட்டகையில் இறுதியில் உட்காரவைக்கப்பட்டு, 'ஐந்து நிமிடங்கள் தான்' என்பதை கொச்சைத் தமிழில் 'நானும் தமிழறிவேன்' என்று வெற்றிப் புன்னகை இழைய ஒரு 'அமைதி காப்பவர்' அறிவுறுத்தினார்.
'தம்பியை எப்படியாவது வெளியில கொண்டாந்திடு'
தாசனின் அண்ணர் பிரான்சிலிருந்து ரெலிபோனில் அடிக்கடி உச்சரித்த வாசகங்கள் அண்ணரைப் பார்க்கப்பார்க்க அந்நினைவே முட்டி மோதியது. சம்பாஸனையில் நான் சலித்துப்போனேன். தனது அடையாள அட்டையைக்கூட அண்ணர் தொலைத்துவிட்டார். அதுபற்றிய பெரிய கவலையில்லாது 'வெளிநாட்டுக்குப் போக என்னாலை ஏலாது. அடுத்தமுறை என்ரை அம்மாவோட வா, முடிஞ்சா வடைசுட்டு எடுத்துவரச் சொல்லு. போன முறையைவிடக் கொஞ்சம் அதிகமாய், அப்பதான் எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடலாம்'
சற்று இடைவெளிக்குப் பின். 'நீ முயற்சித்துப் பார்லு}.. வெளியிலை வந்தும்லு}.. இந்த அடி வேண்டின பிறகுலு}. வெளிநாட்டுக்குலு}'
திரும்பிக்கொட்டகை நோக்கி நடந்தான். கைவிடப்பட்ட முன்னாள் அரச மருத்துவமனைக் கட்டடமே இவர்களின் சிறைமுகாமாக மாறியிருந்தது. சீமெந்துத் தொழிற்சாலையின் புகையாலும், கடற்கரையோரமாக செயற்கைத் துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதாலும் புகை சூழ்ந்த, செம்மண் முகங்கிளறும் வனமாகி, 'அசுத்தப்பகுதி' என்ற கிhPடத்தைச் சுற்றுவட்டாரம் சூடியிருந்தது.
ஒரு கிழமை ஆனது. உறவினர், நண்பர்களென்று உறவுகளை மீண்டும் புனரமைக்கும் காலம். அண்ணருடைய விடுதலையும், மீண்டும் இந்தியா திரும்புகையில் அவரையும் உடனழைத்துச் செல்ல வேண்டுமென்பதுவும் ஓயாத அலைச்சலுக்குத் தூண்டுகோலாகின. ஒரு வழியாக ஆங்கிலத்தில் தட்டெழுத்துச் செய்யப்பட்ட அண்ணரின் நிலவரம், அவரில்லாது குடும்ப ஜீவனப்பாட்டை உறுதி செய்யும் விவசாயம் கைவிடப்பட்டிருப்பது, தாயார் நோய் வாய்ப்பட்டிருப்பது, அவரை விடுதலை செய்யும் பட்சத்தில் எமது குடும்பமே எத்தனை 'கிலோகிராம் நன்றிக் கடன்' உடையவராய் மாறுகின்றது போன்ற விபரங்களை உள்ளடக்கி, கீழே பிரசைகள் குழுவினர் மற்றும் விதானையார் ஒப்பமிட்டிருந்தார்கள். கூனிக்குறுகி விடுதலை வேண்டும் இக்கடிதத்தில் ஒப்பமிட்ட இன்னொருவரான என்பெரிய தந்தையார் கூடவர இராணுவ மேலதிகாரியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. முகத்தில் மாபெரிய கடமைக் கனல் சூழ்ந்திருக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த அவர் சற்று நேரத்தின் பின்னால் எம்மை உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார். அவர் ஒரு வட இந்தியராக இருக்கலாமென்பதைத் தோற்றம் உறுதி செய்தது. கூடவே இருந்த மலபார் ரெஜிமென்ட் அதிகாரி, அவரின் பேச்சின் சாராம்சத்தைத் தமிழிலும் நீட்டி முழங்கினார். இவ வாறான வெத்து வெட்டுக்கள் நிறையப் பெற்ற அவரின் பேச்சின் சாராம்சமென்னவோ கொஞ்சம்தான். 'புலிகளின் தொல்லை மிகவும் மோசமாயுள்ளது. ஆனாலும் இவரை விடுதலை செய்துவிடலாம், முதற்படியாக ஏதாவதொரு ஆயுதத்தை ஒப்படைக்க வேண்டும், விடுதலைக்கு விலையாக தானாகவே தேசப் பிரஸ்டத்தை கைதி மேற்கொள்ள வேண்டும்.
வெளியில் வந்தபோது பெரியப்பா நிறையவே சோர்ந்துபோயிருந்தார். கொஞ்சம் சதைப்பற்றான தொந்தி விழுந்த உடலமைப்பு, தலையில் வழுக்கை விழுந்திருப்பினும் வெண்முடிகள் எண்ணக்கூடக் கிடைக்காது. இவரது இளமையின் ரகசியம் 'தேசிய பானம்' என வீட்டார் சொல்லிக்கொள்வர். ஓய்வு பெற்ற விமானப்படைச் சிற்றூழியர் அவர். விமானப்படை தந்த மிடுக்கில் அந்நாளில் செய்த சண்டித்தனத்தின் சான்றாக, அரைக்காற்சட்டைப் போலீசிடமிருந்து பிடுங்கியெடுத்த சிறு குண்டாந்தடி அவரது வாசஸ்தலத்தின் அலங்காரச் சின்னங்களில் முதன்மையானது இவ வகைப்பட்ட எனது பெரிய தந்தையார் இன்றைய நாளில் புயலிலடிபட்ட பஞ்சாகியிருந்தார். இவரது ஈடாட்டத்தின் மையமானது, வயோதிபத்தைவிடவும் இயக்கம் சார் சண்டியர் முன் இவர்களது வீரம் தோற்றோடியதே ஆகும். இவரது உலகறிவு இவரை ஒதுங்குவதே மாரியாதையெனப் போதித்தது போலும்! முன்பெல்லாம் இலங்கையின் நாடாளுமன்ற நாற்காலிகளிலும் புரட்சிப் புூக்கள், புூத்துக்குலுங்குமெனப் பறையறிவித்த இடதோ வலதோ, ஏதோவொரு கொம்யுூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராயிருந்தவர். முதலில் ஈழப்போராட்டம் என வருகையில், பழைய பாரம்பரியம் காக்க செஞ்சூரியனுக்காய் வக்காலத்து வாங்கி அலுத்ததாலோ அல்லது புத்திர பாசம் உச்சம் பெற்றதாலோ செயல்வீரர்களை வாரியணைத்துக்கொண்டார்.
வீட்டு வாசலை நாம் நெருங்கியபோது, எமதூர்ப் பிரமுகர்களிலொருவரான மகாதேவன் மாஸ்ரர் 'என்னாச்சு?' என்றபடி வரவேற்க, சால்வைத் துண்டால் முகத்தைத் துடைத்தபடி, பெரியப்பர் சலிப்புடன் செருமிக்கொண்டார்.
'அப்பவே இந்த விடுபேயன்களுக்குச் சொன்னனான், இந்தியாவை இவை ஏமாத்தலாமெண்டு நினைப்பதுலு}. தந்திரோபாயமும் மண்ணாங்கட்டியும்லு} அவன் ஆயுதம் கொடுத்தால் வாங்கின உங்கடை மதி எங்கை? புலிகளாவது இடைக்கிடை இந்தியா பற்றி ஏதோ சொன்னாங்கள்லு}. ஹ{ம்லு}.'
நான் தலைகுனிந்து நிலம் நோக்கத் தொடங்கினேன். மாஸ்ரர் ஒரு அந்தநாளைய இந்தியப் பட்டதாரியாகையால், இந்தியாவின் பெருமை அவரின் பெருமையென ஆகி வெகுகாலம். மேலும் இன்றைய சூழலில் அவரது வாதத்தின் நியாயம்லு}லு}
தலை நிமிர்ந்ததோர் வாழ்வு சமைத்திட
நிமிர்ந்த தலை மட்டும் கொண்டுல வினோர்
குனிந்திடல்லு} குனிந்திடல் மேலும்
குன்றுதல்.. கடனேலு}.
மகாதேவரானவர் சுருட்டிற்கு உயிர்கொடுக்க பெரியப்பா ஆரம்பித்தார். 'என்ரை குரங்குக்கு எத்தனை நாள் சொல்லியிருப்பன் ஓடடா இனிமேலாவதுலு} எங்காவது தொலையெண்ணக் கேட்டானேலு} அம்மா! அண்டைக்கவங்கள் அடிச்ச அடிலு}'
இவ வாறாக அண்ணர் கைதானது, அமைதிப்படையினரின் புலிவேட்டை இவை குறித்து ஒரு விவரணச் சித்திரத்தை உருவாக்கினார் பெரியப்பா. பெரும்பாலும் அவரது தொனி முடியுமோலு}.. முடியாதோலு} சண்டையிடல் ஒன்றே தீர்வென்பதை உட்கிடையாக்கியது. ஆனால் மகாதேவருக்கோ அவரது அறிவு, மலையைச் சாய்க்க முயல்வதைப் போன்றதொரு செயலே இந்தியாவை எதிர்ப்பது என வக்காலத்து வாங்க வைத்தது. மற்றோரின் துரோகத்தையும் எள்ளிநகையாடிய பின் அரசியல் தீர்வுக்காய் அங்கலாய்த்தார். இன்னமும் கொஞ்சம் கூடுதல் உரிமைகள் வேண்டும், அதிகாரம் யாவும் அநியாயத்தை எதிர்த்து உயிர் தந்தவர்க்கே எனப் பிரலாபித்தார். பெரியப்பா, திலீபன் அணுஅணுவாய் உயிர்விட ஆக்கிரமிப்பாளர் அநுட்டித்த அலட்சியத்தை நினைவுகூர்ந்தார். எல்லோருமாக இரட்சிப்பாளரென வரவேற்ற பயல்கள், ஆரம்பத்தில் எல்லாம் இராணுவம்தான் என்ற உருவெடுத்து, இல்லையில்லை தாம் கொஞ்சம் மாபெரிய சாத்தான்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கொண்ட நரவேட்டையின் வடுக்களை நினைத்துக் கோபமும் பதற்றமும் கொண்டு, 'இனியும் பேச்சுவார்த்தைலு} ! விடும் மாஸ்ரர் உந்தக் கதையை' என முற்றுப்புள்ளியிட்டார்.
இவ வாறான இருவேறு கருத்துக்களின் ஆதிக்கம் எங்குமிருந்தது. என் பழைய நண்பனும் பல்கலைக்கழக மாணவனுமான ரவியும் இதனை அடிக்கடி சொல்லிக் கொண்டான். அவனோடு பேசுகையில், 'எல்லாம் நிகழ்ந்து முடிந்தாலும் என்னதான் மாற்றம் நிகழ்ந்து விட்டது?' என்று சலித்துக்கொண்டதற்கு நிதானமாக அவன் சொன்னான். 'எதிரியைப்பற்றி இப்போது சனங்கள் அறிய ஆவலோடுள்ளனர். hசிப்பு என்பது வெறும் பொழுது போக்காக இப்போதில்லை' என்றான்.
உண்மைதான்! மிகக்குறுகிய காலங்களிலேயே அந்நியர் அதற்கும் மேலாக ஆக்கிரமிப்பாளன் எனத் தன்னைத்தானே எதிரி தோலுரித்துக்கொண்டான். நண்பனும் நானும் பனைமரங்கள் அணிவகுத்த அச்சாலை விளிம்பிலுள்ள கோவிலின் தேர்முட்டி மறைவிலிருந்து கீழிறங்கினோம். இன்னமும் ஏழு நாட்களில் பயணம் என்பதை நான் நினைவுகூர, அவன், தனது பல்கலைக்கழகம் திறக்கும் வரைக்கும் படிப்பதற்காக ஏதாவது புத்தகங்கள் வாங்கியனுப்பிவிடுலு} அது என்று திறக்குமோ? யார் யாரெல்லாம் அதை மூடுவரோ? எனப் பண்ணிசைத்து தான் செல்லும் வழி குறித்து எச்சரித்து விடை தந்தான்.
வயல்வெளியில் காற்று ஊஞ்சலிட, புல்லுக் கடகமும் கலப்பைகளும் தலையிலும் தோளிலுமாக மாடுகளை வழிநடத்தி வருபவர்கள் பாடல் இசைக்க, இன்னுமொரு மாலை எனதூரில் முடிவடையும் நேரம் வயல்வெளியைத் தாண்டுகையில் சிறுபெண்ணொருத்தி, 'ஆமிக்காரன் செக்கிங்' என எச்சரித்தாள். 'எங்க?' என, நகர்ந்தபடி பதில் சொன்னாள். முன்பெல்லாம் இலங்கை இராணுவத்தை ஏமாற்ற நாம் நடமாடிய ஒழுங்கைகளினூடாக வீடு திரும்ப எத்தனித்தேன் அம்மா கண்ணுள் வந்தார்.
'தம்பி முன்னைமாதிரி ஒழுங்கைகளை நம்பாதை, கூர்க்காக்காரன் நாயோட நாயாய்ப் பத்தை வழிய படுத்துக் கிடக்கிறான்'
வருவது வரட்டுமென நேராகவே வந்து 'செக்போஸ்ட்' தாண்டி பெரிய ரோட்டில ஏறியபோது கைதட்டல், அதட்டும் கூச்சல் கேட்டது. திரும்பி அழைத்தவரிடமே போனேன். அமைதிகாப்போர் வரிசைக் கிரமத்தை வலியுறுத்த, முகம் மறைக்கப்பட்ட 'தலையாட்டிகள்' ஏற இறங்க எல்லோரையும் அளந்து பார்த்து, அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒரு பெரியவர், வயல் வேலையை முடித்து வருபவர் போலும்! அடையாள அட்டை கேட்கப்பட்டது. அடையாள அட்டையை எடுத்துக்கொடுத்தார். அடுத்தாக அவர் கேட்ட கேள்வி படையினரின் பெயரை 'அறியாமை காப்பவர்கள்' என மாற்றப்போதுமானது. வேறொன்றுமல்ல, 12 எண்கள் கொண்ட அடையாள அட்டையின் இலக்கங்களைச் சொல்லுமாறு பணிக்கப்பட்டார். வேலைக் களைப்போடு திரும்பிய மனிதனுக்கு எப்படி இருக்கும்? சரமாரியாகத் திட்டல் மழை பொழிந்தார். அமைதியின் காவலருக்கோ ஆவேசம் வந்துவிட்டது. "வுசயளெடயவந வாளை" என்று ஒரு இளைஞனுக்குக் கட்டளையிட்டார். அவ விளைஞன் "ஐ ன'ழவெ மழெற நுபெடiளா" என்றான். 'அப்போ நீ பேசியதுலு}.? அதுதான் ஆங்கிலம்லு}.' படுகொச்சையான ஆங்கிலப் பதப்பிரயோகத்துடன், இளைஞனின் வயிற்றில் சப்பாத்துக் காலால் மிகக் கடுமையாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது. காந்தியின் சீடரின் அரசல்லவோ! முதியோர் வதை வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளனர் போலும்! நினைக்க எனக்குச் சிரிப்பு வந்தது. இந்தக் கூத்தை தூர இருந்து அவதானித்த அமைதிப் படைத் தலைவர் நெருங்கி வந்து, எல்லோர் முகத்தையும் ஆராயத் தொடங்கினார்.
எனது முறை வருமுன்னாலே அத்தர்மதேவன் சிலருக்கு விடுதலை வழங்கினார். சிலரை ஓரமாகச் சென்று உட்காரும்படி கட்டளையிட்டார். என்னை ஏற இறங்கக் கண்களால் அளவிட்டார். ஆங்கிலத்தில் 'நீயொரு புலியைப்போல உடையணிந்திருக்கிறாய்' என முணுமுணுத்தார். உள்ளே வரும்படி கட்டளையிட்டுவிட்டு முன் நடக்க, பலியாடாகத் தொடர்ந்தேன். சக மண்ணின்மைந்தர்கள் அநுதாபமாக என்னை ஏறிடவும், நெஞ்சு முழுவதும் அச்சம் வியாபிக்க, கால்கள் ஏனோதானோவென அசைந்தன. நான் தயாராக வைத்திருந்த எனது தேசிய மற்றும் சென்னைக் கல்லூரியின் அடையாள அட்டைகளை நீட்டினேன். வாங்கி ஆராய்ந்தவர் தேசிய அடையாள அட்டையைத் தூக்கிப் பிடித்து, 'இது போலி' என உறுமினார். பின் இரண்டையுமே அருகில் நின்ற ஜீப்பொன்றின் 'போனட்டில்' போட்டுவிட்டு, சாவதானமாகத் தேநீரைச் சுவைக்க ஆரம்பித்தார்.
சிறிய இடைவெளியின் பின்னால் நானும் ஆங்கிலத்தில் 'நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் கல்வி பயிலுமொரு மாணவன்' எனக் கூறினேன்.
'என்ன படிக்கின்றாய்?' கேள்வி தெறித்தது.
'இளநிலை வர்த்தகப் பட்டப்படிப்பு'
'உனது பாடத்திட்டத்தைச் சொல்?'
நான் துணுக்குற, 'நான் எனது வர்த்தக முதுநிலைப் பட்டப்படிப்பை பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தவன், ஆகையால் நீ சொல்' என்றார்.
சொல்லி நான் முடிக்க, அவன் ஒரு சிறு இராஜநடைபோட்டான். திரும்பி மீண்டும், 'நான் நீ படிப்பதனை ஏற்றுக்கொள்கிறேன். உனது பட்டப்படிப்புக்கு முன்னால் புலியின் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டதனை ஏன் மறைக்கின்றாய்?'
நான் திகைத்துப்போனேன். ஒருவாறாக நான் 10 ஆவது வரை அருகிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஒப்பேற்றியதை, பின் 1983 இறுதியிலேயே இந்தியா சென்று உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்ததை அவனுக்கு விளக்கினேன்.
'நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகின்றேன். உனது ஊரிலே புலி நடமாட்டம் எப்படி?'
நான் துணுக்குற்று, ஊருக்கு வந்து இரண்டு கிழமைகளே ஆனமையால் நானறியேன் ஏதும் பராபரமே எனத் தாள் பணிந்தேன்.
'ஆகா! அவ வாறாயின் நீ புலி'
என்னை மீறி எனது கால் கைகள் படபடக்க ஆரம்பித்தன. படிப்பறிவும் சரளமான உளவறிவும் வாய்க்கப்பெற்ற இந்த அதிகாரி, மறுபுறத்தில் ஒரு தரங்கெட்ட மூன்றாந்தர அணுகுமுறைகளையும் கையாளக்கூடிய இராணுவத்தினனே என்பதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் 'நீ புலியேதான்லு} உனதூரிலே இன்னமும் புலிகளுண்டுலு} நீ மனம் வைத்தால் மார்க்கமுண்டு'
நான் பணிவாக 'இல்லை ஐயா, நான் ஒரு இலங்கை அரச சேவகரின் பிள்ளை, கல்வியொன்றுதான் எனது நோக்கம்' என வலியுறுத்த, அவன் தடாலெனச் சிநேகபுூர்வமானான்.
'சரி என்னோடு வந்து ஒரு கம்பெனி கொடுலு}.'
'இல்லை ஐயா, எனது குடும்பத்தினர் மத நம்பிக்கை மிகுந்தோர்'
'அவ வாறாயின் நீ புலிலு} புலிதான் மதுபானம் அருந்தாது' என அமைதிப்படைத் தளபதி கத்தினார்.
இவ வாறாக நாடகம் நீண்டது. இறுதியில், 'தொலைபயலேலு}லு} இந்தியா செல்ல முன் வந்து உனது கல்லூரி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள், நான் கொஞ்சம் சென்னையைத் தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும்'
நான் வீடு திரும்புகையில் உடைகள் யாவும் வேர்வையில் நனைந்திருந்தன. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் மெல்ல விசயத்தைச் சொன்னேன்.
'நல்லகாலம் கடவுள் காப்பாற்றியது. நாளைக்கே கொழும்புக்குப் போயிடு'
சொன்ன அம்மாவை முறைத்தேன். அம்மா குரல்தள தளக்க, நாலுவருசத்துக்குப் பிறகு வந்து நீ அடிவாங்கலு}லு} நீ எந்த முகாமிலையெண்டு நாங்கள் தேடியலையலு}. ' அம்மா இப்போது அழவே தொடங்கிவிட்டார்.
தூங்கலாமெனச் சரிந்தேன், பட்டகாயமொன்றின் ரணம் கிளறப்பட மேலும் மேலும் யாரோ கிண்டுவதைப் போலத் தலைவலித்தது. சிறைக்கொட்டடியில் அண்ணர் சொன்னது நினைவில் உறுத்தியது. 'இந்த அடி வாங்கிய பின் இனியென்ன வெளிநாடு' ஏதோவொரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் வருவதுபோல, பச்சைநிற வண்டிகள் படையெடுத்து, வீட்டைச் சூழ்ந்ததாகப் பிரமை தோன்றியது. அம்மாவின் நிம்மதிக்காகவேனும் நாளை கொழும்பு போவதே உசிதமென்று தோன்றியது. தொலைவில் சில வேட்டொலிகள் கேட்டது.
'கிழக்குப் பக்கமாகத்தான் கேட்குது. நாளைக்கு அந்த இடம் அவ வளவுதான்'
எழுந்து யன்னல் பக்கம் போய் அம்மா பார்த்தார். அமைதி காக்கும் சிறு கும்பலொன்று ஒழுங்கையில் அலங்க மலங்க விழித்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தது!

