06-22-2003, 09:38 AM
பெயரளவில் மட்டும்!
வடக்கு-கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு உள்ள தடையை நீக்கும் நோக்கம் புதிய அரசாங்கத்திற்கு இல்லைப்போல் தெரிகின்றது. ஏனெனில் தற்பொழுது மீன்பிடித்தடையில் அரசாங்கம் செய்துள்ள தளர்ச்சியானது மிகவும் சொற்பமானதும் அர்த்தமற்றதொன்றுமாகும். பெயரளவிலானது என்று மட்டுமே கொள்ளத்தக்கது.
தற்போதைய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, மீன்பிடி பகல் நேரம் இரண்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டள்ளது. அதாவது அதிகாலை 4.00 மணியில் இருந்து மாலை ஆறரைமணி வரையில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னர் மாலை 4.30 வரையில் இவ அனுமதி இருந்தது. இதேசமயம் மீன்பிடிக்கும் நேரம் யாழ். குடாநாட்டில் ஏற்கனவே குறைவாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அடுத்ததாக, மீன்பிடிக்கும் தூரமானது ஏற்கனவே 500 மீற்றர் இருந்த இடங்களுக்கு 750 வரையிலும் 1000 மீற்றர் வரையில் இருந்து இடங்களுக்கு 1500 மீற்றர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரவுநேர மீன்பிடியும், ஆழ்கடல் மீன்பிடியும் இன்றி, அரசாங்கம் செய்துள்ள இத்தளர்ச்சியானது எந்த வகையிலும் முன்னேற்றகரமானதொன்றல்ல. ஏனெனில் இத்தளர்ச்சியானது மீனவர்களின் இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவப்போவதில்லை.
வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கான மீனவக் குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையோர் ஆழ்கடல் மீன்பிடியையே நம்பியிருந்தனர். இம் மீனவர்கள் இலங்கையின் கடற்பிராந்திய எல்லைவரை சென்று மீன் பிடித்தவர்கள். சிலவேளைகளில், இவர்கள் இலங்கையின் கடற்பிராந்தியத்திற்கு வெளியில் மீன்பிடிப்பதும்கூட நிகழ்வதுண்டு.
இவ வாறான நீண்ட தூரத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மீன்பெருமளவில் வாழும் இடங்களை நாடிச் செல்வதே காரணமாகும். இவ வாறான நீண்ட கடல் பயணங்களை வெளிநாட்டு மீன்பிடித்தொழிலாளர்களும் கூடச் செய்வதுண்டு. அதாவது, மீன் அதிக மாகப் பிடிக்கப்படும் இடங்களை நோக்கி எல்லைகளை மீறிச் செல்வதுண்டு.
இவ வாறு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சில நூறு மீற்றர் நீளத்திற்கான தடைகளை நீக்குவதால் தளர்த்துவதினால் பயன் ஏதும் ஏற்பட்டு விடமாட்டாது. ஒருபுறம் இவர்களினால் இலாபகரமாக மீன்பிடித்தொழிலைச் செய்யமுடியாது இருக்கும் என்பது, மட்டுமல்ல, இவர்களிடம் உள்ள மீன்பிடி உபகரணங்களும் கரையோர மீன்பிடிக்கு ஏற்றவையாக இருக்கமாட்டாது.
இது ஒருபுறம் இருக்க கரையோரத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் சகல தொழிலாளர்களுக்கும் கூடப்போதிய வருமானம் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்பும், அற்றதாகி விடுகின்றது. இதன் காரணமாக மீனவர்கள் தொழில் இன்றியே பெரும் வருமானப் பற்றாக்குறையுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர்.
இந்தவகையில், அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ள மீன்பிடித்தடையிலான தளர்ச்சி பொருட்படுத்தக்கூடிய தொன்றல்ல. மீன்பிடித்தடை நீக்கம் பற்றி வலியுறுத்தப்பட்டதினால் ஒப்புக்குச் செய்யப்பட்ட தளர்ச்சியாகவே கொள்ளத்தக்கதாகும். மீன் பிடியைப்பொறுத்து இரவில் மீன் பிடிக்கவுள்ள தடை நீக்கப்படாமலும், ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி அளிக்கப்படாமலும் மேற்கொள்ளப்படும் தளர்ச்சி எந்தவித பலனையும் அளிக்கக்கூடியதாக இருக் கமாட்டாது.
இந்த வகையில் மீன்பிடித் தடை குறித்து புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது தமிழ் மக்களுக்கு பெரிதும் ஏமாற் றம் அளிப்பதொன்றாகவே உள்ளது. இது அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் குறித்தும் சந்தேகங்களை ஏற்படுத்தும் அளவிற்கு அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கத்தக்கதாகும். அதாவது, முன்னைய பொ.ஐ.முன்னணி அரசாங்கமும் சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் மீன் பிடித்தடை குறித்து இவ வாறான நிலைப்பாடுகளை அதாவது இராணுவ அனுகூலங்களை முதன்மைப்படுத்தும் நிலைப்பாடுகளை முதன்மைப்படுத்த முற்பட்டமையே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையுூறாக அமைந்ததென்பது ஞாபகப்படுத்தக் கூடியதாகும்.
கல்விக்கு இடையுூறு!
'வடக்கு கிழக்கில் இருநூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய ஒரு இலட்சம் சிறுவர்கள் வீதிகளில் அலைந்து திரிகின்றனர். இந்த நிலையைத் தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்' என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, அகதிகள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
கடந்தகால சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட இன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளில் மாணவர்களின் கல்விசார்ந்த நெருக்கடியும் ஒன்றாகும். இதற்குத் தனியாக பாடசாலைகள் மீது சிறீலங்கா இராணுவம் குறிவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுமல்ல, அதன்வேறுபல நடவடிக்கைகளும் கல்வியைப் பெருமளவு பாதித்தன என்பதே நியாயமானதாகும்.
தமிழர் தாயகத்தில் படையெடுப்புக்களை நடாத்திய சிங்கள இராணுவம் பெருமளவிலான பாடசாலைகளை அழித்தது மட்டுமல்ல, ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட இடங்களில் உள்ளபல பாடசாலைகளை தனது தேவைக்கு எடுத்துக்கொண்டது. சிறீலங்கா படைகள் ஆக்கிரமிப்புச் செய்த இடங்களில் அது தேவைக்கென எடுத்துக்கொண்ட கட்டடங்களில் அநேகமானவை பாடசாலைகளாகவே இருந்தன.
இந்நிலையில் பாடசாலைக்குள் பெருமளவு செயலிழந்து போயின. இது பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கான வசதியை நேரடியாகப் பாதிப்பவையாக இருந்தது. ஆனால் இராணுவம் நிலைகொள்வதற்காகப் பாடசாலைகளை ஆக்கிரமித்ததினால் மட்டும் தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதல்ல சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடையில் இருந்து ஏனைய ஒடுக்குமுறை, நடவடிக்கைகள் அனைத்துமே கல்வியைப் பெரியளவில் பாதித்தன.
சிறீலங்கா அரசின் பாரிய இராணுவ நடவடிக்கைகள் ஒவ வொன்றும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. பல குடும்பங்கள் பொருளாதார வாழ்வையும் அடியோடு சிதைத்தது. பல குடும்பங்களின் உழைப்பாளர்களைக் காவுகொண்டது.
இதனால் கல்வி கற்கவேண்டிய சிறார்கள் பலர் தமது குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாயினர். பலர் ஆதரவற்றவர்களாக மாறவும் வேண்டிவந்தது. இதனால் கல்வியைத்துறந்து சிறு வேலைதானும் தேடியலைய வேண்டியவர்கள் ஆனார்கள். இவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகளை மட்டுமல்ல, கல்விகற்பதற்கான வாழ்வு நிலையையும் கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தமானதாய் இருந்தது. ஒருபுறம் வாழ்விடமின்மை, மறுபுறம் வறுமை அன்றாட உணவுக்கே அல்லாடும் நிலை என்ற நிலையில் கல்வி கற்பதென்பது எத்தனை தூரம் சாத்தியமான தொன்றாக இருக்கமுடியும்!
வறுமை காரணமாகப் பாடசாலை செல்லும் மாணவர்களில் பலர் காலை ஆகாரத்தை காணாதே செல்கின்றனர். இதன் காரணமாகப் பாடசாலைகளில் பல மாணவ மாணவிகள் மயக்கநிலைமை அடைகின்றனர் எனப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அந்தளவுக்குச் சிறார்களின் கல்வியை ஏழ்மை வாட்டுகின்றது.
இவற்றைத்தவிர, இயங்கும் பாடசாலைகள் கூட அடிப்படை வசதிகள் பல இல்லாமலே செயற்படுகின்றன. அதாவது பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் தளபாடங்களில் இருந்து ஆசிரியர் வரையிலான அசையாத, அசைவன யாவும் பற்றாக்குறையானவையாகவே இருந்தன. அதாவது கடந்த ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே வடக்கு-கிழக்கில் கல்வி காணப்பட்டது. இலவசமாக விநியோகிக்கப்படும் பாட நூல்களைக்கூட ஆண்டின் இறுதியில் விநியோகிக்கும் நிலையே இருந்தது.
இந்த hPதியில் தமிழ் சிறுவர்களின் இன்றைய கல்வியானது ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு காரணிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகையினால் வடக்கு-கிழக்கில் மூடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட பாடசாலைகளைத் திறப்பது மட்டுமல்ல, தமிழ்சிறுவர்களின் கல்விக்கு இடையுூறாகவுள்ள ஏனைய காரணிகளையும் உடன் போக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது பசிபோக்க உணவும், கல்வி கற்பதற்கு வசதிகளும் உடன் அளிக்கப்படுதல் வேண்டும். இதில் தாமதம் செய்வது பயிர் செய்யப்பருவ காலத்தைத் தவறவிடுதல் போன்றதாகும். இதில் உடன் கரிசனைகாட்டாது போதல் இன ஒடுக்குதலின் ஒரு வடிவமாகவே பார்க்கப்படக்கூடியது.
வடக்கு-கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு உள்ள தடையை நீக்கும் நோக்கம் புதிய அரசாங்கத்திற்கு இல்லைப்போல் தெரிகின்றது. ஏனெனில் தற்பொழுது மீன்பிடித்தடையில் அரசாங்கம் செய்துள்ள தளர்ச்சியானது மிகவும் சொற்பமானதும் அர்த்தமற்றதொன்றுமாகும். பெயரளவிலானது என்று மட்டுமே கொள்ளத்தக்கது.
தற்போதைய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, மீன்பிடி பகல் நேரம் இரண்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டள்ளது. அதாவது அதிகாலை 4.00 மணியில் இருந்து மாலை ஆறரைமணி வரையில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னர் மாலை 4.30 வரையில் இவ அனுமதி இருந்தது. இதேசமயம் மீன்பிடிக்கும் நேரம் யாழ். குடாநாட்டில் ஏற்கனவே குறைவாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அடுத்ததாக, மீன்பிடிக்கும் தூரமானது ஏற்கனவே 500 மீற்றர் இருந்த இடங்களுக்கு 750 வரையிலும் 1000 மீற்றர் வரையில் இருந்து இடங்களுக்கு 1500 மீற்றர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரவுநேர மீன்பிடியும், ஆழ்கடல் மீன்பிடியும் இன்றி, அரசாங்கம் செய்துள்ள இத்தளர்ச்சியானது எந்த வகையிலும் முன்னேற்றகரமானதொன்றல்ல. ஏனெனில் இத்தளர்ச்சியானது மீனவர்களின் இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவப்போவதில்லை.
வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கான மீனவக் குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையோர் ஆழ்கடல் மீன்பிடியையே நம்பியிருந்தனர். இம் மீனவர்கள் இலங்கையின் கடற்பிராந்திய எல்லைவரை சென்று மீன் பிடித்தவர்கள். சிலவேளைகளில், இவர்கள் இலங்கையின் கடற்பிராந்தியத்திற்கு வெளியில் மீன்பிடிப்பதும்கூட நிகழ்வதுண்டு.
இவ வாறான நீண்ட தூரத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மீன்பெருமளவில் வாழும் இடங்களை நாடிச் செல்வதே காரணமாகும். இவ வாறான நீண்ட கடல் பயணங்களை வெளிநாட்டு மீன்பிடித்தொழிலாளர்களும் கூடச் செய்வதுண்டு. அதாவது, மீன் அதிக மாகப் பிடிக்கப்படும் இடங்களை நோக்கி எல்லைகளை மீறிச் செல்வதுண்டு.
இவ வாறு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சில நூறு மீற்றர் நீளத்திற்கான தடைகளை நீக்குவதால் தளர்த்துவதினால் பயன் ஏதும் ஏற்பட்டு விடமாட்டாது. ஒருபுறம் இவர்களினால் இலாபகரமாக மீன்பிடித்தொழிலைச் செய்யமுடியாது இருக்கும் என்பது, மட்டுமல்ல, இவர்களிடம் உள்ள மீன்பிடி உபகரணங்களும் கரையோர மீன்பிடிக்கு ஏற்றவையாக இருக்கமாட்டாது.
இது ஒருபுறம் இருக்க கரையோரத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் சகல தொழிலாளர்களுக்கும் கூடப்போதிய வருமானம் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்பும், அற்றதாகி விடுகின்றது. இதன் காரணமாக மீனவர்கள் தொழில் இன்றியே பெரும் வருமானப் பற்றாக்குறையுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர்.
இந்தவகையில், அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ள மீன்பிடித்தடையிலான தளர்ச்சி பொருட்படுத்தக்கூடிய தொன்றல்ல. மீன்பிடித்தடை நீக்கம் பற்றி வலியுறுத்தப்பட்டதினால் ஒப்புக்குச் செய்யப்பட்ட தளர்ச்சியாகவே கொள்ளத்தக்கதாகும். மீன் பிடியைப்பொறுத்து இரவில் மீன் பிடிக்கவுள்ள தடை நீக்கப்படாமலும், ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி அளிக்கப்படாமலும் மேற்கொள்ளப்படும் தளர்ச்சி எந்தவித பலனையும் அளிக்கக்கூடியதாக இருக் கமாட்டாது.
இந்த வகையில் மீன்பிடித் தடை குறித்து புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது தமிழ் மக்களுக்கு பெரிதும் ஏமாற் றம் அளிப்பதொன்றாகவே உள்ளது. இது அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் குறித்தும் சந்தேகங்களை ஏற்படுத்தும் அளவிற்கு அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கத்தக்கதாகும். அதாவது, முன்னைய பொ.ஐ.முன்னணி அரசாங்கமும் சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் மீன் பிடித்தடை குறித்து இவ வாறான நிலைப்பாடுகளை அதாவது இராணுவ அனுகூலங்களை முதன்மைப்படுத்தும் நிலைப்பாடுகளை முதன்மைப்படுத்த முற்பட்டமையே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையுூறாக அமைந்ததென்பது ஞாபகப்படுத்தக் கூடியதாகும்.
கல்விக்கு இடையுூறு!
'வடக்கு கிழக்கில் இருநூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய ஒரு இலட்சம் சிறுவர்கள் வீதிகளில் அலைந்து திரிகின்றனர். இந்த நிலையைத் தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்' என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, அகதிகள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
கடந்தகால சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட இன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளில் மாணவர்களின் கல்விசார்ந்த நெருக்கடியும் ஒன்றாகும். இதற்குத் தனியாக பாடசாலைகள் மீது சிறீலங்கா இராணுவம் குறிவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுமல்ல, அதன்வேறுபல நடவடிக்கைகளும் கல்வியைப் பெருமளவு பாதித்தன என்பதே நியாயமானதாகும்.
தமிழர் தாயகத்தில் படையெடுப்புக்களை நடாத்திய சிங்கள இராணுவம் பெருமளவிலான பாடசாலைகளை அழித்தது மட்டுமல்ல, ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட இடங்களில் உள்ளபல பாடசாலைகளை தனது தேவைக்கு எடுத்துக்கொண்டது. சிறீலங்கா படைகள் ஆக்கிரமிப்புச் செய்த இடங்களில் அது தேவைக்கென எடுத்துக்கொண்ட கட்டடங்களில் அநேகமானவை பாடசாலைகளாகவே இருந்தன.
இந்நிலையில் பாடசாலைக்குள் பெருமளவு செயலிழந்து போயின. இது பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கான வசதியை நேரடியாகப் பாதிப்பவையாக இருந்தது. ஆனால் இராணுவம் நிலைகொள்வதற்காகப் பாடசாலைகளை ஆக்கிரமித்ததினால் மட்டும் தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதல்ல சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடையில் இருந்து ஏனைய ஒடுக்குமுறை, நடவடிக்கைகள் அனைத்துமே கல்வியைப் பெரியளவில் பாதித்தன.
சிறீலங்கா அரசின் பாரிய இராணுவ நடவடிக்கைகள் ஒவ வொன்றும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. பல குடும்பங்கள் பொருளாதார வாழ்வையும் அடியோடு சிதைத்தது. பல குடும்பங்களின் உழைப்பாளர்களைக் காவுகொண்டது.
இதனால் கல்வி கற்கவேண்டிய சிறார்கள் பலர் தமது குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாயினர். பலர் ஆதரவற்றவர்களாக மாறவும் வேண்டிவந்தது. இதனால் கல்வியைத்துறந்து சிறு வேலைதானும் தேடியலைய வேண்டியவர்கள் ஆனார்கள். இவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகளை மட்டுமல்ல, கல்விகற்பதற்கான வாழ்வு நிலையையும் கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தமானதாய் இருந்தது. ஒருபுறம் வாழ்விடமின்மை, மறுபுறம் வறுமை அன்றாட உணவுக்கே அல்லாடும் நிலை என்ற நிலையில் கல்வி கற்பதென்பது எத்தனை தூரம் சாத்தியமான தொன்றாக இருக்கமுடியும்!
வறுமை காரணமாகப் பாடசாலை செல்லும் மாணவர்களில் பலர் காலை ஆகாரத்தை காணாதே செல்கின்றனர். இதன் காரணமாகப் பாடசாலைகளில் பல மாணவ மாணவிகள் மயக்கநிலைமை அடைகின்றனர் எனப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அந்தளவுக்குச் சிறார்களின் கல்வியை ஏழ்மை வாட்டுகின்றது.
இவற்றைத்தவிர, இயங்கும் பாடசாலைகள் கூட அடிப்படை வசதிகள் பல இல்லாமலே செயற்படுகின்றன. அதாவது பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் தளபாடங்களில் இருந்து ஆசிரியர் வரையிலான அசையாத, அசைவன யாவும் பற்றாக்குறையானவையாகவே இருந்தன. அதாவது கடந்த ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே வடக்கு-கிழக்கில் கல்வி காணப்பட்டது. இலவசமாக விநியோகிக்கப்படும் பாட நூல்களைக்கூட ஆண்டின் இறுதியில் விநியோகிக்கும் நிலையே இருந்தது.
இந்த hPதியில் தமிழ் சிறுவர்களின் இன்றைய கல்வியானது ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு காரணிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகையினால் வடக்கு-கிழக்கில் மூடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட பாடசாலைகளைத் திறப்பது மட்டுமல்ல, தமிழ்சிறுவர்களின் கல்விக்கு இடையுூறாகவுள்ள ஏனைய காரணிகளையும் உடன் போக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது பசிபோக்க உணவும், கல்வி கற்பதற்கு வசதிகளும் உடன் அளிக்கப்படுதல் வேண்டும். இதில் தாமதம் செய்வது பயிர் செய்யப்பருவ காலத்தைத் தவறவிடுதல் போன்றதாகும். இதில் உடன் கரிசனைகாட்டாது போதல் இன ஒடுக்குதலின் ஒரு வடிவமாகவே பார்க்கப்படக்கூடியது.

