06-22-2003, 09:36 AM
இடையுூறு என்ன?
அர்த்தமுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமெனில் முதலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடைநீக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் சமனான நிலையில் இருந்து, ஒரு சட்டபுூர்வமான அமைப்பாக இருந்து அரசுடன் பேச்சுக்களை நடத்த இது அவசியமானதாகும் என்று அரசியல் துறைப்பொறுப்பாளர் தெரிவித்துள்ளமை அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை தொடர்பான விடயத்தில் புதியதொன்றல்ல.
சிறீலங்கா ஆட்சியாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்பது ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதொரு விடயம்தான். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பது குறித்து பிரஸ்தாபித்த போதே இவ விடயம் முதன்மை பெற்றே இருந்தது.
அத்தோடு, அன்று சமாதான, முயற்சிகளை மேற்கொண்டிருந்த நோர்வேயின் விசேட தூதுவரிடம் இது விடுதலைப் புலிகளினால் வலியுறுத்தப்பட்டதொன்றாகவும் இருந்தது. ஆனால், அன்றைய ஆட்சியாளர் சமாதான முயற்சிகளில் காட்டிய ஆர்வமின்மை, புறக்கணிப்பு என்பனவற்றால் சமாதான முயற்சிகளுடன் இத்தடை நீக்கவிடயமும் கைவிடப்பட்டதாகியது.
ஆனால், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதானால் அதற்கு முன்னதாக புலிகள் மீதான தடை நீக்கப்படுதல் அவசியம் என்பது தமிழர் தரப்பில் கைவிடப்பட்டதொன்றாக என்றும் இருந்ததில்லை. கடந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதற்கான அங்கீகாரத்தைக் கோரித் தேர்தலில் நின்ற தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பினர் கூட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் புலிகள் மீதான தடை நீக்கப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறவில்லை.
கோரிக்கைகள் இவ வாறானதாக இருக்கையில், புலிகள் மீதான தடை நீக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அவசியமானதென்பது நிராகரிக்கப்பட முடியாததொன்றாகவும் இருந்தது. ஏனெனில் சட்டவிரோத இயக்கம் என்ற hPதியிலோ அன்றி சம அந்தஸ்து தந்தவர்கள் என்ற hPதியிலோ அன்றி பேசப்படும் பேச்சுக்கள் அர்த்தமுள்ளவையாக அங்கீகாரம் பெறுபவையாக இருக்கமுடியாது.
எடுத்துக் காட்டாக சட்டவிரோத அமைப்பாக அதாவது தடை செய்யப்பட்ட அமைப்பாகப் புலிகள் இயக்கம் இருக்கையில் முதலில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படுதல் முடியாததொன்றாகி விடுகின்றது. அடுத்ததாக சட்டவிரோத இயக்கம் ஒன்றுக்கு அரசு, அளிக்கும் வாக்குறுதிகளோ செய்யும் உடன்பாடுகளோ சட்டபுூர்வமானவையாக இருக்க மாட்டாது.
அடுத்ததாக சம அந்தஸ்து இல்லாத நிலையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் அந்தஸ்து நிலையில் இல்லாதவர்கள் மீதான ஒருவகைத் திணிப்பாகவும், மறுபுறுத்தில் சந்தேகங்கள், ஐயப்பாடுகள் என்பனவற்றுடன் நோக்கப்படுவதற்குமே வாய்ப்பானதாக அமையக்கூடியதாகும். இது ஐயுறவற்ற நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு உதவப் போவதில்லை.
ஆனால், இதனை ஐக்கிய தேசிய முன்னணியும் புரிந்துகொள்ளாது உள்ளது என்றும் கூறிவிடுதல் முடியாது. ஏனெனில் புலிகள் மீது பொ.ஐ.முன்னணி அரசாங்கம் தடைவிதித்த போதே, இது முன்யோசனை அற்ற உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கை எனவும் எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளுக்கு இடையுூறானதாக அமையலாம் என ஐ.தே.கட்சி குறிப்பிட்டிருந்தமைஃஎச்சரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில், புலிகள் மீதான தடையை ஐ.தேக. முன்னணி அரசாங்கம் ஓர் இடையுூறாகச் சிந்திப்பது அவசியமற்றதொன்று.
இதற்கும் அப்பால் சமாதானத்தை நிலை நிறுத்துவதும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதுமே புதிய அரசாங்கத்தின் உயரிய நோக்கமாக இருந்ததால் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டைகளை அகற்றும் நோக்கில் இத்தடையை விலக்குவதில் என்ன இடையுூறுகள் உள்ளன? தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம நீதியும் வழங்கப் போவதாகக்கூறும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் தமது ஏகபிரதிநிதிகள் எனச் சுட்டிக்காட்டியுள்ளஃ அங்கீகரித்துள்ள விடுதலைப் புலிகளுக்கு சம அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் வழங்குவதற்கு ஏன் சிந்திக்கவேண்டும். இதில் காட்டும் தயக்கம் அவர்கள் மீது ஐயம்கொள்வதை தவறான தொன்றாக்கிவிடமாட்டாதல்லவா?
அர்த்தமுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமெனில் முதலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடைநீக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் சமனான நிலையில் இருந்து, ஒரு சட்டபுூர்வமான அமைப்பாக இருந்து அரசுடன் பேச்சுக்களை நடத்த இது அவசியமானதாகும் என்று அரசியல் துறைப்பொறுப்பாளர் தெரிவித்துள்ளமை அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை தொடர்பான விடயத்தில் புதியதொன்றல்ல.
சிறீலங்கா ஆட்சியாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்பது ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதொரு விடயம்தான். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பது குறித்து பிரஸ்தாபித்த போதே இவ விடயம் முதன்மை பெற்றே இருந்தது.
அத்தோடு, அன்று சமாதான, முயற்சிகளை மேற்கொண்டிருந்த நோர்வேயின் விசேட தூதுவரிடம் இது விடுதலைப் புலிகளினால் வலியுறுத்தப்பட்டதொன்றாகவும் இருந்தது. ஆனால், அன்றைய ஆட்சியாளர் சமாதான முயற்சிகளில் காட்டிய ஆர்வமின்மை, புறக்கணிப்பு என்பனவற்றால் சமாதான முயற்சிகளுடன் இத்தடை நீக்கவிடயமும் கைவிடப்பட்டதாகியது.
ஆனால், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதானால் அதற்கு முன்னதாக புலிகள் மீதான தடை நீக்கப்படுதல் அவசியம் என்பது தமிழர் தரப்பில் கைவிடப்பட்டதொன்றாக என்றும் இருந்ததில்லை. கடந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதற்கான அங்கீகாரத்தைக் கோரித் தேர்தலில் நின்ற தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பினர் கூட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் புலிகள் மீதான தடை நீக்கப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறவில்லை.
கோரிக்கைகள் இவ வாறானதாக இருக்கையில், புலிகள் மீதான தடை நீக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அவசியமானதென்பது நிராகரிக்கப்பட முடியாததொன்றாகவும் இருந்தது. ஏனெனில் சட்டவிரோத இயக்கம் என்ற hPதியிலோ அன்றி சம அந்தஸ்து தந்தவர்கள் என்ற hPதியிலோ அன்றி பேசப்படும் பேச்சுக்கள் அர்த்தமுள்ளவையாக அங்கீகாரம் பெறுபவையாக இருக்கமுடியாது.
எடுத்துக் காட்டாக சட்டவிரோத அமைப்பாக அதாவது தடை செய்யப்பட்ட அமைப்பாகப் புலிகள் இயக்கம் இருக்கையில் முதலில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படுதல் முடியாததொன்றாகி விடுகின்றது. அடுத்ததாக சட்டவிரோத இயக்கம் ஒன்றுக்கு அரசு, அளிக்கும் வாக்குறுதிகளோ செய்யும் உடன்பாடுகளோ சட்டபுூர்வமானவையாக இருக்க மாட்டாது.
அடுத்ததாக சம அந்தஸ்து இல்லாத நிலையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் அந்தஸ்து நிலையில் இல்லாதவர்கள் மீதான ஒருவகைத் திணிப்பாகவும், மறுபுறுத்தில் சந்தேகங்கள், ஐயப்பாடுகள் என்பனவற்றுடன் நோக்கப்படுவதற்குமே வாய்ப்பானதாக அமையக்கூடியதாகும். இது ஐயுறவற்ற நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு உதவப் போவதில்லை.
ஆனால், இதனை ஐக்கிய தேசிய முன்னணியும் புரிந்துகொள்ளாது உள்ளது என்றும் கூறிவிடுதல் முடியாது. ஏனெனில் புலிகள் மீது பொ.ஐ.முன்னணி அரசாங்கம் தடைவிதித்த போதே, இது முன்யோசனை அற்ற உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கை எனவும் எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளுக்கு இடையுூறானதாக அமையலாம் என ஐ.தே.கட்சி குறிப்பிட்டிருந்தமைஃஎச்சரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில், புலிகள் மீதான தடையை ஐ.தேக. முன்னணி அரசாங்கம் ஓர் இடையுூறாகச் சிந்திப்பது அவசியமற்றதொன்று.
இதற்கும் அப்பால் சமாதானத்தை நிலை நிறுத்துவதும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதுமே புதிய அரசாங்கத்தின் உயரிய நோக்கமாக இருந்ததால் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டைகளை அகற்றும் நோக்கில் இத்தடையை விலக்குவதில் என்ன இடையுூறுகள் உள்ளன? தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம நீதியும் வழங்கப் போவதாகக்கூறும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் தமது ஏகபிரதிநிதிகள் எனச் சுட்டிக்காட்டியுள்ளஃ அங்கீகரித்துள்ள விடுதலைப் புலிகளுக்கு சம அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் வழங்குவதற்கு ஏன் சிந்திக்கவேண்டும். இதில் காட்டும் தயக்கம் அவர்கள் மீது ஐயம்கொள்வதை தவறான தொன்றாக்கிவிடமாட்டாதல்லவா?

