Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நளாயினி தாமரைச்செல்வனின் "நங்கூரம்", "உயிர்த்தீ"
#1
<span style='color:blue'>நங்கூரம்
உயிர்த்தீ

<i>நளாயினி தாமரைச்செல்வன்</i>

[size=18]எதிர்வரும் தைத்திங்கள் 2006ம் ஆண்டு அன்று கவிஞை நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் முதலிரண்டு கவிதைத் தொகுப்புகள் ஆகிய நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. தமிழகத்தில் நடைபெற இருக்கிற புத்தகக் கண்காட்சியில் இவ்விரு கவிதைத் தொகுப்புகளும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. காதல் கவிதைகளைத் தாங்கி வரும் இந்நூல்களின் அட்டைப்படங்களை ஓவியர் ஜீவன் அவர்கள் வரைந்துள்ளார்.</span>

<b>நளாயினி தாமரைச்செல்வனின் வலைப்பதிவு:</b> உயிர்கொண்டு திளைத்தல்

<b>வெளியீடு பற்றிய நளாயினி தாமரைச் செல்வனின் அறிவிப்பு:</b> கவிதைத்தொகுதிகள் வெளியீடு

<b>ஓவியர் ஜீவனின் ஓவியங்கள்:</b> இங்கே

<span style='font-size:25pt;line-height:100%'><b>நங்கூரம்</b></span>
<i>நங்கூரம் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை</i>

அந்த புகை வண்டியில்
நட்பாய் ஓர் கரம்.

என் பிரயாண சுமைகளை இறக்கி
என் குழந்தையையும்
தன் மடியில் வைத்துக்கொண்டான்.

அருகில் சிரித்த முகத்துடன்
அவன் மனைவி.

எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு
தன்னை அறிமுகப்படுத்தாமல்.

நான் எனக்குள்
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..!
நன்கு பரீட்சயமானதாய் !
யார் இவன்?
நிறைய உரு மாறி இருப்பானோ?

என்னை நன்கு தெரிந்தவனாய்
எல்லாம் விசாரித்தான்.

மூளையின் ஒரு பக்கம்
இவன் பார்வையின் அலகுகள்
நிறைய இருப்பதை உணர்கிறது.
யார் இவன்?

ஞாபக புத்தகத்தில்
இவன் அலகு தட்டுப்பட்டதில்
ஓ! இவன் என் முதல் கணவன்.

அந்த புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப்பறித்து
இரு மாலை கட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற

அயல்வீட்டு சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.

இவனுக்கு மண்ணில்
சோறு கறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்.


[b]<span style='font-size:25pt;line-height:100%'>உயிர்த்தீ</span>
<i>உயிர்த்தீ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை</i>

நீர்த்தடாகத்துள்
விழும் மழைத்துளியாய்
கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன்.

சின்ன சின்ன
குமிழ்களாய்
தோன்றுவதும்
மறைவதுமாய்--

இப்படித்தான்
உன் நினைவுகள்
எனக்குள் இப்போ.

கண் மூடி கிறங்கி
சலசலப்பை உணர
சுகமாகத்தான் உள்ளது.

குமிழ்கள் உடையும்போது
ஏற்படும் நீர்ச்சலனம்
மெது மெதுவாக
எங்கும் வியாபித்து
தடாகத்துள் அலை போன்ற
அசைவைத்தருவது போல்
உயிரின் அந்தம் வரை நீயும்
அதிர்வை தரத்தான் செய்கிறாய்.


Reply


Messages In This Thread
நளாயினி தாமரைச்செல்வனின் &quot;நங்கூரம்&quot;, &quot;உயிர்த்தீ&quot; - by இளைஞன் - 11-22-2005, 06:04 PM
[No subject] - by இளைஞன் - 11-22-2005, 06:44 PM
[No subject] - by tamilini - 11-22-2005, 07:41 PM
[No subject] - by stalin - 11-22-2005, 08:04 PM
[No subject] - by yarlpaadi - 11-22-2005, 08:09 PM
[No subject] - by AJeevan - 11-22-2005, 08:12 PM
[No subject] - by aathipan - 11-22-2005, 09:02 PM
[No subject] - by siluku - 11-22-2005, 10:59 PM
[No subject] - by Rasikai - 11-23-2005, 03:31 AM
[No subject] - by Mathan - 11-23-2005, 10:14 AM
[No subject] - by Aalavanthan - 11-23-2005, 12:31 PM
[No subject] - by அனிதா - 11-23-2005, 12:43 PM
[No subject] - by KULAKADDAN - 11-25-2005, 07:34 PM
[No subject] - by shanmuhi - 11-25-2005, 10:19 PM
[No subject] - by sinnappu - 12-02-2005, 12:07 AM
[No subject] - by kirubans - 12-02-2005, 12:19 AM
[No subject] - by Nitharsan - 12-16-2005, 07:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)