11-22-2005, 05:34 AM
வசம்பு மற்றும் பூனைக்குட்டி
இக்கருத்துக்குரியவர் யார் என்று இங்கே குறிப்பிடப்படாவிட்டாலும்.கருத்தின் தன்மையை வைத்து திலகபாமா என்று ஊகிக்க முடிகிறது.
அகப்பாடல்களின் எண்ணிக்கை பற்றியே குழப்பம் அதில் ஒன்றில் கூட காமம் செப்பவில்லை என்றால் குழப்பமோ குழப்பம்.
அகப்பாடல்களில் உடல் உறவைப் பற்றிப் பேசவில்லை என்பது சுற்றி வளைத்துக் கூறப்பட்ட உண்மை.சங்கப்பாடல்களில் உடலுறவை எவ்வாறு மேற்கொள்வது என்று எனக்குத் தெரிந்து எங்குமே குறிப்பிடவில்லை.
ஆனால் காமம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.நாங்கள் இப்போது படிப்பதிலும் தாராளமாக அப்போது குறிப்பிட்டிருக்கிறார்கள்.மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு களவழி ஒழுக்கம் திணையொழுக்கமாகக் குறிப்பிடப்படுகிறது
தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற் கெவ்வமாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொடு சாவாக்
கவலை மாக்கட்டிப் பேதையூரே
என்னும் பாட்டு ஐங்குறுநூறில் ஒன்று
காமம்,அதனால் உண்டாகும் வேட்கை,பிரிவுத்துயர் அதனால் உண்டாகும் பசலை நோய்.காதலருடன் புணர்தல் ஊடல் ஊடிப் பின் கூடலென்று பலதும் நிறைந்ததுதான் சங்கப்பாடல்.
சங்கப்பாடல்களில் அல்குல் என்றால் எமக்கு என்னவென்றே தெரிவதில்லை அதனால் விட்டுவிடுகிறோம்.யோனி என்றால் எமக்குத் தெரிகிறது அதனால் அதனை ஏற்க மறுக்கிறோம்.
இக்கருத்துக்குரியவர் யார் என்று இங்கே குறிப்பிடப்படாவிட்டாலும்.கருத்தின் தன்மையை வைத்து திலகபாமா என்று ஊகிக்க முடிகிறது.
அகப்பாடல்களின் எண்ணிக்கை பற்றியே குழப்பம் அதில் ஒன்றில் கூட காமம் செப்பவில்லை என்றால் குழப்பமோ குழப்பம்.
அகப்பாடல்களில் உடல் உறவைப் பற்றிப் பேசவில்லை என்பது சுற்றி வளைத்துக் கூறப்பட்ட உண்மை.சங்கப்பாடல்களில் உடலுறவை எவ்வாறு மேற்கொள்வது என்று எனக்குத் தெரிந்து எங்குமே குறிப்பிடவில்லை.
ஆனால் காமம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.நாங்கள் இப்போது படிப்பதிலும் தாராளமாக அப்போது குறிப்பிட்டிருக்கிறார்கள்.மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு களவழி ஒழுக்கம் திணையொழுக்கமாகக் குறிப்பிடப்படுகிறது
தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற் கெவ்வமாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொடு சாவாக்
கவலை மாக்கட்டிப் பேதையூரே
என்னும் பாட்டு ஐங்குறுநூறில் ஒன்று
காமம்,அதனால் உண்டாகும் வேட்கை,பிரிவுத்துயர் அதனால் உண்டாகும் பசலை நோய்.காதலருடன் புணர்தல் ஊடல் ஊடிப் பின் கூடலென்று பலதும் நிறைந்ததுதான் சங்கப்பாடல்.
சங்கப்பாடல்களில் அல்குல் என்றால் எமக்கு என்னவென்றே தெரிவதில்லை அதனால் விட்டுவிடுகிறோம்.யோனி என்றால் எமக்குத் தெரிகிறது அதனால் அதனை ஏற்க மறுக்கிறோம்.
\" \"

