06-22-2003, 09:34 AM
போருக்கு ஓய்வு
பேச்சுவார்த்தைக்கான ஆரம்பம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழத் தேசியத் தலைவரும் சிறீலங்காப் பிரதமரும் சைச்சாத்திட்டனர்.
--------------------------------------------------------------------------------
இலங்கைத்தீவில்,
ஒரு பகுதியில் அடக்கி ஒடக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது என்பதுடன்,
சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஆழக்கவனம் செலுத்தி, அதனைத் தீர்த்துவைக்க கரிசனை
கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு தலைப்பட்சமான ஒரு மாதகால யுத்த நிறுத்தமும், சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்ட ஒருமாத கால மோதல் தவிர்ப்பும், மேலும் ஒரு மாதகாலம் காலநீடிப்புச் செய்யப்பட்டு, தற்போது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட பொதுவிதிகளின் அடிப்படையில், நிரந்தரப் போர்நிறுத்தமாக வளர்ச்சிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது.
நோர்வேயின் சமாதான முயற்சிக்குக் கிடைத்த காத்திரமான முதல் வெற்றி இது என, இதனைக் குறிப்பிடமுடியும்.
சந்திரிகா ஆட்சியின்போது, விடுதலைப் புலிகளையும், சிறீலங்கா அரசையும் பொது இணக்கத்திற்குக் கொண்டுவர நோர்வே அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும், சந்திரிகா அரசின் கடும்போக்கு இராணுவவாதக் கொள்கையால், நோர்வேயின் சமாதான முயற்சி பல சோதனைகளையும் நெருக்கடிகளையும், தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் சந்திக்கவேண்டிவந்தது.
தற்போது, சமாதானத்திற்கான மக்கள் ஆணைபெற்று ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கா அரசு, இது நாள்வரை நடந்துகொண்டிருக்கும் நடைமுறைகள், செயற்பாடுகள் சமாதான முயற்சியை ஊக்கப்படுத்ததுவதாய் அமைந்திருக்கின்றன.
சந்திரிகா அரசுபோலல்லாது, விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்ததிற்கு சாதகமாக நடந்துகொண்டதோடல்லாமல், நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு இணங்கி, ஒரு பொதுக்கட்டுப்பாட்டுக்கு இணங்க ரணில் அரசு முன்வந்திருப்பது, சமாதான நோக்கத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பினரையும் ஊக்கப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வன்னியிலும், சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொழும்பிலும் இருந்தவாறு கையொப்பம் இட்டனர்.
இலங்கைத்தீவில் தசாப்தங்களாக முரண்பட்டு மோதிவரும் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினையை சமாதான வழிமூலம் தீர்த்துவைக்கும் முயற்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஈடுபட்டிருக்கும் நோர்வே அரசு, இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையொப்பம் இட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அதிகாரபுூர்வமாக, நோர்வே ஒஸ்லோவில் வைத்து 22.02.2002 அன்று வெளியிட்டது.
இலங்கைத்தீவில், ஒரு பகுதியில், அடக்கி ஒடக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை இன்று, சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது என்பதுடன், சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஆழக்கவனம் செலுத்தி, அதனைத் தீர்த்துவைக்க கரிசனை கொண்டுள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சியை ஆதரிக்கும் சர்வதேச சமூகம் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.
இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்போர்நிறுத்த விதிகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம், 23ம் திகதி 00.00 மணியில் இருந்து அமுலுக்கு வருகின்றது.
இவ ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிகளை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஒழுகுவதற்கு இருதரப்பும் உடன்பட்டிருக்கின்றது.
ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழுவும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களைப் போலல்லாது, சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்ட இப்பிரச்சினையில், சிறீலங்கா அரசோ அல்லது அதன் படையினரோ
மனம்போன போக்கில் செயற்படமுடியாது என்பதற்கான கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் நிறையவே இருக்கின்றன
பேச்சுவார்த்தைக்கான ஆரம்பம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழத் தேசியத் தலைவரும் சிறீலங்காப் பிரதமரும் சைச்சாத்திட்டனர்.
--------------------------------------------------------------------------------
இலங்கைத்தீவில்,
ஒரு பகுதியில் அடக்கி ஒடக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது என்பதுடன்,
சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஆழக்கவனம் செலுத்தி, அதனைத் தீர்த்துவைக்க கரிசனை
கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு தலைப்பட்சமான ஒரு மாதகால யுத்த நிறுத்தமும், சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்ட ஒருமாத கால மோதல் தவிர்ப்பும், மேலும் ஒரு மாதகாலம் காலநீடிப்புச் செய்யப்பட்டு, தற்போது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட பொதுவிதிகளின் அடிப்படையில், நிரந்தரப் போர்நிறுத்தமாக வளர்ச்சிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது.
நோர்வேயின் சமாதான முயற்சிக்குக் கிடைத்த காத்திரமான முதல் வெற்றி இது என, இதனைக் குறிப்பிடமுடியும்.
சந்திரிகா ஆட்சியின்போது, விடுதலைப் புலிகளையும், சிறீலங்கா அரசையும் பொது இணக்கத்திற்குக் கொண்டுவர நோர்வே அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும், சந்திரிகா அரசின் கடும்போக்கு இராணுவவாதக் கொள்கையால், நோர்வேயின் சமாதான முயற்சி பல சோதனைகளையும் நெருக்கடிகளையும், தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் சந்திக்கவேண்டிவந்தது.
தற்போது, சமாதானத்திற்கான மக்கள் ஆணைபெற்று ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கா அரசு, இது நாள்வரை நடந்துகொண்டிருக்கும் நடைமுறைகள், செயற்பாடுகள் சமாதான முயற்சியை ஊக்கப்படுத்ததுவதாய் அமைந்திருக்கின்றன.
சந்திரிகா அரசுபோலல்லாது, விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்ததிற்கு சாதகமாக நடந்துகொண்டதோடல்லாமல், நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு இணங்கி, ஒரு பொதுக்கட்டுப்பாட்டுக்கு இணங்க ரணில் அரசு முன்வந்திருப்பது, சமாதான நோக்கத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பினரையும் ஊக்கப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வன்னியிலும், சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொழும்பிலும் இருந்தவாறு கையொப்பம் இட்டனர்.
இலங்கைத்தீவில் தசாப்தங்களாக முரண்பட்டு மோதிவரும் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினையை சமாதான வழிமூலம் தீர்த்துவைக்கும் முயற்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஈடுபட்டிருக்கும் நோர்வே அரசு, இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையொப்பம் இட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அதிகாரபுூர்வமாக, நோர்வே ஒஸ்லோவில் வைத்து 22.02.2002 அன்று வெளியிட்டது.
இலங்கைத்தீவில், ஒரு பகுதியில், அடக்கி ஒடக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை இன்று, சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது என்பதுடன், சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஆழக்கவனம் செலுத்தி, அதனைத் தீர்த்துவைக்க கரிசனை கொண்டுள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சியை ஆதரிக்கும் சர்வதேச சமூகம் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.
இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்போர்நிறுத்த விதிகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம், 23ம் திகதி 00.00 மணியில் இருந்து அமுலுக்கு வருகின்றது.
இவ ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிகளை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஒழுகுவதற்கு இருதரப்பும் உடன்பட்டிருக்கின்றது.
ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழுவும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களைப் போலல்லாது, சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்ட இப்பிரச்சினையில், சிறீலங்கா அரசோ அல்லது அதன் படையினரோ
மனம்போன போக்கில் செயற்படமுடியாது என்பதற்கான கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் நிறையவே இருக்கின்றன

