11-16-2005, 08:36 PM
<b>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 8</b>
படுக்கையில் படுத்தபடியே அப்பாவின் கடிதம், மதுவின் கடிதங்கள், நண்பர்களின் கடிதங்கள் என்று பிரித்து அடுக்கி வைத்து இருந்த ரமணன் சசி அனுப்பிய கடிதங்களையும் தனியாக வைத்து இருந்தான். அதில் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இது சசி இடம் இருந்து வந்த எட்டாவது கடிதம் அதனை மீண்டும் வாசித்தான். ம்ம் மனித மனங்களின் பச்சோந்தி புத்திகள் நினைத்து சிரிப்பு தான் வந்தது. கடிதம் வாசிக்கத் தொடங்கினான்
அன்பான ரமணனுக்கு (பேர் சொல்லி எழுதுவதால் குறை நினைக்கவேண்டாம்) நான் கடிதம் போட்டதை அண்ணாவிடம் சொல்லி விட்டிர்களா? அண்ணா கோபிக்கவில்லை சந்தோசமாக எழுத சொல்லிவிட்டார் இருந்தும், உங்களிடமிருந்து எந்தகடிதமும் வரவே இல்லையே. ஏன் உங்கள் படத்தை வைத்துக் கொண்டுதான் படுக்கிறேன் அம்மா அண்ணாக்களிடம் சொல்லி சிரிக்கிறா நான் என்ன செய்ய? பதில் போடுங்கோ. போன கிழமை கோவிலுக்கு போய்விட்டு வரும்போது உங்கள் வீட்டுக்கும் போனேன். உங்கள் அப்பா சந்தோசமாக கதைத்தார். எப்படி சமைப்பீங்களா என்று கேட்டார் ஓம் என்று சொன்னேன் அதற்கு அவர் சொன்னார் பிற்காலத்தில் எங்களுடன் தானம் வந்து இருக்கப்போவதாக என்று
அது சரி ரமணன் நீங்கள் ஊருக்கு வந்து கல்யாணம் முடித்து விட்டு திரும்பி போகப்போறீங்களா சவூதிக்கு. என்னால் உங்களை விட்டு பிரிய முடியாது அண்ணா என்றால் திரும்பிப் போகட்டும் நீங்கள் என்னுடன் இருந்தால் எனக்கு சந்தோசம். உங்கள் விருப்பத்தையும் எழுதுங்களேன். உங்கள் எழுத்தையும் பார்க்க ஆசையாக இருக்கிறது
"ம்ம் இப்படி எழுதிய சசியும் போனபாதை" சசியின் அண்ணாவும் சசியின் செயலால் சவூதியை விட்டுப் போகும் போது ரமணனிடன் சொல்லாமலே போய் விட்டார் என்ன செய்ய ரமணனின் மனது மாறும் நேரத்தில் சசி ஊரில் சாக்கு வாங்க வரும் ஒருவனுடன் ஓடிவிட்டா கண்டதும் காதலாம் " என்று ரமணனின் தங்கை எழுதி இருந்தா. நல்ல வேளை ரமணன் சம்மதித்தால் எல்லாவற்றுக்கும் என்று அவனை புரிந்த தங்கை இருந்தபடியால் அவனுக்கு ரொம்ப நிம்மதி.
மதுவின் நிலை அவன் அவ்வப்போது ஊரில் இருந்து வரும் நண்பர்களின் கடிதங்களில் அறிந்து கொள்ளுவான் எப்படி இருந்தாலும் அவன் மனதுக்கு இனிய உறவு தானே..?
ஒரு நாள் ரமணனின் விடுமுறையில் சாமியிடம் போனபோது......
அவனை எதிர்பார்க்காத சாமி திகைத்து விட்டான் பின்பு ரமணன் சாமியிடம்
"என்ன சாமி எதுவானாலும் எனக்கு சொல்லுங்கோ,உங்கள் மேல் கோபம் இல்லை மதுவையும் கோபிக்கமாட்டேன்." என்று சொன்ன ரமணனிடம் மனதைத் திறந்து அழுகையினூடே சொல்லத்தொடங்கினான்
மது வேலை செய்யும் போது ஒரு நாள் மதுவுக்கும் அந்த திருமணமான அந்த ஆடவனுக்கு இரவு டியூட்டி. அது தொடர்ந்து இரண்டு கிழமைகள் வந்தது இரவில் நோயாளிகள் உறங்கிய பின்பு அவர்களுக்கு கிடைத்த தனிமைகள் சந்தர்ப்பங்கள். மது அவனிடம் தன்னை இழந்து விட்டாள். மதுவின் முழு அனுமதியடன் தான் அந்த ஆடவன் மதுவை தொட்டு இருக்கிறார். வயசும் சூழ்நிலையும் தன்னை அவனிடம் இழுக்கவைத்து விட்டதாக மது சாமியிடம் சொல்லி அழுது இருந்தபோது, சாமிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருபுறம் சின்னவயது முதலே பழகிய ரமணன், நிலை புரிந்தவன் ஒருமுறை யாரிடமும் பலவந்தமாக மதுவை யார் தொட்டலும் மதுவை ரமணன் ஏற்று இருப்பான் ஆனால்...
மதுவே சம்மதித்து நடந்தபோது என்ன செய்வது, பின்பு ஒருமுடிவு எடுத்து அந்த ஆடவனுடன் கதைத்து, அவர்கள் இருவருக்கும் வீட்டில் வைத்து முதல் மனைவியின் எதிர்ப்புக்கு இடையிலும் கல்யாணம் முடித்துவிட்டு வந்து விட்டான் ஆனால் ரமணன் முகத்தில் எப்படி முழிப்பது என்று வராமலே இருந்துவிட்டான். மனதெல்லாம் உடைந்து சிதற, எதுமே பேசாமல் வந்தான் ரமணன்...
திரும்பி அறைக்கு வந்த ரமணன் அன்றில் இருந்து மாறிப் போய்விட்டான் நத்தை தன் ஓட்டுக்குள்ளே அடைவது போல் ஒரு ஞானியை போல் எதிலும் பற்று இல்லாமல் வாழ தொடங்கினான் இன்று வரை அவனுக்கு இப்போதெல்லாம் அந்த பாலை வன மண் சுடுவதில்லை மனதெல்லாம் வேகும் போது கேவலம் அந்த வெறும் சூடு என்ன செய்யும் அவனுக்கு மட்டும் எல்லோருக்கும் "சுடுகின்ற புதை மணல்கள்"சுடுவதே இல்லை
<b>பிற்குறிப்பு</b>
ஏனோ கல்யாணம் முடித்து 8 வருடங்கள் ஆகியும் மதுவுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை கோவில் கோவிலாக ஏறி இறங்குவதாக ரமணனின் சகோதரிகள் எழுதி இருந்தார்கள்
ஒரு ஆறுதலான செய்தி ரமணன் ஊருக்கு போகிறான் ஏதாவது கோவில் மடத்தில் தன் காலத்தை கழிக்க போவதாக முடிவு செய்து விட்டான் அவனுக்கு அவன் மனதை புரிந்த ஓர் உறவு கிடைக்க பிராத்தனை செய்வோமா.... ?
-முற்றும்-
படுக்கையில் படுத்தபடியே அப்பாவின் கடிதம், மதுவின் கடிதங்கள், நண்பர்களின் கடிதங்கள் என்று பிரித்து அடுக்கி வைத்து இருந்த ரமணன் சசி அனுப்பிய கடிதங்களையும் தனியாக வைத்து இருந்தான். அதில் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இது சசி இடம் இருந்து வந்த எட்டாவது கடிதம் அதனை மீண்டும் வாசித்தான். ம்ம் மனித மனங்களின் பச்சோந்தி புத்திகள் நினைத்து சிரிப்பு தான் வந்தது. கடிதம் வாசிக்கத் தொடங்கினான்
அன்பான ரமணனுக்கு (பேர் சொல்லி எழுதுவதால் குறை நினைக்கவேண்டாம்) நான் கடிதம் போட்டதை அண்ணாவிடம் சொல்லி விட்டிர்களா? அண்ணா கோபிக்கவில்லை சந்தோசமாக எழுத சொல்லிவிட்டார் இருந்தும், உங்களிடமிருந்து எந்தகடிதமும் வரவே இல்லையே. ஏன் உங்கள் படத்தை வைத்துக் கொண்டுதான் படுக்கிறேன் அம்மா அண்ணாக்களிடம் சொல்லி சிரிக்கிறா நான் என்ன செய்ய? பதில் போடுங்கோ. போன கிழமை கோவிலுக்கு போய்விட்டு வரும்போது உங்கள் வீட்டுக்கும் போனேன். உங்கள் அப்பா சந்தோசமாக கதைத்தார். எப்படி சமைப்பீங்களா என்று கேட்டார் ஓம் என்று சொன்னேன் அதற்கு அவர் சொன்னார் பிற்காலத்தில் எங்களுடன் தானம் வந்து இருக்கப்போவதாக என்று
அது சரி ரமணன் நீங்கள் ஊருக்கு வந்து கல்யாணம் முடித்து விட்டு திரும்பி போகப்போறீங்களா சவூதிக்கு. என்னால் உங்களை விட்டு பிரிய முடியாது அண்ணா என்றால் திரும்பிப் போகட்டும் நீங்கள் என்னுடன் இருந்தால் எனக்கு சந்தோசம். உங்கள் விருப்பத்தையும் எழுதுங்களேன். உங்கள் எழுத்தையும் பார்க்க ஆசையாக இருக்கிறது
"ம்ம் இப்படி எழுதிய சசியும் போனபாதை" சசியின் அண்ணாவும் சசியின் செயலால் சவூதியை விட்டுப் போகும் போது ரமணனிடன் சொல்லாமலே போய் விட்டார் என்ன செய்ய ரமணனின் மனது மாறும் நேரத்தில் சசி ஊரில் சாக்கு வாங்க வரும் ஒருவனுடன் ஓடிவிட்டா கண்டதும் காதலாம் " என்று ரமணனின் தங்கை எழுதி இருந்தா. நல்ல வேளை ரமணன் சம்மதித்தால் எல்லாவற்றுக்கும் என்று அவனை புரிந்த தங்கை இருந்தபடியால் அவனுக்கு ரொம்ப நிம்மதி.
மதுவின் நிலை அவன் அவ்வப்போது ஊரில் இருந்து வரும் நண்பர்களின் கடிதங்களில் அறிந்து கொள்ளுவான் எப்படி இருந்தாலும் அவன் மனதுக்கு இனிய உறவு தானே..?
ஒரு நாள் ரமணனின் விடுமுறையில் சாமியிடம் போனபோது......
அவனை எதிர்பார்க்காத சாமி திகைத்து விட்டான் பின்பு ரமணன் சாமியிடம்
"என்ன சாமி எதுவானாலும் எனக்கு சொல்லுங்கோ,உங்கள் மேல் கோபம் இல்லை மதுவையும் கோபிக்கமாட்டேன்." என்று சொன்ன ரமணனிடம் மனதைத் திறந்து அழுகையினூடே சொல்லத்தொடங்கினான்
மது வேலை செய்யும் போது ஒரு நாள் மதுவுக்கும் அந்த திருமணமான அந்த ஆடவனுக்கு இரவு டியூட்டி. அது தொடர்ந்து இரண்டு கிழமைகள் வந்தது இரவில் நோயாளிகள் உறங்கிய பின்பு அவர்களுக்கு கிடைத்த தனிமைகள் சந்தர்ப்பங்கள். மது அவனிடம் தன்னை இழந்து விட்டாள். மதுவின் முழு அனுமதியடன் தான் அந்த ஆடவன் மதுவை தொட்டு இருக்கிறார். வயசும் சூழ்நிலையும் தன்னை அவனிடம் இழுக்கவைத்து விட்டதாக மது சாமியிடம் சொல்லி அழுது இருந்தபோது, சாமிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருபுறம் சின்னவயது முதலே பழகிய ரமணன், நிலை புரிந்தவன் ஒருமுறை யாரிடமும் பலவந்தமாக மதுவை யார் தொட்டலும் மதுவை ரமணன் ஏற்று இருப்பான் ஆனால்...
மதுவே சம்மதித்து நடந்தபோது என்ன செய்வது, பின்பு ஒருமுடிவு எடுத்து அந்த ஆடவனுடன் கதைத்து, அவர்கள் இருவருக்கும் வீட்டில் வைத்து முதல் மனைவியின் எதிர்ப்புக்கு இடையிலும் கல்யாணம் முடித்துவிட்டு வந்து விட்டான் ஆனால் ரமணன் முகத்தில் எப்படி முழிப்பது என்று வராமலே இருந்துவிட்டான். மனதெல்லாம் உடைந்து சிதற, எதுமே பேசாமல் வந்தான் ரமணன்...
திரும்பி அறைக்கு வந்த ரமணன் அன்றில் இருந்து மாறிப் போய்விட்டான் நத்தை தன் ஓட்டுக்குள்ளே அடைவது போல் ஒரு ஞானியை போல் எதிலும் பற்று இல்லாமல் வாழ தொடங்கினான் இன்று வரை அவனுக்கு இப்போதெல்லாம் அந்த பாலை வன மண் சுடுவதில்லை மனதெல்லாம் வேகும் போது கேவலம் அந்த வெறும் சூடு என்ன செய்யும் அவனுக்கு மட்டும் எல்லோருக்கும் "சுடுகின்ற புதை மணல்கள்"சுடுவதே இல்லை
<b>பிற்குறிப்பு</b>
ஏனோ கல்யாணம் முடித்து 8 வருடங்கள் ஆகியும் மதுவுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை கோவில் கோவிலாக ஏறி இறங்குவதாக ரமணனின் சகோதரிகள் எழுதி இருந்தார்கள்
ஒரு ஆறுதலான செய்தி ரமணன் ஊருக்கு போகிறான் ஏதாவது கோவில் மடத்தில் தன் காலத்தை கழிக்க போவதாக முடிவு செய்து விட்டான் அவனுக்கு அவன் மனதை புரிந்த ஓர் உறவு கிடைக்க பிராத்தனை செய்வோமா.... ?
-முற்றும்-
inthirajith

