06-22-2003, 09:24 AM
தமிழரிடையே நிலைத்து விட்ட
தியாக தீபம் அன்னை புூபதி
14
ஆம்
ஆண்டு
நீங்காத நினைவுடன்
அது இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்புக் காலம்.
அமைதிப்படை என்ற போர்வையில் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த இந்தியப்படைகள் தமது சுயரூபத்தை தமிழீழம் எங்கும் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
புலிகளுடனான யுத்தத்தில் தோல்வியுற்ற சிறீலங்காப்படைகளுக்கு உதவும் நோக்குடன் தமிழர் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துக் கொண்ட இந்தியப்படைகள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது.
தமிழீழ மண்ணிலே தமிழ் மக்கள் மீது முழு அளவிலான யுத்தம் ஏவிவிடப்பட்டது.
இதன்போது எம்மக்களுக்காகக் குரல்கொடுக்கவோ, உதவியளிக்கவோ எந்தவொரு நாடும் முன்வரவில்லை. உலக வல்லரசுகளும், மூன்றாம் உலக நாடுகளும் இந்தியத் தலையீட்டை ஆதரித்தன.
இதனால் விடுதலைப் புலிகள் தனித்து நின்று இந்தியத் தலையீட்டுக்கு எதிராக யுத்தம் புரிந்தனர். உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்திய படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீரமுடன் போரிட்டார்கள்.
இவ வேளையில்தான் இந்தியப்படை தன் கையாலாகாத்தனத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது காட்டத்தொடங்கியது. இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டும் காணாமல் போயும் இருந்ததுடன் படுகொலையும் செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டனர்.
தன் அட்டூழியங்கள் வெளிவராதவாறு இடங்கள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இந்தியா அதனூடாக இங்கு தாம் நடத்திய அட்டூழியங்கள் வெளிவராதவாறு நன்கு திட்டமிட்ட முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டது.
மூடிய சிறைச்சாலைபோல் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த எமது மண்ணில் இந்தியப்படைகள் நடத்திவந்த கொடூரங்களை வெளிக்கொணர தமிழருக்கு எந்தவொரு ஊடகங்களும் இருக்கவில்லை.
இவ வேளையில்தான் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிராக குரல்கொடுக்க, போராட்டங்களை நடாத்த மட்டு-அம்பாறை அன்னையர் முன்னணி முடிவுசெய்தது.
தமிழர் பிரதேசங்களில் இந்தியப்படைகள் புரிந்துவரும் அட்டூழியங்களை உடனடியாக நிறுத்தவேண்டும்,
விடுதலைப் புலிகளுடன் பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும், என்ற இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அது சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது.
பலபெண்கள் இதில் பங்கேற்க முன்வந்தனர். இவர்களில் ஒருவரான அன்னம்மா டேவிற் மட்டு. மாமாங்க ஈஸ்வரர் ஆலயமுன்றலில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார். இதனை இந்தியப்படைகள் மிரட்டியும் துன்புறுத்தியும் முடிவிற்கு கொண்டுவந்தனர்.
இந்தியப்படையினரின் இவ ஈனச்செயல் கண்டு கொதித்தெழுந்த அன்னையர் முன்னணியின் செயலாளரான அன்னை புூபதி அவர்கள் தாமாக முன்வந்து உலகில் தம்மை அகிம்சாவாதியாக காட்டிவந்த இந்தியாவின் இரண்டாவது முகத்தை உலகிற்கு உணர்த்தியதுடன் இந்தியப்படைகளின் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இத்தகைய தியாகம் புரிந்து தியாகச் சாவடைந்த அன்னை புூபதி இன்னும் எம்மத்தியில் நிலைத்திருக்கின்றார்.
தியாக தீபம் அன்னை புூபதி
14
ஆம்
ஆண்டு
நீங்காத நினைவுடன்
அது இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்புக் காலம்.
அமைதிப்படை என்ற போர்வையில் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த இந்தியப்படைகள் தமது சுயரூபத்தை தமிழீழம் எங்கும் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
புலிகளுடனான யுத்தத்தில் தோல்வியுற்ற சிறீலங்காப்படைகளுக்கு உதவும் நோக்குடன் தமிழர் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துக் கொண்ட இந்தியப்படைகள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது.
தமிழீழ மண்ணிலே தமிழ் மக்கள் மீது முழு அளவிலான யுத்தம் ஏவிவிடப்பட்டது.
இதன்போது எம்மக்களுக்காகக் குரல்கொடுக்கவோ, உதவியளிக்கவோ எந்தவொரு நாடும் முன்வரவில்லை. உலக வல்லரசுகளும், மூன்றாம் உலக நாடுகளும் இந்தியத் தலையீட்டை ஆதரித்தன.
இதனால் விடுதலைப் புலிகள் தனித்து நின்று இந்தியத் தலையீட்டுக்கு எதிராக யுத்தம் புரிந்தனர். உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்திய படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீரமுடன் போரிட்டார்கள்.
இவ வேளையில்தான் இந்தியப்படை தன் கையாலாகாத்தனத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது காட்டத்தொடங்கியது. இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டும் காணாமல் போயும் இருந்ததுடன் படுகொலையும் செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டனர்.
தன் அட்டூழியங்கள் வெளிவராதவாறு இடங்கள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இந்தியா அதனூடாக இங்கு தாம் நடத்திய அட்டூழியங்கள் வெளிவராதவாறு நன்கு திட்டமிட்ட முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டது.
மூடிய சிறைச்சாலைபோல் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த எமது மண்ணில் இந்தியப்படைகள் நடத்திவந்த கொடூரங்களை வெளிக்கொணர தமிழருக்கு எந்தவொரு ஊடகங்களும் இருக்கவில்லை.
இவ வேளையில்தான் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிராக குரல்கொடுக்க, போராட்டங்களை நடாத்த மட்டு-அம்பாறை அன்னையர் முன்னணி முடிவுசெய்தது.
தமிழர் பிரதேசங்களில் இந்தியப்படைகள் புரிந்துவரும் அட்டூழியங்களை உடனடியாக நிறுத்தவேண்டும்,
விடுதலைப் புலிகளுடன் பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும், என்ற இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அது சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது.
பலபெண்கள் இதில் பங்கேற்க முன்வந்தனர். இவர்களில் ஒருவரான அன்னம்மா டேவிற் மட்டு. மாமாங்க ஈஸ்வரர் ஆலயமுன்றலில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார். இதனை இந்தியப்படைகள் மிரட்டியும் துன்புறுத்தியும் முடிவிற்கு கொண்டுவந்தனர்.
இந்தியப்படையினரின் இவ ஈனச்செயல் கண்டு கொதித்தெழுந்த அன்னையர் முன்னணியின் செயலாளரான அன்னை புூபதி அவர்கள் தாமாக முன்வந்து உலகில் தம்மை அகிம்சாவாதியாக காட்டிவந்த இந்தியாவின் இரண்டாவது முகத்தை உலகிற்கு உணர்த்தியதுடன் இந்தியப்படைகளின் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இத்தகைய தியாகம் புரிந்து தியாகச் சாவடைந்த அன்னை புூபதி இன்னும் எம்மத்தியில் நிலைத்திருக்கின்றார்.

