11-14-2005, 08:20 PM
AJeevan Wrote:[quote=SUNDHAL]மாணவர்களுக்கு அடித்தது யோகம்
ஜெர்மனி நாட்டில் லிண்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு திடீர் என்று ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தில் வெப்பம் ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கருவி கோளாறு ஆகிவிட்டது. இதனால் வகுப்பு அறைகளில் வெப்பத்தின் அளவு 30 டிகிரி செண்டிகிரேட் ஆனது. அதிக வெப்பத்தால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த கருவி சரி செய்யப்படும் வரை அனைத்து மாணவ-மாணவிகளும் மிக குறைந்த நீச்சல் உடையில் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் இப்போது இந்த பள்ளியில் மாணவிகள் உள்பட அனைவரும் நீச்சல் உடையில் வலம் வருகிறார்கள்.
இப்ப குளிர் காலமாச்சே............?
இது உண்மை மாதிரி தெரியல்லயே?
யோசிச்சீங்களா?
இந்த செய்தி எங்கே வந்தது?´
அஜீவன் அண்ணா குளிர்காலத்தில்தானே ஹீற்ரர் போடுவார்கள், ஹீற்ரரை நிறுத்தினால் இப்ப குளிர் கூடத்தானே, ஜக்கற்றும், பெட்சீட்டும் போத்துக்கொண்டு பாடசாலை முழுது திரியேலாதுதானே, ஆனால் நீங்க சொன்னமாதிரி செய்தி உண்மையோ என பார்க்க வேண்டும்.
.
.
.

