11-13-2005, 11:18 PM
மெதுவாகக் கேட்ட சாமியிடம் "சரி வாங்கோ கன்ரீனுக்கு போவோம்" என்று அழைத்து சென்றான். ஏதோ சொல்லத்தவித்த படியே இருந்த சாமி "ரமணா என்னை மன்னிக்கவேணும்." என்று பீடிகையுடன் தொடங்கினான். சரி என்ன சொல்லுங்கோ என்று மனதை தைரியப்படுத்தி கொண்டான் ரமணன்.
"அம்மா கடிதம் போட்டு இருந்தா உடனே என்னை ஊருக்கு வரும்படி மதுவின் நடத்தையால் ஊருக்கு வெளியே தலைகாட்டமுடியவில்லை என்று எழுதி இருக்கிறா அவவும் எதோ எழுதி இருந்தா நம்பவும் முடியவில்லை "என்று முடித்தான் சாமி
"நானும் கேள்விப்பட்டேன் ஆனால் நான் நம்ப மாட்டேன் மது அப்படி பட்ட பெண் இல்லை சாமி" என்று சொன்ன ரமணனை கண்கலங்க பார்த்தான் சாமி.
" சரி எதுக்கும் நான் இலங்கை போட்டு வாறேன் அம்மா உடனே வர சொல்லி எழுதி இருக்கிறா ஒரு கிழமையில் ஊருக்கு போகிறேன். வரும் போது நல்லசெய்தியுடன் வருவேன்" என்று சொல்லி விடை பெற்றான் சாமி.
"ம்ம் எதுநடந்தாலும் சாமி உங்களை நான் வெறுக்கமாட்டேன் மது இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் மதுவிடம் சொல்லுங்கோ" என்று மது எழுதிய கடிதங்களின் குவியலை காட்டி "இப்படி எழுதியமதுவின் மனது எனக்கு தெரியும்" என்று சொன்னான் ரமணன் சாமியின் முகத்தில் ஏனோ சந்தோசமே இல்லை.
சாமியும் நாட்டுக்கு ஒரு மாத லீவில் போய்விட்டான் இதற்கு இடையில் நண்பனின் தங்கை நேரடியாக அவனுக்கு கடிதம் போட்டு இருந்தா.அதில்
அன்பான கவியின் அண்ணாவுக்கு,
அன்புடன் சசி எழுதிக்கொள்வது அம்மா உங்களுக்கு கடிதம் எழுத சொல்லி, உங்கள் அப்பாவிடம் விலாசம் வாங்கி தந்தார்கள் நாங்கள் அனுப்பிய பலகாரம் கிடைத்ததா? அண்ணா ஒரு படம் தந்தாரா? உங்கள் படம் உங்கள் வீட்டில் பார்த்தேன் சந்தோசம் எப்போ ஊருக்கு வருவீர்கள் என்று அம்மா கேட்க சொன்னா? வரும் போது அண்ணாவையும் ஒன்றாக கூட்டிக் கொண்டு வரட்டாம் ( எனக்கும் உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறது. கவி எனக்கு உங்கள் படம் ஒன்று தந்தா அதை பார்த்த அம்மா தான் உங்களுக்கு கடிதம் எழுதச் சொன்னார்கள்) நீங்கள் ஊருக்கு வரும் போது என் ஐந்து சகோதரர்களும் இங்கே ஒன்றாக நிற்பதாக சொல்லி விட்டார்கள். அம்மாவிடம் எனது கல்யாணம் நன்றாக நடக்கவேணும் என்று ஆசைப் படுகிறார்கள் ம்ம் உங்கள் மனது தான் அதற்கு ஆவன செய்ய வேணும்
பிற்குறிப்பு;
நான் இப்போ சமைக்கபழகுகிறேன் உங்களுக்கு என்ன பிடிக்கும் ?
அன்புடன் பதிலை எதிர்பார்க்கும்
சசி
என்று எழுதி இருந்தது. ரமணனின் மனநிலையோ தவித்தபடி இருக்கும்போது, இதுவேறு புதுத் தலை இடி தானோ ? என்று நினைத்துக் கொண்டான்.
"அம்மா கடிதம் போட்டு இருந்தா உடனே என்னை ஊருக்கு வரும்படி மதுவின் நடத்தையால் ஊருக்கு வெளியே தலைகாட்டமுடியவில்லை என்று எழுதி இருக்கிறா அவவும் எதோ எழுதி இருந்தா நம்பவும் முடியவில்லை "என்று முடித்தான் சாமி
"நானும் கேள்விப்பட்டேன் ஆனால் நான் நம்ப மாட்டேன் மது அப்படி பட்ட பெண் இல்லை சாமி" என்று சொன்ன ரமணனை கண்கலங்க பார்த்தான் சாமி.
" சரி எதுக்கும் நான் இலங்கை போட்டு வாறேன் அம்மா உடனே வர சொல்லி எழுதி இருக்கிறா ஒரு கிழமையில் ஊருக்கு போகிறேன். வரும் போது நல்லசெய்தியுடன் வருவேன்" என்று சொல்லி விடை பெற்றான் சாமி.
"ம்ம் எதுநடந்தாலும் சாமி உங்களை நான் வெறுக்கமாட்டேன் மது இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் மதுவிடம் சொல்லுங்கோ" என்று மது எழுதிய கடிதங்களின் குவியலை காட்டி "இப்படி எழுதியமதுவின் மனது எனக்கு தெரியும்" என்று சொன்னான் ரமணன் சாமியின் முகத்தில் ஏனோ சந்தோசமே இல்லை.
சாமியும் நாட்டுக்கு ஒரு மாத லீவில் போய்விட்டான் இதற்கு இடையில் நண்பனின் தங்கை நேரடியாக அவனுக்கு கடிதம் போட்டு இருந்தா.அதில்
அன்பான கவியின் அண்ணாவுக்கு,
அன்புடன் சசி எழுதிக்கொள்வது அம்மா உங்களுக்கு கடிதம் எழுத சொல்லி, உங்கள் அப்பாவிடம் விலாசம் வாங்கி தந்தார்கள் நாங்கள் அனுப்பிய பலகாரம் கிடைத்ததா? அண்ணா ஒரு படம் தந்தாரா? உங்கள் படம் உங்கள் வீட்டில் பார்த்தேன் சந்தோசம் எப்போ ஊருக்கு வருவீர்கள் என்று அம்மா கேட்க சொன்னா? வரும் போது அண்ணாவையும் ஒன்றாக கூட்டிக் கொண்டு வரட்டாம் ( எனக்கும் உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறது. கவி எனக்கு உங்கள் படம் ஒன்று தந்தா அதை பார்த்த அம்மா தான் உங்களுக்கு கடிதம் எழுதச் சொன்னார்கள்) நீங்கள் ஊருக்கு வரும் போது என் ஐந்து சகோதரர்களும் இங்கே ஒன்றாக நிற்பதாக சொல்லி விட்டார்கள். அம்மாவிடம் எனது கல்யாணம் நன்றாக நடக்கவேணும் என்று ஆசைப் படுகிறார்கள் ம்ம் உங்கள் மனது தான் அதற்கு ஆவன செய்ய வேணும்
பிற்குறிப்பு;
நான் இப்போ சமைக்கபழகுகிறேன் உங்களுக்கு என்ன பிடிக்கும் ?
அன்புடன் பதிலை எதிர்பார்க்கும்
சசி
என்று எழுதி இருந்தது. ரமணனின் மனநிலையோ தவித்தபடி இருக்கும்போது, இதுவேறு புதுத் தலை இடி தானோ ? என்று நினைத்துக் கொண்டான்.
inthirajith

