11-10-2005, 09:17 AM
கரிகாலன் Wrote:[quote=thiru]<b>[size=18]அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்
மக்கள் எப்படி ஆக்கிரமிப்பு இராணுவத்தை அகற்றுவார்கள் ??
நீங்கள் சொன்னது எனக்கு விளங்கவில்லை...
முதற்கண் தங்களுக்குப் பொருள்மயக்கம் தோன்றுமாறு எனது வசனநடை அல்லது அப் அப்பந்தியின் கருப்பொருள் அமைந்துவிட்டதற்காக வருந்துகிறேன்.
இந்த வரிகளின் வாயிலாக நான் சொல்ல முற்பட்ட செய்தி தமிழீழ மக்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான்.
மக்கள் சக்தி அல்லது எழுச்சியின் முன்னால் எந்த வல்லரசும் தாக்குப்பிடிக்க முடியாது.
அதாவது தியாகி திலீபன் அவர்கள் 'மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும்' என்று தமது உரையிலே என்றோ குறிப்பிட்டதைத்தான் இன்று இந்த வார்த்தைகளிலே நான் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
இந்த மக்கள் புரட்சிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே தமிழீழத்திலே தென்படத்தொடங்கிவிட்டதை -நாம் அறிந்தோமோ இல்லையோ- எதிரி அறிந்துகொண்டதைத்தான், அங்கு எதிரியால் திட்டமிடப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட சிலரால் முன்னெடுக்கப்படும் ஊர்ச்சண்டைகளும், குழு மோதல்களும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அதுதவிர யாழ்ப்பாணத்திலே அண்மையில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வின்போது, பல்கலைக்கழகச் சுற்றாடலில் நிறுத்தப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அவ்வழியே வந்த ஊடகவியலாளரை வழிமறித்து ''மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?, நிகழ்வு முடியும்போது திரண்டுவந்து எம்மைத் தாக்குவார்களா?? "என்ற கேள்விகளைக் கேட்டனர் என்பது பல தமிழ் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதுவும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் எழுச்சி குறித்துக் கொண்டுள்ள நியாயமான அச்சத்தையே எடுத்தியம்புகிறது
.
இந்த மக்கள் எழுச்சியின் வடிவங்கள் தங்களது தென்மராட்சிப் பகுதியிலே பலதடவைகள் வெளிப்பட்டுள்ளன.
ஆகப் பிந்தி இது வெளிப்பட்ட இடம் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புத்து}ர். இதுகுறித்துத் தாங்கள் நன்கு அறிந்திருப்பீரகள் என்ற நம்பிக்கையால் இங்கு விளக்கமாக எழுத முற்படவில்லை.
[b]அன்புடன் திரு</b>

