11-07-2005, 04:48 PM
தூயவன் Wrote:kuruvikal Wrote:தூயவன் உங்கள் ஏக்கம் தான் அந்தக் கவிஞனுக்குள்ளும் எமக்குள்ளும்...! அதுக்காக காந்தியைப் பழிக்க வேண்டும் என்பதல்ல..! காந்தி இல்லாமல் அகிம்சைக்கு உதாரணம் வந்திருக்காது...! அகிம்சையை மதிக்கும் நாம் காந்தியின் அந்த ஒரு பணிக்காக வேணும் அவரை மதிக்கலாம்..! அப்போதான் காந்திய வழியில் அகிம்சை மதித்த எம் திலீபன் அண்ணா பூபதியம்மா உலகில் பெறுமதியாக்கப்படுவார்கள்..! அதுதான் இந்தியர்களின் உள்ளத்தை ஒரு நாள் சுடும்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்றுமே அவர்களுக்குச் சுடாது. அவ்வாறு சுடவேண்டுமெனில் சில நரம்புகள் இருந்தாகவேண்டும். அப்படி சுடுவாதாயினும் கூட இன்றே சுடவேண்டும். அவர்களுக்கு புரியும் வரை நாம் காத்திருக்கமுடியாது
இல்லை தூயவன்..தமிழ்நாட்டில் திலீபன் அண்ணா மிகவும் மதிக்கப்படுகிறார்..! இந்திய அரசு அது விடயத்தில் ஏமாற்றி விட்டதை தமிழக மக்கள் நன்கு அறிந்தே இருந்தனர்..! ஈழத்தில் இந்திய இராணுவத்தின் செயல்களை தமிழகம் கடுமையா எதிர்த்தது..! இந்திய இராணுவத்துடனான மோதலின் போதும் கூட தமிழ்நாடு ஈழத்தமிழர்களுக்கு உதவியளித்தது..! 1991 துன்பியலின் பின் எல்லாம் தலை கீழாகி விட்டது...! அதில் இருந்து மீள நாம் நிதானமாகவும் ஆழ்ந்து சிந்தித்தும் நட்புறவோடும் இந்திய மக்களை அணுகி...ஈழத்தமிழர்களின் நியாயங்களை உணர வைக்க வேண்டும்...! வெறும் எதிர்ப்புக்களை கொட்டிக் கொண்டிருப்பதன் மூலம்...எந்த வளமான மாற்றத்துக்கும் இடமில்லாமல் போய்விடும்..! சிலர் இங்கு கூட்டத்தோடு கும்மாளம் போடுவதற்கும் அதுவே காரணம்..! ஈழத்தமிழர் - இந்திய மக்கள் பிரிவினையை வளர்ப்பதையே சிலர் விரும்புகின்றனர்..! அவர்கள் நெருங்குவதை இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி சிலர் விரும்பவில்லை..! குறிப்பாக ஆதிக்க சக்திகளும் பேரினவாதிகளும் அவர்கள் சார்ந்தோரும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->