06-22-2003, 09:08 AM
ஒரு தேசத்தின் பிறப்பு
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதை கிழக்குத்தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
மே மாதம் பத்தொன்பதாம் திகதி, கிழக்குத் தீமோர் மக்களால் இனிமேல் ஒவ வொரு வருடமும் எழுச்சியுடனும், உணர்வுபுூர்வமாகவும் நினைவு கூரப்படப்போகும் ஒரு நாள். 450 ஆண்டுகளுக்கு மேலான கொத்தடிமை வாழ்வில் இருந்து தமது போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று "நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோம் இப்போதுதான் நாங்கள் ஒரு மெய்யான தேசிய இனம் என்ற உணர்வு ஏற்படுகின்றது", என்று கூறி பரவசமடைகிறார்கள் கிழக்குத் தீமோh}யர்கள். இதற்குக் காரணம் மே பத்தொன்பதாம் திகதி, இந்நாளில்தான் மில்லேனியத்தின் முதல் சுதந்திர தேசமாக கிழக்குத் தீமோர் பிறப்பெடுத்தது. இந்நாளில்தான் ஒரு தனி சுதந்திர தேசமாக ஐ.நா. சபையால் உத்தியோகபுூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதுதான் கிழக்குத் தீமோh}யர்களின் இத்தனை பரவசத்திற்குக் காரணம்.
கிழக்குத் தீமோர், ஆசியாவின் தெற்குப் பகுதியில் இந்தோனேசியாவிற்குத் தெற்காக 14615 சதுர கிலோ மீற்றர் பரப்பில் 800,000ற்கும் குறைவான மக்கள் தொகையுடன் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. 1642இல் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டு பின் 1975இல் போர்த்துக்கேயர் வெளியேறியதும் இந்தோனேசிய இராணுவ அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு தொடர்ந்து கொத்தடிமைகளாக நடத்தப் பெற்று வந்த மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக வளர்ந்த சுதந்திர வேட்கை போராட்டமாக உருவெடுத்து அதுவே இச் சிறிய தீவிற்கு சுதந்திர விடியலைக் கொடுத்திருக்கிறது.
இந்த விடியலுக்கு வழிகாட்டியாக நின்று மக்களை வழிநடத்தி கிழக்குத் தீமோரின் சுதந்திரத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் சனானா குஸ்மாவோ, இவரே கிழக்குத் தீமோரின் தந்தையென எல்லோராலும் போற்றப்படுகிறார்.
சோவியத் யுூனியனின் உடைவிற்குப் பின்னர் சர்வதேச hPதியில் ஏற்பட்ட சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைமையை மிகத்திறமையாகக் கையாண்ட குஸ்மாவே, கிழக்குத் தீமோர் தொடர்ந்து இந்தோனேசிய நிர்வாகத்துக்குள் இருக்க வேண்டுமா? அல்லது சுதந்திர நாடாக வேண்டுமா? என்று கேட்டும் சர்வஜனவாக்கெடுப்பொன்றை 1999 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ. நாவின் அனுசரணையுடன் நடைபெறச்செய்தார். இதற்கு 80 சதவீதமான மக்கள் தமது சுதந்திரத்துக்காகவே வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து ஒக்டோபரில் கிழக்குத் தீமோரின் நிர்வாகத்தை ஐ. நா. சபை பொறுப்பேற்றது. அதன் பின் கடந்த மாதம் முதலாவது ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தியது. அதில் சனானா குஸ்மாவோ மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று புதிதாகப்பிறந்த சுதந்திர தேசத்தின் முதல் ஜனாதிபதியாகினார்.
19-05-2002 அன்று சுதந்திரம் பெற்ற கிழக்குத் தீமோரின் நிர்வாகத்தை அந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கும் உத்தியோகபுூர்வமான நிகழ்வு இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மக்கள் ஆடிப்பாடி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தனர். வீதிகளில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். தமது நாட்டின் பிறந்த தினத்தை தமது கலாச்சாரத்துடன் கூடிய ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் உணர்வுபுூர்வமாகக் கொண்டாடினார்கள்.
பொழுது புலரும் வரை நடைபெற்ற இவ வெழுச்சி நிகழ்விற்கு ஐ. நா சபை செயலாளர் நாயகம் கோபி அனான், அவுஸ்திரேல}யப் பிரதமர், இந்தோனிசியப் பிரதமர் உள்ளிட்ட 92 நாடுகளின் இராஜதந்திரிகள் வருகை தந்திருந்தனர்.
கிழக்குத் தீமோர் சுதந்திர தேசமாக பிரகடனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் சனானா குஸ்மாவோ ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து பிரதமர் உட்பட 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.
கடந்த நான்கு நூற்றாண்டு கால அந்நிய ஆட்சியில் கிழக்குத் தீமோரின் இயற்கை வளங்களும் பெருமளவில் சூறையாடப்பட்டு விட்டன. மிகவும் (வறிய) ஏழ்மையான நாடுகளில் சுதந்திர கிழக்குத் தீமோரும் ஒன்றாகிவிட்டது. இந்த வறிய நிலையை உடைத்து நாட்டின் இயற்கை வளத்தைப் பெருக்கி, பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ள சுதந்திரமாக பரிணம}க்கச் செய்யும் சவாலை ஜனாதிபதி சனானா குஸ்மாவோவுடன் கிழக்குத்தீமோரின் மக்களும் எதிர்கொண்டுள்ளார்கள். தமது நாட்டை அவர்கள் வளப்படுத்தி இயற்கை வளங்களைப் பெருக்குவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதை கிழக்குத்தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் வெற்றி விடுதலைக்காகப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்று சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதை கிழக்குத்தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
மே மாதம் பத்தொன்பதாம் திகதி, கிழக்குத் தீமோர் மக்களால் இனிமேல் ஒவ வொரு வருடமும் எழுச்சியுடனும், உணர்வுபுூர்வமாகவும் நினைவு கூரப்படப்போகும் ஒரு நாள். 450 ஆண்டுகளுக்கு மேலான கொத்தடிமை வாழ்வில் இருந்து தமது போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று "நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோம் இப்போதுதான் நாங்கள் ஒரு மெய்யான தேசிய இனம் என்ற உணர்வு ஏற்படுகின்றது", என்று கூறி பரவசமடைகிறார்கள் கிழக்குத் தீமோh}யர்கள். இதற்குக் காரணம் மே பத்தொன்பதாம் திகதி, இந்நாளில்தான் மில்லேனியத்தின் முதல் சுதந்திர தேசமாக கிழக்குத் தீமோர் பிறப்பெடுத்தது. இந்நாளில்தான் ஒரு தனி சுதந்திர தேசமாக ஐ.நா. சபையால் உத்தியோகபுூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதுதான் கிழக்குத் தீமோh}யர்களின் இத்தனை பரவசத்திற்குக் காரணம்.
கிழக்குத் தீமோர், ஆசியாவின் தெற்குப் பகுதியில் இந்தோனேசியாவிற்குத் தெற்காக 14615 சதுர கிலோ மீற்றர் பரப்பில் 800,000ற்கும் குறைவான மக்கள் தொகையுடன் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. 1642இல் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டு பின் 1975இல் போர்த்துக்கேயர் வெளியேறியதும் இந்தோனேசிய இராணுவ அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு தொடர்ந்து கொத்தடிமைகளாக நடத்தப் பெற்று வந்த மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக வளர்ந்த சுதந்திர வேட்கை போராட்டமாக உருவெடுத்து அதுவே இச் சிறிய தீவிற்கு சுதந்திர விடியலைக் கொடுத்திருக்கிறது.
இந்த விடியலுக்கு வழிகாட்டியாக நின்று மக்களை வழிநடத்தி கிழக்குத் தீமோரின் சுதந்திரத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் சனானா குஸ்மாவோ, இவரே கிழக்குத் தீமோரின் தந்தையென எல்லோராலும் போற்றப்படுகிறார்.
சோவியத் யுூனியனின் உடைவிற்குப் பின்னர் சர்வதேச hPதியில் ஏற்பட்ட சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைமையை மிகத்திறமையாகக் கையாண்ட குஸ்மாவே, கிழக்குத் தீமோர் தொடர்ந்து இந்தோனேசிய நிர்வாகத்துக்குள் இருக்க வேண்டுமா? அல்லது சுதந்திர நாடாக வேண்டுமா? என்று கேட்டும் சர்வஜனவாக்கெடுப்பொன்றை 1999 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ. நாவின் அனுசரணையுடன் நடைபெறச்செய்தார். இதற்கு 80 சதவீதமான மக்கள் தமது சுதந்திரத்துக்காகவே வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து ஒக்டோபரில் கிழக்குத் தீமோரின் நிர்வாகத்தை ஐ. நா. சபை பொறுப்பேற்றது. அதன் பின் கடந்த மாதம் முதலாவது ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தியது. அதில் சனானா குஸ்மாவோ மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று புதிதாகப்பிறந்த சுதந்திர தேசத்தின் முதல் ஜனாதிபதியாகினார்.
19-05-2002 அன்று சுதந்திரம் பெற்ற கிழக்குத் தீமோரின் நிர்வாகத்தை அந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கும் உத்தியோகபுூர்வமான நிகழ்வு இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மக்கள் ஆடிப்பாடி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தனர். வீதிகளில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். தமது நாட்டின் பிறந்த தினத்தை தமது கலாச்சாரத்துடன் கூடிய ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் உணர்வுபுூர்வமாகக் கொண்டாடினார்கள்.
பொழுது புலரும் வரை நடைபெற்ற இவ வெழுச்சி நிகழ்விற்கு ஐ. நா சபை செயலாளர் நாயகம் கோபி அனான், அவுஸ்திரேல}யப் பிரதமர், இந்தோனிசியப் பிரதமர் உள்ளிட்ட 92 நாடுகளின் இராஜதந்திரிகள் வருகை தந்திருந்தனர்.
கிழக்குத் தீமோர் சுதந்திர தேசமாக பிரகடனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் சனானா குஸ்மாவோ ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து பிரதமர் உட்பட 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.
கடந்த நான்கு நூற்றாண்டு கால அந்நிய ஆட்சியில் கிழக்குத் தீமோரின் இயற்கை வளங்களும் பெருமளவில் சூறையாடப்பட்டு விட்டன. மிகவும் (வறிய) ஏழ்மையான நாடுகளில் சுதந்திர கிழக்குத் தீமோரும் ஒன்றாகிவிட்டது. இந்த வறிய நிலையை உடைத்து நாட்டின் இயற்கை வளத்தைப் பெருக்கி, பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ள சுதந்திரமாக பரிணம}க்கச் செய்யும் சவாலை ஜனாதிபதி சனானா குஸ்மாவோவுடன் கிழக்குத்தீமோரின் மக்களும் எதிர்கொண்டுள்ளார்கள். தமது நாட்டை அவர்கள் வளப்படுத்தி இயற்கை வளங்களைப் பெருக்குவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில்தான் இருக்கிறது என்பதை கிழக்குத்தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் வெற்றி விடுதலைக்காகப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்று சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும

