Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா?
#33
narathar Wrote:சமமற்ற Intellectual property rights அதாவது அறிவாற்றல் சொத்துரிமை
பற்றிக் கேள்விப் பட்டிருகியள் தானே.இப்ப நீங்க உங்கட அறிவாற்றலைப் பயன் படுத்தி எதயாவது வடிவமச்சீங்க எண்டா அதன் பயனாக வாற வடிவமப்புக்கு நீங்க உரிமை கொண்டாட ஏலாது ஏனென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய ஒப்பந்தம் செய்யும் போது உங்கட அந்த அறிவாற்றல் உரிமையய் waiver அதாவது விட்டுக் கொடுப்பதாக உறுதி செய்ய வேணும். மாற்றாக அந்த வடிவமைப்புக்கு உருமை வச்சிருகிறது அவை வேலை செய்த நிறுவனம்

இது முற்றாக சரியான கருத்து அல்ல.
நிறுவனத்துடன் நான் ஒப்பந்தம் செய்யும் போது, அந்த நிறுவனம் தரும் பணத்துக்கு பெறுமதியாக நான் வடிவமைக்கும் தொழில்நுட்பம் அந்த நிறுவனத்துக்கே சொந்தமானது என நான் கையெழுத்து போட்டு கொடுப்பது எனது சொந்த விருப்பின் காரணமாகவே. நான் செல்வம் சேர்ப்பதற்காக எனது சேவையை ஒரு வணிக ஒப்பந்தத்தின் படி அந்த நிறுவனத்துக்கு வழங்க நான் செய்யும் ஒப்பந்தம் அது. ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரு பொருளின் தொழில்நுட்பமே அந்த நிறுவனத்துக்க சொந்தமானது. எனது அறிவாற்றல் அல்ல. எனது அறிவாற்றலை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி நான் அந்த நிறுவனத்தின் வசதிகளை பயன்படுத்தாமல் வேறு இடத்தில் வடிவமைத்த பொருள் எனக்கு சொந்தமானது. எனது அறிவாற்றல் எனக்கு என்றும் சொந்தமானது. அதைப்பயன்படுத்தி நான் வழங்கும் சேவைகளுக்கு அந்த நிறுவனம் போதிய விலை தராவிட்டால் நான் வேறு நிறுவனத்துக்கு போய் அதை விற்க எனக்கு சுதந்திரம் உண்டு. இந்த நாட்டிலேயே நல்ல விலை கிடைக்காவிட்டால் வேறுநாட்டுக்கு சென்று விற்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு.

மார்க்ஸிய கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் நீங்கள் இருக்கும் வீடும் உங்களுக்கு சொந்தமானதல்ல. நீங்கள் வடிவமைக்கும் தொழில்நுட்பமும் உங்களுக்கு சொந்தமானதல்ல. உங்கள் அறிவாற்றலும் உங்களுக்கு சொந்தமானதல்ல. காரணம் நீஙகள், பல கட்சி ஆட்சிமுறை, கருத்து சுதந்திரம், போன்றவற்றை பற்றி சிந்திப்பதாக அறிந்தால் கூட, அந்த மார்க்ஸிய அரசு உங்களை சிறையில் தள்ளுகிறது. சீனாவும், கியுூபாவும், இரஷ்யாவும் இவ்வாறுதான் இயங்குகின்றன.

narathar Wrote:இன்றைக்கு இந்தக் கணனியில இருகிற சில்லுகளை வடிவமச்சவைக்கு அதன் பலன் கிடயாது

இது மிகவும் தவறான கருத்து. கணணித்துறையில் தான் அதிக வருமானம் தரும் தொழில்கள் இருக்கின்றன. இந்த கணணி சில்லுகளை வடிவமைத்தவர்கள், அந்த நிறுவனம் வழங்கிய அபரிதமான வருமானத்தில் மிக வசதியாக சுகபோக வாழ்வு வாழ்கிறார்கள். இந்த வருமானம் அந்த கணணி சில்லுகளை வடிவமைத்ததற்கு கிடைத்த பலன். அந்த உழைப்புக்கான பலன். மேலும் அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதன் மூலம், கணணி சில்லுகளை வடிவமைத்தவர்கள் நிறுவனத்தின் இலாபத்திலும் நேரடி பங்குதாரராகி இருப்பார்கள்.

இவ்வாறன அதே சில்லுகளை வடிவமைத்த மார்க்ஸிய நாட்டில் வாழும் ஒருவருக்கு, இதே வருமானம் நிச்சயமாக கிடைத்திருக்காது. அந்த கணணிகள் தந்த இலாபத்தை (உபரியை) அந்த நாட்டின் கொம்யுனிஸ்ட் கட்சி உயர்மட்ட அதிகாரிகள் (மார்க்ஸிய நாட்டில் உள்ள முதலாளிகள்) தமது சுகபோக வாழ்வுக்கும், ஆயுத உற்பத்திக்கும் செலவிட்டிருப்பார்கள்.

narathar Wrote:.உங்களது உழைப்பிற்கான ஊதியம் தொழிற் சந்தையே தீர்மானிக்குது ஒழிய உங்கள் உழைப்பு அல்ல.அதனால் தான் சொல்கிறேன் உழைபிற்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று.இதைத் தான் மேல உபரி எண்டு விளக்கி இருக்கு.

உழைப்புக்கும் பலனுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. ஆனால் பலன் உழைப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. சந்தை என்பது மக்கள் தமக்கு தேவையானவற்றை வாங்கவும், மற்றவர்களுக்கு தேவையானவற்றை விற்கவும் கூடும் இடம். மக்களுக்கு தேவை அதிகமாக உள்ள பொருட்களுக்கு நிறைய சந்தை வாய்ப்பு உள்ளது. யாருக்கும் தேவையில்லாத பொருளை, மாடுமாதிரி உழைத்து உருவாக்கிய முட்டாளின் உழைப்புக்கு யாரும் விலை கொடுக்க போவதில்லை. மார்க்ஸிசம் அந்த முட்டாளின் உழைப்புக்கும் சமமான விலை கொடுக்க விரும்பித்தான் அழிந்து போனது.
''
'' [.423]
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 06:49 PM
[No subject] - by stalin - 10-25-2005, 07:57 PM
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 09:30 PM
[No subject] - by narathar - 10-25-2005, 09:45 PM
[No subject] - by stalin - 10-25-2005, 10:00 PM
[No subject] - by poonai_kuddy - 10-27-2005, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 10-27-2005, 05:49 PM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 06:06 PM
[No subject] - by narathar - 10-27-2005, 06:57 PM
[No subject] - by Eelavan - 10-28-2005, 04:25 AM
[No subject] - by sinnakuddy - 10-28-2005, 10:14 AM
[No subject] - by manimaran - 10-28-2005, 03:31 PM
[No subject] - by stalin - 10-28-2005, 04:25 PM
[No subject] - by Mind-Reader - 10-28-2005, 08:32 PM
[No subject] - by kurukaalapoovan - 10-28-2005, 11:15 PM
[No subject] - by manimaran - 10-29-2005, 01:35 AM
[No subject] - by Jude - 10-29-2005, 02:40 AM
[No subject] - by kurukaalapoovan - 10-29-2005, 08:15 AM
[No subject] - by Vasampu - 10-29-2005, 11:21 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:41 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:44 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 11:06 AM
[No subject] - by manimaran - 10-30-2005, 11:50 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 12:06 PM
[No subject] - by narathar - 10-30-2005, 01:30 PM
[No subject] - by Jude - 11-01-2005, 06:17 AM
[No subject] - by narathar - 11-03-2005, 03:59 AM
[No subject] - by Eelavan - 11-03-2005, 04:43 AM
[No subject] - by Jude - 11-03-2005, 05:29 AM
[No subject] - by narathar - 11-05-2005, 09:37 AM
[No subject] - by Jude - 11-05-2005, 06:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)