11-05-2005, 11:04 AM
தூயவன் Wrote:kuruvikal Wrote:இங்கு களத்தில் எத்தினை விதமாக இந்து மதந்தைப் பழித்தார்கள்..அப்போ எங்கோ போனது இந்த மதிப்பளிப்பு..??! உண்மையில் இது இரட்டை வேடத்தனமாகவே தெரிகிறது..! களத்தில் ஒரு நியாயம்..வெளிக்கு ஒரு நியாயமாக..!
கிறீஸ்மஸ் கொண்டாடுவது இன்ன மதந்தவர் என்றதிலும் அது எல்லோராலும் கொண்டாடப்படுவது என்பதே நாங்கள் தரிசித்தது..! நாங்களும் கரோல் கீதம் இசைத்து நத்தார் தாத்தா வேடம் போட்டு ஊர் சுற்றியதும் உண்டு..! சேர்ச் போனதும் உண்டு...கிரமமாக..!
அதுவும் மேற்கைப் பொறுத்தவரை அவர்கள் மதத்திற்கு என்றில்லாமல் இனத்துவ அடையாளங்களுக்கு முக்கியம் கொடுக்கின்றனர்..! அந்த முத்திரையைப் பார்க்கின்ற போது பொட்டு வைத்த ஒரு குடும்பத்துடன் வெள்ளையர்கள் கலந்திருப்பது போல இருக்கிறது..! உண்மை... மேற்கில் குறிப்பாக ஆசியர்கள் வெள்ளைகளோடு நெருங்கிப் பழகுவது குறைவு.. கறுப்புகள் பழகுவதைக் காட்டிலும் இவர்கள் குறைவு..! இப்படியான தனிமைப்படுத்தல்களே..பேர்மிங்காம்...பிரட்பேட் பகுதிகளில் கலவரங்கள் தோன்றக் காரணம்...! இவற்றை மையமாக வைத்து ஒற்றுமையை நட்புறவை சகோதரத்துவத்தை வலியுறுத்த அந்த தபால்தலையை றோயல் மெயில் வெளியிட்டிருக்கும்...உண்மையில் அது சிறந்ததே..!
மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் மனிதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முதன்மைத் தேவை...! அப்போதுதான் ஒற்றுமை சகோதரத்துவம் வளரும்...! அமைதி தோன்றும்..புரிந்துணர்வு பெருகும்..! மதம் மதம் என்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் எந்த நன்மையும் இல்லை..மத அடையாளங்களால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன...??! எதுவுமே இல்லை...! வெறும் இனத்துவ அடையாளத்துக்காக மதத்தை காக்கிறார்கள்..மனிதம் தொலைய.. அது அவசியம் தானா...! மேற்கில் (சில நாடுகளைத் தவிர) இளைய தலைமுறையிடம் மத வெறித்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது..! இந்தியா இலங்கை மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ளது போன்ற மத வெறி இல்லை...அவர்களிடம்..! எனவே அவர்கள் இம்முத்திரையை மதவாதக் கண்ணோட்டத்தில் ................. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மற்றவன் பழிக்கும்போது பதில் கூறாவிட்டால், பிறகு வேறு யாரும் பழிக்கும்போது பொத்திக் கொண்டிரு என்பது எவ்வகை நியாயம். அது இரட்டைவேடத் தன்மையல்ல. சிவன் கோவிலுக்கு போன கையோடு சேச்சுக்கு போய் முழந்தாளிடுவது தான் இரட்டை வேடத்தனம்.
<b>கிறிஸ்மஸ் நேரம் நீங்கள் என்ன வேடம் போட்டீர்களோ, அது உங்கள் தப்பு. அதுக்காக நாம் எல்லாம் அதற்கு குடை பிடிக்கவேண்டிய தேவை இல்லை.</b>
மதவாதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு தங்களின் மதம் மாறுபவர்களுக்கு காசை அள்ளிக் கொட்டிக் கொடுப்பது எவ்வகை. அதிலும் ஒரு காலத்தில் இந்து ஆலயங்களை தரைமட்டமாக்கி அழித்து அதன் மேல் சேச் கட்டியது எல்லாம் என்ன வென்று சொல்வது.
நாங்கள் சேர்ச் போன போதும் கிறிஸ்மஸ் கொண்டாடிய போதும் கிறிஸ்தவனாக அல்லது கிறிஸ்தவளாக மாறவில்லை...அல்லது கொண்டாடக் கூடாது என்று எவரும் தடுக்கவும் இல்லை...! அதையே சுட்டிக்காட்டினோம்...! ஒரு பண்டிகையை கொண்டாடுவது தனிமனித சுதந்திரம்..! அதை பொட்டு வைச்சும் வேட்டி கட்டியும் கொண்டாடலாம்...அதில் தவறில்லை...காரணம்.. மனிதர்கள் ஓய்வெடுத்து ஒன்று கூடி தங்கள் தங்கள் உறவுகளோடு கலந்துறவாடி மகிழ்ந்திருக்கவும் சில நல்ல சிந்தனைகளை பகிர்ந்து உள்வாங்கவுமே...பண்டிகள் கொண்டாப்பட்டுகின்றன..! ஒரு கெற்றுகெதர் என்று கருதலாம்..!
பண்டிகைகள் இன்ன மதத்திற்கு என்று ஒதுக்குவதும் கொண்டாட மறுப்பதும்...அதற்குள் இல்லாத காரணங்களைச் செருகுவதுமே கண்டிக்கப்படனும்..!அதுவே மனிதர்களுக்குள் வேற்றுமையை பிரச்சனைகளை மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது..!
மதத்துக்காக கொண்டாடி இருந்தால் நிச்சயம் சேர்ச் போனதுக்கும் கிறிஸ்மஸ் கொண்டாடியதற்கும் வருந்தி இருப்போம்..! ஆனால் அங்கு மத வலியுறுத்தலுக்கு மேல் மனிதம் இருந்தது..! யாருக்கும் கூடிக்களிக்க வழியிருந்தது..! போர்காலத்தில் வெரித்தாச் வானொலி செய்த கடமையை எவரும் மறக்க முடியாது..! அது கிறிஸ்தவத்தை பரப்பினும்..கட்டாயப்படுத்தவில்லை..அதேவேளை மனிதத்தையும் பார்க்கிறது மத வேற்றுமைகளுக்கு அப்பால்..! இவன் இந்து முஸ்லீம் கிறீஸ்தவன் பெளத்தன் என்று பார்த்தா பழகுகின்றோம் இல்லையே...! எனவே... இதுவும் சாதி போல..அவசியமில்லாமல் மனிதர்களை அடையாளமிட்டு பிரச்சனைகளைத் தூண்டப் பயன்படுத்தப்படுகிறது..! அதுவே வேதனைக்குரிய விடயம்..! இதை உணர்த்தும் நோக்கமாக றோயல் மெயில் அந்த முத்திரையை வெளியிட்டு இருக்கலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

