Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா?
#32
சமமற்ற உழைப்பின் பலன் சமமாகப் பங்கிடப்படுவதை கடினமாக உழைத்தவர்கள் விரும்பமாட்டார்கள்.

இது தான் நீங்க சொன்னது ஜுட் ,இதில நீங்க பலன் உழைப்பில தங்கி இருக்கெண்டு தானே சொல்லி இருகிறியள்.அதாவது ஒருத்தர் எவ்வளவு உழைக்கிறரோ அவ்வளவு பலன் அவருக்கு கிடைக்க வேண்டும் எண்டு தானே சொல்லி இருகிறியள்.அத்தோட கடினமா உழச்சவை ,கடினமா உழைக்காதவய விட கூடிய பலனைப் பெற வேண்டும் அல்லாவிட்டால் அதை அவை விரும்பமாட்டார் என்றும் சொல்லி இருகிறியள்.இதுக்குத் தனே நான் பதில் எழுதி இருகிறன்.

நீங்கள் சொன்னதிற்கு வேறேதாவது அர்த்தம் இருகெண்டா விளங்கப் படுந்துங்கோ எனெக்கெண்டா விளங்கேல்ல.

அடுதது ' நீங்கள் சொல்வீர்கள் ஆனால் ' என்று சொல்லித் தான் பதில் எழுதி இருகிறேனே தவிர நீங்க சொன்னீங்க எண்டு சொல்லேல்ல. நான் அப்படி எழுதினத்துக்குக் காரணம் இப்படி பலரும் செய்யும் விவாதங்களில் வரும் வழக்கமான் கேள்விகளுக்கு ஒரே அடியாக பதில் எழுதினேன்.

பிறகு மூளயப் பற்றிச் சொன்னீங்க.உங்கட மூளையும் என்னுடய மூளையும் எங்கட்டத் தான் இருக்கு ஆனாப் பாருங்கோ அதைக் கொண்டு நாங்க செய்யிற உழைப்பு எங்களுக்குச் சொந்தமில்லை.

Intellectual property rights அதாவது அறிவாற்றல் சொத்துரிமை
பற்றிக் கேள்விப் பட்டிருகியள் தானே.இப்ப நீங்க உங்கட அறிவாற்றலைப் பயன் படுத்தி எதயாவது வடிவமச்சீங்க எண்டா அதன் பயனாக வாற வடிவமப்புக்கு நீங்க உரிமை கொண்டாட ஏலாது ஏனென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய ஒப்பந்தம் செய்யும் போது உங்கட அந்த அறிவாற்றல் உரிமையய் waiver அதாவது விட்டுக் கொடுப்பதாக உறுதி செய்ய வேணும்.இன்றைக்கு இந்தக் கணனியில இருகிற சில்லுகளை வடிவமச்சவைக்கு அதன் பலன் கிடயாது மாற்றாக அந்த வடிவமைப்புக்கு உருமை வச்சிருகிறது அவை வேலை செய்த நிறுவனம்.உங்களது உழைப்பிற்கான ஊதியம் தொழிற் சந்தையே தீர்மானிக்குது ஒழிய உங்கள் உழைப்பு அல்ல.அதனால் தான் சொல்கிறேன் உழைபிற்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று.இதைத் தான் மேல உபரி எண்டு விளக்கி இருக்கு.

பிறகு திறந்த பொருளாதரம் பற்றிச் சொல்லி இருக்கிறியள் முதலாளித்துவ பொருளியளின் தந்தை என்று சொல்லப் படுகிற அடம் ஸ்மிதின் கோட்பாடுகளின் படி சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிகிறது.அதனால் சந்தைப் பொறி முறயில் எதுவித கட்டுப் பாடுகளையும் விதிக்கக் கூடாது என்று சொல்லுறார்.ஆனா அமெரிக்க தமது உள் நாட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது சந்தையின் விலையை கட்டுப்படுத்துவதாக அமைகிறது.இதற்குக் காரணம் அந்தச் சந்தையானது அமெரிக்க விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதால்.அதாவது தனக்கு சாதகமான தருணங்களில் சந்தை திறந்திருக்க வேணும் ஆனால் பாதகமான சந்தைகள் மூடி இருக்க வேணும்.இது தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் இரட்டை வேடம்.ஒரு புறத்தில் தனது பொருட்களை ஏறுமதி செய்ய திறந்த சந்தைகள் வேணும் ஆனால் மற்றய நாடுகள் அமெரிகாவுக்கு ஏற்றுமதி செய்ய ஏலா வண்ணம் அது தனது சந்தையை மூடி விடும்.

பிறகு உருத்திரகுமாரண்ணய பற்றி எழுதி இருகியள்.ஈழத்தின் பொருளாதரக் கொள்கைகளை அவர் தீர்மானிப்பதிலை.அவர் அவரிற்கு இடப் பட்ட பணியை ஆற்றி வருகிறார்.அவர் மாதிரி பலரும் போராட்டத்திற்கான பங்களிப்பை பல நாடுகளில் ஆற்றி வருகின்றனர். நான் மாக்சியமும் ஈழமும் தலைப்பில எழுதின மாதிரி புலிகள் தங்களின் இலக்காக ஒரு சமதர்ம தமிழ் ஈழத்தயே கொண்டிருகின்றனர்.அதற்காகவே தமது உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.போராடியவர்களுக்கே அதன் பலன் கிட்ட வேணும், நான் மேலே விளக்கின மாதிரி மூலதனத்தை வைத்திருப்பவர்களுக்கு அல்ல.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 06:49 PM
[No subject] - by stalin - 10-25-2005, 07:57 PM
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 09:30 PM
[No subject] - by narathar - 10-25-2005, 09:45 PM
[No subject] - by stalin - 10-25-2005, 10:00 PM
[No subject] - by poonai_kuddy - 10-27-2005, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 10-27-2005, 05:49 PM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 06:06 PM
[No subject] - by narathar - 10-27-2005, 06:57 PM
[No subject] - by Eelavan - 10-28-2005, 04:25 AM
[No subject] - by sinnakuddy - 10-28-2005, 10:14 AM
[No subject] - by manimaran - 10-28-2005, 03:31 PM
[No subject] - by stalin - 10-28-2005, 04:25 PM
[No subject] - by Mind-Reader - 10-28-2005, 08:32 PM
[No subject] - by kurukaalapoovan - 10-28-2005, 11:15 PM
[No subject] - by manimaran - 10-29-2005, 01:35 AM
[No subject] - by Jude - 10-29-2005, 02:40 AM
[No subject] - by kurukaalapoovan - 10-29-2005, 08:15 AM
[No subject] - by Vasampu - 10-29-2005, 11:21 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:41 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:44 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 11:06 AM
[No subject] - by manimaran - 10-30-2005, 11:50 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 12:06 PM
[No subject] - by narathar - 10-30-2005, 01:30 PM
[No subject] - by Jude - 11-01-2005, 06:17 AM
[No subject] - by narathar - 11-03-2005, 03:59 AM
[No subject] - by Eelavan - 11-03-2005, 04:43 AM
[No subject] - by Jude - 11-03-2005, 05:29 AM
[No subject] - by narathar - 11-05-2005, 09:37 AM
[No subject] - by Jude - 11-05-2005, 06:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)