06-22-2003, 09:05 AM
'
உலகின் கவனமனைத்தையும் ஈர்த்து, விடுதலைப் புலிகளின் உச்சக்கட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்திய, ஓயாத அலைகள் - 3இன் ஆனையிறவு மீட்பிற்கான இத்தாவில் சமர்க்களம். கடல்வழியாகத் தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன.
மொத்தம் முப்பத்திநான்கு நாட்கள் தொடர்ந்து கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமல்ல ஆனையிறவிலுங் கூடவே சிங்களத்தின் போர்வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது.
'
உ லகின் கவனமனைத்தையும் ஈர்த்து, விடுதலைப் புலிகளின் உச்சக்கட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்திய, ஓயாத அலைகள் - 3இன் ஆனையிறவு மீட்பிற்கான இத்தாவில் சமர்க்களம். கடல்வழியாகத் தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன.
மொத்தம் முப்பத்திநான்கு நாட்கள் தொடர்ந்து கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமல்ல ஆனையிறவிலுங் கூடவே சிங்களத்தின் போர்வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது.
வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவில் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2000, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு அன்றைய பொழுது சூடாகவே விடிந்தது.
கண்டி வீதியை மையமாகக்கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலதை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி இடையறாது அங்கே மேற்கொண்ட முன்னேற்றங்களையெல்லாம் அவர்கள் முறியடிக்கவேண்டியிருந்தது. இலகுவான பின்னணிப் பாதைகள் இல்லாத நிலையில், போதுமானளவு ரவைகள், வெடிபொருட்களற்றிருந்த புலிகளின் அணிகள், தம்மிடமிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக்கொண்டே ஏற்கனவே நடந்த இரண்டு நாள் சமரிலும் பல முனைகளிலும் முன்னேறிய இராணுவத்தினரை முறியடித்து வெற்றிபெற்றிருந்தன.
அதிகாலையில், தொடங்கிய இன்றைய சமர் மிகவும் உக்கிரமானதாக இருந்தது. வழமைக்கு மாறாக எதிரி இன்று ஆனையிறவுப் பகுதியிலிருந்து ஐந்து டாங்கிகள் சகிதம் முன்னேறினான். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த எமது நிலைகள் இராணுவத்தின் அகோரமான எறிகணை வீச்சில் சிதைந்துகொண்டிருந்தன. எதிரி படு வேகமாக முன்னேறினான். டாங்கிகளும் கனரக வாகனங்களும் அணிவகுத்து முன்னே வர பெருந்தொகையில் படையினர் சூழ்ந்த யுத்தக்காடாக மாறியது அந்தக்களம்.
சில மணித்தியாலங்களிலேயே கண்டி வீதியின் இருபுறமும் முன்னேறிய எதிரியால் எமது நிலைகள் ஊடறுக்கப்பட்டு விட்டன. காவலரண் வரிசையின் இரு பகுதிக@டாக உள்ளே நுழைந்த எதிரி, இப்போது மூன்றாவது முனையான பிரதான வீதியின் வழியே உள்நுழைவதற்கு முயன்றுகொண்டிருந்தான்.
அவர்கள் விடவில்லை. செக்சன் லீடர் வீரன், இயல்வாணன், வளநெஞ்சன், சேரக்குன்றன் என இன்னும் மிகச் சிலர் மட்டுமே அங்கே தனித்திருந்தனர். பின்வாங்கத் தயாரில்லா அவர்களை எதிரி சூழத்தொடங்கினான்.
பிரதான வீதியின் அருகில் அவர்கள் இருந்தனர். தன்னிடமிருந்த ஒரேயொரு P.மு இயந்திரத் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்தான் இயல்வாணன். இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய எதிரியின் ஆட்பலம், டாங்கிகள் சகிதம் மனிதப்பிரவாகமென அவர்களைச் சூழ்ந்துகொண்டுவிட்டது.
அவர்களுடனான தொலைத்தொடர்புகள் இறுதியாக அற்றுப்போனவுடன் கட்டளைப்பீடம் பரபரப்பானது. அது கைவிடமுடியாத ஒரு நிலை இத்தாவில் சமர்க்களத்தினது மாத்திரமல்ல, ஆனையிறவு மீட்பிற்கான தலைவரது வியுூகத்தின் தந்திரோபாய முடிச்சு அது. அங்கே அமைக்கப்பட்டிருந்த வியுூகத்தின் உயிர்நாடியும் அதுதான். இப்போது அங்கேயிருந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர். மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. மீண்டும் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்காமல் போனது.
அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு எல்லோரையும் பிடித்துலுக்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும், சுற்றிச் சூழ்ந்துவிட்ட எதிரிகளின் நடுவே அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தனர். தொடர்ந்தும் இராணுவத்தினரை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
பிரதான வீதியால் வந்த இராணுவத்தினரை ஒவ வொருவராய் வீழ்த்தினர். தொடர்ந்து வந்த கனரக வாகனம் ஒன்றும் அதன் பின்னால் வந்த இராணுவத்தினரும் இயல்வாணனின் P.மு தாக்குதலினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போதுதான் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருந்த அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துரதிஸ்ரம் நிகழ்ந்தது. அவர்களிடமிருந்த ஒரேயொரு கனரக துப்பாக்கி Pமு- ஆPஆபு இயங்கு நிலை தடைப்பட்டு சுடமறுத்தது.
எல்லாத்திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறத் துடித்துக்கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்கான இதுவரையான தடையாக அவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களிடமிருந்த துப்பாக்கியும் சுட மறுத்துவிட்டது.
இராணுவம் நெருங்கிவந்துவிட இயல்வாணனுடைய தோழனொருவன் வீசிய கையெறிகுண்டு வெடித்துச் சிதறியது. எதிரி அந்தத் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் கிடைத்த சிறியதொரு அவகாசத்தினுள் தன் துப்பாக்கியை சீர்படுத்த முயன்றான் இயல்வாணன். ஆனாலும், முடியவில்லை மீண்டும் இராணுவம் அவர்களின் நிலையை நெருங்கியது.
மிகவும், நெருக்கடியானதொரு சூழல். தடுப்பதற்கு வழியில்லை. இயல்வாணன் தனித்து இயங்கத் தொடங்கினான். ஒவ வொன்றாய் ரவையேற்றினான். தனித்தனியே மீண்டும் ஆரம்பித்த சூடுகளில் இராணுவத்தினர் அவனது நிலையின்முன் விழத்தொடங்கினர்.
எனினும், பெருந்தொகையில் வேகமாக முன்னேறும் இராணுவத்தைத் தொடர்ந்தும் அவர்களால் தடுக்கமுடியவில்லை. எதிரிகள் அவர்களை நெருங்கியவாறே இருந்தனர்.
செக்சன் லீடர் வீரனுடைய தொலைத்தொடர்புச் சாதனம் ஒருவாறு தனது கட்டளைப்பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. கட்டளைப்பீடத்தில் புதியதொரு பரபரப்புத் தோன்றியது. இராணுவத்தினரால் சூழப்பட்டுவிட்ட பிரதான வீதியிலிருந்து ஒலித்த வீரனுடைய குரல் கட்டளைப்பீடத்திற்கு உற்சாகமானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'றோமியோ, றோமியோ, இப்ப ஆமி எங்கள நெருங்கீட்டான்'
'எங்களுக்கு ரவுன்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது'
'பிரச்சினையில்லை, எங்களைப் பார்க்காதையுங்கோ, நாங்கள் நிக்கிற இடத்திற்கு செல் அடியுங்கோ, வேகமாய் எங்கட நிலையளை வைச்சு ஆமிக்குச் செல் அடியுங்கோ'
யாருமே எதிர்பார்க்காத அவர்களுடைய உணர்வுகள் கட்டளைப்பீடத் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் இன்னமும் தோற்றுவிடவில்லை. இன்னமும் அவர்கள் தமது நிலைகளை எதிரியிடம் செல்ல அனுமதித்துவிடவில்லை. எதிரியால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்த பிரதேசத்திலிருந்து அவர்கள் தொடர்ந்தும் போரிடுகின்றனர். கட்டளைப்பீடம் மீண்டுமொரு முறியடிப்புச் சமரிற்குத் தயாராகியது.
இராணுவம் அவர்களுடைய நிலைகளினுள் புகுந்துகொண்டால் வெடிக்கத் தயாரான கையெறி குண்டுகளுடன் அவர்கள் போரிட்டனர். அவை வார்த்தைகளின் விபரிப்பிற்கு அப்பாற்பட்ட போர்க்களத்தின் கொடிய கணங்கள். கண்களின் முன்னே, மிக அருகில், அவர்களைக் கொல்லும்வெறியுடன் வரும் எதிரிகளை எதிர்த்துத் தொடர்ந்தும் சண்டையிட்டனர். உச்சமான அவர்களின் மனோதிடம், போரிடத் தயாரான ஆற்றல், இறுதிவரை வென்றுவிடத்துடிக்கும் விடுதலை உணர்வு அவர்களைத் தொடர்ந்தும் இயக்கியது.
வீரனது தொலைத்தொடர்புச் சாதனம் சொல்லிய இலக்குகளை எறிகணைகள் தாக்கின. இயல்வாணனுடைய P.மு சுட்டுக்கொன்ற இராணுவத்தினரது சடலங்கள் அவர்களது நிலைகளைச் சுற்றிக் குவியத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை எதிரியின் மூர்க்கத்தை உடைத்தன.
இத்தாவில் களத்தை அன்று எதிரியிடமிருந்து மீட்டுத்தந்த வீரர்களை மீட்பதற்கான எமது முறியடிப்பு அணிகள் அவர்களை நெருங்கியபோது, வீரன் இயல்வாணனுடைய காவலரண்களைச் சுற்றி மட்டும் கொல்லப்பட்ட எண்பத்தைந்து இராணுவச் சடலங்கள் கிடந்தன.
இரண்டாம்கட்ட ஈழப்போரின் ஆரம்ப ஆண்டுகள் அவை. 26.11.1992 பலாலித் தளத்தின் ஒருபகுதி. முன்னணிக் காவலரண்கள் அமைந்திருந்த வளலாய் பகுதிக் காவலரண் வரிசையைத் தாக்கி, அதன் பின்னான சில மினி முகாம்களையும் அழிப்பதற்கான நகர்வுகளைப் புலிகளின் படையணிகள் செய்துகொண்டிருந்தன.
முன்னரங்க காவல் நிலைகள் தகர்க்கப்படும் சமநேரத்தில் ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருக்கும் அணிகளால் தளத்தின் உட்புற இராணுவ முகாம்களும் தாக்கப்படுவதாக அன்றைய எமது திட்டம் இருந்தது.
பின்னணியில் அமைந்திருந்த இந்த மினிமுகாம்களை தாக்கும் அணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நியமிக்கப்பட்டது. அதற்காக இராணுவ நிலைகளை ஊடறுத்து ஏழு கிலோ மீற்றர் வரையான தூரம் அவர்கள் இரகசியமாக நகரவேண்டியிருந்தது.
கண்ணிவெடிகள், மிதிவெடிகள் நிறைந்த இராணுவ முன்னரங்க வேலி, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்கள், மின்ஒளி பாய்ச்சப்பட்ட இரவு நேர அவதானிப்பு வலயம், சிறிய ஒலியும் பேரொலியாக மாறும் பயங்கரமானதொரு அமைதி. இத்தனைக்கும் அப்பால் தொடர் கண்காணிப்பில் இருக்கும் ஒரு பிரதான வீதியையும் கடந்தே அந்த அணி தன் இலக்கை எட்டவேண்டியிருந்தது.
அப்போதுதான் அது நிகழ்ந்தது. யாருமே தாக்குதலுக்கான இறுதி இலக்கை அப்போது நெருங்கியிருக்கவில்லை. நிசப்தமான அன்றைய இருட்பொழுதின் ஆழ்ந்த அமைதியை குலைத்தது ஒரு வெடியோசை. இராணுவ முன்னரங்கை ஊடுருவி பின்னணி ஆழ்நிலைகள் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காவலன் என்ற போராளியின் கால்களில் ஒன்றை அங்கே வெடித்த மிதிவெடி சிதைத்திருந்தது.
எல்லோருடைய விழிகளிலும் கலவரத்தின் சாயல். அடுத்து நடக்கப்போவது என்ன? நிச்சயமாக இந்தச் சத்தத்தை எதிரி கேட்டிருப்பான். திகைப்பின் கதறல், வேதனையின் புலம்பல், காயப்பட்டுவிட்ட ஒரு மனித உயிரின் இயல்பான அனுங்கல் எதிரிக்கு எம்வரவைச் சொல்லிவிடும். அன்றைய சண்டை அத்துடனேயே, எம்மால் தொடங்கப்படாமலேயே முடிவடைந்துவிடும். அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்த எமது முன்னணி வீரர்கள் பலரை நாம் இழக்கநேரிடும். இலக்குகள் எவையும் வெற்றிகொள்ளப்படாமலேயே எமது திட்டம் எதிரியால் தோற்கடிக்கப்பட்டுவிடும்.
அடுத்தது பற்றிய அவநம்பிக்கையுடன் எல்லோரது கவனமும் காவலரன் பக்கம் திரும்பியது.
வெடிப்பின் அதிர்வுகள் அடங்கியபோது கலைந்த புகையினூடு அவன் அசைவது தெரிந்தது. துண்டிக்கப்பட்டு சிதைந்திருந்த அவனது காலில் இருந்து குருதி கொப்பளித்துப் பாய்ந்தது. சத்தமில்லை மெல்ல கையசைத்து அருகிலிருந்த தோழனை அழைத்தான்.
'மச்சான் நான் சத்தம்போட மாட்டன். நீங்கள் தொடர்ந்து முன்னேறுங்கோ'
பயம் படர்ந்திருந்த தோழர்களின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அந்த வார்த்தைகள் எவ வளவு அற்புதமானவை. அவனது அந்த வார்த்தைகள் அன்றைய எம் வெற்றியை சாத்தியமாக்கியது என்று சொன்னால் யாரால்தான் மறுத்துவிடமுடியும்.
உலகின் கவனமனைத்தையும் ஈர்த்து, விடுதலைப் புலிகளின் உச்சக்கட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்திய, ஓயாத அலைகள் - 3இன் ஆனையிறவு மீட்பிற்கான இத்தாவில் சமர்க்களம். கடல்வழியாகத் தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன.
மொத்தம் முப்பத்திநான்கு நாட்கள் தொடர்ந்து கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமல்ல ஆனையிறவிலுங் கூடவே சிங்களத்தின் போர்வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது.
'
உ லகின் கவனமனைத்தையும் ஈர்த்து, விடுதலைப் புலிகளின் உச்சக்கட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்திய, ஓயாத அலைகள் - 3இன் ஆனையிறவு மீட்பிற்கான இத்தாவில் சமர்க்களம். கடல்வழியாகத் தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன.
மொத்தம் முப்பத்திநான்கு நாட்கள் தொடர்ந்து கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமல்ல ஆனையிறவிலுங் கூடவே சிங்களத்தின் போர்வலிமை புலிகளிடம் தோற்றுப்போனது.
வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவில் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2000, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு அன்றைய பொழுது சூடாகவே விடிந்தது.
கண்டி வீதியை மையமாகக்கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலதை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி இடையறாது அங்கே மேற்கொண்ட முன்னேற்றங்களையெல்லாம் அவர்கள் முறியடிக்கவேண்டியிருந்தது. இலகுவான பின்னணிப் பாதைகள் இல்லாத நிலையில், போதுமானளவு ரவைகள், வெடிபொருட்களற்றிருந்த புலிகளின் அணிகள், தம்மிடமிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக்கொண்டே ஏற்கனவே நடந்த இரண்டு நாள் சமரிலும் பல முனைகளிலும் முன்னேறிய இராணுவத்தினரை முறியடித்து வெற்றிபெற்றிருந்தன.
அதிகாலையில், தொடங்கிய இன்றைய சமர் மிகவும் உக்கிரமானதாக இருந்தது. வழமைக்கு மாறாக எதிரி இன்று ஆனையிறவுப் பகுதியிலிருந்து ஐந்து டாங்கிகள் சகிதம் முன்னேறினான். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த எமது நிலைகள் இராணுவத்தின் அகோரமான எறிகணை வீச்சில் சிதைந்துகொண்டிருந்தன. எதிரி படு வேகமாக முன்னேறினான். டாங்கிகளும் கனரக வாகனங்களும் அணிவகுத்து முன்னே வர பெருந்தொகையில் படையினர் சூழ்ந்த யுத்தக்காடாக மாறியது அந்தக்களம்.
சில மணித்தியாலங்களிலேயே கண்டி வீதியின் இருபுறமும் முன்னேறிய எதிரியால் எமது நிலைகள் ஊடறுக்கப்பட்டு விட்டன. காவலரண் வரிசையின் இரு பகுதிக@டாக உள்ளே நுழைந்த எதிரி, இப்போது மூன்றாவது முனையான பிரதான வீதியின் வழியே உள்நுழைவதற்கு முயன்றுகொண்டிருந்தான்.
அவர்கள் விடவில்லை. செக்சன் லீடர் வீரன், இயல்வாணன், வளநெஞ்சன், சேரக்குன்றன் என இன்னும் மிகச் சிலர் மட்டுமே அங்கே தனித்திருந்தனர். பின்வாங்கத் தயாரில்லா அவர்களை எதிரி சூழத்தொடங்கினான்.
பிரதான வீதியின் அருகில் அவர்கள் இருந்தனர். தன்னிடமிருந்த ஒரேயொரு P.மு இயந்திரத் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்தான் இயல்வாணன். இருபுறமும் பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய எதிரியின் ஆட்பலம், டாங்கிகள் சகிதம் மனிதப்பிரவாகமென அவர்களைச் சூழ்ந்துகொண்டுவிட்டது.
அவர்களுடனான தொலைத்தொடர்புகள் இறுதியாக அற்றுப்போனவுடன் கட்டளைப்பீடம் பரபரப்பானது. அது கைவிடமுடியாத ஒரு நிலை இத்தாவில் சமர்க்களத்தினது மாத்திரமல்ல, ஆனையிறவு மீட்பிற்கான தலைவரது வியுூகத்தின் தந்திரோபாய முடிச்சு அது. அங்கே அமைக்கப்பட்டிருந்த வியுூகத்தின் உயிர்நாடியும் அதுதான். இப்போது அங்கேயிருந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர். மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. மீண்டும் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளிக்காமல் போனது.
அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு எல்லோரையும் பிடித்துலுக்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும், சுற்றிச் சூழ்ந்துவிட்ட எதிரிகளின் நடுவே அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தனர். தொடர்ந்தும் இராணுவத்தினரை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
பிரதான வீதியால் வந்த இராணுவத்தினரை ஒவ வொருவராய் வீழ்த்தினர். தொடர்ந்து வந்த கனரக வாகனம் ஒன்றும் அதன் பின்னால் வந்த இராணுவத்தினரும் இயல்வாணனின் P.மு தாக்குதலினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போதுதான் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருந்த அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துரதிஸ்ரம் நிகழ்ந்தது. அவர்களிடமிருந்த ஒரேயொரு கனரக துப்பாக்கி Pமு- ஆPஆபு இயங்கு நிலை தடைப்பட்டு சுடமறுத்தது.
எல்லாத்திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறத் துடித்துக்கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்கான இதுவரையான தடையாக அவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களிடமிருந்த துப்பாக்கியும் சுட மறுத்துவிட்டது.
இராணுவம் நெருங்கிவந்துவிட இயல்வாணனுடைய தோழனொருவன் வீசிய கையெறிகுண்டு வெடித்துச் சிதறியது. எதிரி அந்தத் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் கிடைத்த சிறியதொரு அவகாசத்தினுள் தன் துப்பாக்கியை சீர்படுத்த முயன்றான் இயல்வாணன். ஆனாலும், முடியவில்லை மீண்டும் இராணுவம் அவர்களின் நிலையை நெருங்கியது.
மிகவும், நெருக்கடியானதொரு சூழல். தடுப்பதற்கு வழியில்லை. இயல்வாணன் தனித்து இயங்கத் தொடங்கினான். ஒவ வொன்றாய் ரவையேற்றினான். தனித்தனியே மீண்டும் ஆரம்பித்த சூடுகளில் இராணுவத்தினர் அவனது நிலையின்முன் விழத்தொடங்கினர்.
எனினும், பெருந்தொகையில் வேகமாக முன்னேறும் இராணுவத்தைத் தொடர்ந்தும் அவர்களால் தடுக்கமுடியவில்லை. எதிரிகள் அவர்களை நெருங்கியவாறே இருந்தனர்.
செக்சன் லீடர் வீரனுடைய தொலைத்தொடர்புச் சாதனம் ஒருவாறு தனது கட்டளைப்பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. கட்டளைப்பீடத்தில் புதியதொரு பரபரப்புத் தோன்றியது. இராணுவத்தினரால் சூழப்பட்டுவிட்ட பிரதான வீதியிலிருந்து ஒலித்த வீரனுடைய குரல் கட்டளைப்பீடத்திற்கு உற்சாகமானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'றோமியோ, றோமியோ, இப்ப ஆமி எங்கள நெருங்கீட்டான்'
'எங்களுக்கு ரவுன்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது'
'பிரச்சினையில்லை, எங்களைப் பார்க்காதையுங்கோ, நாங்கள் நிக்கிற இடத்திற்கு செல் அடியுங்கோ, வேகமாய் எங்கட நிலையளை வைச்சு ஆமிக்குச் செல் அடியுங்கோ'
யாருமே எதிர்பார்க்காத அவர்களுடைய உணர்வுகள் கட்டளைப்பீடத் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் இன்னமும் தோற்றுவிடவில்லை. இன்னமும் அவர்கள் தமது நிலைகளை எதிரியிடம் செல்ல அனுமதித்துவிடவில்லை. எதிரியால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்த பிரதேசத்திலிருந்து அவர்கள் தொடர்ந்தும் போரிடுகின்றனர். கட்டளைப்பீடம் மீண்டுமொரு முறியடிப்புச் சமரிற்குத் தயாராகியது.
இராணுவம் அவர்களுடைய நிலைகளினுள் புகுந்துகொண்டால் வெடிக்கத் தயாரான கையெறி குண்டுகளுடன் அவர்கள் போரிட்டனர். அவை வார்த்தைகளின் விபரிப்பிற்கு அப்பாற்பட்ட போர்க்களத்தின் கொடிய கணங்கள். கண்களின் முன்னே, மிக அருகில், அவர்களைக் கொல்லும்வெறியுடன் வரும் எதிரிகளை எதிர்த்துத் தொடர்ந்தும் சண்டையிட்டனர். உச்சமான அவர்களின் மனோதிடம், போரிடத் தயாரான ஆற்றல், இறுதிவரை வென்றுவிடத்துடிக்கும் விடுதலை உணர்வு அவர்களைத் தொடர்ந்தும் இயக்கியது.
வீரனது தொலைத்தொடர்புச் சாதனம் சொல்லிய இலக்குகளை எறிகணைகள் தாக்கின. இயல்வாணனுடைய P.மு சுட்டுக்கொன்ற இராணுவத்தினரது சடலங்கள் அவர்களது நிலைகளைச் சுற்றிக் குவியத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை எதிரியின் மூர்க்கத்தை உடைத்தன.
இத்தாவில் களத்தை அன்று எதிரியிடமிருந்து மீட்டுத்தந்த வீரர்களை மீட்பதற்கான எமது முறியடிப்பு அணிகள் அவர்களை நெருங்கியபோது, வீரன் இயல்வாணனுடைய காவலரண்களைச் சுற்றி மட்டும் கொல்லப்பட்ட எண்பத்தைந்து இராணுவச் சடலங்கள் கிடந்தன.
இரண்டாம்கட்ட ஈழப்போரின் ஆரம்ப ஆண்டுகள் அவை. 26.11.1992 பலாலித் தளத்தின் ஒருபகுதி. முன்னணிக் காவலரண்கள் அமைந்திருந்த வளலாய் பகுதிக் காவலரண் வரிசையைத் தாக்கி, அதன் பின்னான சில மினி முகாம்களையும் அழிப்பதற்கான நகர்வுகளைப் புலிகளின் படையணிகள் செய்துகொண்டிருந்தன.
முன்னரங்க காவல் நிலைகள் தகர்க்கப்படும் சமநேரத்தில் ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருக்கும் அணிகளால் தளத்தின் உட்புற இராணுவ முகாம்களும் தாக்கப்படுவதாக அன்றைய எமது திட்டம் இருந்தது.
பின்னணியில் அமைந்திருந்த இந்த மினிமுகாம்களை தாக்கும் அணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நியமிக்கப்பட்டது. அதற்காக இராணுவ நிலைகளை ஊடறுத்து ஏழு கிலோ மீற்றர் வரையான தூரம் அவர்கள் இரகசியமாக நகரவேண்டியிருந்தது.
கண்ணிவெடிகள், மிதிவெடிகள் நிறைந்த இராணுவ முன்னரங்க வேலி, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்கள், மின்ஒளி பாய்ச்சப்பட்ட இரவு நேர அவதானிப்பு வலயம், சிறிய ஒலியும் பேரொலியாக மாறும் பயங்கரமானதொரு அமைதி. இத்தனைக்கும் அப்பால் தொடர் கண்காணிப்பில் இருக்கும் ஒரு பிரதான வீதியையும் கடந்தே அந்த அணி தன் இலக்கை எட்டவேண்டியிருந்தது.
அப்போதுதான் அது நிகழ்ந்தது. யாருமே தாக்குதலுக்கான இறுதி இலக்கை அப்போது நெருங்கியிருக்கவில்லை. நிசப்தமான அன்றைய இருட்பொழுதின் ஆழ்ந்த அமைதியை குலைத்தது ஒரு வெடியோசை. இராணுவ முன்னரங்கை ஊடுருவி பின்னணி ஆழ்நிலைகள் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காவலன் என்ற போராளியின் கால்களில் ஒன்றை அங்கே வெடித்த மிதிவெடி சிதைத்திருந்தது.
எல்லோருடைய விழிகளிலும் கலவரத்தின் சாயல். அடுத்து நடக்கப்போவது என்ன? நிச்சயமாக இந்தச் சத்தத்தை எதிரி கேட்டிருப்பான். திகைப்பின் கதறல், வேதனையின் புலம்பல், காயப்பட்டுவிட்ட ஒரு மனித உயிரின் இயல்பான அனுங்கல் எதிரிக்கு எம்வரவைச் சொல்லிவிடும். அன்றைய சண்டை அத்துடனேயே, எம்மால் தொடங்கப்படாமலேயே முடிவடைந்துவிடும். அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்த எமது முன்னணி வீரர்கள் பலரை நாம் இழக்கநேரிடும். இலக்குகள் எவையும் வெற்றிகொள்ளப்படாமலேயே எமது திட்டம் எதிரியால் தோற்கடிக்கப்பட்டுவிடும்.
அடுத்தது பற்றிய அவநம்பிக்கையுடன் எல்லோரது கவனமும் காவலரன் பக்கம் திரும்பியது.
வெடிப்பின் அதிர்வுகள் அடங்கியபோது கலைந்த புகையினூடு அவன் அசைவது தெரிந்தது. துண்டிக்கப்பட்டு சிதைந்திருந்த அவனது காலில் இருந்து குருதி கொப்பளித்துப் பாய்ந்தது. சத்தமில்லை மெல்ல கையசைத்து அருகிலிருந்த தோழனை அழைத்தான்.
'மச்சான் நான் சத்தம்போட மாட்டன். நீங்கள் தொடர்ந்து முன்னேறுங்கோ'
பயம் படர்ந்திருந்த தோழர்களின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அந்த வார்த்தைகள் எவ வளவு அற்புதமானவை. அவனது அந்த வார்த்தைகள் அன்றைய எம் வெற்றியை சாத்தியமாக்கியது என்று சொன்னால் யாரால்தான் மறுத்துவிடமுடியும்.

