11-04-2005, 02:58 PM
எனக்குள் எழுந்தவன் நீ..
என்னருகில் இருந்த போதெல்லாம்..
இதயம்... ஏங்கும்..
என்னை நேசிப்பாயா
என நீ கேட்காயா..?
காதல் சொல்ல..
கசியும் இதயம்..!
என் மெல்லிய புன்னகையை..
உனைக் கண்டு துடிக்கும்..
விழிமடலை..
உன்னில் மட்டும் பேச வரும் தயக்கத்தை
உனக்கான என் காத்திருப்புக்களை
இறுதி வரை
நீ காதலென மொழிபெயர்த்துப் பார்க்கவில்லை.
என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!
என்னருகில் இருந்த போதெல்லாம்..
இதயம்... ஏங்கும்..
என்னை நேசிப்பாயா
என நீ கேட்காயா..?
காதல் சொல்ல..
கசியும் இதயம்..!
என் மெல்லிய புன்னகையை..
உனைக் கண்டு துடிக்கும்..
விழிமடலை..
உன்னில் மட்டும் பேச வரும் தயக்கத்தை
உனக்கான என் காத்திருப்புக்களை
இறுதி வரை
நீ காதலென மொழிபெயர்த்துப் பார்க்கவில்லை.
என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!

