Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#55
1961ல் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தின் போது எடுக்கப்பட்ட படம்
எப்போதும் உன்னதமான போராட்டங்களுக்குத் தயாரானவர்களாய்
தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை வரலாறு எமக்குக் கூறுகின்றது, நீண்ட
காலமாய் பல்வேறு எதிரிகளினாலும் அடக்கி ஒடுக்கப்பட்டுவரும்
அப்பாவித் தமிழ் மக்களின் பக்கம் நின்று நிதானமாகவும்
பொறுப்புடனும் வரலாற்றை எடைபோடுதலே வளர்ச்சிக்கான
முன் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

சமஸ்டி அரசமைப்பு முறையானது ஓர் அபாயகரமான புூதமென்பதே பொதுவாக ஆசிய அரசுகளின் எண்ணம். இந்தியாவில் இப்போது நிலவுவது சமஸ்டி முறையல்ல. அரைச் சமஸ்டி முறைதான். பிரித்தானியர் தமது ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவை வைத்திருந்தபோது அங்கு அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தது சமஸ்டி முறையல்ல. அது ஒரு புவியியல் நிர்வாக அலகு முறைதான். சீனாவும் சமஸ்டி முறையைக் கண்டு அஞ்சும் தேசம். குழும உணர்வு மேலோங்கிய ஆசிய சமூகங்களில் அரச அதிகாரம் பெற்ற பெரிய குழுமம் சமஸ்டி முறையை நிராகரிப்பதன் மூலமே 'தேச' ஐக்கியத்தை கட்டிக்காக்கலாம் எனப் பிழையாக எடைபோடுகின றது. இதில் இலங்கையும் ஒன்று.
ஆசியாவில் நிலவும் சமஸ்டி எதிர்ப்புச் சிந்தனை பற்றி பிறிதொரு கட்டுரையில் விரிவாகப் பார்போம்.
சமஸ்டிக் கோரிக்கையை முன் வைத்து அதனடிப்படையில் சமஸ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தோற்றுவித்த முதலாவது ஆசியநாடு இலங்கைதான். 1949ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் சமஸ்டிக் கட்சி உதயமானது.
பிரித்தானிய அரசியற் பாரம்பரியத்தில் சமஸ்டி எதிர்ப்புக் கண்ணோட்டமே அதிகமுண்டு. ஆதலால் அதன் அடிமை நாடுகளாக இருந்த ஆசிய அரசத்தலைவர்களிடமும் அச்சிந்தனை இலகுவாக வேர் பதித்து விட்டது. சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை ஆசியாவில் முதலிற் கொண்டிருந்த அரசியல்வாதி என்ற பெருமை எஸ்.டபிள்யுூ.ஆர்.டி பண்டாரநாயக்காவிற்கு உண்டு. இவர் தலைவனாக ஆட்சியாளனாக வரமுன் இதனைக் கூறினாரே தவிர தலைவனானதும், ஆட்சியாளனானதும் அச்சிந்தனையை வசதியாகக் கைவிடவே விரும்பினார்.
ஆனால் பிரித்தானிய அரசியல் மரபுக்கு வெளியே அமெரிக்க மிசனின் சிந்தனை மரபிற்குட்பட்டு வளர்ந்த எஸ்.ஜே.பி. செல்வநாயகத்திடம் சமஸ்டி முறைபற்றிய சிந்தனை இலகுவிற் பதியமுடிந்தது. அமெரிக்கா சமஸ்டி முறையை கொண்ட ஒரு தேசம் என்பதால் அமெரிக்க மிசனின் பாரம்பரியத்திற்கூடாக செல்வநாயகத்திடம் இச்சிந்தனை இலகுவாக வேர்விட முடிந்தது.
இன, மத, மொழி மற்றும் குழும உணர்வுகளினாற் குரோத முற்றிருக்கும் ஆசிய சமூகங்களின் மத்தியில் சமஸ்டி என்ற சொல்லின் பெயரால் ஒரு கட்சி தோன்றியமை என்பது ஆசிய சமூக வளர்ச்சிக்கு ஏதுவான ஒரு சிறந்த முன்னுதாரணமே. இணைக்குழும உணர்வு மேலோங்கிய ஆசியாவில், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈழத் தமிழ் பேசும் மக்கள் கிறீஸ்தவரான செல்வநாயகத்தை ஆயுட் காலத் தலைவராக ஏற்றுப் போற்றியும் கொண்டமை கூட ஒரு சிறந்த முன்னுதாரணமே.
சமஸ்டிக் கோரிக்கையை அடைந்ததற்கான வழிமுறையாக அகிம்சைப் போராட்டத்தை இவர் தேர்ந்தெடுத்தார். இந்தியாவிற்கு மிக அருகே அமைவிடத்தைக்கொண்ட தீவென்ற வகையில் இந்தியாவின் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அகிம்சை முறை இலங்கைக்கும் இலகுவாகப் பரவியது. ஆதலால் அகிம்சை வழிமுறையில் சமஸ்டி அரசமைப்பை ஸ்தாபிப்பது என்ற இலட்சியம் சமஸ்டிக் கட்சியால் (தமிழரசுக் கட்சி) முன் வைக்கப்பட்டது. இந்த அகிம்சைப் போராட்ட வழிமுறை எப்படி அமைந்திருந்தது என்பதை பரிசீலனை செய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். குறிப்பாக அகிம்சைப் போராட்டக் காலம என வர்ணிக்கப்படத்தக்க 1956ஆம் ஆண்டிலிருந்து 1977ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியே இங்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகும்.
ஈழத்தமிழர் ஒரு புள்ளிவிபரக் கொத்தல்ல, அவர்கள் நீண்ட வரலாற்றில் திரண்டெழுந்தது ஒரு வஸ்து, ஒரு வினோதமான இரசாயனக்கலவை. ஈழத்தமிழரை விளங்க முற்பட்ட பலரும் தத்தமது நோக்கு நிலையில் நின்றே யானை பார்த்த குருடனைப்போல பார்த்தனர். பிரித்தானியரின் பார்வையில் ஈழத்தமிழர் 'விசுவாசம் மிக்க சேவகர்' என்பது. இரண்டு கிலோ மீற்றர் நீளமும் இரண்டு கிலோ மீற்றர் அகலமும் கொண்ட யாழ்ப்பாணத்தாரின் தீர்மானமல்ல தமிழரின் தீர்மானம் என்று ரஜீவ காந்தி மீற்றர் கணக்கில் தமிழரை அளக்க முற்பட்டார். தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான இனப்பிரச்சனை இட்டு நிரப்பப்பட முடியாததும், விளங்கிக் கொள்ள முடியாததுமான அதளபாதாள வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்ற பொருள் பட ஜே. என். டிக்ஸித் கூறினார். ஈழத்தமிழர் புதிரும் வினோதமுமான மக்களென்பது டிக்ஸித்திற்குத் தெரிந்துள்ளது. ஈழத்தமிழரை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என றோகண விஜயவீர கூறினார்.
இப்படி பலராலும் பலவாகக் கூறப்படும், மதிப்பிடப்படும் ஈழத்தமிழரின் 20ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை சிறப்பாக ஆராய்ந்து எழுதினால் மட்டுமே தமிழ் மக்களைப் புரிந்து கொள்ளுதல் சாத்தியப்படும். தமிழர் தமது இருபதாம் நுற்றாண்டு வரலாற்றை ஆய்ந்தறிந்து புரிந்து கொள்ளத் தவறுவார்களேயானால் தமக்குரிய 21ம் நூற்றாண்டு வரலாற்றை சிறப்புற ஒழுங்கமைக்க முடியாதவர்களாவார்கள். எனவே தமது 20ஆம் நூற்றாண்டு வரலாற்றைத் தமிழர் மிகச்சிரத்தை எடுத்து ஆராய்ந்து எழுத வேண்டும். பிற இனங்களுக்கு மட்டுமல்ல தமிழன் தனக்குத்தானே புரியாத புதிராயுமுள்ளான்.
மேலோட்டமான இச்சிறு கட்டுரையில், 20ஆம் நூற்றாண்டு ஈழத்தமிழர் கடந்து வந்த ஒரு போராட்ட முறையான அகிம்சைப் போராட்ட முறையை மதிப்பிடுவதற்கான ஒரு சிறு முற்குறிப்பை மட்டும் குறிப்பிடலாம் எனத் தோன்றுகின்றது.
சமஸ்டிக் கோரிக்கை ஆசியாவின் அன்றைய சூழலிற் சிறப்பானது என்பத}ற் சந்தேகமில்லை. ஆனால் அந்த இலட்சியத்தை அடைவதற்கான அகிம்சைப் போராட்டமுறை எவ வளவு தூரம் சிறப்பாகப் பின்பற்றப்பட்டது என்பது கேள்விக்குரியதே. காந்தியின் அகிம்சைப் போராட்டத்தோடு ஈழத்தில் நிகழ்ந்திருந்த அகிம்சைப் போராட்டங்களை ஒருபோதும் ஒப்பிட முடியாது.
சமஸ்டிக் கட்சியின் முதலாவது பகிஸ்கரிப்புப் போராட்டம் 1950ஆம் ஆண்டு சோல்பரியின் யாழ் விஜயத்திற்கு எதிரானது. இது பெரிதும் கோரிக்கையின்வானதே. மிகச் சிறு அளவிற்தான் இதன் வெற்றி அமைந்தது. இலங்கையில் நிகழ்ந்த முதலாவது கறுப்புக் கொடிப் போராட்டம் பிரதமராயிருந்த கொத்தலாவலையின் 1954ஆம் ஆண்டு யாழ் விஜயத்திற்கு எதிரானது. இக் கறுப்புக் கொடிப் போராட்டம் சில நிமிடங்கள் நீடித்தது. இப்படிப்பட்ட கறுப்புக் கொடிப்போராட்டம், பகிஸ்கரிப்புப் போராட்டம். கதவடைப்புப் போராட்டம் எனக் சிறு சிறு போராட்டங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மூன்று அகிம்சைப் போராட்டங்களையே முக்கியமானவையாகக் கொள்ளமுடியும். அதில் முதலாவது 1956 யுூன் 5ஆம் திகதி தனிச் சிங்கள மசோதாவிற்கெதிரான சமஸ்டிக் கட்சியின் காலிமுகத்திடற் சத்தியாக்கிரகம். அன்று காலை காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் ஆரம்பமானது. சிங்களக் குண்டர்களின் தாக்குதல்களினால் சத்தியாக்கிரகம் சில மணித்தியாலங்களுடன் கைவிடப்பட்டது. இதுபற்றி அ.அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறுகிறார். "காடையர் வீசிய கல்லினால் எனது நெற்றி பிளந்தது. எத்தனையோ தொண்டர்கள் காயமுற்றனர். பகல் ஒரு மணிக்கு தலைவர்கள் எல்லோரும் ஆலோசித்துச் சத்தியாகிரகத்தை நிறுத்தித் தொண்டர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடுசெய்தனர்."
அடுத்து இரண்டாவது பெரிய அகிம்சைப் போராட்டம் 'திருமலை யாத்திரை' இது 1956 ஓகஸ்ட் 6ஆம் திகதி தொடங்கி 16ஆம் திகதி வரையான பத்து நாட்கள் வரை ந்டித்தது யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து கட்சித் தொண்டர்களும் மக்களுமெனத் திரண்டு திருமலை நோக்கிப் பாதயாத்திரை புறப்பட்டனர். மக்கள் மத்தியில் இதற்கு நல்லாதரவு இருந்தது. இவற்றில் மக்கள் விடுதலை உணர்வையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இந்தப் பாதயாத்திரையின் முடிவில் பண்டாரநாயக்காவிற்கு ஒரு வருட அவகாசம் அளிக்கும் திருமலைத் தீர்மானத்துடன் இப்போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.
அடுத்து 1961ஆம் ஆண்டு நிகழ்த 58 நாட்கள் நீடித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இலங்கையில் அதிக நாட்கள் நீடித்த மிகப்பெரும் அகிம்சைப் போராட்டம் இதுவே. இதுவே சமஸ்டிக் கட்சியின் ஆகப்பெரிய அகிம்சைப் போராட்டமும் ஆகும். உண்மையான அர்த்தத்தில் இதுவே சமஸ்டிக் கட்சியின் இறுதி அகிம்சைப் போராட்டமுமாகும். 58 நாட்கள் வரை நீடித்த சத்தியாக்கிரகத்தை பிரதமாராயிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா பொருட்படுத்தவில்லை. இதுபற்றி காவலூர் நவரத்தினம் பிற்காலத்தில் என்னிடம் தெரிவித்திருந்த ஒரு கருத்தை கூறுவது பொருந்தும்.
"போராட்டம் பயனின்றி நீடித்துக் கொண்டு போனது. எப்படிப் போராட்டத்தைக் கைவிடுவதென்று தெரியவில்லை. அந்நிலையில் சட்டவிரோத தபால் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் அரசு நேரடியான தலையீட்டைச் செய்து போராட்டத்தை வெற்றிகரமாக நிறுத்த வழிசமைக்கலாம் என எண்ணி சட்டவிரோத தபாற் சேவையை ஆரம்பித்தோம். எதிர்பார்த்தபடியே அரசு போராட்டத்தை முடித்து வைத்தது." என்று நீண்ட விளக்கத்துடன் கூறினார்.
அவசரகாலச் சட்டப் பிரகடனம், இராணுவத் தலையீடு என்பவற்றால் 1961ஆம்ஆண்டு சத்தியாக்கிரகம் முற்றுப்பெற்றது. அதன் பின்பு அப்படி ஒரு போராட்டத்தை கட்சி ஒரு போதும் சிந்திக்கவில்லை. இவ வாறாக அவர்கள் கூறிய அகிம்சைப் போராட்டம் கைவிடப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னர் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்னமாத்தின் மூலம் சமஸ்டிக் கோரிக்கைக்குப் பதிலாக தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான போராட்ட வழிமுறையும் அகிம்சை என்றே கூறினராயினும் அவ வழியிற் செயற்பாடுகளை குறிப்பிடக்கூடியளவிற்கு முன்னெடுக்வில்லை.
அப்படியாயின் அகிம்சைப் போராட்டம் தோல்வி கண்டமைக்குரிய காரணங்கள் யாவை?
1) அகிம்சைப் போராட்டங்கள் முழு அளவில் முன்னெடுக்கப்படவில்லை.
2) அகிம்சைப் போராட்டங்கள் எதனாலும் சிங்கள அரசின் பொருளாதாரத்தைப் பாதிக்கமுடியவில்லை என்பதுடன் ஒருபோதும் சிங்கள அரச இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியவில்லை. அதாவது இவற்றால் சிங்கள அரசிற்கு பாதிப்பேற்படவில்லை. ஏனெனில் எமது அகிம்சைப் போராட்டம் அரசைப் பாதிக்கக் கூடிய பொருளாதாரப் பரிமாணத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் எமது பொருளாதார வாழ்வுதான் தெற்கிற் தங்கு நிலையைக் கொண்டிருந்தது. மலையகத் தமிழர் இந்த அகிம்சைப் போராட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறுவிதமாய் அமைந்திருக்கும். ஏனெனில் அவர்கள் ஒரு பொருளாதாரச் சக்தி.
3) 1977ஆம் ஆண்டு வரை தமிழ்த்தலைவர்களில் எவரும் முழுநேர அரசியற் தலைவர்களாக இருந்ததில்லை. பகுதி நேரத்தலைவர்களாக இருந்து கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை நிர்ணயிக்கலாம் என்று எண்ணியதும், அகிம்சைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கலாமென்று எண்ணியதும் வேடிக்கையானது. 1977ஆம் ஆண்டுப் பொதுதேர்தலின் பின்பு எதிர்கட்சித் தலைவராய் இருப்பவர் வேறுதொழில் புரிய முடியாதென்ற உத்தியோகபுூர்வ நிர்ப்பந்தத்தின் பின்னணியில் அ.அமிர்தலிங்கம் முழுநேரத் தலைவரானார். இதற்கு அப்பால் இந்த அகிம்சைப் போராட்டக்காலம் முழுவதும் பகுதிநேரத் தலைவர்களின் காலமே.
4) தமிழ்த் தலைவர்களில் எவரும் சில மாதக்கணகான காலமே சிறையிலிருந்துள்ளனர். வருடக் கணக்கான ஆண்டுகளுக்கு அவர்களிற்கான சிறையை எதிரியால் நீடிக்க முடியாதளவிற்கே இவர்களது அகிம்சைப் போராட்டங்களின் பருமன் அமைந்திருந்தது.
5) எதிரி அகிம்சைப் போராட்டங்களை அற்பமாய் எடுக்கக்கூடியளவிற்கே போராட்டங்களின் தன்மைகள் காணப்பட்டன.
தமிழ் மக்களின் பிரச்சினையை சூடுதணியாது வைத்திருந்ததற்கும் அப்பால், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வை தூண்ட உதவியதற்கும் அப்பால் எமது அகிம்சைப் போராட்டம் பெரிதும் முன்னேற முடியாது போனது. எனவே இந்த அகிம்சைப் போராட்டத் தோல்வியில் எதிரிக்கு ஒரு பக்கம் பங்கு இருக்கின்ற போதிலும் மறுபக்கப் பங்கு இப்போராட்டத்தை முன்னெடுத்த தலைமைக்குரியது.இதனை உணர்ச்சிவசப்பட்டு வெறும் பற்றுப் பாசங்களுக்குள்ளாற் பார்க்காது அறிவுபுூர்வமாகச் சரிவர எடைபோட வேண்டியதே வருங்கால வளர்ச்சிகளுக்குமான அத்திவாரமாகும்.
எப்போதும் உன்னதமான போராட்டங்களுக்குத் தயாரானவர்களாய் தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை வரலாறு எமக்குக் கூறுகின்றது, நீண்ட காலமாய் பல்வேறு எதிரிகளினாலும் அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் அப்பாவித் தமிழ் மக்களின் பக்கம் நின்று நிதானமாகவும் பொறுப்புடனும் வரலாற்றை எடைபோடுதலே வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

மு. திருநாவுக்கரசு
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)