06-22-2003, 09:03 AM
அமைதியும், பிரகாசமுமான முகத்துடன் புன்னகை தவழ, சாந்தமாகப் பேசும் இந்த மனிதனை எப்படி பயங்கரவாதி என இவர்களால் சித்தரிக்க இதுவரை காலமும் முடிந்தது' என அங்கலாய்க்கும் சாதாரண சிங்கள மக்களை இப்போது சந்திக்க முடிகிறது. பெரும்பாலான சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உருவாக்கிய இனவாதப் படிமங்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு சற்று அசைத்துச், சரித்து விட்டதென முதுபெரும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இப்போதெல்லாம் சாதாரண சிங்கள மக்கள் உட்பட உண்மையான பௌத்தர்களான ஒரு சில பௌத்த மதகுருமாரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அவர்களுடைய வாழ்வியல் துயரங்களை உணரவும் அவைபற்றி அலசவும் தொடங்கிவிட்டனர் என்பதையும் உணரமுடிகிறது எனவும் அவர் மேலும் சொன்னார். எனினும் இவர்களுடைய குரல்களுக்கு அச்சுப்பதிப்பு ஊடகங்களோ அன்றி இலத்திரனியல் ஊடகங்களோ முக்கியமான இடத்தைத் தருவதில்லை என்பது இன்னும் நடைமுறையில் உள்ள யதார்த்தமாகும்.
பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டுக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதன் மூலம் அமைதியும், நிம்மதியும் ஏற்பட வேண்டுமென அனைத்து இன மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற போதிலும் 'சிஹல உறுமய' போன்ற இனவாத அமைப்புக்கள் தமிழ், முஸ்லீம் இனங்களை அழிப்பதிலேயே கண்ணாக இருக்கின்றன. 'சிங்கள பௌத்த நாடு' என்னும் கோசம் இருக்கும்வரை இந்த தேசத்திற்கு விமோசனம் கிட்டப் போவதே இல்லை என சிறீலங்காவின் முன்னணி வர்த்தகப் பிரமுகரான தேசமான்ய லலித் கொத்தலாவல பேட்டி ஒன்றில் கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்டு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் இனப்பிரச்சினைக்கான நகர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தடைகளும், நடைமுறை தடங்கல்களும் எழுகின்றபோதும், இரு பகுதியினருமே மிக நிதானமாக செயற்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் இவற்றிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக சிங்கள கடும் கோட்பாட்டாளர்களின் எதிர்ப்புப் போராட்டம், சாதாரண மக்கள் மத்தியிலான விசமத்தனமான பிரச்சாரங்கள் என்பவற்றோடு, தமிழ் அமைப்புகள் எனப் பெயரிட்டு தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இரண்டொரு குழுக்களும் கை கோர்த்துள்ளனர். (தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளை கூலிக்கு படம் பிடித்தல், வீடியோ பதிவு செய்தல் போன்ற புலனாய்வுப் பணிகள் மூலம் மக்களை அச்சுறுத்துதல் இவர்களின் தற்போதைய பிரதான பணியாகியுள்ளது)
கடந்த மாதம் கொழும்பு கைட்பார்க் திடலில் நாடு தழுவிய புரிந்துணர்வு ஒப்பந்த எதிர்ப்பு கூட்டம், ஒன்று ஜே.வி.பியால் ஏற்படுத்தப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், வடக்குக் கிழக்கின் இடைக்கால நிர்வாகம் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்தக் கண்டனக் கூட்டத்தில் ஜே.வி.பியின் விமல் வீரவன்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் தினேஸ் குணவர்தன, சுதந்திரக் கட்சியின் அநுரா பண்டாரநாயக்க ஆகியோரும் ஏனைய சிங்களக் கடும் போக்காளர்களும் கலந்துகொண்டிருந்தபோதும் பெரும்பாலான மக்கள் இக்கூட்டத்தினை நிராகரித்திருந்தனர்.
இதேபோன்று கிழக்கு மக்கள் அழைப்பு எனும் பெயரில் வாகன ஊர்வலமொன்று சேருவில தேரர் ஒருவரின் தலைமையில் கொழும்பில் நுழைவது பொலிசாரால் தடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு இணைப்பை இரத்துச் செய்யக் கோருவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், நுவரெலியா எனப்பல இடங்களிலும் நடந்து முடிந்த பொங்குதமிழ் எழுச்சிகளும், தமிழ் ஆசிரியர் சங்க எழுச்சி மகாநாடு, யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த சைவ எழுச்சி மகாநாடு என பல்வேறு மக்கள் எழுச்சி மகாநாடுகளிலும் தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை எதிர்பார்க்கும் குரல்கள் வானளாவி ஒலிக்கின்றன. 1985 இல் முதற்தடவை ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தத்தின்போது சார்க் நாடுகளில் ஒன்றான புூட்டானின் தலைநகரம் திம்புவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள தீர்வுத்திட்டம் ஒன்றுக்காக நான்கு அடிப்படைகளைக் கொண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
2. தமிழ் மக்களுடைய பாரம்பரிய வாழ்விடம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
3. தமிழ்த் தேசியத்தினுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.
4. தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமத்துவமுடைய குடிமக்களாக அவர்கள் இந்தத் தீவில் வாழும் குடியுரிமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதேயவையாகும்.
ஏறக்குறைய பதினேழு வருடங்களின் பின்பும் அதே கோரிக்கைகளையே தீர்வுத்திட்டம் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கோரிக்கைகளைத் திரித்தும், தவறாகவும் பொருள் கூறும் முயற்சியிலேயே அன்றுதொட்டு சிங்கள கடும் கோட்பாட்டாளர்களான சம்பிக ரணவக்க, தசந்த குணதிலக போன்றோர் இன்றுவரை ஈடுபட்டு வருகின்றனர். இக்கோட்பாடுகள் ஒரு மாய தத்துவார்த்த விவாதம் (யுடிளவசயஉவ வடிநழசநவiஉயட யசபரஅநவெ) எனக் கூறும் இவர்கள் பிரித்தானியரிடமிருந்து 1948இல் சிறீலங்கா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறுபான்மை இனங்கள் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவாத நடவடிக்கைகளின் மோசமான போக்கை, அது ஏற்படுத்திய துயரம் தரும் விளைவுகளை காலத்திற்கு காலம் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு திரித்து வந்துள்ளனர். மேலும், பிரித்தானியர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்பு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கும், மற்றயதை கீழே தள்ளுவதற்கும் இந்த பேரினவாத கோட்பாடுகளை இறுக்கமாக மாற்றியிருந்தனர். இதுவே இந்த தீவின் இரத்தப் பெருக்கிற்கும், துயரத்திற்கும் காரணமாயிருந்தன என்பது இன்று எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகிவிட்டன.
வெறும் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டு வந்த சிங்களக் கடும் கோட்பாட்டுக் குழுக்கள் இன்று பாராளுமன்றத்திலும் அங்கம் பெறும் அரசியற் கட்சிகளாகப் பரிணாமம் அடைந்துவிட்டன என்பது இன்றைய இனச்சிக்கலின் கூர்மைக்கு ஓர் அடையாளமாகும்.
1950களில் ஆரம்பித்து விட்ட நிலப்பறிப்பு இன்றுவரை தொடர்கிறது. 1985 இல் மணலாற்றில் கொக்கிளாய், நாயாறு, தென்னைமரவாடி ஆகிய இடங்களில் இருந்து ஒரே இரவில் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டவர்கள் இன்றுவரை தமது இடங்களுக்கு திரும்ப முடியாது அகதிகளாக அலைகின்றனர். 1946ம் ஆண்டின் குடிசன புள்ளி விபரங்களுக்கும், இன்றைய குடிசன புள்ளி விபரங்களுக்குமான இடைவெளியே வடக்கு கிழக்கு தாயகச் சிதைவுக்குப் போதுமான ஆதாரமாகும். எனவே 'தமிழர் தாயகம்' அங்கீகரிக்கப்படுவதே தமிழர்களின் சமத்துவமான வாழ்வுக்கான பாதையாக மாறும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
சிறுபான்மை இனங்களும் இலங்கைத்தீவில் கூடிவாழும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியாத அல்லது விரும்பாத சிறீலங்காவின் அரசியல் சக்திகள் சுயநிர்ணய உரிமை வழங்குவது என்பது தனியரசுக்கு வழிகாட்டுவதாகும் என கூறுகிறார்கள். (ளுநடக னநவநசஅiயெவழைn றடைட டநயன வழ ளநியசயவந ளவயவந) சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தேசங்களின் ஐக்கியத்தில் உருவாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற மேற்குலக அனுபவங்கள், சமஸ்டி அமைப்புக்கள் இவர்களின் கவனத்துக்கு ஏன் எடுபடவில்லை என்னும் கேள்வி எழுகிறது. சமத்துவமான வாழ்நிலை உருவாக்கமே உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும்.
மாங்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு சட்டவிரோதமான ஒரு செயல் எனக் குறிப்பிட்டிருந்தார் சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி திரு. ஜெகத் குணவர்தனா. இவரின் கூற்று பெரும்பாலான சிங்களப் புத்திஜீவிகளின் மனப்பாங்கின் தெளிப்பாக கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இது சிறீலங்காவின் அரசியல் அமைப்பும் அதன் சட்ட திட்டங்களுமே இலங்கைத்தீவில் நடைமுறையில் இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பின் விளைவாகும். இந்த சட்டங்களும், இதன் அமுலாக்கமும் இந்தத் தீவின் மக்களிற் பலரை துன்பத்துக்குள்ளாக்குவதை இவர்கள் அறிந்துகொள்ளவில்லை அல்லது அறிந்துகொள்ள விரும்பவில்லை என்பதையே இது குறித்து நிற்கிறது. இலங்கைத்தீவின் ஒரு பகுதியில் வேறொரு அரசுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு (ஞரயளளல ளுவயவந) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிர்வாகம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையிலேயே சுமூகமான இணக்கப்பாடும் நிரந்தரத் தீh வும் எட்டப்படக்கூடும்.
ஆறு மாதங்களில் 'பயங்கரவாதத்தை' ஒடுக்குவதற்காக, பிரிகேடியர் வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் முயற்சி வடக்குக் கிழக்கையும் கடந்து சிறீலங்காவின் தலைநகரையும் எட்டிவிட்ட பின்பும் அடக்கப்படவில்லை என்பது பிரச்சினை, பிரச்சினையின் தன்மையில் இருந்து அணுகப்படவில்லை என்பதை கோடி காட்டி நிற்கிறது.
புரிந்துணர்வு உடன் படிக்கையில் இணக்கப்பாடு காணப்பட்ட பல விடயங்கள் இன்றும் நடைமுறைக்கு வரவில்லை. இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதுடன், இந்த உடன்படிக்கை தொடர்பான விடயங்களை சிங்கள மக்கள் மத்தியிலும் தெளிவு படுத்துவது எமது பிரதான பணியாக உள்ளது என தமிழர் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அடைக்கலநாதன் வன்னி விஜயத்தின் போது கூறியிருந்தார்.
'சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடாக தன்னை கட்டிவளர்க்கத் தவறியதால், இரத்தம் தோய்ந்த இனமோதல்களை அது காண நேர்ந்தது. இவ வாறான புறக்கணிப்புகளாலேயே கொடூரமான பின் விளைவுகள் ஏற்பட்டன. எமது நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒன்று ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தது. இது உலகின் மிகப்பெரும் ஆயுதப் போராக வளர்ச்சி பெற்றது' என சிறீலங்கா ஜனாதிபதி புதுடில்லியில் விமான விபத்தில் இறந்த இந்திய அமைச்சர் மாதவரா சிந்தியாவின் ஒரு வருட நினைவுப் பேருரையில் குறிப்பிட்டதை அவரே குழப்பங்கள் இன்றி புரிந்துகொள்ள வேண்டும். இவ வாறன புரிதல்களே இந்தத் தீவின் நிரந்தர சமாதானத்துக்கு வழிகாட்டும், ஒளியுூட்டும்.
அன்ரன் அன்பழகன்
இப்போதெல்லாம் சாதாரண சிங்கள மக்கள் உட்பட உண்மையான பௌத்தர்களான ஒரு சில பௌத்த மதகுருமாரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அவர்களுடைய வாழ்வியல் துயரங்களை உணரவும் அவைபற்றி அலசவும் தொடங்கிவிட்டனர் என்பதையும் உணரமுடிகிறது எனவும் அவர் மேலும் சொன்னார். எனினும் இவர்களுடைய குரல்களுக்கு அச்சுப்பதிப்பு ஊடகங்களோ அன்றி இலத்திரனியல் ஊடகங்களோ முக்கியமான இடத்தைத் தருவதில்லை என்பது இன்னும் நடைமுறையில் உள்ள யதார்த்தமாகும்.
பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டுக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதன் மூலம் அமைதியும், நிம்மதியும் ஏற்பட வேண்டுமென அனைத்து இன மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற போதிலும் 'சிஹல உறுமய' போன்ற இனவாத அமைப்புக்கள் தமிழ், முஸ்லீம் இனங்களை அழிப்பதிலேயே கண்ணாக இருக்கின்றன. 'சிங்கள பௌத்த நாடு' என்னும் கோசம் இருக்கும்வரை இந்த தேசத்திற்கு விமோசனம் கிட்டப் போவதே இல்லை என சிறீலங்காவின் முன்னணி வர்த்தகப் பிரமுகரான தேசமான்ய லலித் கொத்தலாவல பேட்டி ஒன்றில் கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்டு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் இனப்பிரச்சினைக்கான நகர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தடைகளும், நடைமுறை தடங்கல்களும் எழுகின்றபோதும், இரு பகுதியினருமே மிக நிதானமாக செயற்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் இவற்றிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக சிங்கள கடும் கோட்பாட்டாளர்களின் எதிர்ப்புப் போராட்டம், சாதாரண மக்கள் மத்தியிலான விசமத்தனமான பிரச்சாரங்கள் என்பவற்றோடு, தமிழ் அமைப்புகள் எனப் பெயரிட்டு தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இரண்டொரு குழுக்களும் கை கோர்த்துள்ளனர். (தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளை கூலிக்கு படம் பிடித்தல், வீடியோ பதிவு செய்தல் போன்ற புலனாய்வுப் பணிகள் மூலம் மக்களை அச்சுறுத்துதல் இவர்களின் தற்போதைய பிரதான பணியாகியுள்ளது)
கடந்த மாதம் கொழும்பு கைட்பார்க் திடலில் நாடு தழுவிய புரிந்துணர்வு ஒப்பந்த எதிர்ப்பு கூட்டம், ஒன்று ஜே.வி.பியால் ஏற்படுத்தப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், வடக்குக் கிழக்கின் இடைக்கால நிர்வாகம் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்தக் கண்டனக் கூட்டத்தில் ஜே.வி.பியின் விமல் வீரவன்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் தினேஸ் குணவர்தன, சுதந்திரக் கட்சியின் அநுரா பண்டாரநாயக்க ஆகியோரும் ஏனைய சிங்களக் கடும் போக்காளர்களும் கலந்துகொண்டிருந்தபோதும் பெரும்பாலான மக்கள் இக்கூட்டத்தினை நிராகரித்திருந்தனர்.
இதேபோன்று கிழக்கு மக்கள் அழைப்பு எனும் பெயரில் வாகன ஊர்வலமொன்று சேருவில தேரர் ஒருவரின் தலைமையில் கொழும்பில் நுழைவது பொலிசாரால் தடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு இணைப்பை இரத்துச் செய்யக் கோருவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், நுவரெலியா எனப்பல இடங்களிலும் நடந்து முடிந்த பொங்குதமிழ் எழுச்சிகளும், தமிழ் ஆசிரியர் சங்க எழுச்சி மகாநாடு, யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த சைவ எழுச்சி மகாநாடு என பல்வேறு மக்கள் எழுச்சி மகாநாடுகளிலும் தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை எதிர்பார்க்கும் குரல்கள் வானளாவி ஒலிக்கின்றன. 1985 இல் முதற்தடவை ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தத்தின்போது சார்க் நாடுகளில் ஒன்றான புூட்டானின் தலைநகரம் திம்புவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள தீர்வுத்திட்டம் ஒன்றுக்காக நான்கு அடிப்படைகளைக் கொண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
2. தமிழ் மக்களுடைய பாரம்பரிய வாழ்விடம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.
3. தமிழ்த் தேசியத்தினுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.
4. தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமத்துவமுடைய குடிமக்களாக அவர்கள் இந்தத் தீவில் வாழும் குடியுரிமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதேயவையாகும்.
ஏறக்குறைய பதினேழு வருடங்களின் பின்பும் அதே கோரிக்கைகளையே தீர்வுத்திட்டம் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கோரிக்கைகளைத் திரித்தும், தவறாகவும் பொருள் கூறும் முயற்சியிலேயே அன்றுதொட்டு சிங்கள கடும் கோட்பாட்டாளர்களான சம்பிக ரணவக்க, தசந்த குணதிலக போன்றோர் இன்றுவரை ஈடுபட்டு வருகின்றனர். இக்கோட்பாடுகள் ஒரு மாய தத்துவார்த்த விவாதம் (யுடிளவசயஉவ வடிநழசநவiஉயட யசபரஅநவெ) எனக் கூறும் இவர்கள் பிரித்தானியரிடமிருந்து 1948இல் சிறீலங்கா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறுபான்மை இனங்கள் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனவாத நடவடிக்கைகளின் மோசமான போக்கை, அது ஏற்படுத்திய துயரம் தரும் விளைவுகளை காலத்திற்கு காலம் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு திரித்து வந்துள்ளனர். மேலும், பிரித்தானியர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்பு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கும், மற்றயதை கீழே தள்ளுவதற்கும் இந்த பேரினவாத கோட்பாடுகளை இறுக்கமாக மாற்றியிருந்தனர். இதுவே இந்த தீவின் இரத்தப் பெருக்கிற்கும், துயரத்திற்கும் காரணமாயிருந்தன என்பது இன்று எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகிவிட்டன.
வெறும் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டு வந்த சிங்களக் கடும் கோட்பாட்டுக் குழுக்கள் இன்று பாராளுமன்றத்திலும் அங்கம் பெறும் அரசியற் கட்சிகளாகப் பரிணாமம் அடைந்துவிட்டன என்பது இன்றைய இனச்சிக்கலின் கூர்மைக்கு ஓர் அடையாளமாகும்.
1950களில் ஆரம்பித்து விட்ட நிலப்பறிப்பு இன்றுவரை தொடர்கிறது. 1985 இல் மணலாற்றில் கொக்கிளாய், நாயாறு, தென்னைமரவாடி ஆகிய இடங்களில் இருந்து ஒரே இரவில் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டவர்கள் இன்றுவரை தமது இடங்களுக்கு திரும்ப முடியாது அகதிகளாக அலைகின்றனர். 1946ம் ஆண்டின் குடிசன புள்ளி விபரங்களுக்கும், இன்றைய குடிசன புள்ளி விபரங்களுக்குமான இடைவெளியே வடக்கு கிழக்கு தாயகச் சிதைவுக்குப் போதுமான ஆதாரமாகும். எனவே 'தமிழர் தாயகம்' அங்கீகரிக்கப்படுவதே தமிழர்களின் சமத்துவமான வாழ்வுக்கான பாதையாக மாறும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
சிறுபான்மை இனங்களும் இலங்கைத்தீவில் கூடிவாழும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியாத அல்லது விரும்பாத சிறீலங்காவின் அரசியல் சக்திகள் சுயநிர்ணய உரிமை வழங்குவது என்பது தனியரசுக்கு வழிகாட்டுவதாகும் என கூறுகிறார்கள். (ளுநடக னநவநசஅiயெவழைn றடைட டநயன வழ ளநியசயவந ளவயவந) சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தேசங்களின் ஐக்கியத்தில் உருவாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற மேற்குலக அனுபவங்கள், சமஸ்டி அமைப்புக்கள் இவர்களின் கவனத்துக்கு ஏன் எடுபடவில்லை என்னும் கேள்வி எழுகிறது. சமத்துவமான வாழ்நிலை உருவாக்கமே உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும்.
மாங்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு சட்டவிரோதமான ஒரு செயல் எனக் குறிப்பிட்டிருந்தார் சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி திரு. ஜெகத் குணவர்தனா. இவரின் கூற்று பெரும்பாலான சிங்களப் புத்திஜீவிகளின் மனப்பாங்கின் தெளிப்பாக கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இது சிறீலங்காவின் அரசியல் அமைப்பும் அதன் சட்ட திட்டங்களுமே இலங்கைத்தீவில் நடைமுறையில் இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பின் விளைவாகும். இந்த சட்டங்களும், இதன் அமுலாக்கமும் இந்தத் தீவின் மக்களிற் பலரை துன்பத்துக்குள்ளாக்குவதை இவர்கள் அறிந்துகொள்ளவில்லை அல்லது அறிந்துகொள்ள விரும்பவில்லை என்பதையே இது குறித்து நிற்கிறது. இலங்கைத்தீவின் ஒரு பகுதியில் வேறொரு அரசுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு (ஞரயளளல ளுவயவந) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிர்வாகம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையிலேயே சுமூகமான இணக்கப்பாடும் நிரந்தரத் தீh வும் எட்டப்படக்கூடும்.
ஆறு மாதங்களில் 'பயங்கரவாதத்தை' ஒடுக்குவதற்காக, பிரிகேடியர் வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் முயற்சி வடக்குக் கிழக்கையும் கடந்து சிறீலங்காவின் தலைநகரையும் எட்டிவிட்ட பின்பும் அடக்கப்படவில்லை என்பது பிரச்சினை, பிரச்சினையின் தன்மையில் இருந்து அணுகப்படவில்லை என்பதை கோடி காட்டி நிற்கிறது.
புரிந்துணர்வு உடன் படிக்கையில் இணக்கப்பாடு காணப்பட்ட பல விடயங்கள் இன்றும் நடைமுறைக்கு வரவில்லை. இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதுடன், இந்த உடன்படிக்கை தொடர்பான விடயங்களை சிங்கள மக்கள் மத்தியிலும் தெளிவு படுத்துவது எமது பிரதான பணியாக உள்ளது என தமிழர் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அடைக்கலநாதன் வன்னி விஜயத்தின் போது கூறியிருந்தார்.
'சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடாக தன்னை கட்டிவளர்க்கத் தவறியதால், இரத்தம் தோய்ந்த இனமோதல்களை அது காண நேர்ந்தது. இவ வாறான புறக்கணிப்புகளாலேயே கொடூரமான பின் விளைவுகள் ஏற்பட்டன. எமது நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒன்று ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தது. இது உலகின் மிகப்பெரும் ஆயுதப் போராக வளர்ச்சி பெற்றது' என சிறீலங்கா ஜனாதிபதி புதுடில்லியில் விமான விபத்தில் இறந்த இந்திய அமைச்சர் மாதவரா சிந்தியாவின் ஒரு வருட நினைவுப் பேருரையில் குறிப்பிட்டதை அவரே குழப்பங்கள் இன்றி புரிந்துகொள்ள வேண்டும். இவ வாறன புரிதல்களே இந்தத் தீவின் நிரந்தர சமாதானத்துக்கு வழிகாட்டும், ஒளியுூட்டும்.
அன்ரன் அன்பழகன்

