11-03-2005, 04:43 AM
தமிழீழத்தின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாக அமைவதே சாலப்பொருத்தம்.முழுமையான சமதர்மப் பொருளாதாரமாக இருக்கவேண்டுமானால் தமிழீழம் விவசாயத்தில் மட்டுமல்ல கனிப்பொருட்கள் எண்ணெய் போன்றவற்றிலும் தன்னிறைவுள்ள நாடாக இருத்தல் வேண்டும் அல்லது அவற்றுக்கான மாற்றீட்டுப் பொருட்களையாவது கொண்டிருக்கவேண்டும்.
வளங்களின் பரந்துபடலைப் பார்க்கும்போது எண்ணெய் போன்றவற்றிற்காகவாவது தமிழீழம் மற்ற முதலாளித்துவ நாடுகளில் தங்கியிருக்கவேண்டி வரும்.அல்லது அவர்களின் சந்தைக்கேற்ற மாதிரி தனது சந்தையையும் விருத்தி செய்யவேண்டி இருக்கும்.நாணய மதிப்பைப் பேணிக்கொள்வதற்காக உற்பத்திப் போட்டியில் ஈடுபடவேண்டியிருக்கும்.
ஆகவே முழுமையான சோசலிச அடிப்படைப் பொருளாதாரம் சாத்தியமற்றது.
அதேவேளை முழுமையான முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் தீங்கு விளைவிக்கக்கூடியது.அது சுரண்டலை ஊக்குவிக்கிறது.பெருஞ் செல்வம் யாவும் ஒரு சிலரின் கைகளில் போய்ச் சேர வழிவகுக்கிறது.ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் பணக்காரன் மேலும் பணக்காரனாகவும் வழிவகுக்கிறது.
தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை இரண்டினதும் சரியான கலப்பு.விரிவாகச் சொன்னால் உள்நாட்டில் சோஷலிச அடிப்படையில் அமைந்த பொருளாதாரக் கொள்கையும்,வெளிநாட்டுச் சந்தைகளுடனா போட்டியில் முதலாளித்துவ கொள்கையை தழுவியதாகவும் இருக்கவேண்டும்
வளங்களின் பரந்துபடலைப் பார்க்கும்போது எண்ணெய் போன்றவற்றிற்காகவாவது தமிழீழம் மற்ற முதலாளித்துவ நாடுகளில் தங்கியிருக்கவேண்டி வரும்.அல்லது அவர்களின் சந்தைக்கேற்ற மாதிரி தனது சந்தையையும் விருத்தி செய்யவேண்டி இருக்கும்.நாணய மதிப்பைப் பேணிக்கொள்வதற்காக உற்பத்திப் போட்டியில் ஈடுபடவேண்டியிருக்கும்.
ஆகவே முழுமையான சோசலிச அடிப்படைப் பொருளாதாரம் சாத்தியமற்றது.
அதேவேளை முழுமையான முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் தீங்கு விளைவிக்கக்கூடியது.அது சுரண்டலை ஊக்குவிக்கிறது.பெருஞ் செல்வம் யாவும் ஒரு சிலரின் கைகளில் போய்ச் சேர வழிவகுக்கிறது.ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் பணக்காரன் மேலும் பணக்காரனாகவும் வழிவகுக்கிறது.
தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை இரண்டினதும் சரியான கலப்பு.விரிவாகச் சொன்னால் உள்நாட்டில் சோஷலிச அடிப்படையில் அமைந்த பொருளாதாரக் கொள்கையும்,வெளிநாட்டுச் சந்தைகளுடனா போட்டியில் முதலாளித்துவ கொள்கையை தழுவியதாகவும் இருக்கவேண்டும்
\" \"

