Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா?
#29
வணக்கம் ஜூட்,

யோசிச்சு ஆறுதலா எழுத நேரம் வேணும்,உங்கள் பதிலுக்கு உடனடையாக எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டீர்கள் கடினமாக உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று.இதில் நீங்கள் கடின உழைப்பு என்று எதைக் கூறுகிறீர்கள்? நீங்கள் கூறுவது மனிதர்கள் உடலால்,மூளயால் செய்யும் வேலையா?
சரி இப்ப உடலால் என்று பாத்தா உடலால் கடினமா தொழில் செய்யிறவை யாரு?கூலிக்கு சுமக்கிற தொழிலாளர்
போன்றாவர்.ஆனா இவை தான் சமூகத்தில அதிகம் கஸ்ட்டப் பட்ட மக்களாய் இருகினம்.அப்ப கடின உழைப்புக்கும் பலனுக்கும் என்ன சம்பந்தம். நீங்க சொல்லப் போறியள் கடின உழைப் பெண்டா மூளயப் பாவிச்சு வேலை செய்யிறது எண்டு.


அப்படிப் பாத்தாலும் பாருங்கோ என்ன மூன்றாம் உலகில மனிசர் மூளயப் பாவிச்சு வேலை செயிறேல்லயா அல்லது அவைக்கு மூளை இல்லயா.இப்ப நீங்களே இலங்கையில படிச்சு அமெரிக்காவில வேலை செய்யிறியள். நீங்களும் நானும் படிச்சது இலங்கை மக்களின் வரிப் பணத்தில ஆனாப் பாருங்கோ நாங்க வேலை செய்யிறது எங்கட மூளைப் பாவிச்சு மேற்குலகிற்கு.அப்ப எங்கட மூளைய எது வாங்கி இருக்கு?அது இந்த மூலதனம் இல்லயோ?
அது தான் மாக்ஸ் சொன்னவர் உற்பத்திக் கான காரணிகளை மூலதனம் தான் கைக்குள்ள வச்சிருக்கெண்டு.இதில் நாங்கள் எவ்வளவு தான் கடினமா உழச்சாலும்,எங்கட உழைப்பு மூலதனத்தைப் பெருக்குது அது எங்களை வாங்கி வச்சிருக்கிறவரின்ட மூலதனத்தைப் பெருக்குது.எண்ட படியால உழைப்புக்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லயுங்கோ.


சடப் பொருட்கள் தம்பாட்டில் பெருகுவதில்லை அவற்றின் பெறுமதியும் தம் பாட்டில் கூடுவதில்லை.அவை மனிதர்களின் உழைப்பினாலேயே பெறுமதியைப் பெறுகின்றன.இந்த கூடிற பெறுமதியில இருந்து தானுங்கோ மூலதன உருவாக்கம் வருகுதுங்கோ.அப்ப நீங்க கேக்கலாம் அவனுக்கு எப்படி அந்த மூலதனம் கிடச்சது எண்டு அவன் கெட்டிக்காரன் தானே எண்டு.இப்ப பாருங்கோ உலகம் தோன்றேக்க மூலத்தனத்தோட தோன்றேல்ல.மனிசரின்ட உழைப்புத் தான் மூலதனத்தை உருவாக்கியது.மேல விளங்கப் படித்தி இருக்கு பாருங்கோ உபரி எண்டு அது தான் பருங்கோ உழைக்கிறவனுக்கு திருப்பிக் கிடைக்காத உழைப்பு அது தானுங்கோ உபரியா மூலதனமா மாறுது.மனிசரின்ட சரித்திரத்தைப் பாத்தா முன்னர் இந்த உபரிய அதாவது மற்றவனின்ட உழைப்ப கொள்ளை அடிச்சாங்கள்,இது தான் பாருங்கோ கப்பலில வந்து ஆயித பலத்தால காலணியளுக்க வந்து எங்கட சொத்துக்களைக் கொண்டு போனாங்கள்.இப்ப அதைத் தன் வலு நாசுக்க தெரியாத மாதிரிச் செய்யினம்.அப்ப நீங்கள் கேக்கலாம் அவன் கெட்டிக்காரன் தானே நீங்கள் என்ன ஏமலாந்தியளா எண்டு.ஓம் உண்மை தானுங்கோ நாங்கள் ஏமலாந்தியள் தான் ஏனெண்டால் விபரம் இல்லாம இருந்திட்டம் அதுக்காக இப்பவும் அப்படியோ இருக்கிறது? நாங்கள் இப்பவும் ஏமலாந்தியளா இருந்தம் எண்டா எங்கட உழைப்பு இப்பவும் மேற்குலகின்ட மூலதன விரித்திக்குத் தான் உதவும் இப்ப பாருங்கோ ஏன் பாருங்கோ இவங்கள் எங்கட பிரச்சினைக்கு மத்தியஸ்த்துக்கு வாறாங்கள்,இவங்களுக்கு வேற பிழைப்பில்லேயே.இவங்கள் பிழைப்புக்குத் தான் வாறாங்கள் பாருங்கோ. நாங்க தான் இன்னும் ஏமலாந்தியளா இருக்கக் கூடாது.



இப்ப பாருங்கோ தேசிய முலதன பெருக்கத்தில கண்ணா இருகிற இந்தியாவோ,சீனாவோ இவயள் சொல்லுறதக் கேட்டிருந்தா இப்ப இருகிற வளர்ச்சிய அடன்சிருக்கேலாது.அவர்கள் 20 ஆண்டுத் திட்டம் எண்டு திட்டம் தீட்டி தங்கட பொருளாதரக் கொள்கைகளை சுயமா வகுத்து உள் நாட்டில சேமிப்பை ஊக்குவிச்சு,சில தேசிய நிறுவனக்கள்,தொழிற்சாலைகளை அமச்சுத் தான் தங்கட பொருளாதரத்தைக் கட்டி எழுப்பிச்சினம்.



நாங்கள் உலக வங்கியிட்ட மூலதனத்தை எதிர்பார்த்தா அவை சொல்லுறதைக் கேட்டா அவயள் தான் எங்கட உற்பத்திக் காரணிகளை கட்டுப் படுத்துவினம்.பிறகு எங்கட உழைப்பு அவயின்ட மூலதனத்தை பெருக்கும்.



வேற பாருங்கோ இன்னொரு விடயம் நாங்கள் ஏன் சமதர்ம தமிழ் ஈழம் வேண்டு எண்டு சொல்லுறதுக்கும் இன்னொரு முக்கிய காரணம் இருக்குங்கோ.இப்ப பாருங்கோ நானும் நீங்களும் வசதியா தப்பி வந்து ஒரளவு மூலதனத்தை தேடிட்டம் எண்டு வைய்யுங்கோவன், நாளைக்கு தமிழ் ஈழத்தில போய் எங்கட பொவுண்ட்ஸையும்,டொலறையும் வச்சு உற்பத்திக் காரணிகளை வாங்கிப் போட்டு அங்க இருந்து சதயாலும் இரதத்தாலும் குருதி சிந்தி போராடி எந்த வித மூலதனமும் இன்றி இருக்கும் மக்களை எங்கட தொழிற்சாலைகளில வேலை செய்ய வச்சு எங்கட மூலதனத்தை இன்னும் பெருக்க வைக்கப் போறம். நான் இது சும்மா உதாரணத்திற்குச் சொன்னனான். நீங்க சொன்னமாதிரி எல்லாத்தையும் திறந்த பொருளாதாரம் எண்டு ஆக்கின அது தான் நடக்கும் பாருங்கோ.அதுகுத் தான் நாங்க எங்கட பொருளாதரக் கொள்கைகளை உருவாக்கேக்க அது எல்லா மக்களையும் போய்ச் சேர வேணும் எண்டு சொல்லுறம்.அல்லாட்டிப் பாருங்கோ அந்த மக்கள் குருதி சிந்திப் போராடினதில ஒரு பலனும் இல்லைப் பாருங்கோ.
அதுகுத் தான் சொல்லுறன் அரசியல் அதிகாரம் வேணும் உற்பத்திக் காரணிகள் மக்களின் சொத்தா இருக்கிறதுக்கு,அப்படி எண்டாத் தான் பாருங்கோ உழச்சவைக்கு பலன் போய்ச் சேரும் இல்லாட்டி நாங்கள் தான் தமிழ் ஈழத்தைல போய் இருந்து பலனை அனுபவிப்பம்.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 06:49 PM
[No subject] - by stalin - 10-25-2005, 07:57 PM
[No subject] - by kurukaalapoovan - 10-25-2005, 09:30 PM
[No subject] - by narathar - 10-25-2005, 09:45 PM
[No subject] - by stalin - 10-25-2005, 10:00 PM
[No subject] - by poonai_kuddy - 10-27-2005, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 10-27-2005, 05:49 PM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 06:06 PM
[No subject] - by narathar - 10-27-2005, 06:57 PM
[No subject] - by Eelavan - 10-28-2005, 04:25 AM
[No subject] - by sinnakuddy - 10-28-2005, 10:14 AM
[No subject] - by manimaran - 10-28-2005, 03:31 PM
[No subject] - by stalin - 10-28-2005, 04:25 PM
[No subject] - by Mind-Reader - 10-28-2005, 08:32 PM
[No subject] - by kurukaalapoovan - 10-28-2005, 11:15 PM
[No subject] - by manimaran - 10-29-2005, 01:35 AM
[No subject] - by Jude - 10-29-2005, 02:40 AM
[No subject] - by kurukaalapoovan - 10-29-2005, 08:15 AM
[No subject] - by Vasampu - 10-29-2005, 11:21 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:41 AM
[No subject] - by Jude - 10-30-2005, 05:44 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 11:06 AM
[No subject] - by manimaran - 10-30-2005, 11:50 AM
[No subject] - by kurukaalapoovan - 10-30-2005, 12:06 PM
[No subject] - by narathar - 10-30-2005, 01:30 PM
[No subject] - by Jude - 11-01-2005, 06:17 AM
[No subject] - by narathar - 11-03-2005, 03:59 AM
[No subject] - by Eelavan - 11-03-2005, 04:43 AM
[No subject] - by Jude - 11-03-2005, 05:29 AM
[No subject] - by narathar - 11-05-2005, 09:37 AM
[No subject] - by Jude - 11-05-2005, 06:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)