11-03-2005, 12:01 AM
kirubans Wrote:தமிழர்கள் இன்னும் சாதியத்தின் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது சத்தியமானது. தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக இப்போதும் சாதியம் உள்ளது. சகலரும் சரிசமமாக சென்று வழிபட அனுமதி மறுக்கும் கோயிலகள் தற்போதும் யாழில் உள்ளன. இல்லை இல்லையென்று சொன்னால் எதுவும் இல்லாமல் போகாது.
<b>நித்யாவின் கவிதைப் பக்கத்திற்கு எப்படியாவது பூட்டுப் போட வைக்கவேண்டும் என்ற அழல் குணத்தைக் கைவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். மேலே எழுத விருப்பமில்லை. நித்யா புதிதாக எழுதினால் மீண்டும் வருகின்றேன்</b>.
முதலில் இப்படியான கொழுவல் போக்கான கருத்தைத் தவிருங்கள்..உங்கள் உண்மை முகம் பற்றி எங்களுக்கு தெரியும்...!
நித்தியா சாதியக் கூறுகளை உச்சரிப்பதை தவிர்த்திருக்கலாம் என்பதே எங்கள் கருத்து...அதை நேற்றே சுட்டிக்காட்டினோம்..! அத்தோடு எமது வாதம் முடிந்திருந்தது..! கீழ்சாதி உயர்சாதி பாகுபாடு இதற்குள் புகுத்தப்பட்டது அவசியமில்லாத ஒன்று...! அது தேவைக்கு அப்பால்பட்டது..! அது சாதிய ஒழிப்புக்கு எதிரான செயலும் கூட...!
இங்கு நாங்கள் சாதி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று எங்கும் சொல்லவில்லை..சும்மா ஒரு கருத்தை வைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கற்பனைக்கு நினைச்சிட்டு எழுதுவதில் பயனில்லை..! பேசப்படுவதை ஆராய்ந்து எழுதுங்கள்..! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

