11-02-2005, 11:45 PM
kirubans Wrote:சாதியைப் பற்றிக் கதைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது எந்தச் சட்டத்தில் உள்ளது? சாதியம் ஒன்றும் விலக்கப்பட்ட விடயம் அல்ல, பல இடங்களில் விவாதிக்கப்படும் ஒன்றுதான். இந்தத் தலைப்புக்குள் விவாதிக்காமல் நித்யாவின் கவிதைகளை மட்டும் அலசுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
போராட்டக் காலத்துக்கு முன்னர்...இப்படி விவாப் பொருளாக இருந்த சாதியம் விவாததைத் தாண்டி ஒழிப்புக் கட்டத்துக்கு வந்து தசாப்தங்கள் கடந்தாயிற்று..! ஈழத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில்...சாதிய உச்சரிப்பு தண்டனைக்குரிய குற்றம்..! அதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் பலர்..! சாதியத்தை இன்னும் உச்சரிப்பது என்பது அவசியமற்றது..! இன்று இங்கு வைக்கப்பட்ட விபரங்கள் யாழ்ப்பாண வைபவமாலையில் இருந்து எடுக்கப்பட்ட கடைந்தெடுத்த சாதிய முறையைப் பறைசாற்றும் உதாரணங்களே..! இவை ஏன் காவப்படுகின்றன இன்னும்..???! என்ன தேவை இருக்கிறது..! விவாதித்து சாதிக்க முடியாததைத்தான் போராட்ட சக்திகள் களைய முற்பட்டனர்..! அவர்களும் சாதியத்தை விவாதப் பொருளாக்கி விளிப்பூட்ட முனைந்தும் அது சாத்தியப்படாத போதே...கட்டாய சாதி ஒழிப்புக்கு வந்தனர்..!
இன்று..சாதி..இதை தீர்மானிப்பவர்கள் யார்..! மேற்குடியினர்..! அவர்கள் தான் இன்றும் தங்கள் பெருமைக்காக இதை மறைமுகமாக உச்சரிக்கின்றனரே தவிர இவை வெளிப்படையாக வழக்கில் இல்லை..! மேற்குநாடுகளில் எப்படி நிறத்துவோசம் கட்டுப்படவில்லை என்பதை தமிழர்கள் நங்கு அறிவார்கள்..அதன் பாதிப்பை அறிந்து இனத்துவேசிகளில் இருந்து பாதுகாக்கும் சட்டங்களை தேடி ஓடும் தமிழர்கள்..சாதிய உச்சரிப்பில் இருந்து கூட தம்மை விலக்கி வைக்க முற்படாமை என்பது முழுப் பிற்போக்குத்தனமானது...! சாதியம் பேசி அதை ஒழிப்பதாக அரசியல் நடத்திய சங்கரி போன்றோர் இங்கும் தலையெடுத்திருப்பதையே இவ்வாதங்கள் காட்டுகிறது..! குறிப்பாக யாழ் நூல்நுலையத் திறப்பு விழாத் தொடர்பிலும் சங்கரிக்கு உதவியது சாதிய உச்சரிப்பே...அதேதான் இங்கும் தொடர்கிறது..! நன்றி உங்கள் உங்கள் உண்மை முகங்களை வெளிக்காட்டுவதற்கு..!
பேசாப் பொருளாக்கி மறைப்பதிலும் பேசும் பொருளாக்கி விழிப்புணர்வு படுத்துகிறோம் என்ற போர்வையில்...விளம்பரப்படுத்துகிறீர்கள் என்பது உண்மை...! காரணம்...இது பேசிப் பேசி அழிந்ததாக வரலாறில்லை...! பேசாது அழிக்க முனையப்பட்டதாகவே வரலாறு...! கடந்த காலம் உதாரணமாகட்டும்..! :twisted:
நித்தியாவுக்கு வேறு உவமை கிடைக்காது சாதியத்தை கையில் எடுத்தது அவரால் அதன் பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை என்பதாகக் காட்ட என்று கூறுவோர்...ஏன் அந்த நித்தியா சாதியக் கூறுகளை உச்சரிக்காமலே அதைச் சொல்ல முனையவில்லை என்பதைப் பற்றி சிந்திப்பவர்களாக இல்லை..! கவிதை என்று பெண்ணின் உறுப்புக்களை ரசிப்பதை எழுதி அதையே புரட்சி என்று காட்டியோர்...இப்போ சாதியம் பேசிப்பேசியே அதையும் ஒழிக்க முற்படுவது ஆச்சரியமான விடயமல்ல..! தொடருங்கள் எங்கே உங்கள் நிறைவு என்று நோக்கலாம்..! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

