11-02-2005, 06:31 PM
kurukaalapoovan Wrote:ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே?
என்ன யாழ்களத்துக்கு உள்நுளையிறீங்கள், நீங்கள் வந்திருக்கிறியள் எண்டு காட்ட போய் எழுந்தமானத்தில எழுதுறதுக்கு கொஞ்சப் போட்டி ஆரம்பிச்சுவைச்சிருக்கிங்கள். மிச்சத்துக் மேற்கோளும் முகபாவனையும் அம்பிடிற இடங்களில பேடலாம். இதுக்கு பெயர் கருத்தாடல் அது நடத்த யாழ் என்னும் ஒரு கருத்துக்களம்???
இதுக்கு கொஞ்சக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து எல்லோருடை பங்களிப்பையும் ஊக்குவித்து (ஒதுக்குவதற்காக அல்ல) வலுசேர்க்க முயற்சித்தால் "சர்வாதிகாரக்களம் எண்டு பெயர் மாத்துங்கோ" "குளிச்சுப்போட்டு வரவேணும் எண்டோ அடுத்த களவிதி வரப்போகுதோ" எண்டு ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்?
யாழ் என்னும் கருத்துக்களத்தில் 5வீதம் கருத்தாடல் 95வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
இல்லை நாம் எல்லோரும் பொருமைப்பட்டு பத்தோடு பதினென்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க தேவையான ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் 50வீதம் கருத்துப்பகிரல் 50வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
ஏன் முன்னேற முயற்சி செய்யமாட்டம் எங்களுக்கு சுகம் விசாரிச்சு பாராட்டுவிழா நடத்தி ஜொள்ளுவிட்டு அரட்டை அடிக்கிறதுக்கு தான் கருத்துக்களம் வேணும் எண்டு அடம்பிடிக்கிறீங்கள்? களவிதிகளால் ஊக்குவிப்பு ஒத்துளைப்பு தரப்பட்டாலும் மாறவேமாட்டம் எண்டு விதண்டவாதம் பண்றீங்கள்?
உங்களுக்கு தீவிர கருத்துகளுக்கு அப்பால் இதர விடயங்களில் அக்கறை இல்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கி இருங்கோ..! உலகில் என்ரரெயின் பண்ணாத மனிதர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டவர்களே..! களம் வெறும் சீரியஸ் விடயங்களை மட்டுமே தாங்கி வரணும் என்றால்...இதை ஒரு செய்தித்தளமாகவோ...சஞ்சிகைக் தளமாகவோ...அல்லது சோழியான் அண்ணா போன்றோர் நடத்தும் தமிழமுதம் போல சீரியஸ் இணையத்தளமாகவோ வைச்சிருக்கலாம்..! உண்மையில் நாங்கள் அப்பால் தமிழ்... தமிழமுதம்..திண்ணை..மரத்தடி...இப்படி பலதும் ஒரு சுற்றுசுற்றி வந்தோம்...! அங்கு சீரியஸ் கருத்துகளுக்கு வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகச் சிலவாகவே உள்ளன..! உங்கள் போன்றோர் இங்கு மிணக்கடுவதிலும் ஏன் அங்கு போய் உருப்படியானவர்களின் ஆக்கங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து உருப்படியா எதுவும் செய்யலாமே...! இங்க உள்ளவர்களுக்கு உருப்பட விரும்பமில்லை..ஏன் அவர்களைக் கட்டாயப்படுத்துறீங்கள்...???! அவை ஆறுதலா தங்கட விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான அளவில உருப்பட்டுக் கொள்ளுவினம்...!
அதைவிட்டிட்டு.. இதுக்க சனம் உருப்படுகுதில்லை என்று கண்டால்..பிறகேன் நீங்கள் மிணக்கடுறியள்...???! ஏதோ தேவை இருக்கு...களத்தை உருப்பட விடாம பண்ணனும்..அதுவா...???! அதை நேர சொல்லுறது...! அதைவிட்டிட்டு தேவையில்லாத சச்சரவுகளை வளர்ப்பதில் ஏன் நேரத்தை செலவு செய்கிறீர்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

