06-22-2003, 09:00 AM
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில் குழல் துப்பாக்கி தாங்கிய ஆறாயிரம் சம்பிரதாயபுூர்வ இராணுவத்தினரே இலங்கை அரசிடமிருந்தனர். தற்போது நவீன படைக்கலங்களுடனும் பன்னாட்டுப் பயிற்சியுடனும் இத்தொகை ஒரு லட்சத்து இருபதாயிரத்தை எட்டிவிட்டது. குறிப்பாக ஜே. ஆர். காலத்தைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் இராணுவமும் தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாகிவிட்டது.
ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸாவின் அனுமதி பெறாமலும் அவருக்கு அறிவிக்காமலுமே கைதியாயிருந்த றோகண விஜயவீர, இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்கவின் கட்டளைப்படி அடித்து நொருக்கப்பட்டு உயிருடன் தீமூட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்னும் பொதுமக்கள் பலருக்குத் தெரியாத ஒன்றே. நெருக்கடிமிக்க கட்டங்களில் இராணுவம் தானே தீர்மானமெடுக்கும் நிலையிலுள்ளது என்பதை இது காட்டுகிறது.
எனவே இலங்கையின் இனவாத அரசியலை ஆராயுமிடத்து முற்றிலும் சிங்களமயப்பட்டுள்ள இராணுவத்தினையும் நிர்ணயகரமான காரணிகளுள் ஒன்றாய் எடுத்து ஆராய தல் அவசியமாகும். இதற்குமுன் அரசியற்தீர்மானங்களில் சிங்கள பௌத்த மதபீடங்களும், மதநிறுவனங்களும் வகித்த இந்த பங்குக்கு நிகரான அல்லது அதைவிட மேலான பங்கை சிங்கள இராணுவம் இப்போது வகிக்கிறது. இராணுவம் என்கின்ற ஒரு குழாமும் அதற்குரிய நலன்களும் இனவாதத்தின் பெயரால் உருவாகிவிட்டன. அது உள்நாட்டு hPதியான உயா குழாத்து வர்க்க உறவையும் அதற்கான நலன்களையும் கொண்டுள்ளது.
இலங்கை இராணுவம் முற்றிலும் தமிழின எதிh ப்பின் மீது கட்டி வளர்க்கப்பட்டதுடன் அதன் சித்தாந்தமும் இனவாதமாகவே உள்ளது. இனவாத சித்தாந்தமும் இன்றைய அரசியல் சூழலில் ஒப்பீட்டு hPதியில் தனது வேகத்தை ஓரளவு இழந்துள்ள போதிலும் வளர்ச்சியடைந்து தனது நலன்களைப் பேண இராணுவம் ஏதோ ஒரு சாக்குப் போக்கைத் தேடுகின்றது. வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறது. யுத்ததளத்தை மூட்டவிரும்புகின்றது, இனவாத சித்தாந்தமே இராணுவத்தை ஊட்டி வளர்த்ததாயினும் அது அதற்கும் அப்பாற் சென்று யுத்தவடிவ நலன்களுக்குப் போய்விட்டது.
இந்த இராணுவ விஸ்வரூபம் மொத்தத்திற் சிங்கள மக்களுக்கும் ஆபத்தானது. ஏனெனில் அதன் அடிப்படைச் சித்தாந்தம் இனவாத அடிப்படையிலான மனிதக்கொலை வெறியினைக் கொண்டதாகும். அண்மையில் தென்னிலங்கையில் சிங்களவருக்குச் சொந்தமான பல முச்சக்கர வண்டிகளை இராணுவத்தினர் சிலா கொலை வெறிகொண்டு தாக்கி நொருக்கியதுடன் சாரதிகள் பலரையும் படுகாயப்படுத்தினர். இலங கை இராணுவம் முற்றிலும் ஆபத்தான ஒரு வளர்ச்சியை இலங்கை அரசியலில் அடைந்திருக்கிறது. இனவாதத்தால் உருப்பெற்று வளர்ந்த சிங்கள இராணுவம் தனது நலன்களைப் பேணவும் ஆகலும் பெருகவும் அந்த இனவாதத்தைவிடவும் பரந்த தளத்தைத் தனக்குத் தேடுகின்றது. இனவாதம் சிங்கள இராணுவத்திற்குப் பரிச்சியப்பட்டுப்போன ஒரு கருவியென்பதால் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதனைக் கையில் எடுக்கத் தயங்காது.
இலங்கையில் இருகட்சி ஆட்சிமுறை அதிகம் வளர்ச்சி அடைந்து வந்தது. அத்தகைய இருகட்சி ஆட்சிமுறைச் சூழலில் இராணுவம் உள்நாட்டரசியலிற் சத்திவாய்ந்த தொன்றாக இருப்பதரிது. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலமும் ஜனாதிபதிமுறை மூலமும் இருகட்சி ஆட்சிமுறை நலிவடையத் தொங்கிவிட்டது. சிறப்பான அரசியற் கலாச்சாரமும் பாரம்பரியமும் வளா ச்சியடையாத நாடுகளில் ஒரு வேளையில் இருவேறு கட்சிகள் தனித்தனியே ஜனாதிபதிப் பதவியையும். நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவைகளாய் இருக்குமிடத்து அங்கு அரசியற் ஸ்திரம் குலைந்து இராணுவத்தின் கையை ஓங்கச் செய்யும். ஜே. ஆர். யாப்பின் மூலம் அப்படியொரு பிரகாசமான வாய்ப்பு இலங்கை இராணுவத்திற்குத் தென்படுகிறது.
இலங்கையின் அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகம் வளர்ந்து வருவது உண்மையாயினும் அது ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதானதே. புள்ளி போடுவதன் மூலம் தமது ஆட்சியாளரைத் தெரிவுசெய்கின்றதான முக்கால் நூற்றாண்டுப் பாரம்பரியத்தை சிங்கள மக்கள் கொண்டுள்ளதுடன் இனவாதத்திற்கு வெளியே சிங்கள நிறுவனங்கள் கூடியளவு சிங்கள ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளன. ஆதலால் இராணுவம் தவிர்க்கமுடியாத நெருக்கடியின மத்தியிற் பதவிக்கு வர நேர்ந்தாலும் சிறிது காலத்துள் அது புள்ளடியின் மூலமாக ஆட்சியதிகாரத்தையே ஸ்தாபிக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விடயமென்னவெனில் ஒரு கட்சி ஜனாதிபதிப் பதவிவகிக்க வேறொரு கட்சி நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் நிலையிருக்குமிடத்து அப்போது நெருக்கடி இரு கட்சிகளுக்குமிடையே வளருமாயின் அதில் இராணுவம் தனது நலத்திற்கேற்ற ஒருபக்கம் சார்ந்து அதன் மூலம் அரசியலிற் தனது செல்வாக்கை பெரிதும் பேணமுடியம். உள்நாட்டிற்குழப்பம் இந்த வகையிற் கணிசமானளவு மேலெழும்புமேயானால்த்தான் இராணுவத்தால் அதைப் பயன்படுத்தமுடியும். இந்த ஆபத்தான காரணியை தமிழீழ மக்கள் தமக்குப் பொருத்தமான வகையிற் கணிப்பீடு செய்யவேண்டும்.
இப்போது இனவாதத்துடனும் அதற் கப்பாலும் சிங்கள இராணுவம் தனது நலன்களை இணைத்தும் ஸ்தாபித்து விட டது. இதனால் இராணுவத்தின் நலன்கள் இனவாதத்துடனும் அதற்கப்பாலான அம்சங்களுடனும் இணைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றிற்செறிந்தும் செயற்படக்கூடியவை ஆகிவிட்டன.
இராணுவம் அரசின் செல்லப்பிள்ளையாய் வளா ந்து விட்டது. அது தொடா ந்தும் செல்லம் கேட்கும் அல்லது மூக்கைக் கடிக்கும். இராணுவத்தின் வரவு இலங்கை அரசிலில் ஒரு புதிய யதார்த்தம். இதனாற்தான் ரணில் பதவிக்கு வந்ததும் முக்கிய இராணுவ முகாங்களுக்கெல்லாம் சென்று இராணுவத்தினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலீடுபட்டார்.
இலங்கையின் இனவிவகாரத்திற் பங்கெடுக்கக்கூடிய முக்கிய சக்திகள் கட்சிகள், இராணுவம், பௌத்த மதபீடங்களும்நிறுவனங்களும், அரசியற் பொருளாதார அமுக்கக் குழுக்கள், பத்திரிகைகளும் ஏனைய வெகுஐன தொடர்புச்சாதனங்களும், புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும், அதிகாரிகள் வா க்கம் ஆகியனவாகும்.
கட்சிகள், மதபீடங்கள், தொடர்புச்சாதனங்கள் என்பவற்றுடன் ஒட்டியே இராணுவம் தன்னை மேன்மைப்படுத்த முயலும். அதனால் இவ வம்சங்களை மட டும் நோக்குவதன முலம் இனவாதத்தை குறுக்கு வெட்டாக எடைபோட முயல்வோம்.
ஐ.தே.க, சு.க, ஜே.வி.பி. ஆகிய மூன்றையுமே தற்போதைய நிலையிற் கருத்திற்கெடுப்போம்.
ஜே.வி.பி. இனவாதம் பொறுத்து ஒரு தூண்டுகோலான சக்தியே தவிர பதவிக்கு வரக்கூடிய ஒன்றல்ல. அதன் தூண்டற் பலம் இராணுவத்திற்கு முற்றிலும் பக்கபலமானது மட்டுமே. சு.க. விற்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. நலிந்துபோயிருக்கும் பொருளாதாரப் பின்னணியில் வெளிநாட்டாதரவுடன் எழுந்து நிற்கும் ரணிலை இலகுவில் எதிh க்க முடியாத நிலை. இனவாதத்தை இதன்பொருட்டு முழு அளவில் பயன்படுத்த முடியாமை. அடுத்து பண்டாரநாயக்கா வம்சம் கட்சிக்குள் புதிய நெருக்கடிக்குள்ளாகியுள்சளமை.
பண்டாரநாயக்க குடும்பத்திற்கு மாற்றாக சிங்கள மக்கள் மத்தியிலான சத்திவாய்ந்த குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ச தலைமைத்துவப் போட்டிக்குள் நேரடியாகப் பிரவேசித்துவிட்டார். அத்துடன் அவருக்கு பௌத்த மதபீடங்களின் ஆசியுமுண்டு. இந்த இரண்டுபட்ட நிலையில் கட்சித்தலைமைத்துவத்தைப் பெற ஏட்டிக்குப் போட்டியாய் இரு அணியினரும் இனவாதத்தைத் தூக்கமுடியும்.ஆனால் தமது உட்கட்சிப் போட்டியில் ஐ.தே.க. வின் மறைமுக அனுசரணையைப் பெறுவது மகிந்த ராஜபக்சவிற்கு அனுகூலமானது. கட்சிக்குள் முன்னுக்குவர முழு இனவாதம் பேசிய முன்னாள் பிரதமர் ரத்தின சிறி விக்கிரமநாயக்காவின் தோல்வி அனுபவம் ராஜபக்சவிற்கு ஒரு முன்னுதாரணமாக அமை யுமாயின் சமாதானம் பற்றிய விவகாரத்தில் அவர் ஐ.தே. க. வுடன் மறைமுகமாக அனுசரித்தப் போவது அவருக்கு இலாபகரமானது. சந்திரிகா, அநுரா அணியினரின் இனவாதத்துடன் ஒப்பிடுகையில் ராஐபக்ச மிதமான நிலையையே எடுத்துள்ளாh . அத்துடன் ராஜபக்சவின் கோட்டையான தென்மாகாணத்தில் ஜே. வி.பி. விரைவாக வளர சந்திரிக்கா - ஜே.வி.பி. கூட்டு உதவுகிறது. இது ராஜபக்சவை நன்றாகப் பலவீனப் படுத்தக்கூடிய விடயமாகையாலும் ராஜபக்ச ஈவிரக்கமின்றி பண்டாரநாயக்க வம்ச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளது. இவை சு.க. வைப் பவீனமான நிலையில் வைத்திருப்பதால் இராணுவம் தற்போது சு.க. வினை நம்பி எதையும் முதலீடுசெய்யமுடியாதுள்ளது. ஆதலால் சு.க. ஏதோ ஒரு வகையில் பலமடையும் வரை, ஏதோ ஒரு சக்தி முழுப்பலமடையும் வரை இராணுவம் காத்திருக்கவேண்டி உள்ளது.
ஐ. தே- க. விற்கு பௌத்த பீடங்களில் கணிசமான செல்வாக்குண்டு. அத்துடன் சு.க. இரண்டு பட்டிருப்பதாலும் பௌத்தபீடங்கள் முனைப்புடன் செயற்படத் தயாராயில்லை, யுத்தம் தலைநகர் வரை நகர்ந்து விட்டதாலும் அதன் கசப்பான அனுபவங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஏதோ ஒருவகைச் சாமாதானம் வேண்டுமென்ற மனநிலையைத் தோற்றுவித்துள்ள பின்னணியில் இந்த பௌத்த பீடங்களின் இனவாதக் கூர்முனை ஓரளவு ஒடிந்துள்ளது. ஆயினும் பற்களில் விசமுண்டு.
வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இனவாத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லையாயினும் விசம் கக்குவதை தணித்துள்ளன. இந்த நிலைமைகளின் கீழ் இனவாதத்திற்கு ஒரு ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்தம்பித்தைச் சமாதான விரும்பிகள் நன்கு பயன்படுத்தத் தயார் என்றால் சுமுக நிலையை அதிகம் மேம்படுத்த முடியும்.
இனி இராணுவத்தின் இராணுவ மனநிலையைச் சற்று நோக்குவோம். சிங்கள இராணுவத்தின் மூலமான ரத்வத்தையின் மிகப்பெரிய இராணுவத்திட்டம் "ஜெயசிக்குறு" வாகும். புலிகள் ஜெயசிக்குறுவிற்கு கொடுத்த அடியின் மூலம் அதன் இராணுவத் தளகர்த்தர் ரத்வத்தையின் முதுகெலும்பை நொருக்கியதுடன் இராணுவத்தையும் திணறடித்து விட்டனர். மேலும் இராணுவம் வன்னிப்பெருநிலப்பரப்பில் வைத்திருந்த அதிகமான முகாம்களை இழந்ததுடன் முக்கிய ஆனையிறவு முகாம்மீதான வெற்றியுடன் புலிகள் குடாநாடு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது இராணுவம் செயலற்று முழுத்தோல்வி மனப்பாங்கை அடைந்தது. அவ வேளை இராணுவத்தைக் காப்பாற்றியது வெளிநாட்டுச் சக்திகளின் உடனடி ஆதரவும், அனுசரணையும் உதவிகளும்தான். ஆதலால் இங்கு இராணுவம் அதிகம் வீரம் பேசமுடியாத விழுப்புண்ணைக் கொண்டிருப்பதுடன் வெளிநாட்டுச் சக்திகளின் விருப்பங்களுக்கு மாறாகச் சமாதான முயற்சிகளைக் குழப்பினால் அதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவையும் கருத்திலெடுக்க வேண்டிய நிலையுண்டு.
ராஜீவ கொல்லப்பட்டமை தொடர்பாக புலிகளுக்கெதிராக ஜெயலலிதா விடும் கடும் கண்டனங்களும், மிரட்டல்களும் தமிழகச் சட்டசபைத் தீர்மானமும் சிங்கள இனவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் தெம்புூட்டும் விடயங்கள்தான். இதில் ஜெயலலிதாவிற்கு பல பின்னணிகள் இருக்கக்கூடும். எப்படியோ நோக்காடுற்றுள்ள சிங்கள இனவாதத்திற்கு ஜெயலலிதா தைலம் புூசுகிறார் என்பது மட்டும் உண்மை. இதில் ஜெயலலிதாவின் அரங்கம் எல்லைக்குட்பட்டதென்ற வகையில் சற்றாறுதல் உண்டு.
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து நீண்டகால நிலைமைகளையும் கருத்திற்கொண்டு பார்க்கையில் ஒப்பீட்டு hPதியில் இனவாதம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அது தனது சக்திகள் பலவற்றை ஒன்றுதிரட்டி மீள்வதற்கு முன் சமாதானத்தின்பால் விரைவாகச் செயற்பட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் குறிக்கோள்களை மேல் நோக்கி விரைவுபடுத்தி எடுத்து வடக்கு-கிழக்குக்கான இடைக்கால ஆட்சி அலகை உருவாக்கி விட்டால் சுமூக நிலையை சில வருடங்களுக்குப் பேணுவது சாத்தியம். பின்பு சமூக நிலையின் தன்மையே அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும். தாமதிக்கும் ஒவ வொரு கட்டமும் இனவாத சக்திகள் மீள்திரட்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
முன்னெப்பொழும் இல்லாதவாறு இனவாதம் அதிகம் ஸ்தம்பிதமடைந்திருக்கும் காலகட்டமிதுவாகும். ஆதலால் இராணுவம் உடனடி நிலையில் நேரடிக் குழப்பங்களில் ஈடுபட முடியாத ஓர் ஈய்வு இப்போதுள்ளது.
மு. திருநாவுக்கரசு
ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸாவின் அனுமதி பெறாமலும் அவருக்கு அறிவிக்காமலுமே கைதியாயிருந்த றோகண விஜயவீர, இராணுவத் தளபதி ஹமில்டன் வனசிங்கவின் கட்டளைப்படி அடித்து நொருக்கப்பட்டு உயிருடன் தீமூட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்னும் பொதுமக்கள் பலருக்குத் தெரியாத ஒன்றே. நெருக்கடிமிக்க கட்டங்களில் இராணுவம் தானே தீர்மானமெடுக்கும் நிலையிலுள்ளது என்பதை இது காட்டுகிறது.
எனவே இலங்கையின் இனவாத அரசியலை ஆராயுமிடத்து முற்றிலும் சிங்களமயப்பட்டுள்ள இராணுவத்தினையும் நிர்ணயகரமான காரணிகளுள் ஒன்றாய் எடுத்து ஆராய தல் அவசியமாகும். இதற்குமுன் அரசியற்தீர்மானங்களில் சிங்கள பௌத்த மதபீடங்களும், மதநிறுவனங்களும் வகித்த இந்த பங்குக்கு நிகரான அல்லது அதைவிட மேலான பங்கை சிங்கள இராணுவம் இப்போது வகிக்கிறது. இராணுவம் என்கின்ற ஒரு குழாமும் அதற்குரிய நலன்களும் இனவாதத்தின் பெயரால் உருவாகிவிட்டன. அது உள்நாட்டு hPதியான உயா குழாத்து வர்க்க உறவையும் அதற்கான நலன்களையும் கொண்டுள்ளது.
இலங்கை இராணுவம் முற்றிலும் தமிழின எதிh ப்பின் மீது கட்டி வளர்க்கப்பட்டதுடன் அதன் சித்தாந்தமும் இனவாதமாகவே உள்ளது. இனவாத சித்தாந்தமும் இன்றைய அரசியல் சூழலில் ஒப்பீட்டு hPதியில் தனது வேகத்தை ஓரளவு இழந்துள்ள போதிலும் வளர்ச்சியடைந்து தனது நலன்களைப் பேண இராணுவம் ஏதோ ஒரு சாக்குப் போக்கைத் தேடுகின்றது. வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறது. யுத்ததளத்தை மூட்டவிரும்புகின்றது, இனவாத சித்தாந்தமே இராணுவத்தை ஊட்டி வளர்த்ததாயினும் அது அதற்கும் அப்பாற் சென்று யுத்தவடிவ நலன்களுக்குப் போய்விட்டது.
இந்த இராணுவ விஸ்வரூபம் மொத்தத்திற் சிங்கள மக்களுக்கும் ஆபத்தானது. ஏனெனில் அதன் அடிப்படைச் சித்தாந்தம் இனவாத அடிப்படையிலான மனிதக்கொலை வெறியினைக் கொண்டதாகும். அண்மையில் தென்னிலங்கையில் சிங்களவருக்குச் சொந்தமான பல முச்சக்கர வண்டிகளை இராணுவத்தினர் சிலா கொலை வெறிகொண்டு தாக்கி நொருக்கியதுடன் சாரதிகள் பலரையும் படுகாயப்படுத்தினர். இலங கை இராணுவம் முற்றிலும் ஆபத்தான ஒரு வளர்ச்சியை இலங்கை அரசியலில் அடைந்திருக்கிறது. இனவாதத்தால் உருப்பெற்று வளர்ந்த சிங்கள இராணுவம் தனது நலன்களைப் பேணவும் ஆகலும் பெருகவும் அந்த இனவாதத்தைவிடவும் பரந்த தளத்தைத் தனக்குத் தேடுகின்றது. இனவாதம் சிங்கள இராணுவத்திற்குப் பரிச்சியப்பட்டுப்போன ஒரு கருவியென்பதால் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அதனைக் கையில் எடுக்கத் தயங்காது.
இலங்கையில் இருகட்சி ஆட்சிமுறை அதிகம் வளர்ச்சி அடைந்து வந்தது. அத்தகைய இருகட்சி ஆட்சிமுறைச் சூழலில் இராணுவம் உள்நாட்டரசியலிற் சத்திவாய்ந்த தொன்றாக இருப்பதரிது. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலமும் ஜனாதிபதிமுறை மூலமும் இருகட்சி ஆட்சிமுறை நலிவடையத் தொங்கிவிட்டது. சிறப்பான அரசியற் கலாச்சாரமும் பாரம்பரியமும் வளா ச்சியடையாத நாடுகளில் ஒரு வேளையில் இருவேறு கட்சிகள் தனித்தனியே ஜனாதிபதிப் பதவியையும். நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவைகளாய் இருக்குமிடத்து அங்கு அரசியற் ஸ்திரம் குலைந்து இராணுவத்தின் கையை ஓங்கச் செய்யும். ஜே. ஆர். யாப்பின் மூலம் அப்படியொரு பிரகாசமான வாய்ப்பு இலங்கை இராணுவத்திற்குத் தென்படுகிறது.
இலங்கையின் அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகம் வளர்ந்து வருவது உண்மையாயினும் அது ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதானதே. புள்ளி போடுவதன் மூலம் தமது ஆட்சியாளரைத் தெரிவுசெய்கின்றதான முக்கால் நூற்றாண்டுப் பாரம்பரியத்தை சிங்கள மக்கள் கொண்டுள்ளதுடன் இனவாதத்திற்கு வெளியே சிங்கள நிறுவனங்கள் கூடியளவு சிங்கள ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளன. ஆதலால் இராணுவம் தவிர்க்கமுடியாத நெருக்கடியின மத்தியிற் பதவிக்கு வர நேர்ந்தாலும் சிறிது காலத்துள் அது புள்ளடியின் மூலமாக ஆட்சியதிகாரத்தையே ஸ்தாபிக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விடயமென்னவெனில் ஒரு கட்சி ஜனாதிபதிப் பதவிவகிக்க வேறொரு கட்சி நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் நிலையிருக்குமிடத்து அப்போது நெருக்கடி இரு கட்சிகளுக்குமிடையே வளருமாயின் அதில் இராணுவம் தனது நலத்திற்கேற்ற ஒருபக்கம் சார்ந்து அதன் மூலம் அரசியலிற் தனது செல்வாக்கை பெரிதும் பேணமுடியம். உள்நாட்டிற்குழப்பம் இந்த வகையிற் கணிசமானளவு மேலெழும்புமேயானால்த்தான் இராணுவத்தால் அதைப் பயன்படுத்தமுடியும். இந்த ஆபத்தான காரணியை தமிழீழ மக்கள் தமக்குப் பொருத்தமான வகையிற் கணிப்பீடு செய்யவேண்டும்.
இப்போது இனவாதத்துடனும் அதற் கப்பாலும் சிங்கள இராணுவம் தனது நலன்களை இணைத்தும் ஸ்தாபித்து விட டது. இதனால் இராணுவத்தின் நலன்கள் இனவாதத்துடனும் அதற்கப்பாலான அம்சங்களுடனும் இணைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றிற்செறிந்தும் செயற்படக்கூடியவை ஆகிவிட்டன.
இராணுவம் அரசின் செல்லப்பிள்ளையாய் வளா ந்து விட்டது. அது தொடா ந்தும் செல்லம் கேட்கும் அல்லது மூக்கைக் கடிக்கும். இராணுவத்தின் வரவு இலங்கை அரசிலில் ஒரு புதிய யதார்த்தம். இதனாற்தான் ரணில் பதவிக்கு வந்ததும் முக்கிய இராணுவ முகாங்களுக்கெல்லாம் சென்று இராணுவத்தினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலீடுபட்டார்.
இலங்கையின் இனவிவகாரத்திற் பங்கெடுக்கக்கூடிய முக்கிய சக்திகள் கட்சிகள், இராணுவம், பௌத்த மதபீடங்களும்நிறுவனங்களும், அரசியற் பொருளாதார அமுக்கக் குழுக்கள், பத்திரிகைகளும் ஏனைய வெகுஐன தொடர்புச்சாதனங்களும், புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும், அதிகாரிகள் வா க்கம் ஆகியனவாகும்.
கட்சிகள், மதபீடங்கள், தொடர்புச்சாதனங்கள் என்பவற்றுடன் ஒட்டியே இராணுவம் தன்னை மேன்மைப்படுத்த முயலும். அதனால் இவ வம்சங்களை மட டும் நோக்குவதன முலம் இனவாதத்தை குறுக்கு வெட்டாக எடைபோட முயல்வோம்.
ஐ.தே.க, சு.க, ஜே.வி.பி. ஆகிய மூன்றையுமே தற்போதைய நிலையிற் கருத்திற்கெடுப்போம்.
ஜே.வி.பி. இனவாதம் பொறுத்து ஒரு தூண்டுகோலான சக்தியே தவிர பதவிக்கு வரக்கூடிய ஒன்றல்ல. அதன் தூண்டற் பலம் இராணுவத்திற்கு முற்றிலும் பக்கபலமானது மட்டுமே. சு.க. விற்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. நலிந்துபோயிருக்கும் பொருளாதாரப் பின்னணியில் வெளிநாட்டாதரவுடன் எழுந்து நிற்கும் ரணிலை இலகுவில் எதிh க்க முடியாத நிலை. இனவாதத்தை இதன்பொருட்டு முழு அளவில் பயன்படுத்த முடியாமை. அடுத்து பண்டாரநாயக்கா வம்சம் கட்சிக்குள் புதிய நெருக்கடிக்குள்ளாகியுள்சளமை.
பண்டாரநாயக்க குடும்பத்திற்கு மாற்றாக சிங்கள மக்கள் மத்தியிலான சத்திவாய்ந்த குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ச தலைமைத்துவப் போட்டிக்குள் நேரடியாகப் பிரவேசித்துவிட்டார். அத்துடன் அவருக்கு பௌத்த மதபீடங்களின் ஆசியுமுண்டு. இந்த இரண்டுபட்ட நிலையில் கட்சித்தலைமைத்துவத்தைப் பெற ஏட்டிக்குப் போட்டியாய் இரு அணியினரும் இனவாதத்தைத் தூக்கமுடியும்.ஆனால் தமது உட்கட்சிப் போட்டியில் ஐ.தே.க. வின் மறைமுக அனுசரணையைப் பெறுவது மகிந்த ராஜபக்சவிற்கு அனுகூலமானது. கட்சிக்குள் முன்னுக்குவர முழு இனவாதம் பேசிய முன்னாள் பிரதமர் ரத்தின சிறி விக்கிரமநாயக்காவின் தோல்வி அனுபவம் ராஜபக்சவிற்கு ஒரு முன்னுதாரணமாக அமை யுமாயின் சமாதானம் பற்றிய விவகாரத்தில் அவர் ஐ.தே. க. வுடன் மறைமுகமாக அனுசரித்தப் போவது அவருக்கு இலாபகரமானது. சந்திரிகா, அநுரா அணியினரின் இனவாதத்துடன் ஒப்பிடுகையில் ராஐபக்ச மிதமான நிலையையே எடுத்துள்ளாh . அத்துடன் ராஜபக்சவின் கோட்டையான தென்மாகாணத்தில் ஜே. வி.பி. விரைவாக வளர சந்திரிக்கா - ஜே.வி.பி. கூட்டு உதவுகிறது. இது ராஜபக்சவை நன்றாகப் பலவீனப் படுத்தக்கூடிய விடயமாகையாலும் ராஜபக்ச ஈவிரக்கமின்றி பண்டாரநாயக்க வம்ச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளது. இவை சு.க. வைப் பவீனமான நிலையில் வைத்திருப்பதால் இராணுவம் தற்போது சு.க. வினை நம்பி எதையும் முதலீடுசெய்யமுடியாதுள்ளது. ஆதலால் சு.க. ஏதோ ஒரு வகையில் பலமடையும் வரை, ஏதோ ஒரு சக்தி முழுப்பலமடையும் வரை இராணுவம் காத்திருக்கவேண்டி உள்ளது.
ஐ. தே- க. விற்கு பௌத்த பீடங்களில் கணிசமான செல்வாக்குண்டு. அத்துடன் சு.க. இரண்டு பட்டிருப்பதாலும் பௌத்தபீடங்கள் முனைப்புடன் செயற்படத் தயாராயில்லை, யுத்தம் தலைநகர் வரை நகர்ந்து விட்டதாலும் அதன் கசப்பான அனுபவங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஏதோ ஒருவகைச் சாமாதானம் வேண்டுமென்ற மனநிலையைத் தோற்றுவித்துள்ள பின்னணியில் இந்த பௌத்த பீடங்களின் இனவாதக் கூர்முனை ஓரளவு ஒடிந்துள்ளது. ஆயினும் பற்களில் விசமுண்டு.
வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இனவாத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லையாயினும் விசம் கக்குவதை தணித்துள்ளன. இந்த நிலைமைகளின் கீழ் இனவாதத்திற்கு ஒரு ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்தம்பித்தைச் சமாதான விரும்பிகள் நன்கு பயன்படுத்தத் தயார் என்றால் சுமுக நிலையை அதிகம் மேம்படுத்த முடியும்.
இனி இராணுவத்தின் இராணுவ மனநிலையைச் சற்று நோக்குவோம். சிங்கள இராணுவத்தின் மூலமான ரத்வத்தையின் மிகப்பெரிய இராணுவத்திட்டம் "ஜெயசிக்குறு" வாகும். புலிகள் ஜெயசிக்குறுவிற்கு கொடுத்த அடியின் மூலம் அதன் இராணுவத் தளகர்த்தர் ரத்வத்தையின் முதுகெலும்பை நொருக்கியதுடன் இராணுவத்தையும் திணறடித்து விட்டனர். மேலும் இராணுவம் வன்னிப்பெருநிலப்பரப்பில் வைத்திருந்த அதிகமான முகாம்களை இழந்ததுடன் முக்கிய ஆனையிறவு முகாம்மீதான வெற்றியுடன் புலிகள் குடாநாடு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது இராணுவம் செயலற்று முழுத்தோல்வி மனப்பாங்கை அடைந்தது. அவ வேளை இராணுவத்தைக் காப்பாற்றியது வெளிநாட்டுச் சக்திகளின் உடனடி ஆதரவும், அனுசரணையும் உதவிகளும்தான். ஆதலால் இங்கு இராணுவம் அதிகம் வீரம் பேசமுடியாத விழுப்புண்ணைக் கொண்டிருப்பதுடன் வெளிநாட்டுச் சக்திகளின் விருப்பங்களுக்கு மாறாகச் சமாதான முயற்சிகளைக் குழப்பினால் அதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவையும் கருத்திலெடுக்க வேண்டிய நிலையுண்டு.
ராஜீவ கொல்லப்பட்டமை தொடர்பாக புலிகளுக்கெதிராக ஜெயலலிதா விடும் கடும் கண்டனங்களும், மிரட்டல்களும் தமிழகச் சட்டசபைத் தீர்மானமும் சிங்கள இனவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் தெம்புூட்டும் விடயங்கள்தான். இதில் ஜெயலலிதாவிற்கு பல பின்னணிகள் இருக்கக்கூடும். எப்படியோ நோக்காடுற்றுள்ள சிங்கள இனவாதத்திற்கு ஜெயலலிதா தைலம் புூசுகிறார் என்பது மட்டும் உண்மை. இதில் ஜெயலலிதாவின் அரங்கம் எல்லைக்குட்பட்டதென்ற வகையில் சற்றாறுதல் உண்டு.
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து நீண்டகால நிலைமைகளையும் கருத்திற்கொண்டு பார்க்கையில் ஒப்பீட்டு hPதியில் இனவாதம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அது தனது சக்திகள் பலவற்றை ஒன்றுதிரட்டி மீள்வதற்கு முன் சமாதானத்தின்பால் விரைவாகச் செயற்பட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் குறிக்கோள்களை மேல் நோக்கி விரைவுபடுத்தி எடுத்து வடக்கு-கிழக்குக்கான இடைக்கால ஆட்சி அலகை உருவாக்கி விட்டால் சுமூக நிலையை சில வருடங்களுக்குப் பேணுவது சாத்தியம். பின்பு சமூக நிலையின் தன்மையே அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும். தாமதிக்கும் ஒவ வொரு கட்டமும் இனவாத சக்திகள் மீள்திரட்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
முன்னெப்பொழும் இல்லாதவாறு இனவாதம் அதிகம் ஸ்தம்பிதமடைந்திருக்கும் காலகட்டமிதுவாகும். ஆதலால் இராணுவம் உடனடி நிலையில் நேரடிக் குழப்பங்களில் ஈடுபட முடியாத ஓர் ஈய்வு இப்போதுள்ளது.
மு. திருநாவுக்கரசு

