06-22-2003, 08:59 AM
நான் மிகவும் வேதனையோடு அழுத அந்த நாள் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. கரும்புலிகள் அணியில் இணைவதற்காக எத்தனையோ பாடுபட்டு தலைவரின் அனுமதியை வென்றெடுத்த என்னை, பயிற்சிக்கு எடுக்கமுடியாது என கூட்டிச்செல்ல வந்தவர்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது நான்பட்ட வேதனைலு} அழுதுகொட்டிய கண்ணீர் எல்லாம் எனது சொந்த விரக்திக்குக் கணக்குத் தீர்ப்பதற்காய் அல்ல....
எனது அனுபவத்தின் படியும் என் சக தோழர்களின் வாழ்வுக் கட்டங்களில் இருந்தும் என்னால் கூறக்கூடியது என்னவென்றால் எந்தக் கரும்புலி வீரனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியாலோ வெறுப்புணர்வாலோ தன்னை அh ப்பணிக்க முன்வருவதில்லை. எமது தலைவரால் உருவாக்கப்பட்டிருக்கும் கரும்புலிக் கட்டமைப்பை பொறுத்தவரை அப்படிப்பட்டவர்கள் எவராலும் நின்றுபிடிக்கவே முடியாது. என்று தனது பதிவுகளைத் தொடங்கும் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் தனது அனுபவங்களினூடே தொடர்கின்றான்.
ஒரு போராளி எடுத்தமாத்திரத்திலேயே கரும்புலியாக இணைந்துவிடமுடியாது. அப்படியிருக்க தனிப்பட்ட விரக்திகளுக்கு இடமேது. பல வருடங்களாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக பலகடிதங்களை அனுப்பி தலைவருடன் சண்டையிட்டும் சந்தர்ப்பம் கிடைக்காத எத்தனையோ போராளிகள் அந்தப் பாக்கியம் கிடைக்காமலேயே வீரச்சாவு அடைந்தும் விட்டார்கள்.
மேலும் கரும்புலிகள் அணிக்கு மக்களிலிருந்து எவரும் நேரடியாக இணைந்து கொள்ளமுடியாது. எத்தனையோ படிமுறைகள் ஊடாக வந்தே அவர்கள் இணையமுடியும். போராளிகளில் இருந்து அவர்களின் இலட்சிய உறுதி, உடல்வலிமை, வயதுத்தகுதி, களஅனுபவம் என்பவற்றோடு அவர்களின் வேகமும் விவேகமும் பாPட்சிக்கப்பட்டே கரும்புலிகள் தெரிவாவார்கள்.
தெரிவுசெய்யப்பட்டாலும் கடினமானதும், வேகமானதும், வேதனைகள் சோதனைகள் நிறைந்ததுமான கடின பயிற்சிகளை நாங்கள் வெற்றிகொண்டு ஆகவேண்டும்.
எங்களின் தேர்வுப்பயிற்சியின் போது எப்படியாவது சித்தியடைந்துவிடவேண்டும் என்பதற்காக வயிற்றுக்காயங்களோடும், உடம்பின் உள்ளே இருக்கும் ரவைகள், செல்துண்டுகள் வீங்கிப் புடைத்து அவர்களை வருத்தும்போதும் அவற்றை வெளியே காட்டிக்கொள்ளாது, தமக்குள்ளேயே மறைத்துக் கொண்டு உறுதியோடு பயிற்சியெடுத்து வெற்றிபெற்ற பல தோழர்களைக் கண்டு நாங்களே வியந்து இருக்கிறோம்.
எம்மோடு நின்ற தோழன் ஒருவன் நல்ல கெட்டிக்காரன். ஆனால் சுகவீனம் காரணமாக பயிற்சி எடுக்கக்கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட்டு மருத்துவக் குறிப்பும் கொடுத்து அனுப்பியிருந்தார். ஆனால், அந்த சுகவீனத்தின் மத்தியிலும் தான் எந்தப் பயிற்சியானாலும் செய்துமுடிப்பேன் என்று அவன் அழுது அழுது அடம்பிடித்தான். தலைவருக்கு கடிதம் மேல் கடிதம் போட்டான். நிலைமை மோசமாகி கடைசியில் அவன் பயிற்சி எடுப்பதால் பாதிக்கப்படுவதைவிட, நிற்பாட்டப்பட்டதால் எழுந்த மனவேதனையால் விரைவில் செத்தே விடுவான் போல் இருந்தான். இறுதியில் அவன் தொடர்போராட்டத்தில் வெற்றியடைந்து, பயிற்சிகள் எல்லாம் செய்து முடித்து ஒரு முக்கியமான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் சென்று வெற்றியுடன் திரும்பியும் வந்தான்.
நான் மிகவும் வேதனையோடு அழுத அந்த நாள் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. கரும்புலிகள் அணியில் இணைவதற்காக எத்தனையோ பாடுபட்டு தலைவரின் அனுமதியை வென்றெடுத்த என்னை, பயிற்சிக்கு எடுக்கமுடியாது என கூட்டிச்செல்ல வந்தவர்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது நான்பட்ட வேதனைலு} அழுதுகொட்டிய கண்ணீர்லு} எல்லாம் எனது சொந்த விரக்திக்குக் கணக்குத் தீர்ப்பதற்காய் அல்லலு}.
நாங்கள் ஏன் எமது வாழ்க்கையை இப்படி அமைத்துக்கொண்டோம் என்றால், நாம் ஆழமாக நேசிக்கின்ற எங்கள் உயிரிலும் மேலான பாச மக்கள் எதிரிகளின் கோரத்தாண்டவத்தால் அவலப்படும்போதும், காலம்காலமாய் நிலமிழந்து விரட்டியடிக்கப்படும்போதும் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோன்று உணர்கின்ற மென்மையான மனதாய் எங்கள் மனது இருக்கிறது. நாம் சிலர் எதையும் செய்யத்துணிந்துவிட்டால் மற்றவர்களுக்காகவது நிம்மதியை பெற்றுக்கொடுக்க முடியும் என நம்பினோம். மற்றவர்கள் நிம்மதியடைய எம்மை எப்படியும் வருத்த நாம் துணிந்தோம். இதுகூட விரக்தியடைந்த நிலையில் எழும் முடிவுதானே என எவரும் எண்ணக்கூடும். ஆனால், நின்று நிதானித்து தெளிவுபெற்ற மனிதர்களாகவே கரும்புலிகள் இருக்கிறார்கள்.
அகிலன்
எனது அனுபவத்தின் படியும் என் சக தோழர்களின் வாழ்வுக் கட்டங்களில் இருந்தும் என்னால் கூறக்கூடியது என்னவென்றால் எந்தக் கரும்புலி வீரனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியாலோ வெறுப்புணர்வாலோ தன்னை அh ப்பணிக்க முன்வருவதில்லை. எமது தலைவரால் உருவாக்கப்பட்டிருக்கும் கரும்புலிக் கட்டமைப்பை பொறுத்தவரை அப்படிப்பட்டவர்கள் எவராலும் நின்றுபிடிக்கவே முடியாது. என்று தனது பதிவுகளைத் தொடங்கும் கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் தனது அனுபவங்களினூடே தொடர்கின்றான்.
ஒரு போராளி எடுத்தமாத்திரத்திலேயே கரும்புலியாக இணைந்துவிடமுடியாது. அப்படியிருக்க தனிப்பட்ட விரக்திகளுக்கு இடமேது. பல வருடங்களாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக பலகடிதங்களை அனுப்பி தலைவருடன் சண்டையிட்டும் சந்தர்ப்பம் கிடைக்காத எத்தனையோ போராளிகள் அந்தப் பாக்கியம் கிடைக்காமலேயே வீரச்சாவு அடைந்தும் விட்டார்கள்.
மேலும் கரும்புலிகள் அணிக்கு மக்களிலிருந்து எவரும் நேரடியாக இணைந்து கொள்ளமுடியாது. எத்தனையோ படிமுறைகள் ஊடாக வந்தே அவர்கள் இணையமுடியும். போராளிகளில் இருந்து அவர்களின் இலட்சிய உறுதி, உடல்வலிமை, வயதுத்தகுதி, களஅனுபவம் என்பவற்றோடு அவர்களின் வேகமும் விவேகமும் பாPட்சிக்கப்பட்டே கரும்புலிகள் தெரிவாவார்கள்.
தெரிவுசெய்யப்பட்டாலும் கடினமானதும், வேகமானதும், வேதனைகள் சோதனைகள் நிறைந்ததுமான கடின பயிற்சிகளை நாங்கள் வெற்றிகொண்டு ஆகவேண்டும்.
எங்களின் தேர்வுப்பயிற்சியின் போது எப்படியாவது சித்தியடைந்துவிடவேண்டும் என்பதற்காக வயிற்றுக்காயங்களோடும், உடம்பின் உள்ளே இருக்கும் ரவைகள், செல்துண்டுகள் வீங்கிப் புடைத்து அவர்களை வருத்தும்போதும் அவற்றை வெளியே காட்டிக்கொள்ளாது, தமக்குள்ளேயே மறைத்துக் கொண்டு உறுதியோடு பயிற்சியெடுத்து வெற்றிபெற்ற பல தோழர்களைக் கண்டு நாங்களே வியந்து இருக்கிறோம்.
எம்மோடு நின்ற தோழன் ஒருவன் நல்ல கெட்டிக்காரன். ஆனால் சுகவீனம் காரணமாக பயிற்சி எடுக்கக்கூடாது என்று மருத்துவர் சொல்லிவிட்டு மருத்துவக் குறிப்பும் கொடுத்து அனுப்பியிருந்தார். ஆனால், அந்த சுகவீனத்தின் மத்தியிலும் தான் எந்தப் பயிற்சியானாலும் செய்துமுடிப்பேன் என்று அவன் அழுது அழுது அடம்பிடித்தான். தலைவருக்கு கடிதம் மேல் கடிதம் போட்டான். நிலைமை மோசமாகி கடைசியில் அவன் பயிற்சி எடுப்பதால் பாதிக்கப்படுவதைவிட, நிற்பாட்டப்பட்டதால் எழுந்த மனவேதனையால் விரைவில் செத்தே விடுவான் போல் இருந்தான். இறுதியில் அவன் தொடர்போராட்டத்தில் வெற்றியடைந்து, பயிற்சிகள் எல்லாம் செய்து முடித்து ஒரு முக்கியமான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் சென்று வெற்றியுடன் திரும்பியும் வந்தான்.
நான் மிகவும் வேதனையோடு அழுத அந்த நாள் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. கரும்புலிகள் அணியில் இணைவதற்காக எத்தனையோ பாடுபட்டு தலைவரின் அனுமதியை வென்றெடுத்த என்னை, பயிற்சிக்கு எடுக்கமுடியாது என கூட்டிச்செல்ல வந்தவர்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது நான்பட்ட வேதனைலு} அழுதுகொட்டிய கண்ணீர்லு} எல்லாம் எனது சொந்த விரக்திக்குக் கணக்குத் தீர்ப்பதற்காய் அல்லலு}.
நாங்கள் ஏன் எமது வாழ்க்கையை இப்படி அமைத்துக்கொண்டோம் என்றால், நாம் ஆழமாக நேசிக்கின்ற எங்கள் உயிரிலும் மேலான பாச மக்கள் எதிரிகளின் கோரத்தாண்டவத்தால் அவலப்படும்போதும், காலம்காலமாய் நிலமிழந்து விரட்டியடிக்கப்படும்போதும் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோன்று உணர்கின்ற மென்மையான மனதாய் எங்கள் மனது இருக்கிறது. நாம் சிலர் எதையும் செய்யத்துணிந்துவிட்டால் மற்றவர்களுக்காகவது நிம்மதியை பெற்றுக்கொடுக்க முடியும் என நம்பினோம். மற்றவர்கள் நிம்மதியடைய எம்மை எப்படியும் வருத்த நாம் துணிந்தோம். இதுகூட விரக்தியடைந்த நிலையில் எழும் முடிவுதானே என எவரும் எண்ணக்கூடும். ஆனால், நின்று நிதானித்து தெளிவுபெற்ற மனிதர்களாகவே கரும்புலிகள் இருக்கிறார்கள்.
அகிலன்

