11-02-2005, 01:41 PM
Birundan Wrote:வலைஞன் அண்ணாவிடம் ஒரு கேள்வி? ஊர் பெயர் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது? அது இரண்டுக்கும் ஆப்பா?
அதுக்குத்தான் வலைஞன் அண்ணா ஒரு நல்ல
பதில் தந்திருக்கிறாரே... அதாவது நீ.....................ட்டி முழக்கி
உங்கள் பதிலை எழுதுங்கோ........
நல்ல காலம் திருவள்ளுவர் ரெண்டுவரியில குறள் எழுதிட்டு
போயிட்டார்.. அவர் மட்டும் ஒரு வரி எழுதி இருந்தா என்ன கதி?
நாரதர் சொல்வது நல்ல யோசனை இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... அதே போல யாழுக்கு வருகிறவை எல்லாம்
இனி சொந்தப் பெயரில் மட்டும்தான் கருத்து எழுதவேணும்
என்று நிபந்தனை கொண்டுவரலாம்..
அதே நேரம் நிர்வாகம் ஒரு ஐபியில் ஒருவர்தான் வரலாம்
என்று முடிவெடுத்த பின்னர் அந்த ஐபி எந்தநாட்டுக்கு உரியது
அவர் ஐபி இலக்கத்தையும் போடுவது நல்லது..
அத்துடன் ஒவ்வொருவர் பெயருக்கும் பின்னால் ஐபி
இலக்கம் மற்றவர்களுக்கு தெரியக்கூடியதாக இருக்க
வேண்டும்.. அப்பொழுதான் கள உறுப்பினர்கள் கண்டு
கொள்ள இலகுவாய் இருக்கும்....
அடுத்தாக கள உறுப்பினர்களின் வீட்டு முகவரியை
கண்டிப்பாக இங்கு போட வேண்டும்... அப்பத்தான் ஒரு
வீட்டில் இருந்து பல முகமூடிகள் வருவதை தவிர்க்கலாம்.
மற்றபடி இன்னும் யாழ் இணையத்துக்கு சில யோசனைகள்..
1. யாழ் இணையம் பார்ப்பவர்கள் யாரும் சினிமா பாட்டு
கேட்டுக்கொண்டு களத்தை பார்வையிட கூடாது...
2.விடிய எழும்பி குளிக்காமல் யாழுக்க வரக்கூடாது.
மிகுதி யோசனைகள் யாராவது சொல்லலாம்......

