11-02-2005, 11:28 AM
Nithya Wrote:வட்டம்
உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து
கத்திக் கதறி
பிரசவித்து
உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..
காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..
பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..
தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து
இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை
மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..
அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???
அக்கா யாழில நான் படிச்ச நல்ல கவிதையளில இதுகும் ஒண்டக்கா. வாசிக்க வாசிக்கு திரும்ப வாசிக்கலாம் போல இருக்கு. இப்ப ஒரு 6 தடவ வாசிச்சிட்டன். உங்கட காதல் கவிதையள விட இதுகள் நல்லாருக்கக்கா.
ஒரு கேள்வியக்கா உடலுக்குள்ள கசிப்பு உற்பத்தி செய்து எண்டால் என்ன அர்த்தம்? எனக்கு அது விளங்கேல.
ஆனா வட்டமான வாழ்க்கை வாழாமல்........... <b>பத்தோட பதினொண்டா வாழ்ந்து சாகாமல்........புத்தம் புதுசா எதையாவது செய்து.....நித்தம் உலகில் எங்கட பெயர நிலைநாட்ட வேண்டும் எண்டு சொல்லியிருக்கிறீங்கள்</b>.......உங்கட கவிதைய வாசிச்சு எனக்கும் கவிதை எழுத வருது இப்ப <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

