06-22-2003, 08:59 AM
35 பாலங்களையும்,
98 வரையிலான மதகுகளையும்
கொண்ட இவ் நெடுஞ்சாலை சடுதி
யாக மூடப்பட்டதனால் மட்டக்களப்பிற்கு வரும் மலையக மக்களும், மலையகத்திற்குச்
செல்லும் கிழக்கு பிராந்திய
மக்களும் வேறு வழியுூடாக
நெடுந்தூரம் சுற்றியே தங்களது
பயணத்தை தொடர
வேண்டியிருந்தது.
--------------------------------------------------------------------------------
புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளவாறான பல விடயங்கள் நடந்தேறாதிருக்கும் இவ்வேளையிலும் கூட இடையிடையே மக்களின் நலனுக்காக வெளிப்படுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் மனதிற்கு ஓரளவு திருப்தியளிப்பினும் இதனூடே நிரந்தர, உண்மை சமாதான ஒளிக்கீற்று தென்பட வேண்டும் என்பதே மக்களின் அவா.
--------------------------------------------------------------------------------
புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு இடம்பெற்றுள்ள ஏ-9(யு-9) பாதை திறப்பின் பின்னான மாற்றங்கள் என்பது ஒரு விதமான பதிவு.
இவ வுடன்படிக்கையின் பின்பு தென் தமிழீழமான கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள ஏ5 (யு-5)பாதை திறப்பானது வரலாற்றில் மற்றுமொரு பதிவினையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி இறுக்கத்திற்குள்ளாகியிருந்த மக்களுக்கு சற்றுத் தளர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கலடி - பதுளை வீதியான இந்த ஏ9 நெடுஞ்சாலை கடந்த 15ம் திகதி வைபவ hPதியாக இருதரப்பினரது ஒத்துழைப்பாலும் திறக்கப்பட்டிருப்பதானது, ஏ9 வீதி திறப்பின்போது வன்னி, யாழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்ததொரு உணர்வு வெளிப்பாடு. கிழக்கு பிராந்திய மலையக தமிழ், சிங்கள மக்களுக்கும் புூரிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தென் தமிழீழத்தையும் மலையகத்தையும் இணைக்கும் இந்நெடுஞ்சாலை 1995ம் ஆண்டிற்கு முன்னா இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் கிழக்கிற்கும் மலையகத்திற்குமிடையேயான தொடர்புகளில் சிரமமின்றி மக்கள் தங்களது கல்வி, சுகாதார, பொருண்மிய மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் பலவற்றையும் கிரமமாக மேற்கொண்டு வந்தனர்.
1995 மார்ச் மாதம் வீதி அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமொன்று தொடர்பாக ஏற்பட்ட பிணக்கொன்றையடுத்து சிறீலங்கா படையினரால் செங்கலடி பதுளை வீதியான இந்த ஏ5 நெடுஞ்சாலை முற்றாக பொதுப் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.
இலங்கைத் தீவிலுள்ள 36 'ஏ' தர வீதிகளில் இதுவும் ஒன்று. வடகிழக்கு மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த வீதியான இவ வீதி முன்னர் ஆங்கிலேயரால் கிழக்கிலிருந்து நெல் உற்பத்தியினையும், மலையகத்திலிருந்து பெருந்தோட்டத்தையும் இணைக்கும் கூரிய நோக்கில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அரச படைகளின் இவ நெடுஞ்சாலை மூடப்பட்டதை அடுத்து, கிழக்கிற்கும் மலையகத்திற்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையை அடைந்தது.
இதனால் இப்பகுதி மக்கள் துரித தொடர்புகள் எதுவுமின்றி வாழ்வாதார அடித்தளம் சீரழிந்து பல துன்பங்களை கடந்த சில வருடங்களாக அனுபவித்து வந்தனர்.
இவ வீதியை தங்களின் புூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான படையினர் மரப்பாலம், கரடியனாறு போன்ற இடங்களில் மட்டுமல்லாது மேலும் பல இடங்களையும் ஆக்கிரமித்து முகாமிட்டிருந்தனர். இதனால் இப்பகுதியில் வாழ்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகள் விட்டு இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
35 பாலங்களையும், 98 வரையிலான மதகுகளையும் கொண்ட இவ நெடுஞ்சாலை சடுதியாக மூடப்பட்டதனால் மட்டக்களப்பிற்கு வரும் மலையக மக்களும், மலையகத்திற்குச் செல்லும் கிழக்கு பிராந்திய மக்களும் வேறு வழியுூடாக நெடுந்தூரரம் சுற்றியே தங்களது பயணத்தை தொடர வேண்டியிருந்தது.
ஏ9 சாலை மூடப்பட்டிருந்த போது தென்பகுதிக்கு செல்லும் வன்னி மக்கள் தம்பனையுூடாக சென்று வந்து அனுபவித்த அதே நிலையை ஏ5 சாலை மூடப்பட்டிருந்த போது மட்டு, மலையக மக்களும் அனுபவித்தே வந்துள்ளனர்.
இது வடக்கு தெற்கு தமிழீழ மக்களுக்கு சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்த வாழ்வியல் நசுக்கம் என்றே கூறலாம்.
மீனவ சமூகத்தினரை அதிகமாகக் கொண்டுள்ள மட்டக்களப்பிலிருந்து மீன் வளத்தை மலையகத்திற்கு கொண்டு செல்வதற்கும், மலையகத்தின் உற்பத்திப் பொருட்களான பிரதானமாக மரக்கறி வகைகளை கிழக்கிற்கு கொண்டு வருவதிலும் ஏற்பட்டிருந்த தடை பொருண்மிய பக்கங்களில் மக்களை மிகவும் நலிவடையவே செய்திருந்தது.
இவ வாறு பல்வேறு கோணங்களில் இன்னல்களை ஏற்படுத்தி வந்த இந்நெடுஞ்சாலை திறக்கப்படுவதற்கான உறுதிப்பாடுகள் இருதரப்பாலும் தெரிவிக்கப்பட்டு இரு பகுதிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதி வெடிகள் அகற்றும் பணி இரு தரப்பாலும் துரிதமாக செயற்படுத்தப்பட்டது.
இச் செய்தி அறிந்த மக்கள் திருப்தி அடைந்து இருதரப்பினருக்கும் நன்றி தெரிவித்து குதூகலித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு தமிழீழத்தில் நிகழ்ந்த இரண்டாவது 'ஏ' தர நெடுஞ்சாலை திறப்பினை அரசியலாளர்கள், சமூகவியலாளர்கள் பலரும் பாராட்டி இரு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ம் திகதி செங்கலடி கறுத்த பாலத்தில் 'ஏ' 5 வீதியின் வைபவாPதியான திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன், கொள்கை திட்டமிடல் அமைச்சின் ஆலோசகர் அலிசாகிர மௌலானா கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தென்னக்கோன், மட்டக்களப்பின் 23-3வது கட்டளை அதிகாரி அன்ரனீஸ், அரச அதிபர் சண்முகம் மற்றும் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நெடுஞ்சாலை திறப்போடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான புல்லுமலை வரை சென்ற அதிகாரிகளோடு போராட்டவடுக்களால் 8-10 வருடங்களாக பிரிந்திருந்த தமிழ் நண்பர்களை சந்திப்பதற்கு சிங்கள மக்களும் கூடவே சென்று தங்களது தமிழ் நண்பர்களை ஆரத்தழுவி உறவின் உணர்வுகளை மீட்டுக்கொண்டனர்.
புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளவாறான பல விடயங்கள் நடந்தேறாதிருக்கும் இவ வேளையிலும் கூட இடையிடையே மக்களின் நலனுக்காக வெளிப்படுகின்ற இவ வாறான செயற்பாடுகள் மனதிற்கு ஓரளவு திருப்தியளிப்பினும் இதனூடே நிரந்தர, உண்மை சமாதான ஒளிக்கீற்று தென்பட வேண்டும் என்பதே மக்களின் அவா.
-எஸ்.வி.ஆர். கஜன்
98 வரையிலான மதகுகளையும்
கொண்ட இவ் நெடுஞ்சாலை சடுதி
யாக மூடப்பட்டதனால் மட்டக்களப்பிற்கு வரும் மலையக மக்களும், மலையகத்திற்குச்
செல்லும் கிழக்கு பிராந்திய
மக்களும் வேறு வழியுூடாக
நெடுந்தூரம் சுற்றியே தங்களது
பயணத்தை தொடர
வேண்டியிருந்தது.
--------------------------------------------------------------------------------
புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளவாறான பல விடயங்கள் நடந்தேறாதிருக்கும் இவ்வேளையிலும் கூட இடையிடையே மக்களின் நலனுக்காக வெளிப்படுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் மனதிற்கு ஓரளவு திருப்தியளிப்பினும் இதனூடே நிரந்தர, உண்மை சமாதான ஒளிக்கீற்று தென்பட வேண்டும் என்பதே மக்களின் அவா.
--------------------------------------------------------------------------------
புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு இடம்பெற்றுள்ள ஏ-9(யு-9) பாதை திறப்பின் பின்னான மாற்றங்கள் என்பது ஒரு விதமான பதிவு.
இவ வுடன்படிக்கையின் பின்பு தென் தமிழீழமான கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள ஏ5 (யு-5)பாதை திறப்பானது வரலாற்றில் மற்றுமொரு பதிவினையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி இறுக்கத்திற்குள்ளாகியிருந்த மக்களுக்கு சற்றுத் தளர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கலடி - பதுளை வீதியான இந்த ஏ9 நெடுஞ்சாலை கடந்த 15ம் திகதி வைபவ hPதியாக இருதரப்பினரது ஒத்துழைப்பாலும் திறக்கப்பட்டிருப்பதானது, ஏ9 வீதி திறப்பின்போது வன்னி, யாழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்ததொரு உணர்வு வெளிப்பாடு. கிழக்கு பிராந்திய மலையக தமிழ், சிங்கள மக்களுக்கும் புூரிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தென் தமிழீழத்தையும் மலையகத்தையும் இணைக்கும் இந்நெடுஞ்சாலை 1995ம் ஆண்டிற்கு முன்னா இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் கிழக்கிற்கும் மலையகத்திற்குமிடையேயான தொடர்புகளில் சிரமமின்றி மக்கள் தங்களது கல்வி, சுகாதார, பொருண்மிய மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் பலவற்றையும் கிரமமாக மேற்கொண்டு வந்தனர்.
1995 மார்ச் மாதம் வீதி அபிவிருத்தி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமொன்று தொடர்பாக ஏற்பட்ட பிணக்கொன்றையடுத்து சிறீலங்கா படையினரால் செங்கலடி பதுளை வீதியான இந்த ஏ5 நெடுஞ்சாலை முற்றாக பொதுப் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.
இலங்கைத் தீவிலுள்ள 36 'ஏ' தர வீதிகளில் இதுவும் ஒன்று. வடகிழக்கு மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த வீதியான இவ வீதி முன்னர் ஆங்கிலேயரால் கிழக்கிலிருந்து நெல் உற்பத்தியினையும், மலையகத்திலிருந்து பெருந்தோட்டத்தையும் இணைக்கும் கூரிய நோக்கில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அரச படைகளின் இவ நெடுஞ்சாலை மூடப்பட்டதை அடுத்து, கிழக்கிற்கும் மலையகத்திற்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையை அடைந்தது.
இதனால் இப்பகுதி மக்கள் துரித தொடர்புகள் எதுவுமின்றி வாழ்வாதார அடித்தளம் சீரழிந்து பல துன்பங்களை கடந்த சில வருடங்களாக அனுபவித்து வந்தனர்.
இவ வீதியை தங்களின் புூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான படையினர் மரப்பாலம், கரடியனாறு போன்ற இடங்களில் மட்டுமல்லாது மேலும் பல இடங்களையும் ஆக்கிரமித்து முகாமிட்டிருந்தனர். இதனால் இப்பகுதியில் வாழ்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகள் விட்டு இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
35 பாலங்களையும், 98 வரையிலான மதகுகளையும் கொண்ட இவ நெடுஞ்சாலை சடுதியாக மூடப்பட்டதனால் மட்டக்களப்பிற்கு வரும் மலையக மக்களும், மலையகத்திற்குச் செல்லும் கிழக்கு பிராந்திய மக்களும் வேறு வழியுூடாக நெடுந்தூரரம் சுற்றியே தங்களது பயணத்தை தொடர வேண்டியிருந்தது.
ஏ9 சாலை மூடப்பட்டிருந்த போது தென்பகுதிக்கு செல்லும் வன்னி மக்கள் தம்பனையுூடாக சென்று வந்து அனுபவித்த அதே நிலையை ஏ5 சாலை மூடப்பட்டிருந்த போது மட்டு, மலையக மக்களும் அனுபவித்தே வந்துள்ளனர்.
இது வடக்கு தெற்கு தமிழீழ மக்களுக்கு சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்த வாழ்வியல் நசுக்கம் என்றே கூறலாம்.
மீனவ சமூகத்தினரை அதிகமாகக் கொண்டுள்ள மட்டக்களப்பிலிருந்து மீன் வளத்தை மலையகத்திற்கு கொண்டு செல்வதற்கும், மலையகத்தின் உற்பத்திப் பொருட்களான பிரதானமாக மரக்கறி வகைகளை கிழக்கிற்கு கொண்டு வருவதிலும் ஏற்பட்டிருந்த தடை பொருண்மிய பக்கங்களில் மக்களை மிகவும் நலிவடையவே செய்திருந்தது.
இவ வாறு பல்வேறு கோணங்களில் இன்னல்களை ஏற்படுத்தி வந்த இந்நெடுஞ்சாலை திறக்கப்படுவதற்கான உறுதிப்பாடுகள் இருதரப்பாலும் தெரிவிக்கப்பட்டு இரு பகுதிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதி வெடிகள் அகற்றும் பணி இரு தரப்பாலும் துரிதமாக செயற்படுத்தப்பட்டது.
இச் செய்தி அறிந்த மக்கள் திருப்தி அடைந்து இருதரப்பினருக்கும் நன்றி தெரிவித்து குதூகலித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு தமிழீழத்தில் நிகழ்ந்த இரண்டாவது 'ஏ' தர நெடுஞ்சாலை திறப்பினை அரசியலாளர்கள், சமூகவியலாளர்கள் பலரும் பாராட்டி இரு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ம் திகதி செங்கலடி கறுத்த பாலத்தில் 'ஏ' 5 வீதியின் வைபவாPதியான திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன், கொள்கை திட்டமிடல் அமைச்சின் ஆலோசகர் அலிசாகிர மௌலானா கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தென்னக்கோன், மட்டக்களப்பின் 23-3வது கட்டளை அதிகாரி அன்ரனீஸ், அரச அதிபர் சண்முகம் மற்றும் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நெடுஞ்சாலை திறப்போடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான புல்லுமலை வரை சென்ற அதிகாரிகளோடு போராட்டவடுக்களால் 8-10 வருடங்களாக பிரிந்திருந்த தமிழ் நண்பர்களை சந்திப்பதற்கு சிங்கள மக்களும் கூடவே சென்று தங்களது தமிழ் நண்பர்களை ஆரத்தழுவி உறவின் உணர்வுகளை மீட்டுக்கொண்டனர்.
புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளவாறான பல விடயங்கள் நடந்தேறாதிருக்கும் இவ வேளையிலும் கூட இடையிடையே மக்களின் நலனுக்காக வெளிப்படுகின்ற இவ வாறான செயற்பாடுகள் மனதிற்கு ஓரளவு திருப்தியளிப்பினும் இதனூடே நிரந்தர, உண்மை சமாதான ஒளிக்கீற்று தென்பட வேண்டும் என்பதே மக்களின் அவா.
-எஸ்.வி.ஆர். கஜன்

