06-22-2003, 08:58 AM
பதினெட்டு வருடங்களிற்கு முன்பு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக ஓட ஓட சிங்கள தேசம் விரட்டியது.
அன்று தமிழ்மக்கள் தமது பெரும் தேட்டங்களை இழந்து நின்றபோது தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் போர்க்குரல் எழுப்பி நின்றது. இதனால் தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் வன்முறை சார்ந்த போராட்டத்தை தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அத்தோடு தமிழ் மக்களை நோக்கி சிங்களதேசம் போரைத் தவிர வேறெந்த மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
--------------------------------------------------------------------------------
கட்டுநாயக்காவில் நடந்த
தாக்குதலோடு சிறீலங்காவிற்கு
ஏற்பட்ட பொருளாதார சீரழிவு என்பது இன்றுவரையான சமாதான முயற்சிக்கு அடிநாதமாக இருந்து வருகின்றது.
--------------------------------------------------------------------------------
கடந்த வருடம் யுூலை 25ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்தேறிய மிகப் பெரும் தாக்குதலின் ஒரு வருடம் புூர்த்தியாகியுள்ளது. இதேவேளை 1983ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறையின் பத்தொன்பதாவது ஆண்டும் புூர்த்தியாகின்றது.
சிறீலங்காவின் வரலாற்றில் 1983ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தின் விளைவு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கான நிரந்தர விடிவு ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பறைசாற்றியது.
இதேவேளை கடந்த வருடம் கட்டுநாயக்காவில் நடந்தேறிய தாக்குதல் சிங்கள தேசம் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பட்சத்தில் சிறீலங்கா நிரந்தரமாகவே அழிவிற்குள், அமிழ்ந்து போய் விடுமென்பதை பறைசாற்றிற்று.
பதினெட்டு வருடங்களிற்கு முன்பு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக ஓட ஓட சிங்கள தேசம் விரட்டியது.
அன்று தமிழ்மக்கள் தமது பெரும் தேட்டங்களை இழந்து நின்றபோது தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் போர்க்குரல் எழுப்பி நின்றது. இதனால் தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் வன்முறை சார்ந்த போராட்டத்தை தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அத்தோடு தமிழ் மக்களை நோக்கி சிங்களதேசம் போரைத் தவிர வேறெந்த மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
ஆனால் கடந்த வருடம் கட்டுநாயக்கா சர்வதேச மற்றும் ஒருங்கிணைந்த விமானப்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது ஒரு வித்தியாசமான இராணுவ அரசியல் நிலையை சிறீலங்காவில் தோற்றுவித்தது.
பெரும் இராணுவ வலயமாகவும் அதிமுக்கியத்துவம் மிக்க கேந்திர நிலையமாகவும் இருந்த இவ விமானத்தளத்தின்மீது குறிவைத்த தாக்குதலாளர்கள் இராணுவ இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு என்ற வகையில் மிக நுட்பமாக தாக்குதலை நடத்தி வியப்பிற்குள்ளாக்கினார்கள்.
அங்கு தரித்து நிறுத்தப்பட்டிருந்த இராணுவ விமானங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் சிறீலங்கா வான்படையின் தாக்குதிறனை செயலிழக்க வைக்கும் அளவிற்கு மாற்றியிருந்தார்கள்.
அத்தோடு வடக்கு கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சிறீலங்கா இராணுவத்திற்கு திகைப்புூட்டும் பெரும் சக்தியாக இருந்த வான்படை தான் சந்தித்த இழப்பின் மூலம் இராணுவத்தினர் மத்தியில் பெரும் உளவியல் மனச்சிதைவையும் தோற்றுவித்திருந்தது. மேலும் சிறீலங்காவில் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக எந்தப் பிரதேசமும் பாதுகாப்பாக இல்லை என்பதையும் சிறீலங்காப் படைத்தரப்பு எந்தவொரு பகுதியையும் பாதுகாக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவுற வெளிப்படுத்தியது.
இது இவ வாறிருக்க சிறீலங்காவின் தலைவாசலாகவும் வருவாயின் வரவேற்பு மையமாகவும் திகழ்ந்த இவ விமானத் தளத்தின் வாசலிலேயே பெரும் தீ மூண்டதனால் சிங்கள தேசத்தில் வருவாய்ச்சுரங்கம் யாவும் சுருங்கு நிலைக்கு மாறியது.
முதலீட்டாளர்களும் உல்லாசப் பயணிகளும் தலைதெறிக்க சிறீலங்காவை விட்டு எவ வளவு வேகமாக வெளியேற முடியுமோ அவ வளவு விரைவாக வெளியேறினார்கள். அதுவரை பெரும் போர் முழக்கம் கொட்டிய சிங்கள தேசம் தவிர்க்க முடியாது சமாதான சமிக்ஞைகளை வெளிப்படுத்தத் தொடங்கியது.
இங்கேதான் 1983ஆம் ஆண்டு யுூலை இனக்கலவரமும் 2001ஆம் ஆண்டு யுூலை கட்டுநாயக்கா விமானத்தள தாக்குதலும் ஒற்றுமையாகி இரு வேறுபட்ட முடிவுகளைத் தோற்றுவித்தது.
அன்று தமிழ் மக்களிற்குச சிங்கள தேசம் "போர் என்றால் போர்" என்ற ஒரே வழியைத் திறந்துவிட்டு தமிழ் மக்களைப் போரின் மூலம் வெல்லும் முயற்சியில் இறங்கியது.
ஆனால் சிங்களத் தேசம் எதிர்பார்த்ததற்கு மாறாக பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் 2001ஆம் ஆண்டு யுூலை 25ஆம் திகதி உலக நாடெங்கணும் அலைந்து திரிந்து பேச்சுக்கான வாசலைத் தேடவைத்தது.
ஓயாத அலைகள் மூன்றோடு இராணுவ வல்லமையை இழந்து போயிருந்த சிங்களத் தேசம் நோர்வேயின் அனுசரணையோடு தொடங்கப்பட்ட சமாதான நடவடிக்கையினை மேலெழுந்த வகையில் நோக்கிக்கொண்டிருந்தது.
கட்டுநாயக்காவில் நடந்த தாக்குதலோடு அதற்கு ஏற்பட்ட பொருளாதார சீரழிவு என்பது இன்றுவரையான சமாதான முயற்சிக்கு அடிநாதமாக இருந்து வருகின்றது. இதனையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் பொருளாதார நிலைகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கட்டுநாயக்கா தாக்குதலின் விளைவு குறித்தும் பேசினார்.
இவ வாறு யுூலை மாதம் நடந்தேறிய இவ விரு தாக்குதல்களும் சிறீலங்காவின் வரலாற்றில் பெரும் பதிவை தமதாக்கிக் கொண்டது
அத்தோடு கட்டுநாயக்கா விமானத்தள தாக்குதலானது சிறீலங்காவின் வான்படைக்குத் தனது படைவலுவைப் பெருக்க விமானக் கொள்வனவிற்கான தேவையை அவசியமாக்கிய அதேவேளை கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களை பாதுகாக்க வேண்டிய நிலையையும் தோற்றுவித்தது. இது சிங்கள தேசத்திற்கு முள்ளுக்குத்திய வலி பாதி முள்ளெடுத்த வலி மீதி என்கின்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது.
-சிறி.இந்திரகுமார்
அன்று தமிழ்மக்கள் தமது பெரும் தேட்டங்களை இழந்து நின்றபோது தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் போர்க்குரல் எழுப்பி நின்றது. இதனால் தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் வன்முறை சார்ந்த போராட்டத்தை தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அத்தோடு தமிழ் மக்களை நோக்கி சிங்களதேசம் போரைத் தவிர வேறெந்த மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
--------------------------------------------------------------------------------
கட்டுநாயக்காவில் நடந்த
தாக்குதலோடு சிறீலங்காவிற்கு
ஏற்பட்ட பொருளாதார சீரழிவு என்பது இன்றுவரையான சமாதான முயற்சிக்கு அடிநாதமாக இருந்து வருகின்றது.
--------------------------------------------------------------------------------
கடந்த வருடம் யுூலை 25ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்தேறிய மிகப் பெரும் தாக்குதலின் ஒரு வருடம் புூர்த்தியாகியுள்ளது. இதேவேளை 1983ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறையின் பத்தொன்பதாவது ஆண்டும் புூர்த்தியாகின்றது.
சிறீலங்காவின் வரலாற்றில் 1983ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தின் விளைவு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கான நிரந்தர விடிவு ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பறைசாற்றியது.
இதேவேளை கடந்த வருடம் கட்டுநாயக்காவில் நடந்தேறிய தாக்குதல் சிங்கள தேசம் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத பட்சத்தில் சிறீலங்கா நிரந்தரமாகவே அழிவிற்குள், அமிழ்ந்து போய் விடுமென்பதை பறைசாற்றிற்று.
பதினெட்டு வருடங்களிற்கு முன்பு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்து அவர்களை ஏதிலிகளாக ஓட ஓட சிங்கள தேசம் விரட்டியது.
அன்று தமிழ்மக்கள் தமது பெரும் தேட்டங்களை இழந்து நின்றபோது தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் போர்க்குரல் எழுப்பி நின்றது. இதனால் தமிழ்இளைஞர்களும் யுவதிகளும் வன்முறை சார்ந்த போராட்டத்தை தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அத்தோடு தமிழ் மக்களை நோக்கி சிங்களதேசம் போரைத் தவிர வேறெந்த மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.
ஆனால் கடந்த வருடம் கட்டுநாயக்கா சர்வதேச மற்றும் ஒருங்கிணைந்த விமானப்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது ஒரு வித்தியாசமான இராணுவ அரசியல் நிலையை சிறீலங்காவில் தோற்றுவித்தது.
பெரும் இராணுவ வலயமாகவும் அதிமுக்கியத்துவம் மிக்க கேந்திர நிலையமாகவும் இருந்த இவ விமானத்தளத்தின்மீது குறிவைத்த தாக்குதலாளர்கள் இராணுவ இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு என்ற வகையில் மிக நுட்பமாக தாக்குதலை நடத்தி வியப்பிற்குள்ளாக்கினார்கள்.
அங்கு தரித்து நிறுத்தப்பட்டிருந்த இராணுவ விமானங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் சிறீலங்கா வான்படையின் தாக்குதிறனை செயலிழக்க வைக்கும் அளவிற்கு மாற்றியிருந்தார்கள்.
அத்தோடு வடக்கு கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சிறீலங்கா இராணுவத்திற்கு திகைப்புூட்டும் பெரும் சக்தியாக இருந்த வான்படை தான் சந்தித்த இழப்பின் மூலம் இராணுவத்தினர் மத்தியில் பெரும் உளவியல் மனச்சிதைவையும் தோற்றுவித்திருந்தது. மேலும் சிறீலங்காவில் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக எந்தப் பிரதேசமும் பாதுகாப்பாக இல்லை என்பதையும் சிறீலங்காப் படைத்தரப்பு எந்தவொரு பகுதியையும் பாதுகாக்கக்கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவுற வெளிப்படுத்தியது.
இது இவ வாறிருக்க சிறீலங்காவின் தலைவாசலாகவும் வருவாயின் வரவேற்பு மையமாகவும் திகழ்ந்த இவ விமானத் தளத்தின் வாசலிலேயே பெரும் தீ மூண்டதனால் சிங்கள தேசத்தில் வருவாய்ச்சுரங்கம் யாவும் சுருங்கு நிலைக்கு மாறியது.
முதலீட்டாளர்களும் உல்லாசப் பயணிகளும் தலைதெறிக்க சிறீலங்காவை விட்டு எவ வளவு வேகமாக வெளியேற முடியுமோ அவ வளவு விரைவாக வெளியேறினார்கள். அதுவரை பெரும் போர் முழக்கம் கொட்டிய சிங்கள தேசம் தவிர்க்க முடியாது சமாதான சமிக்ஞைகளை வெளிப்படுத்தத் தொடங்கியது.
இங்கேதான் 1983ஆம் ஆண்டு யுூலை இனக்கலவரமும் 2001ஆம் ஆண்டு யுூலை கட்டுநாயக்கா விமானத்தள தாக்குதலும் ஒற்றுமையாகி இரு வேறுபட்ட முடிவுகளைத் தோற்றுவித்தது.
அன்று தமிழ் மக்களிற்குச சிங்கள தேசம் "போர் என்றால் போர்" என்ற ஒரே வழியைத் திறந்துவிட்டு தமிழ் மக்களைப் போரின் மூலம் வெல்லும் முயற்சியில் இறங்கியது.
ஆனால் சிங்களத் தேசம் எதிர்பார்த்ததற்கு மாறாக பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் 2001ஆம் ஆண்டு யுூலை 25ஆம் திகதி உலக நாடெங்கணும் அலைந்து திரிந்து பேச்சுக்கான வாசலைத் தேடவைத்தது.
ஓயாத அலைகள் மூன்றோடு இராணுவ வல்லமையை இழந்து போயிருந்த சிங்களத் தேசம் நோர்வேயின் அனுசரணையோடு தொடங்கப்பட்ட சமாதான நடவடிக்கையினை மேலெழுந்த வகையில் நோக்கிக்கொண்டிருந்தது.
கட்டுநாயக்காவில் நடந்த தாக்குதலோடு அதற்கு ஏற்பட்ட பொருளாதார சீரழிவு என்பது இன்றுவரையான சமாதான முயற்சிக்கு அடிநாதமாக இருந்து வருகின்றது. இதனையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் பொருளாதார நிலைகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது கட்டுநாயக்கா தாக்குதலின் விளைவு குறித்தும் பேசினார்.
இவ வாறு யுூலை மாதம் நடந்தேறிய இவ விரு தாக்குதல்களும் சிறீலங்காவின் வரலாற்றில் பெரும் பதிவை தமதாக்கிக் கொண்டது
அத்தோடு கட்டுநாயக்கா விமானத்தள தாக்குதலானது சிறீலங்காவின் வான்படைக்குத் தனது படைவலுவைப் பெருக்க விமானக் கொள்வனவிற்கான தேவையை அவசியமாக்கிய அதேவேளை கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களை பாதுகாக்க வேண்டிய நிலையையும் தோற்றுவித்தது. இது சிங்கள தேசத்திற்கு முள்ளுக்குத்திய வலி பாதி முள்ளெடுத்த வலி மீதி என்கின்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது.
-சிறி.இந்திரகுமார்

