06-22-2003, 08:57 AM
தலைவரின் முன் போன இவர் தயங்கித் தயங்கி அமர்ந்துகொண்டார். இப்போது தலைவரின் முன்னிருப்பது 1990 இல் புதிதாகப் பொறுப்பேற்ற பொறுப்பாளரல்ல. எண்ணற்ற தடவைகள் தலைவரருகே இருந்து அவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட, சமயாசமயத்தில் தலைவரோடு தன் கருத்துகளைப் பரிமாறுகின்ற தளபதி பெரும்பாலான நேரங்களில் எங்களோடு தந்தையாக நடந்து கொள்கின்ற தலைவர், அன்று தலைவராகவே நடந்துகொண்டார்.
--------------------------------------------------------------------------------
தன் குஞ்சு பொன் குஞ்சு
காட்டிலே உருமறைப்புப் பயிற்சியில் பெண் போராளிகள் நன்றாகச் செயற்பட்டிருந்தார்கள். தலைவருக்குத் திருப்தியாக இருந்தது. அவர்களுக்குப் பரிசாக கண்டோஸ் கொடுத்துவிட்டு, அவர்களின் திறமையைப் பற்றிக் கேணல் கிட்டு அவர்களிடம் குறிப்பிட்டார்.
பெண் போராளிகளின் செயற்திறனைத் தாம் பார்க்க விரும்புவதாக கிட்டண்ணா கேட்டார். தலைவர் சம்மதித்துவிட்டார். கிட்டண்ணாவின் தந்திரங்களை நன்கு அறிந்திருந்த தலைவர் பெண் போராளிகளைக் கூப்பிட்டு, "கிட்டன் வந்து பாக்கப்போறான், நல்லா உருமறைப்புச் செய்யவேணும்" என்று உற்சாகப்படுத்தினார். "அவன் தன்ரை ஆக்களைவிட்டு நீங்கள் உருமறைப்புச் செய்யிறதையும் பார்ப்பான் கவனம்" என்றார்.
இவர்களில் ஆறுபேர் மூன்று அணிகளாகப் பிரிந்து உருமறைப்புடன் உரிய இடங்களில் மறைந்தபின், தானே நேரடியாக வந்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். "கிட்டன் பெரிய விளையாட்டெல்லாம் காட்டுவான். காணாவிட்டாலும் கண்ட மாதிரி. 'கண்டுவிட்டன், கண்டுவிட்டன்' எண்டெல்லாம் சொல்லுவான். நீங்கள் ஏமாந்து போய் அசையக்கூடாது" என்றெல்லாம் எச்சரித்துவிட்டு, போய் கிட்டண்ணையைக் கூட்டிவந்தார்.
கிட்டண்ணா வந்து பார்த்தார். தலைவரும் பக்கத்தில் நின்றார். அங்குலம் அங்குலமாக ஆராய்ந்த கிட்டண்ணா ஒரு அணியை மட்டும் இனங்கண்டார். மற்றைய இரண்டு அணிகளையும் காணவே முடியவில்லை.
பெண் போராளிகளின் திறமையைக் கிட்டண்ணா பாராட்டினார். கிட்டண்ணாவின் கூர்மையான விழிகளையே இவர்கள் மடக்கிவிட்டத்தில் தலைவர் சந்தோஸமடைந்தார்.
அன்றும் இன்றும்
1990 ஆம் ஆண்டு, இந்திய இராணுவம் தான் வந்த வேலையை முடிக்க முடியாமல் புறப்பட்ட இடத்துக்கே மூட்டை, முடிச்சுகளுடன் போய்ச் சேர்ந்து விட்டது. காட்டுக்குள் தம்மைப் பலப்படுத்திக்கொண்ட புலிகள்படை நாட்டுக்குள் அணிவகுத்து வந்தது. உயரத்தூக்கிக் கட்டிய பின்லோடும், வரிச்சீருடையோடும், இராணுவச் சப்பாத்துக்களோடும், ஆயுதத்தைச் சுமந்தவாறு நிமிர்ந்து நடந்து வந்த தன் மகளை, மருமகளை, பெறாமகளை, தங்கையை, ஒன்றாகப் படித்தவளை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சமூகம் விழி விரித்துப் பார்த்தது.
மிக முக்கிய இராணுவத தளங்களைச் சுற்றி விடுதலைப் புலிகள் மகளிர் படையணி தனது காவல் நிலைகளை அமைத்துக்கொண்டது. காட்டிலே தன் கண்ணெதிரே படிப்படியாக வளர்ந்த ஒரு பெண் போராளியை, பலாலியில் பெண்போராளிகள் நிலைகொண்டிருந்த பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். பாரிய பொறுப்பு, புதிய பொறுப்பு சின்னச் சின்ன ஐயங்களையும் தலைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு படைகளை வழிநடத்தினார் அந்தப் பொறுப்பாளர்.
அன்று இவர்கள் தமது பகுதியால் ஒரு முன்னேற்ற நடவடிக்கையைச் செய்திருந்தார்கள். சண்டை முடிந்தது. வீரச்சாவடைந்தோரின் வித்துடல்கள், காயமடைந்தவர்கள் எல்லோரும் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். அணிகளை மீளமைத்து நிலைப்படுத்திய அந்தப் பொறுப்பாளர் சில நாட்களின் பின் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக மருத்துவ வீட்டுக்குப் போனபோது, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. காயமடைந்ததாக இவர் கருதிக்கொண்டிருந்த வீரவேங்கை றெபேக்காவை காணவில்லை. மீளமைக்கப்பட்ட அணியிலும் இல்லை, வீரச்சாவடைந்தோரிலும் இல்லை என்பதால் றெபேக்கா காயமடைந்திருக்க வேண்டும் என்றுதான் அவர் இவ வளவு நாளும் நினைத்திருந்தார். உடனேயே பலாலிக்குத் திரும்பி சண்டையில் பங்குகொண்டவர்களை விசாரித்தார்.
தாம் சண்டைபிடித்தபோது றெபேக்காவின் வித்துடலைக் கடந்துபோனதாகச் சிலர் தெரிவித்தனர். றெபேக்காவின் வித்துடல் எதிரிப் பகுதிக்குள் விடுபட்டுவிட்டது என்ற உண்மை இப்போதுதான் விளங்கியது. நடந்தவற்றை தலைவரிடம் நேரடியாகச் சொல்லவேண்டும். விடயத்தை அறிந்த ஆண்போராளிகளின் பொறுப்பாளர் ஒருவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இவரிடம் விபரித்தார்.
"இப்படியேதும் நடந்தால் அண்ணைக்குக்கிட்ட ஒருதரும் போகேலாது. இண்டைக்கு நீங்கள் சரி" அனுபவம் பேசியது.
தலைவரின் முன் அமர்ந்துகொண்ட இவர் தயங்கித்தயங்கி விடயத்தைச் சொல்லி முடித்துவிட்டு, பதட்டத்துடன் இருந்தார். சம்பவம் எப்படி நடந்தது. எப்படித் தெரியும் என்று நிதானமாக இவரிடம் கேட்டறிந்து கொண்ட தலைவர் "உங்களுக்கு இது புதிது. ஆனால் சண்டைகளில் இது நடக்கக்கூடிய விடயம்தான்" என று ஆரம்பித்து, சண்டை நடந்தபின் ஒரு பொறுப்பாளர் என்ன, என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் ஆலோசனை சொன்னபின், இனி இப்படிப் பிழை நடக்கக்கூடாது என்று கூறினார். நடந்த தவறுக்குப் பரிகாரமாக இவரையே வீரவேங்கை றெபேக்காவின் வீட்டுக்குப்போய், குடும்பத்தவர்களுக்கு நடந்ததை விளக்கி, வீரச்சாவுச் செய்தியைத் தெரியப்படுத்துமாறு பணித்தார். அன்று எங்களின் தலைவர் ஒரு தந்தையாக நடந்துகொண்டார்.
அப்போது 2000 ஆம் ஆண்டு அன்று சண்டையணி ஒன்றின் பொறுப்பாளராக இருந்தவர் இன்று படையணியொன்றின் சிறப்புத் தளபதி. ஒருநாள் அதிகாலையில் இவரது படையணியைச் சேர்ந்த நால்வர் ஒரே காப்பரணில் கவனக்குறைவாக நின்றதால், எதிரியின் திடீர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். நடந்தது மாபெரும் தவறு, தலைவரிடம் நேரடியாகச் சொல்லவேண்டும்.
தலைவரின் முன் போன இவர் தயங்கித் தயங்கி அமர்ந்துகொண்டார். இப்போது தலைவரின் முன்னிருப்பது 1990 இல் புதிதாகப் பொறுப்பேற்ற பொறுப்பாளரல்ல. எண்ணற்ற தடவைகள் தலைவரருகே இருந்து அவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட, சமயாசமயத்தில் தலைவரோடு தன் கருத்துகளைப் பரிமாறுகின்ற தளபதி. பெரும்பாலான நேரங்களில் எங்களோடு தந்தையாக நடந்து கொள்கின்ற தலைவர், அன்று தலைவராகவே
நடந்துகொண்டார்.
(தொடரும்)
- மலைமகள்
--------------------------------------------------------------------------------
தன் குஞ்சு பொன் குஞ்சு
காட்டிலே உருமறைப்புப் பயிற்சியில் பெண் போராளிகள் நன்றாகச் செயற்பட்டிருந்தார்கள். தலைவருக்குத் திருப்தியாக இருந்தது. அவர்களுக்குப் பரிசாக கண்டோஸ் கொடுத்துவிட்டு, அவர்களின் திறமையைப் பற்றிக் கேணல் கிட்டு அவர்களிடம் குறிப்பிட்டார்.
பெண் போராளிகளின் செயற்திறனைத் தாம் பார்க்க விரும்புவதாக கிட்டண்ணா கேட்டார். தலைவர் சம்மதித்துவிட்டார். கிட்டண்ணாவின் தந்திரங்களை நன்கு அறிந்திருந்த தலைவர் பெண் போராளிகளைக் கூப்பிட்டு, "கிட்டன் வந்து பாக்கப்போறான், நல்லா உருமறைப்புச் செய்யவேணும்" என்று உற்சாகப்படுத்தினார். "அவன் தன்ரை ஆக்களைவிட்டு நீங்கள் உருமறைப்புச் செய்யிறதையும் பார்ப்பான் கவனம்" என்றார்.
இவர்களில் ஆறுபேர் மூன்று அணிகளாகப் பிரிந்து உருமறைப்புடன் உரிய இடங்களில் மறைந்தபின், தானே நேரடியாக வந்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். "கிட்டன் பெரிய விளையாட்டெல்லாம் காட்டுவான். காணாவிட்டாலும் கண்ட மாதிரி. 'கண்டுவிட்டன், கண்டுவிட்டன்' எண்டெல்லாம் சொல்லுவான். நீங்கள் ஏமாந்து போய் அசையக்கூடாது" என்றெல்லாம் எச்சரித்துவிட்டு, போய் கிட்டண்ணையைக் கூட்டிவந்தார்.
கிட்டண்ணா வந்து பார்த்தார். தலைவரும் பக்கத்தில் நின்றார். அங்குலம் அங்குலமாக ஆராய்ந்த கிட்டண்ணா ஒரு அணியை மட்டும் இனங்கண்டார். மற்றைய இரண்டு அணிகளையும் காணவே முடியவில்லை.
பெண் போராளிகளின் திறமையைக் கிட்டண்ணா பாராட்டினார். கிட்டண்ணாவின் கூர்மையான விழிகளையே இவர்கள் மடக்கிவிட்டத்தில் தலைவர் சந்தோஸமடைந்தார்.
அன்றும் இன்றும்
1990 ஆம் ஆண்டு, இந்திய இராணுவம் தான் வந்த வேலையை முடிக்க முடியாமல் புறப்பட்ட இடத்துக்கே மூட்டை, முடிச்சுகளுடன் போய்ச் சேர்ந்து விட்டது. காட்டுக்குள் தம்மைப் பலப்படுத்திக்கொண்ட புலிகள்படை நாட்டுக்குள் அணிவகுத்து வந்தது. உயரத்தூக்கிக் கட்டிய பின்லோடும், வரிச்சீருடையோடும், இராணுவச் சப்பாத்துக்களோடும், ஆயுதத்தைச் சுமந்தவாறு நிமிர்ந்து நடந்து வந்த தன் மகளை, மருமகளை, பெறாமகளை, தங்கையை, ஒன்றாகப் படித்தவளை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு சமூகம் விழி விரித்துப் பார்த்தது.
மிக முக்கிய இராணுவத தளங்களைச் சுற்றி விடுதலைப் புலிகள் மகளிர் படையணி தனது காவல் நிலைகளை அமைத்துக்கொண்டது. காட்டிலே தன் கண்ணெதிரே படிப்படியாக வளர்ந்த ஒரு பெண் போராளியை, பலாலியில் பெண்போராளிகள் நிலைகொண்டிருந்த பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர். பாரிய பொறுப்பு, புதிய பொறுப்பு சின்னச் சின்ன ஐயங்களையும் தலைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு படைகளை வழிநடத்தினார் அந்தப் பொறுப்பாளர்.
அன்று இவர்கள் தமது பகுதியால் ஒரு முன்னேற்ற நடவடிக்கையைச் செய்திருந்தார்கள். சண்டை முடிந்தது. வீரச்சாவடைந்தோரின் வித்துடல்கள், காயமடைந்தவர்கள் எல்லோரும் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். அணிகளை மீளமைத்து நிலைப்படுத்திய அந்தப் பொறுப்பாளர் சில நாட்களின் பின் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக மருத்துவ வீட்டுக்குப் போனபோது, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. காயமடைந்ததாக இவர் கருதிக்கொண்டிருந்த வீரவேங்கை றெபேக்காவை காணவில்லை. மீளமைக்கப்பட்ட அணியிலும் இல்லை, வீரச்சாவடைந்தோரிலும் இல்லை என்பதால் றெபேக்கா காயமடைந்திருக்க வேண்டும் என்றுதான் அவர் இவ வளவு நாளும் நினைத்திருந்தார். உடனேயே பலாலிக்குத் திரும்பி சண்டையில் பங்குகொண்டவர்களை விசாரித்தார்.
தாம் சண்டைபிடித்தபோது றெபேக்காவின் வித்துடலைக் கடந்துபோனதாகச் சிலர் தெரிவித்தனர். றெபேக்காவின் வித்துடல் எதிரிப் பகுதிக்குள் விடுபட்டுவிட்டது என்ற உண்மை இப்போதுதான் விளங்கியது. நடந்தவற்றை தலைவரிடம் நேரடியாகச் சொல்லவேண்டும். விடயத்தை அறிந்த ஆண்போராளிகளின் பொறுப்பாளர் ஒருவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இவரிடம் விபரித்தார்.
"இப்படியேதும் நடந்தால் அண்ணைக்குக்கிட்ட ஒருதரும் போகேலாது. இண்டைக்கு நீங்கள் சரி" அனுபவம் பேசியது.
தலைவரின் முன் அமர்ந்துகொண்ட இவர் தயங்கித்தயங்கி விடயத்தைச் சொல்லி முடித்துவிட்டு, பதட்டத்துடன் இருந்தார். சம்பவம் எப்படி நடந்தது. எப்படித் தெரியும் என்று நிதானமாக இவரிடம் கேட்டறிந்து கொண்ட தலைவர் "உங்களுக்கு இது புதிது. ஆனால் சண்டைகளில் இது நடக்கக்கூடிய விடயம்தான்" என று ஆரம்பித்து, சண்டை நடந்தபின் ஒரு பொறுப்பாளர் என்ன, என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் ஆலோசனை சொன்னபின், இனி இப்படிப் பிழை நடக்கக்கூடாது என்று கூறினார். நடந்த தவறுக்குப் பரிகாரமாக இவரையே வீரவேங்கை றெபேக்காவின் வீட்டுக்குப்போய், குடும்பத்தவர்களுக்கு நடந்ததை விளக்கி, வீரச்சாவுச் செய்தியைத் தெரியப்படுத்துமாறு பணித்தார். அன்று எங்களின் தலைவர் ஒரு தந்தையாக நடந்துகொண்டார்.
அப்போது 2000 ஆம் ஆண்டு அன்று சண்டையணி ஒன்றின் பொறுப்பாளராக இருந்தவர் இன்று படையணியொன்றின் சிறப்புத் தளபதி. ஒருநாள் அதிகாலையில் இவரது படையணியைச் சேர்ந்த நால்வர் ஒரே காப்பரணில் கவனக்குறைவாக நின்றதால், எதிரியின் திடீர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். நடந்தது மாபெரும் தவறு, தலைவரிடம் நேரடியாகச் சொல்லவேண்டும்.
தலைவரின் முன் போன இவர் தயங்கித் தயங்கி அமர்ந்துகொண்டார். இப்போது தலைவரின் முன்னிருப்பது 1990 இல் புதிதாகப் பொறுப்பேற்ற பொறுப்பாளரல்ல. எண்ணற்ற தடவைகள் தலைவரருகே இருந்து அவர் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட, சமயாசமயத்தில் தலைவரோடு தன் கருத்துகளைப் பரிமாறுகின்ற தளபதி. பெரும்பாலான நேரங்களில் எங்களோடு தந்தையாக நடந்து கொள்கின்ற தலைவர், அன்று தலைவராகவே
நடந்துகொண்டார்.
(தொடரும்)
- மலைமகள்

