06-22-2003, 08:56 AM
கரும்புலிகள் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்
தமிழீழத் தேசியத் தலைவர்
திரு.வே. பிரபாகரன் அவர்கள்
--------------------------------------------------------------------------------
நாம் இன அழிவை எதிர்கொள்ளும் ஒரு சிறிய தேசிய சமுதாயம். எம
க்கு குரல் கொடுக்கவோ, கை கொடுக்கவோ உலகில் எவரும் இல்லை, நாம் தனித்து நிற்கிறோம். எமது சொந்தக் கால்களில் நிலைத்து நிற்கிறோம். பலம் வாய்ந்த எதிரிகள் எம்மைச் சூழ்ந்து நிற்கின்றார்கள். எம்மை ஒழித்துக்கட்ட உறுதிபுூண்டு நிற்கின்றார்கள். முழு உலகமே ஒன்று திரண்டு எமது எதிரிக்கு முண்டு கொடுத்து வருகிறது. இந்த இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலையில் நிர்க்
கதியாக நிற்கும் ஒரு மக்கள் சமூகம் என்ற hPதியில், நாம் எம்மாலான சகல வழிகளையும் கையாண்டு. எமது சக்திகள் அனைத்தையும் பிரயோகித்து ஒரு தற்காப்புப் போரை நிகழ்த்தவேண்டும். இந்தத் தேவையை, நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. அல்லாத பட்சத்தில் நாம் இனவாரியாக அழிந்து போவதைத் தவிர்க்க முடியாது.
பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள், எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
கரும்புலிகள் வித்தியாசமானவர்கள், அபுூர்வமான பிறவிகள், இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தையும் காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.
இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ வொருவனும் எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே காதலிக்கிறான். தனது உயிரையே நேசிக்கிறான். உயிர் வாழவேண்டும் என்று துடிக்கிறான். மனிதன் உயிரை நேசிப்பதால். உயிர்வாழ விரும்புவதால் உயிர் அற்றுப்போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு, இயற்கையின் நியதி.
ஆனால் ஒரு கரும்புலி வீரன் தன்னை விட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்கு அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது, நல்வாழ்வு பற்றியது மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெற்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தைத் தழுவிக்கொள்ளும் ஒவ வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ளவேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் வீரம் தோன்றுகிறது, துணிவும் பிறக்கிறது, இந்த மனவியல் உண்மையை நான் ஆரம்பத்திலிருந்தே எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு, கோழைத்தனத்தின் தோழன், உறுதிக்கு எதிரி, பயங்களுக்கு எல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான் அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலைபெறுகிறான்.
கண்ணீர் சொரியும் ஒவ வொரு விழியும்
உங்களையே காணத் துடிக்கின்றது
உடலோடு வெடிசுமந்து
படகோடு குண்டு சுமந்து
கடலும் வானமும் பிளக்க
மரணமே மண்டியிட தேதி குறித்து
ஊமையாய் உலாவும் உறவே
உங்களால் மட்டும்
எப்படி முடிந்தது
மரணத்தைச் சுமக்க
மரணத்தையே உருக்கும் மரணம்
உங்களிடம் மட்டும்தான்
மரணத்தையே தூக்கிலேற்றி
மரண தேவனுக்கு ஜெனனம் பற்றி
தீர்ப்புக் கூறும் உத்தமரும் நீங்களே
வெந்து வெந்து மனம் கசிய
வெளிவரா வார்த்தைகளுக்குள்
பிரிந்து போன பொழுதுகள்
விட்டுவிலகாது எப்போதும்
உறுதியளித்த இறுதிமொழியும்
கண்ணிமை துச்சாது எமை
இறுதியாக பார்த்த இறுதிப் பார்வையும்
கையசைத்த கடைசிப் பொழுதும்
உங்கள் இறுதிப் பயணமும்
எம் விழிகளுக்கு விளக்காய்
க.சங்கீதன்
அக்கினிக் கடலில் நீந்திடும் தென்றல்
ஆதிக்க நதியில் பாய்ந்திடும் மின்னல்
முக்கனிச் சாறில் மூழ்கிய வெள்ளம்
மூண்டிடும் வேள்வியில் தோன்றிய உள்ளம்
சத்தியம் தர்மம் வென்றிட முளைத்தது
சாந்தியும் நீதியும் தந்திட உழைத்தது
வெற்றியின் இறுதி நாமென மகிழ்ந்தது
வேங்கையின் உறுதி தானென மறைந்தது
மில்லரின் நிறைவு மேகத்தைக் குட்டும்
மின்னிடும் விழிகள் சோகத்தை காட்டும்
செல்வங்கள் சுமந்தவை விடுதலைக் கோபுரங்கள்
திசைகளை அமைத்தன வெற்றியின் ஆவணங்கள்
கரும்புலி நதிகள் நாளும் பாய்கின்றன
கறுத்தப் புள்ளிகள் நாட்டில் சாய்கின்றன
வரும்பகை திரும்பி கடலில் மாய்கின்றன
வளர்பிறை தழிழர் வானில் விளைகின்றன.
நெல்லை மகேஸ்வரி
தமிழீழத் தேசியத் தலைவர்
திரு.வே. பிரபாகரன் அவர்கள்
--------------------------------------------------------------------------------
நாம் இன அழிவை எதிர்கொள்ளும் ஒரு சிறிய தேசிய சமுதாயம். எம
க்கு குரல் கொடுக்கவோ, கை கொடுக்கவோ உலகில் எவரும் இல்லை, நாம் தனித்து நிற்கிறோம். எமது சொந்தக் கால்களில் நிலைத்து நிற்கிறோம். பலம் வாய்ந்த எதிரிகள் எம்மைச் சூழ்ந்து நிற்கின்றார்கள். எம்மை ஒழித்துக்கட்ட உறுதிபுூண்டு நிற்கின்றார்கள். முழு உலகமே ஒன்று திரண்டு எமது எதிரிக்கு முண்டு கொடுத்து வருகிறது. இந்த இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலையில் நிர்க்
கதியாக நிற்கும் ஒரு மக்கள் சமூகம் என்ற hPதியில், நாம் எம்மாலான சகல வழிகளையும் கையாண்டு. எமது சக்திகள் அனைத்தையும் பிரயோகித்து ஒரு தற்காப்புப் போரை நிகழ்த்தவேண்டும். இந்தத் தேவையை, நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. அல்லாத பட்சத்தில் நாம் இனவாரியாக அழிந்து போவதைத் தவிர்க்க முடியாது.
பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள், எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
கரும்புலிகள் வித்தியாசமானவர்கள், அபுூர்வமான பிறவிகள், இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தையும் காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.
இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ வொருவனும் எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே காதலிக்கிறான். தனது உயிரையே நேசிக்கிறான். உயிர் வாழவேண்டும் என்று துடிக்கிறான். மனிதன் உயிரை நேசிப்பதால். உயிர்வாழ விரும்புவதால் உயிர் அற்றுப்போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு, இயற்கையின் நியதி.
ஆனால் ஒரு கரும்புலி வீரன் தன்னை விட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்கு அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது, நல்வாழ்வு பற்றியது மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெற்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தைத் தழுவிக்கொள்ளும் ஒவ வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ளவேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் வீரம் தோன்றுகிறது, துணிவும் பிறக்கிறது, இந்த மனவியல் உண்மையை நான் ஆரம்பத்திலிருந்தே எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.
பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு, கோழைத்தனத்தின் தோழன், உறுதிக்கு எதிரி, பயங்களுக்கு எல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான் அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலைபெறுகிறான்.
கண்ணீர் சொரியும் ஒவ வொரு விழியும்
உங்களையே காணத் துடிக்கின்றது
உடலோடு வெடிசுமந்து
படகோடு குண்டு சுமந்து
கடலும் வானமும் பிளக்க
மரணமே மண்டியிட தேதி குறித்து
ஊமையாய் உலாவும் உறவே
உங்களால் மட்டும்
எப்படி முடிந்தது
மரணத்தைச் சுமக்க
மரணத்தையே உருக்கும் மரணம்
உங்களிடம் மட்டும்தான்
மரணத்தையே தூக்கிலேற்றி
மரண தேவனுக்கு ஜெனனம் பற்றி
தீர்ப்புக் கூறும் உத்தமரும் நீங்களே
வெந்து வெந்து மனம் கசிய
வெளிவரா வார்த்தைகளுக்குள்
பிரிந்து போன பொழுதுகள்
விட்டுவிலகாது எப்போதும்
உறுதியளித்த இறுதிமொழியும்
கண்ணிமை துச்சாது எமை
இறுதியாக பார்த்த இறுதிப் பார்வையும்
கையசைத்த கடைசிப் பொழுதும்
உங்கள் இறுதிப் பயணமும்
எம் விழிகளுக்கு விளக்காய்
க.சங்கீதன்
அக்கினிக் கடலில் நீந்திடும் தென்றல்
ஆதிக்க நதியில் பாய்ந்திடும் மின்னல்
முக்கனிச் சாறில் மூழ்கிய வெள்ளம்
மூண்டிடும் வேள்வியில் தோன்றிய உள்ளம்
சத்தியம் தர்மம் வென்றிட முளைத்தது
சாந்தியும் நீதியும் தந்திட உழைத்தது
வெற்றியின் இறுதி நாமென மகிழ்ந்தது
வேங்கையின் உறுதி தானென மறைந்தது
மில்லரின் நிறைவு மேகத்தைக் குட்டும்
மின்னிடும் விழிகள் சோகத்தை காட்டும்
செல்வங்கள் சுமந்தவை விடுதலைக் கோபுரங்கள்
திசைகளை அமைத்தன வெற்றியின் ஆவணங்கள்
கரும்புலி நதிகள் நாளும் பாய்கின்றன
கறுத்தப் புள்ளிகள் நாட்டில் சாய்கின்றன
வரும்பகை திரும்பி கடலில் மாய்கின்றன
வளர்பிறை தழிழர் வானில் விளைகின்றன.
நெல்லை மகேஸ்வரி

