11-01-2005, 10:40 AM
சினிமா பின்னணி பாடகி லீலா மரணம்
சென்னை, நவ. 1-
பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.
மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற ``வாராயோ வெண்ணிலாவே'', வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற ``கண்ணும் கண்ணும் கலந்து'', ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற ``அருள் தரும் தேவ மாதாவே'' ஆகிய பாடல்கள் உட்பட ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா. 76 வயதான இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார். லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.
சென்னை, நவ. 1-
பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.
மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற ``வாராயோ வெண்ணிலாவே'', வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற ``கண்ணும் கண்ணும் கலந்து'', ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற ``அருள் தரும் தேவ மாதாவே'' ஆகிய பாடல்கள் உட்பட ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா. 76 வயதான இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார். லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

