06-22-2003, 08:53 AM
ச
மூக மாற்றங்களை தெறிக்கும் (சுநகடநஉவ) ஒரு ஊடகமாகவே அரங்கு மனித வரலாற்றில் பதிவாகி வந்திருக்கிறது. சேக்ஸ்பியர், ஹென்றிக்கிப்சன், அன்ரன் செக்கொவ , பெணாட்ஸா என உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்கள் பலரின் நாடகங்களும் இதற்கு சான்றாகியுள்ளன.
ஈழத்திலும் எமது மக்களின் கற்பனை ஆற்றலையும், கவித்துவத்திறனையும், இசை வளத்தையும், சமூகம் மற்றும் சமயம் சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் படம் பிடித்துக் காட்டும் சாதனமாக விளங்கியது நாடகங்களே. பள்ளு, குறவஞ்சி, அம்மானை போன்ற இலக்கிய வடிவங்களின் ஊற்றுக் கண்களாக நாடகங்களே விளங்கின.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி (ஊiநெஅயவழபசயிhல) எனும் புதிய சலனப்படக் கலைக்கு வழி திறந்ததோடு, நாடகம் கிராமப்புற பாமர மக்களின் கலை வடிவமாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் 1956களில் எழுந்த இலங்கை தேசிய எழுச்சிகளுடனான போக்கில் பேராசிரியர் சரத்சந்திரவின் 'மனமே' 'சிங்கபாகு' போன்றவை சிங்கள தேசிய அரங்குகளாக பரிணமித்தபோது பேராசிரியர் வித்தியானந்தனின் முயற்சியினால் தமிழ்ப்பாரம்பரிய நாடக அரங்கங்களும் புதிய வடிவங்களைப் பெற்று புத்துயிர் பெற்றன. 'இராவணேசன்' என்னும் நாடகம் இவ வாறு உருவாகிய நாடகமாகும்.
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து உருவாகிய நாடக அரங்கக் கல்லூரி ஈழத் தமிழ் நாடகங்களுக்கான ஒரு புதிய திறவு முனையாக அமைந்தது. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பு, வெகுஜன போராட்டத்திற்கு ஆதரவாக உருவாகிய எஸ். கே. ரகுநாதனின் 'கந்தன் கருணை' முன்னரே உருவாகிய ஒரு அரசியல் நாடகமாக இருந்த போதும் (84) 1984ல் மிகவும் கூர்மையடைந்திருந்த தமிழினத்திற்கு எதிரான சிங்கள இராணுவ அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மக்களை விழிப்படைய வைக்கும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 'மண்சுமந்த மேனியர்' எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இது 150 மேடைகளுக்கு மேல் மேடையிடப்பட்டது. இது ஒருவகையில் அரசியல் நாடகமாகவும் (Pழடவைiஉயட வுhநயவசந) ஈழத் தமிழ் நாடகங்களின் ஒரு புதிய பரிணாமமாகவும் அப்போது அமைந்திருந்தது. எமது பாரம்பரிய நாட்டார் இசை, தேவாரம், புதுக்கவிதைகள் ஆகியவற்றோடு கிரேக்கநாடக மரபின் கோரஸ் முறையும் 'பிறக்றிய' அரங்கின் புறநிலைப்படுத்தி நோக்கும் முறையும் இந்நாடகத்தில் சிறப்பம்சமாய் அமைந்தது.
மறைபொருட் பண்பும், புலமை சார் பண்பும் நிறைந்ததாக இந்நாடகம் அமைந்திருந்தபோதும், இது பார்வையாளருடன் நல்லதொரு இடை வினையைக் (ஐவெநச யுஉவழைn) கொண்டிருந்தது. பார்வையாளரும் நடிகர்களுடன் சேர்ந்து பாடினர், ஆடினர். பார்வையாளருடைய வாழ்வை, அவர்களுடைய துயரங்களை நாடகப் பாத்திரங்கள பிரதிபலிப்பதை உணர்ந்தனர். இங்கு அரங்கிடப்பட்ட உணர்வுகள் சரியான இடை வினையை அடைந்ததே இந்நாடகத்தின் வெற்றியாக அமைந்தது. இது படச்சட்ட மேடைகளைக் கடந்துபல இடங்களில் மக்களோடு நெருக்கமாக ஒரே தளத்தில் அரங்கிடப்பட்டபோது (தெருவெளி அரங்கைப் போன்று) இதன் இடை வினை மிகச் சிறப்பாக இருந்ததாக இதன் நெறியாளர் திரு. க. சிதம்பரநாதன் தெரிவித்திருந்தார். இது ஒரு மாற்றத்துக்கான புதிய அரங்கவடிவ முறையாக பரிணமித்திருந்தது.
இதன்பின் ஈழத்தமிழ் நாடக அரங்கு விடுதலைக்கான அரங்காக உருவானது நாடக அரங்கக் கல்லூரி (குழந்தை ம. சண்முகலிங்கம், முருகையன்) மட்டுமன்றி வேறு பலரும், குறிப்பாக வீ. என். குகராஜா, திரு. எஸ். பாலசிங்கம், பொன். கணேசமூர்த்தி, நா. யோகேந்திரநாதன் போன்றவர்களுடன் வேறும் பலரும் அரசியல் நாடகங்களை உருவாக்கினர்.
நவீன தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சியின் விளைபொருளான சினிமா, வீடியோ என்பவற்றின் தாக்கங்களைக் கடந்து நாடகம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தது. அதன் நம்பகத் தன்மையினாலும், ஆற்றுவோர் ஆற்றப்படுவோருக்கிடையேயான எவ வித தடைகளுமற்ற மனிதன் மனிதன் எனும் நெருக்கத் தன்மையினாலுமேயாகும். ஒடுக்கப்படும் மக்களின் குரலாகவும் அரங்கு அமைந்திருந்ததால் நாடகங்கள் எமது மக்களிடையே வரவேற்புப் பெற்று வேரூன்றத் தொடங்கியது.
வாழ்வின் தேடலை அர்த்தப்படுத்தும் கலை நாடமாகும். மனித வாழ்வின் நம்பிக்கைகளை, சாத்தியப்பாடுகளை நிகழ்த்திக் காட்டுவதும் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்துதற்குமான ஒரு ஊடகமாகவே நாடகம் நிலைத்திருக்கிறது.
மனித உடலே நாடகத்தின் பிரதான மொழியாகிறது. காத்திரமான கவிதை வரிகள் இங்கே மிக மிகச் சாதாரண மொழியாகி விடுகிறது. இசையோ அரங்கின் இடைவெளிகளை நிரப்பிச் செல்லும் ஊடகமாகிவிடுகிறது. மனித மனங்கள் தளைகளைக் கடந்து நாடகங்கள் ஊடே சுதந்திர வெளிகளை அடைகின்றன. இந்த வெளிகளிலேயே அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர். ஒவ வொரு மனிதனுடைய வாழ்வும், அதன் எதிர்பார்ப்புக்களும், நம்பிக்கைகளும் நாடகங்கள் ஊடே வெளிப்படவேண்டும். வாழ்வின் தேடலை அர்த்தப் படுத்தும் கலையான நாடகம் ஒடுக்கப்படுபவர்களின் குரலாக ஒலிக்கும் போதே சமூக மாற்றத்துக்கான ஆயுதமாக மாறுகிறது.
எமது மக்களின் துயரங்களை, வாழ்வியல் அவலங்களை வெளிப்படுத்தும் பல்வேறு அரங்க வடிவங்கள் எம்மிடையே எழுந்தன. நாற்சார் வீட்டினை அரங்காகக் கொண்டு நடாத்தப்பட்ட குழந்தை ம. சண் முகலிங்கத்தின் 'எந்தையும் தாயும்' மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட ரதிதரனின் 'அண்டவெளி' சிதம்பரநாதனால் கொழும்பு காலி வீதியில் நிகழ்த்தப்பட்ட 'கொற்றவையுடன் ஓர் ஆற்றுகை' திருகோணமலையில் நிகழ்த்தப்பட்ட 'பிரமாண்ட இராணுவ சப்பாத்து' என்பன ஊர்வல அரங்குகளாயின. இவற்றோடு பலவகையான பட்டறை நாடகங்களும், அகதிமுகாம களின் அவலங்களைச் சுமந்து வந்த கட்புலனாகா அரங்குகள் (ஐnஎளைiடிடந வுhநயவசந) என அரசியல் அரங்குகள் விரிவடைந்தன. அரங்கு என்பது அரசியலுக்கான தொடர்புூடகமாயிற்று. (வுhநயவசந யள Pழடவைiஉயட ஊழஅஅரniஉயவழைn)
1995 இன் பின் இடப்பெயர்வினால் எழுந்த பாரிய நெருக்கடிகளும், வாழ்தலுக்கான போராட்டமும், வசதியீனங்களும் தெருவெளி அரங்குகளின் எழுச்சியை எம்மண்ணில் ஏற்படுத்தின. ஆரம்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டது போன்று தெருவெளி அரங்குகள் கிளர்ச்சியுூட்டும் பிரச்சார அலகுகளாகவே (யுபவையவழைn யனெ pசழியபயனெய ரnவை) இருந்தன.
காலப்போக்கில் மக்களோடு நெருக்கமாகி நின்ற தெருவெளி அரங்குகள் புலமைசார் பண்பு குறியீட்டு உத்திப் பிரயோகங்கள் என்பனவற்றில் விருத்தியுறத் தொடங்கின. மேடைகளையும், திரைகளையும் நிராகரித்திருந்த இவ அரங்கு குறித்த ஒரு பகுதியினருக்கு என்றில்லாமல் எல்லா மக்களுக்குமான அரங்காக மாறியது. அவர்கள் உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை நெறிப்படுத்த முயன்றன. அரங்க அளிக்கையாளர்களும் பார்வையாளர்களும் இணைந்து என்ன செய்யவேண்டும் என்பதை விவாதிக்கும் போரம் அரங்குகளாகவும் (குழசரஅ வாநயவசந) இரண்டொரு பாPட்சார்த்த இன்விசிபிள் அரங்குகளாகவும் (ஐnஎளைiடிடந வுhநயவசந) பல புதினப் பத்திரிகைகளின் செய்திகளை விவாதிக்கும் செய்தித்தாள் அரங்கம் (நேறள Pயிநச வுhநயவசந) ஆகவும் எமது மண்ணின் தெருவெளி அரங்குகள் விரிவடைந்தன. மறைபொருட் பண்பு விரவிய குறியீட்டு உத்திகளை எமது மக்கள் புரிந்துகொள்ளும் வன்மையைப்பெற்று அரங்கங்களுடன் வளர்ந்தனர். கிராமிய நாட்டார் பாடல்கள், கூத்து மெட்டுக்களில் அமைந்த பாடல்கள் மூலம் எமது தெருவெளி அரங்குகள் இசை நாடகப் பண்பில் (ஆநடழனசயஅய) வளர்ச்சியுற்றன. பல தெருவெளி அரங்கப் பாடல்கள் இசை நாடாக்களாக வெளிவந்தன. புதுவை அன்பனின் (நா. செல்வம்) 'வெற்றி முரசுப் பாடல்கள்' மிகச் சிறப்பாக அமைந்த நாடக இசைப்பாடல் நாடாவாகும்.
இவ வாறு பல்வேறு நாடக உத்திச் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி மெருகு பெற்ற எமது மண்ணின் தெருவெளி அரங்குகள் தமிழ் நாடக உலகின் கவனத்தை பெறாதிருந்தது கவலை தரும் விடயமேயாகும். எனினும் கடந்த வருடம் செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இனி-2000' மகாநாட்டில் 'கடந்த நூற்றாண்டில் ஈழத்து தமிழ் நாடக அரங்கு' என்னும் கட்டுரையை சமர்ப்பித்திருந்த திரு. கந்தையா சிறீகணேசன் 'போர் முழக்க அரங்கு' என எமது தெருவெளி அரங்குகள் சிலவற்றையும் அதன் கலைஞர்களையும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பது மறுக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்.
எமது மண்ணில் தெருவெளி அரங்கப் படைப்பாளிகள் பலர். இவர்களில் புதுவை அன்பன் (திரு. நா. செல்வம்) திரு. பாலசிங்கம் (பாலா மாஸ்ரர்) பேபி ஆசிரியை, ரகு, இளங்கோ எனப் பலர் உள்ளனர். பெயர்கள் குறிப்பிடப்படாது போனாலும் இவர்களில் பலர் காத்திரமான படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றனர். வாழ்வியல் துயரங்களின் குறியீடுகள் (நுஒளைவநவெயைட யுரபரiளா) மூலம் பார்வையாளர்களின் உணர்வு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கருத்துக்களை விதைக்கின்ற ஒரு முறைமையை கைக்கொள்பவர் புதுவை அன்பன். இவருடைய படைப்புகளில் கவித்துவமான சொல்லாடல்கள் (னுiஉவழைn) இனிய பாடல்கள், உயர்வான அரங்க நுட்பம் (ளுவயபந ஊசயகவ) நிறைந்து காணப்படும். களத்தில் காத்தான், சதியை வென்ற சாவு, வெள்ளைப்புறா சிவப்பானதேன்? போன்றவை மிகச் சிறப்பான அரங்குகளாக பேசப்பட்டவை ஆகும்.
கண்ணீரும் வாழ்வின் துயரங்களிலும் இருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஏனைய விடுதலைப் போராட்டங்களும் கருக்கொண்டன எனும் கருத்தில் நம்பிக்கையுடைய இப்படைப்பாளி கல்வி மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களிலுமே புதிய சிந்தனை வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருக்கிறார். எமது போராட்டம் தமிழீழ விடுதலையை நோக்கி செல்லும் என்னும் அடிநாதத்தையே தனது நாடகங்களில் கொண்டிருக்கிறார்.
சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுவிக்கப்படும் போதே உண்மையான விடுதலை சாத்தியமாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை உருவாக்குபவர் பாலாமாஸ்டர், பிரச்சினைகளின் அடிப்படைகளையும் அவற்றிற்கிடையேயான முரண்களையும் சரியாக கணக்கிடும் வன்மையுடைய இவருடைய நாடகங்கள் கருத்தியல் செழுமையுடையதாக இருக்கும். 'சமுத்திரத்தில் ஓர் சரித்திரம்' எனும் இவருடைய நாடகம் மணலாற்று சிங்களக் குடியேற்றத்தின் வரலாற்றையும், அக்குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசு கொண்டிருந்த நிலைப்பாடுகளையும் தெளிவாக எடுத்துரைத்தது. 'புூமழை பொழியும்' எனும் நாடகம் எதிர்கால தமிழீழ தேசம் எப்படி அமையும் எனும் கருத்துச் சித்திரமாக அமைந்திருந்ததுடன் ஒரு விவாதத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்திருந்தது.
பேபி ஆசிரியையின் 'யுத்தம்' ஒரு சிறப்பான செய்தித்தாள் அரங்காக (நேறள Pயிநச வாநயவசந) அமைந்திருந்தது. ஆட்டங்களும், சிறப்பான இயங்கு தன்மையுடைய (னுலயெஅiஉ) பாத்திர உருவாக்கமும் இவருடைய சிறப்பம்சமாகும். பலமும், பலவீனமுமான கலவையாக பரிணாமம் பெறும் எமது தெருவெளி அரங்குகளிடையே வித்தியாசமானதொரு ஊர்வல அரங்காக, அக்கராயன் ப.நோ.கூ.சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தள எச்சங்கள்' அமைந்திருந்தது. கவிஞர் சாதுரியன், நவரட்ணஜோதி ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த அரங்கில் கிளிநொச்சி உதய நகரில் மலக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட மனித உலும்புக்கூடுகள், இரத்தம் தோய்ந்த புத்தகம், தலையுடைந்த தெய்வச் சிலைகள், சிதைந்துபோன குருகுலஸ்தாபகர் படம், செல் சிதறல்கள், வீட்டுப் பொருட்கள், பட்டினியைக் குறித்து வெற்றுத்தட்டு, நாலு கிடுகுகளுடன் ஒரு கொட்டில், சவப்பெட்டி என பறையும், கவிதையும் இணைந்து பலரை கண்ணீர் சொரிய வைத்தது.
கிளிநொச்சியை சேர்ந்த ரகு (கணேசலிங்கம்) எளிமையும், கிராமிய இசை வடிவங்களையும் கொண்ட நாடகங்களை உருவாக்கும் திறமையுடையவர். இவருடைய நாடகங்கள் வரலாற்றுப் போக்கினை (ஊhசழniஉடந) மையமாக கொண்டு அசையும் இயல்படையது. 'இன்றைய தேவை' 'வீரமுரசம்' என்பன இவருடைய நாடகங்களில் சிறப்பாக அமைந்திருந்தன. தவில் இசையும், வியட்னாமிய மக்களின் தொப்பி, முள்முடி போன்ற குறியீடுகள் மேடை நுட்பத்தை, சிறப்புடன் வெளிப்படுத்தும் இயல்பைக் கொண்டிருந்தது.
மக்கள் மத்தியில் தெருவெளி அரங்குக்குரிய செல்வாக்கை கருத்தில்கொண்டு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'யுனிசெப்' நிறுவனம் கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தினூடு விஜயசேகரனின் நெறியாள்கையில் தெருவெளி அரங்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
சூரியனுக்கு கீழே உள்ள எந்த விடயத்தையும் எளிமையாக தெருவெளி அரங்கில் காட்சிப்படுத்தமுடியும் என்பதனை எமது கலைஞர்கள் நிரூபித்து வருகின்றனர். தெருவெளி அரங்கின் வெற்றி என்பது பார்வையாளருடன் அது ஏற்படுத்தும் இடைவினையிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமானதொரு வாழ்வின் அடிப்படையை உருவாக்குவதில் சமூகத்தின் ஒவ வொரு மனிதரையும் தட்டி எழுப்புவதில் எமது மண்ணில் தெருவெளி அரங்குகள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன.
அன்ரன் அன்பழகன்
மூக மாற்றங்களை தெறிக்கும் (சுநகடநஉவ) ஒரு ஊடகமாகவே அரங்கு மனித வரலாற்றில் பதிவாகி வந்திருக்கிறது. சேக்ஸ்பியர், ஹென்றிக்கிப்சன், அன்ரன் செக்கொவ , பெணாட்ஸா என உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர்கள் பலரின் நாடகங்களும் இதற்கு சான்றாகியுள்ளன.
ஈழத்திலும் எமது மக்களின் கற்பனை ஆற்றலையும், கவித்துவத்திறனையும், இசை வளத்தையும், சமூகம் மற்றும் சமயம் சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் படம் பிடித்துக் காட்டும் சாதனமாக விளங்கியது நாடகங்களே. பள்ளு, குறவஞ்சி, அம்மானை போன்ற இலக்கிய வடிவங்களின் ஊற்றுக் கண்களாக நாடகங்களே விளங்கின.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி (ஊiநெஅயவழபசயிhல) எனும் புதிய சலனப்படக் கலைக்கு வழி திறந்ததோடு, நாடகம் கிராமப்புற பாமர மக்களின் கலை வடிவமாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் 1956களில் எழுந்த இலங்கை தேசிய எழுச்சிகளுடனான போக்கில் பேராசிரியர் சரத்சந்திரவின் 'மனமே' 'சிங்கபாகு' போன்றவை சிங்கள தேசிய அரங்குகளாக பரிணமித்தபோது பேராசிரியர் வித்தியானந்தனின் முயற்சியினால் தமிழ்ப்பாரம்பரிய நாடக அரங்கங்களும் புதிய வடிவங்களைப் பெற்று புத்துயிர் பெற்றன. 'இராவணேசன்' என்னும் நாடகம் இவ வாறு உருவாகிய நாடகமாகும்.
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து உருவாகிய நாடக அரங்கக் கல்லூரி ஈழத் தமிழ் நாடகங்களுக்கான ஒரு புதிய திறவு முனையாக அமைந்தது. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான தீண்டாமை ஒழிப்பு, வெகுஜன போராட்டத்திற்கு ஆதரவாக உருவாகிய எஸ். கே. ரகுநாதனின் 'கந்தன் கருணை' முன்னரே உருவாகிய ஒரு அரசியல் நாடகமாக இருந்த போதும் (84) 1984ல் மிகவும் கூர்மையடைந்திருந்த தமிழினத்திற்கு எதிரான சிங்கள இராணுவ அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மக்களை விழிப்படைய வைக்கும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 'மண்சுமந்த மேனியர்' எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இது 150 மேடைகளுக்கு மேல் மேடையிடப்பட்டது. இது ஒருவகையில் அரசியல் நாடகமாகவும் (Pழடவைiஉயட வுhநயவசந) ஈழத் தமிழ் நாடகங்களின் ஒரு புதிய பரிணாமமாகவும் அப்போது அமைந்திருந்தது. எமது பாரம்பரிய நாட்டார் இசை, தேவாரம், புதுக்கவிதைகள் ஆகியவற்றோடு கிரேக்கநாடக மரபின் கோரஸ் முறையும் 'பிறக்றிய' அரங்கின் புறநிலைப்படுத்தி நோக்கும் முறையும் இந்நாடகத்தில் சிறப்பம்சமாய் அமைந்தது.
மறைபொருட் பண்பும், புலமை சார் பண்பும் நிறைந்ததாக இந்நாடகம் அமைந்திருந்தபோதும், இது பார்வையாளருடன் நல்லதொரு இடை வினையைக் (ஐவெநச யுஉவழைn) கொண்டிருந்தது. பார்வையாளரும் நடிகர்களுடன் சேர்ந்து பாடினர், ஆடினர். பார்வையாளருடைய வாழ்வை, அவர்களுடைய துயரங்களை நாடகப் பாத்திரங்கள பிரதிபலிப்பதை உணர்ந்தனர். இங்கு அரங்கிடப்பட்ட உணர்வுகள் சரியான இடை வினையை அடைந்ததே இந்நாடகத்தின் வெற்றியாக அமைந்தது. இது படச்சட்ட மேடைகளைக் கடந்துபல இடங்களில் மக்களோடு நெருக்கமாக ஒரே தளத்தில் அரங்கிடப்பட்டபோது (தெருவெளி அரங்கைப் போன்று) இதன் இடை வினை மிகச் சிறப்பாக இருந்ததாக இதன் நெறியாளர் திரு. க. சிதம்பரநாதன் தெரிவித்திருந்தார். இது ஒரு மாற்றத்துக்கான புதிய அரங்கவடிவ முறையாக பரிணமித்திருந்தது.
இதன்பின் ஈழத்தமிழ் நாடக அரங்கு விடுதலைக்கான அரங்காக உருவானது நாடக அரங்கக் கல்லூரி (குழந்தை ம. சண்முகலிங்கம், முருகையன்) மட்டுமன்றி வேறு பலரும், குறிப்பாக வீ. என். குகராஜா, திரு. எஸ். பாலசிங்கம், பொன். கணேசமூர்த்தி, நா. யோகேந்திரநாதன் போன்றவர்களுடன் வேறும் பலரும் அரசியல் நாடகங்களை உருவாக்கினர்.
நவீன தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சியின் விளைபொருளான சினிமா, வீடியோ என்பவற்றின் தாக்கங்களைக் கடந்து நாடகம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தது. அதன் நம்பகத் தன்மையினாலும், ஆற்றுவோர் ஆற்றப்படுவோருக்கிடையேயான எவ வித தடைகளுமற்ற மனிதன் மனிதன் எனும் நெருக்கத் தன்மையினாலுமேயாகும். ஒடுக்கப்படும் மக்களின் குரலாகவும் அரங்கு அமைந்திருந்ததால் நாடகங்கள் எமது மக்களிடையே வரவேற்புப் பெற்று வேரூன்றத் தொடங்கியது.
வாழ்வின் தேடலை அர்த்தப்படுத்தும் கலை நாடமாகும். மனித வாழ்வின் நம்பிக்கைகளை, சாத்தியப்பாடுகளை நிகழ்த்திக் காட்டுவதும் நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்துதற்குமான ஒரு ஊடகமாகவே நாடகம் நிலைத்திருக்கிறது.
மனித உடலே நாடகத்தின் பிரதான மொழியாகிறது. காத்திரமான கவிதை வரிகள் இங்கே மிக மிகச் சாதாரண மொழியாகி விடுகிறது. இசையோ அரங்கின் இடைவெளிகளை நிரப்பிச் செல்லும் ஊடகமாகிவிடுகிறது. மனித மனங்கள் தளைகளைக் கடந்து நாடகங்கள் ஊடே சுதந்திர வெளிகளை அடைகின்றன. இந்த வெளிகளிலேயே அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர். ஒவ வொரு மனிதனுடைய வாழ்வும், அதன் எதிர்பார்ப்புக்களும், நம்பிக்கைகளும் நாடகங்கள் ஊடே வெளிப்படவேண்டும். வாழ்வின் தேடலை அர்த்தப் படுத்தும் கலையான நாடகம் ஒடுக்கப்படுபவர்களின் குரலாக ஒலிக்கும் போதே சமூக மாற்றத்துக்கான ஆயுதமாக மாறுகிறது.
எமது மக்களின் துயரங்களை, வாழ்வியல் அவலங்களை வெளிப்படுத்தும் பல்வேறு அரங்க வடிவங்கள் எம்மிடையே எழுந்தன. நாற்சார் வீட்டினை அரங்காகக் கொண்டு நடாத்தப்பட்ட குழந்தை ம. சண் முகலிங்கத்தின் 'எந்தையும் தாயும்' மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட ரதிதரனின் 'அண்டவெளி' சிதம்பரநாதனால் கொழும்பு காலி வீதியில் நிகழ்த்தப்பட்ட 'கொற்றவையுடன் ஓர் ஆற்றுகை' திருகோணமலையில் நிகழ்த்தப்பட்ட 'பிரமாண்ட இராணுவ சப்பாத்து' என்பன ஊர்வல அரங்குகளாயின. இவற்றோடு பலவகையான பட்டறை நாடகங்களும், அகதிமுகாம களின் அவலங்களைச் சுமந்து வந்த கட்புலனாகா அரங்குகள் (ஐnஎளைiடிடந வுhநயவசந) என அரசியல் அரங்குகள் விரிவடைந்தன. அரங்கு என்பது அரசியலுக்கான தொடர்புூடகமாயிற்று. (வுhநயவசந யள Pழடவைiஉயட ஊழஅஅரniஉயவழைn)
1995 இன் பின் இடப்பெயர்வினால் எழுந்த பாரிய நெருக்கடிகளும், வாழ்தலுக்கான போராட்டமும், வசதியீனங்களும் தெருவெளி அரங்குகளின் எழுச்சியை எம்மண்ணில் ஏற்படுத்தின. ஆரம்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டது போன்று தெருவெளி அரங்குகள் கிளர்ச்சியுூட்டும் பிரச்சார அலகுகளாகவே (யுபவையவழைn யனெ pசழியபயனெய ரnவை) இருந்தன.
காலப்போக்கில் மக்களோடு நெருக்கமாகி நின்ற தெருவெளி அரங்குகள் புலமைசார் பண்பு குறியீட்டு உத்திப் பிரயோகங்கள் என்பனவற்றில் விருத்தியுறத் தொடங்கின. மேடைகளையும், திரைகளையும் நிராகரித்திருந்த இவ அரங்கு குறித்த ஒரு பகுதியினருக்கு என்றில்லாமல் எல்லா மக்களுக்குமான அரங்காக மாறியது. அவர்கள் உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை நெறிப்படுத்த முயன்றன. அரங்க அளிக்கையாளர்களும் பார்வையாளர்களும் இணைந்து என்ன செய்யவேண்டும் என்பதை விவாதிக்கும் போரம் அரங்குகளாகவும் (குழசரஅ வாநயவசந) இரண்டொரு பாPட்சார்த்த இன்விசிபிள் அரங்குகளாகவும் (ஐnஎளைiடிடந வுhநயவசந) பல புதினப் பத்திரிகைகளின் செய்திகளை விவாதிக்கும் செய்தித்தாள் அரங்கம் (நேறள Pயிநச வுhநயவசந) ஆகவும் எமது மண்ணின் தெருவெளி அரங்குகள் விரிவடைந்தன. மறைபொருட் பண்பு விரவிய குறியீட்டு உத்திகளை எமது மக்கள் புரிந்துகொள்ளும் வன்மையைப்பெற்று அரங்கங்களுடன் வளர்ந்தனர். கிராமிய நாட்டார் பாடல்கள், கூத்து மெட்டுக்களில் அமைந்த பாடல்கள் மூலம் எமது தெருவெளி அரங்குகள் இசை நாடகப் பண்பில் (ஆநடழனசயஅய) வளர்ச்சியுற்றன. பல தெருவெளி அரங்கப் பாடல்கள் இசை நாடாக்களாக வெளிவந்தன. புதுவை அன்பனின் (நா. செல்வம்) 'வெற்றி முரசுப் பாடல்கள்' மிகச் சிறப்பாக அமைந்த நாடக இசைப்பாடல் நாடாவாகும்.
இவ வாறு பல்வேறு நாடக உத்திச் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி மெருகு பெற்ற எமது மண்ணின் தெருவெளி அரங்குகள் தமிழ் நாடக உலகின் கவனத்தை பெறாதிருந்தது கவலை தரும் விடயமேயாகும். எனினும் கடந்த வருடம் செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இனி-2000' மகாநாட்டில் 'கடந்த நூற்றாண்டில் ஈழத்து தமிழ் நாடக அரங்கு' என்னும் கட்டுரையை சமர்ப்பித்திருந்த திரு. கந்தையா சிறீகணேசன் 'போர் முழக்க அரங்கு' என எமது தெருவெளி அரங்குகள் சிலவற்றையும் அதன் கலைஞர்களையும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பது மறுக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்.
எமது மண்ணில் தெருவெளி அரங்கப் படைப்பாளிகள் பலர். இவர்களில் புதுவை அன்பன் (திரு. நா. செல்வம்) திரு. பாலசிங்கம் (பாலா மாஸ்ரர்) பேபி ஆசிரியை, ரகு, இளங்கோ எனப் பலர் உள்ளனர். பெயர்கள் குறிப்பிடப்படாது போனாலும் இவர்களில் பலர் காத்திரமான படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றனர். வாழ்வியல் துயரங்களின் குறியீடுகள் (நுஒளைவநவெயைட யுரபரiளா) மூலம் பார்வையாளர்களின் உணர்வு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கருத்துக்களை விதைக்கின்ற ஒரு முறைமையை கைக்கொள்பவர் புதுவை அன்பன். இவருடைய படைப்புகளில் கவித்துவமான சொல்லாடல்கள் (னுiஉவழைn) இனிய பாடல்கள், உயர்வான அரங்க நுட்பம் (ளுவயபந ஊசயகவ) நிறைந்து காணப்படும். களத்தில் காத்தான், சதியை வென்ற சாவு, வெள்ளைப்புறா சிவப்பானதேன்? போன்றவை மிகச் சிறப்பான அரங்குகளாக பேசப்பட்டவை ஆகும்.
கண்ணீரும் வாழ்வின் துயரங்களிலும் இருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஏனைய விடுதலைப் போராட்டங்களும் கருக்கொண்டன எனும் கருத்தில் நம்பிக்கையுடைய இப்படைப்பாளி கல்வி மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களிலுமே புதிய சிந்தனை வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருக்கிறார். எமது போராட்டம் தமிழீழ விடுதலையை நோக்கி செல்லும் என்னும் அடிநாதத்தையே தனது நாடகங்களில் கொண்டிருக்கிறார்.
சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுவிக்கப்படும் போதே உண்மையான விடுதலை சாத்தியமாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை உருவாக்குபவர் பாலாமாஸ்டர், பிரச்சினைகளின் அடிப்படைகளையும் அவற்றிற்கிடையேயான முரண்களையும் சரியாக கணக்கிடும் வன்மையுடைய இவருடைய நாடகங்கள் கருத்தியல் செழுமையுடையதாக இருக்கும். 'சமுத்திரத்தில் ஓர் சரித்திரம்' எனும் இவருடைய நாடகம் மணலாற்று சிங்களக் குடியேற்றத்தின் வரலாற்றையும், அக்குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசு கொண்டிருந்த நிலைப்பாடுகளையும் தெளிவாக எடுத்துரைத்தது. 'புூமழை பொழியும்' எனும் நாடகம் எதிர்கால தமிழீழ தேசம் எப்படி அமையும் எனும் கருத்துச் சித்திரமாக அமைந்திருந்ததுடன் ஒரு விவாதத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்திருந்தது.
பேபி ஆசிரியையின் 'யுத்தம்' ஒரு சிறப்பான செய்தித்தாள் அரங்காக (நேறள Pயிநச வாநயவசந) அமைந்திருந்தது. ஆட்டங்களும், சிறப்பான இயங்கு தன்மையுடைய (னுலயெஅiஉ) பாத்திர உருவாக்கமும் இவருடைய சிறப்பம்சமாகும். பலமும், பலவீனமுமான கலவையாக பரிணாமம் பெறும் எமது தெருவெளி அரங்குகளிடையே வித்தியாசமானதொரு ஊர்வல அரங்காக, அக்கராயன் ப.நோ.கூ.சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தள எச்சங்கள்' அமைந்திருந்தது. கவிஞர் சாதுரியன், நவரட்ணஜோதி ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த அரங்கில் கிளிநொச்சி உதய நகரில் மலக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட மனித உலும்புக்கூடுகள், இரத்தம் தோய்ந்த புத்தகம், தலையுடைந்த தெய்வச் சிலைகள், சிதைந்துபோன குருகுலஸ்தாபகர் படம், செல் சிதறல்கள், வீட்டுப் பொருட்கள், பட்டினியைக் குறித்து வெற்றுத்தட்டு, நாலு கிடுகுகளுடன் ஒரு கொட்டில், சவப்பெட்டி என பறையும், கவிதையும் இணைந்து பலரை கண்ணீர் சொரிய வைத்தது.
கிளிநொச்சியை சேர்ந்த ரகு (கணேசலிங்கம்) எளிமையும், கிராமிய இசை வடிவங்களையும் கொண்ட நாடகங்களை உருவாக்கும் திறமையுடையவர். இவருடைய நாடகங்கள் வரலாற்றுப் போக்கினை (ஊhசழniஉடந) மையமாக கொண்டு அசையும் இயல்படையது. 'இன்றைய தேவை' 'வீரமுரசம்' என்பன இவருடைய நாடகங்களில் சிறப்பாக அமைந்திருந்தன. தவில் இசையும், வியட்னாமிய மக்களின் தொப்பி, முள்முடி போன்ற குறியீடுகள் மேடை நுட்பத்தை, சிறப்புடன் வெளிப்படுத்தும் இயல்பைக் கொண்டிருந்தது.
மக்கள் மத்தியில் தெருவெளி அரங்குக்குரிய செல்வாக்கை கருத்தில்கொண்டு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'யுனிசெப்' நிறுவனம் கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தினூடு விஜயசேகரனின் நெறியாள்கையில் தெருவெளி அரங்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
சூரியனுக்கு கீழே உள்ள எந்த விடயத்தையும் எளிமையாக தெருவெளி அரங்கில் காட்சிப்படுத்தமுடியும் என்பதனை எமது கலைஞர்கள் நிரூபித்து வருகின்றனர். தெருவெளி அரங்கின் வெற்றி என்பது பார்வையாளருடன் அது ஏற்படுத்தும் இடைவினையிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமானதொரு வாழ்வின் அடிப்படையை உருவாக்குவதில் சமூகத்தின் ஒவ வொரு மனிதரையும் தட்டி எழுப்புவதில் எமது மண்ணில் தெருவெளி அரங்குகள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன.
அன்ரன் அன்பழகன்

