06-22-2003, 08:52 AM
பருத்தித்துறைக் கடற்பரப்பு
கப்பல் தொடரணி ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. கடலின் நெஞ்சினில் மேலான நகர்வு. பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கான இரையை அத் தொடரணி காவிச்சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே அக்கடல் அவர்களுக்கு மனதில் கடலின் ஒவ வாமை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்த திகில் பயணத் தொடரில் கடலின் அடிவயிறே கலங்கும் பேரொலி, தொடர் வேட்டுச் சத்தம், எது நடக்கலாம் என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது. சிதறி ஓடிய கடற் கலங்கள் ஒவ வொன்றும் தாக்கப்பட்டன. தாய்க் கப்பல் 'லங்கா முடித' சேதப்பட்டபடி கடலில் உயரப்போனது டோறா படகொண்றிலிருந்த கடற்படை அழிந்து போனது. மீதி தொலைந்து போனது. படகு மட்டும் கைகளில் சிக்கி அது கரை கொண்டுவரப்பட்டது. வரும் பொழுதே அது இழந்த தன் புத்திரர்களுக்காக உடன் கட்டை ஏறிக்கொண்டது. கடற்படையின் உயிர் நாடியையே உலுக்கிவிட்டது அந்தச் சமர். எம்மை எதுவுமே செய்து விடமுடியாது என இறுமாந்திருந்தவர்கள் நிதானமிழந்து போனார்கள். பரிகாரமாக அவர்கள் மீண்டும் முருங்கையில் ஏறும்பேயாகினாh கள். அதற்காக இம்முறை அவா கள் பயன்படுத்தியது பீரங்கிகள் அல்ல, துப்பாக்கிச் சன்னங்கள் அல்ல விமானங்களையே.
'சியாமாச்செட்டி' யுகம், 'புக்காரா' யுகம், 'சுப்பசொனிக்' யுகம், 'கிபிர்' யுகம், 'மிக்'யுகம்.. என ஊழியுகத்தின் வரிசையில் அது புக்காரா யுகமாயிருந்தது. ஏவிய பணிமுடிக்க ஒன்றல்ல மூன்று புக்காராக்கள் நிலம் விட்டு மிதந்தனலு}.
"எங்கட சொந்த இடம் மயிலிட்டி"
"தொண்ணுhறுகளில அங்க இருக்கேலாமல் போச்சுது, ஒரே செல்லடி, அப்பிடியே நாகர்கோவிலுக்கு வந்தனாங்கள்"
பாய்விரிக்கப்பட்ட குந்திலிருந்தபடியே தொடர்ந்து சொல்லும் அங்கலாய்ப்புடன் அந்தப் பெண்
"அப்ப நான் ஆறாம் வகுப்பு, நானும் மூன்று சகோதரர்களும் நாகர்கோவில் பள்ளிக்கூடத்திலதான் படிச்சனாங்கள்.
அண்டு பள்ளிக்கூடத்தில ஏதோ நிகழ்வு. இடைவேளை விட்டிருந்தது. தம்பியாக்கள் கேட்டவங்கள்,
'அக்கா வா வீட்டபோவம்' எண்டு, நான் வரவில்லை எண்டு சொல்லிப் போட்டு நிண்டனான். கொஞ்ச நேரத்தில தூர ஒரு குண்டுச்சத்தம் கேட்டது. அதுக்குப் பிறகு"
நேரம் 12.50 திகதி 20.09.1995
வான்வெளி கிழித்து சீறிச் சினந்தபடி வந்தன மூன்று புக்காராக்களும். இடையில் ஓரிடத்தில் எச்சமிட்ட பின்பு வட்டமடித்து திரும்பின. எச்சமிட்ட இடத்தில் புற்களும் பற்றைகளும் எரியத்தொடங்கியது. திரும்பிய வான் கழுகுகளின் கண்களில் சிக்கியது பாடசாலை மொட்டுக் காளான்களாக ஓடித்திருந்த சிறுவர்கள் அவற்றுக்கு விருந்துணவாக தெரிந்தனர். தாளப்பறந்த வான்கழுகொன்று வீசிய குண்டு வெடித்துப் புகைந்தது. அதுவரை ஒதுங்கி பயந்து நின்ற மாணவர்கள் மரண பீதி கண்டு சீறுவாணம் என பிய்த்துக் கொண்டு ஓடத்தொடங்கினர். இதைக் கண்டு விட்டது மற்றைய வான்கழுகு. அதன் கண்கள் மதிய சூரியக்கதிரால் பளிச்சிட்டன. வெறிகொண்டு அவை மாறி மாறி குதித்துக்கிழம்பின. கடல் நுரைத்து கிளம்புவதை பார்த்து பழகியவர்களின் கண்கள் மண் புகைத்து கிளம்புவதை கண்டன. புகைப் புழுதியினூடு சீறிப் பாய்ந்த மரணவேட்டுக்கள் அவ விடத்தை ஒரு கொலைக்களமாக மாற்றியிருந்தன. வெள்ளை போர்த்து திரிந்தவர்கள் இரத்தக்காப்பு சாத்தப்பட்டிருந்தனர். எங்கும் மனித உடல்கள் குவிந்திருந்தன. மரண ஓலங்களும் வேதனை முனகல்களும் காதை நிறைத்தன. எவர் உடலில் உயிருண்டு எவருடலில் உயிரில்லை என்பது அறிய முடியாதிருந்தது. புத்தகங்களை பற்றியபடியிருந்த கைகளும் சிறு காலணிகள் அணிந்த கால களும் திசைக்கொன்றாக சிதறியிருந்தன.
"எங்களுக்கு மேல குத்தின ஒரு பிளேன் போட்ட குண்டு வெடிச்ச உடன் எல்லா பிள்ளையளும் பயத்தில ஓட தொடர்ந்து சத்தங் கேட்டுது.
கொஞ்சத்துக்குள்ள என்னையும் தூக்கி வீசிட்டுது"
"எழும்புவம் எண்டு கையை ஊண்டினன் எழும்பேலாமல் கிடந்தது. அப்பதான் சனம் ஓடி வந்து கொண்டிருந்தன. என்னைச் சுத்தி கூடப் படிச்ச பிள்ளையள் எல்லாம் சத்தம் போடாமல் குப்புற கிடந்த படியிருந்தன.
ஆனாலு}லு}"
"பிறகு அவையள் எழும்பவே இல்லைலு}லு}." .
அசுர ஆட்சியை நடத்தி விட்டு பேய்க் காற்று ஓய்ந்தது போல அது நடந்து விட்டிருந்தது. இருபத்தைந்து பள்ளிச் சிறுவர்களுடன் மொத்தமாக 40 பேரை பலியிட்டும் 15க்கு மேலானவர்களை காயப்படுத்தியும் விட்டு அந்த வான் கழுகுகள் எழுந்து அகன்றிருந்தன. பாடசாலை முற்றத்தில் நின்றிருந்த அத்திமரம் கீழே அணைத்திருந்த பள்ளிக் கொழுந்துகளுடன் படிந்திருந்தது. அனா த்தத்தின் பின் மருத்துவமனைவிட்டு வெளியேறுபவர்களில் பன்னிரண்டு பள்ளிச்சிறார்கள் தங்கள் கால்களை பறிகொடுத்திருந்தனர்.
"நல்ல காலம் தம்பியவையும் நின்றிருந்தா அண்டு எல்லாருமா போய் சேர்ந்திருப்பம் இடைவேளையெண்ட படியாலதான் இவ வளவு, இல்லாட்டி"
நினைக்கவே நெஞ்சு எக்கி கொண்டது.
"அப்படியிருந்தும் எங்கட உறவுகளுமே 3பேர் செத்திட்டினம்"
"பிறகுதான் எனக்குத் தொ}ஞ்சுது என்னால நிரந்தரமா எழும்பி நிக்க ஏலாதெண்டு"
என்றாள் றஜிதர் சிறுமியாயிருந்து போதே இழந்து விட்ட தன் இருகால்களுடன்.
தன கடற்படை சந்தித்துவிட்ட இழப்புக்கு அந்தக் கடற் கரைக்காற்றை நுகர்ந்தவர்களை சிதைத்துவிட்டிருந்தது சிறீலங்காவின் வான்படை.
"ரெண்டு காலும் இல்லாததால நான் இண்டைக்கு தனிய ஒரு வேலையுமே செய்யேலாம கிடக்குது. என்ரபடிப்பும் பாழாய்ப் போச்சுது. அதனால இப்ப வாழ்க்கையும் பாழாய் போச்சுது"
றஜிதாவை மட்டுமில்லாது இன்னும் பல நூற்றுக்கணக்கானவரையும் சேர்த்தே தன் கோர வெறிக்கு பலியாக்கி விட்டிருந்தது அன்றைய நாகர் கோவிலின் நண்பகல்.
-மிகுதன்
கப்பல் தொடரணி ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. கடலின் நெஞ்சினில் மேலான நகர்வு. பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கான இரையை அத் தொடரணி காவிச்சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே அக்கடல் அவர்களுக்கு மனதில் கடலின் ஒவ வாமை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்த திகில் பயணத் தொடரில் கடலின் அடிவயிறே கலங்கும் பேரொலி, தொடர் வேட்டுச் சத்தம், எது நடக்கலாம் என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது. சிதறி ஓடிய கடற் கலங்கள் ஒவ வொன்றும் தாக்கப்பட்டன. தாய்க் கப்பல் 'லங்கா முடித' சேதப்பட்டபடி கடலில் உயரப்போனது டோறா படகொண்றிலிருந்த கடற்படை அழிந்து போனது. மீதி தொலைந்து போனது. படகு மட்டும் கைகளில் சிக்கி அது கரை கொண்டுவரப்பட்டது. வரும் பொழுதே அது இழந்த தன் புத்திரர்களுக்காக உடன் கட்டை ஏறிக்கொண்டது. கடற்படையின் உயிர் நாடியையே உலுக்கிவிட்டது அந்தச் சமர். எம்மை எதுவுமே செய்து விடமுடியாது என இறுமாந்திருந்தவர்கள் நிதானமிழந்து போனார்கள். பரிகாரமாக அவர்கள் மீண்டும் முருங்கையில் ஏறும்பேயாகினாh கள். அதற்காக இம்முறை அவா கள் பயன்படுத்தியது பீரங்கிகள் அல்ல, துப்பாக்கிச் சன்னங்கள் அல்ல விமானங்களையே.
'சியாமாச்செட்டி' யுகம், 'புக்காரா' யுகம், 'சுப்பசொனிக்' யுகம், 'கிபிர்' யுகம், 'மிக்'யுகம்.. என ஊழியுகத்தின் வரிசையில் அது புக்காரா யுகமாயிருந்தது. ஏவிய பணிமுடிக்க ஒன்றல்ல மூன்று புக்காராக்கள் நிலம் விட்டு மிதந்தனலு}.
"எங்கட சொந்த இடம் மயிலிட்டி"
"தொண்ணுhறுகளில அங்க இருக்கேலாமல் போச்சுது, ஒரே செல்லடி, அப்பிடியே நாகர்கோவிலுக்கு வந்தனாங்கள்"
பாய்விரிக்கப்பட்ட குந்திலிருந்தபடியே தொடர்ந்து சொல்லும் அங்கலாய்ப்புடன் அந்தப் பெண்
"அப்ப நான் ஆறாம் வகுப்பு, நானும் மூன்று சகோதரர்களும் நாகர்கோவில் பள்ளிக்கூடத்திலதான் படிச்சனாங்கள்.
அண்டு பள்ளிக்கூடத்தில ஏதோ நிகழ்வு. இடைவேளை விட்டிருந்தது. தம்பியாக்கள் கேட்டவங்கள்,
'அக்கா வா வீட்டபோவம்' எண்டு, நான் வரவில்லை எண்டு சொல்லிப் போட்டு நிண்டனான். கொஞ்ச நேரத்தில தூர ஒரு குண்டுச்சத்தம் கேட்டது. அதுக்குப் பிறகு"
நேரம் 12.50 திகதி 20.09.1995
வான்வெளி கிழித்து சீறிச் சினந்தபடி வந்தன மூன்று புக்காராக்களும். இடையில் ஓரிடத்தில் எச்சமிட்ட பின்பு வட்டமடித்து திரும்பின. எச்சமிட்ட இடத்தில் புற்களும் பற்றைகளும் எரியத்தொடங்கியது. திரும்பிய வான் கழுகுகளின் கண்களில் சிக்கியது பாடசாலை மொட்டுக் காளான்களாக ஓடித்திருந்த சிறுவர்கள் அவற்றுக்கு விருந்துணவாக தெரிந்தனர். தாளப்பறந்த வான்கழுகொன்று வீசிய குண்டு வெடித்துப் புகைந்தது. அதுவரை ஒதுங்கி பயந்து நின்ற மாணவர்கள் மரண பீதி கண்டு சீறுவாணம் என பிய்த்துக் கொண்டு ஓடத்தொடங்கினர். இதைக் கண்டு விட்டது மற்றைய வான்கழுகு. அதன் கண்கள் மதிய சூரியக்கதிரால் பளிச்சிட்டன. வெறிகொண்டு அவை மாறி மாறி குதித்துக்கிழம்பின. கடல் நுரைத்து கிளம்புவதை பார்த்து பழகியவர்களின் கண்கள் மண் புகைத்து கிளம்புவதை கண்டன. புகைப் புழுதியினூடு சீறிப் பாய்ந்த மரணவேட்டுக்கள் அவ விடத்தை ஒரு கொலைக்களமாக மாற்றியிருந்தன. வெள்ளை போர்த்து திரிந்தவர்கள் இரத்தக்காப்பு சாத்தப்பட்டிருந்தனர். எங்கும் மனித உடல்கள் குவிந்திருந்தன. மரண ஓலங்களும் வேதனை முனகல்களும் காதை நிறைத்தன. எவர் உடலில் உயிருண்டு எவருடலில் உயிரில்லை என்பது அறிய முடியாதிருந்தது. புத்தகங்களை பற்றியபடியிருந்த கைகளும் சிறு காலணிகள் அணிந்த கால களும் திசைக்கொன்றாக சிதறியிருந்தன.
"எங்களுக்கு மேல குத்தின ஒரு பிளேன் போட்ட குண்டு வெடிச்ச உடன் எல்லா பிள்ளையளும் பயத்தில ஓட தொடர்ந்து சத்தங் கேட்டுது.
கொஞ்சத்துக்குள்ள என்னையும் தூக்கி வீசிட்டுது"
"எழும்புவம் எண்டு கையை ஊண்டினன் எழும்பேலாமல் கிடந்தது. அப்பதான் சனம் ஓடி வந்து கொண்டிருந்தன. என்னைச் சுத்தி கூடப் படிச்ச பிள்ளையள் எல்லாம் சத்தம் போடாமல் குப்புற கிடந்த படியிருந்தன.
ஆனாலு}லு}"
"பிறகு அவையள் எழும்பவே இல்லைலு}லு}." .
அசுர ஆட்சியை நடத்தி விட்டு பேய்க் காற்று ஓய்ந்தது போல அது நடந்து விட்டிருந்தது. இருபத்தைந்து பள்ளிச் சிறுவர்களுடன் மொத்தமாக 40 பேரை பலியிட்டும் 15க்கு மேலானவர்களை காயப்படுத்தியும் விட்டு அந்த வான் கழுகுகள் எழுந்து அகன்றிருந்தன. பாடசாலை முற்றத்தில் நின்றிருந்த அத்திமரம் கீழே அணைத்திருந்த பள்ளிக் கொழுந்துகளுடன் படிந்திருந்தது. அனா த்தத்தின் பின் மருத்துவமனைவிட்டு வெளியேறுபவர்களில் பன்னிரண்டு பள்ளிச்சிறார்கள் தங்கள் கால்களை பறிகொடுத்திருந்தனர்.
"நல்ல காலம் தம்பியவையும் நின்றிருந்தா அண்டு எல்லாருமா போய் சேர்ந்திருப்பம் இடைவேளையெண்ட படியாலதான் இவ வளவு, இல்லாட்டி"
நினைக்கவே நெஞ்சு எக்கி கொண்டது.
"அப்படியிருந்தும் எங்கட உறவுகளுமே 3பேர் செத்திட்டினம்"
"பிறகுதான் எனக்குத் தொ}ஞ்சுது என்னால நிரந்தரமா எழும்பி நிக்க ஏலாதெண்டு"
என்றாள் றஜிதர் சிறுமியாயிருந்து போதே இழந்து விட்ட தன் இருகால்களுடன்.
தன கடற்படை சந்தித்துவிட்ட இழப்புக்கு அந்தக் கடற் கரைக்காற்றை நுகர்ந்தவர்களை சிதைத்துவிட்டிருந்தது சிறீலங்காவின் வான்படை.
"ரெண்டு காலும் இல்லாததால நான் இண்டைக்கு தனிய ஒரு வேலையுமே செய்யேலாம கிடக்குது. என்ரபடிப்பும் பாழாய்ப் போச்சுது. அதனால இப்ப வாழ்க்கையும் பாழாய் போச்சுது"
றஜிதாவை மட்டுமில்லாது இன்னும் பல நூற்றுக்கணக்கானவரையும் சேர்த்தே தன் கோர வெறிக்கு பலியாக்கி விட்டிருந்தது அன்றைய நாகர் கோவிலின் நண்பகல்.
-மிகுதன்

