06-22-2003, 08:51 AM
எங்கு நிற்கின்றோம்?
எங்கு போகப்போகின்றோம்?
அடுத்தது என்ன?
பண்பாடென்றால் ஆடை ஆபரணங்கள் தானென மனதைச் சுருக்கிக்கொள்ளாது செழிப்பான, பரந்த நவீன பண பாட்டு வளர்ச்சிக்கும் போகவேண்டும். அடிமைக் கலாச்சாரங்களைத் தூக்கியெறிந்து ஒவ வொருவரது சுயகௌரவத்தையும், சுதந்திரமான செயற்பாட்டிற்குரிய உரிமைகளையும் பண்பாடென யாசிக்க வேண்டும். சிறப்பான ஜனநாயக மென்பது ஒரு சிறந்த பண்பாடு; ஒரு சிறந்த வாழ்க்கை முறை ; ஒரு சிறந்த மனப்பாங்கு, அதற்கூடாக அனைத்து வழிகளிலும் திறந்து, நிமிh ந்த ஒரு நவீன கண்ணோட்டமிக்கப் பண்பாட்டைத்தான் நாம் முதலர்த்தத்திற் பண்பாடென ஏற்றுக்கொள்ளலாம். இப்போது உலகிற் போராடும் அனைத்து மக்களுக்கும் முதலிற் தேவைப்படுவது ஒரு புதிய சிந்தனை மாற்றமே.
எங்கு நிற்கின்றோம்?
எங்கு போகப்போகின்றோம்?
அடுத்தது என்ன?
இவையே வரலாற்றை முன்னேற்றத் திட்டமிடுவோரின் திறவுகோல்கள். வரலாற்று முன்னேற்றமென்பது எவரினது மனவிருப்பங்களிலும் தங்கிபிருப்பதில்லை. காணப்படும் நிலைமைகளைப் பொருத்தமான வகையிற் கையாள்வதிலேயே முன்னேற்றம் தங்கியுள்ளது. வரலாறு தரும் காலகட்ட வாய்ப்புக்களை அதேஅளவிற்கு விளங்கி அதற்கேயுரிய பங்கையும், பாத்திரத்தையும் வகிப்பதன் மூலம் மட்டுமே வரலாற்றை மேல் நோக்கி உந்த முடியும். இவ வாறு முன்னேற்றத்திற்கேற்ற மேன்மையான பாத்திரம் வகிப்பதற்குரிய முன்நிபந்தனை என்னவெனில் விளங்கிக்கொள்வதும். முன்னேற்றத்திற்கான கருக்களும் விதிகளும் அந்த வரலாற்றுக் கட்டத்தில் எவ வாறு காணப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதும்தான்.
பிரபஞ்சமும் மனித வாழ்வும் இடையறாது மாறிக்கொண்டேயிருக்கின்றன. நேற்றிருந்தது போல் இன்று எதுவுமே இருக்க முடியாது. நேற்றைய அரசியலிலிருந்து இன்றைய அரசியல் மாறியுள்ளது. விஞ்ஞான, தொழில் நுட்ப, சிந்தனை வளர்ச்சியுடனும் அவைசாh ந்து மொத்தத்திலேற்படும் சமூக,அரசியற், பொருளாதார மாற்றங்கள், உரிமை வளர்ச்சிகள், வாழ்நிலையெண்ணங்கள், மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு இயற்கைச் சூழ்நிலைகள் ஆகிய அனைத்தையும் திரட்டியெடுத்து வரலாறு அவ வப்போது மனிதனிடம் ஒருபாத்திரத்தை நீட்டும். அந்தப் பாத்திரத்திற்கேற்ற பங்கை வகிக்குமாறு வரலாறு மனிதனைக் கோரிநிற்கும்.
அவ வாறு அவ வப்போது வரலாறு நீட்டும் பாத்திரத்திற்கேற்ப ஒரு முன்னேற்றகரமான பங்கை மனிதன் வகிக்கின்றானா இல்லையா என்பதிற்தான் மனிதன் முக்கியத்துவமும், முன்னேற்றமும் தங்கியுள்ளதே தவிர வெறும் மனவிருப்பங்களிலும், மனவேகங்களிலும், மனக் கோட்டைகளிலுமல்ல. இந்த நிபந்தனைகளை மீறிச்சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் பெயர்தான் கற்பனாவாதம். கற்பனாவாதம் வளர்ச்சியின் எதிரியென்பதை 19ம் நூற்றாண்டு ஐரோபிப்பிய சிந்தனையாளர்கள் அடையாளங்கண்டனர்.
இந்தக் கற்பனாவாதம் (டுவைழியைnளைஅ) பார்வைக்கு அழகானதாயும், ஆனால் செயலில் அது எதிர் மறையான பலனுக்கே போகும். எனவே வரலாற்றை முன்னேற்றுவதற்கு வரலாற்றில் காணப்படும் வாய்ப்புக்கள் எவை என்பதைக் கண்டறிவதே அவற்றிற்கான முதல் நிபந்தனையும், முதற் பணியுமாகும்.
எமது காலம் எத்தகையது? இதில் எமக்குள் வாய்ப்புக்களும். வாய்ப்பின்மைகளும் எவை? இவற்றிற்கு விடைகாண வேண்டியதுதான் எமது சமூக, அரசியற், கலாச்சாரச் சிந்தனையாளர்களின் முதற்பணி. வாழும் காலகட்டத்தை சாராம்சத்தில் எடைபோடத்தவறினால், எமது காலம் இதற்கு முந்திய காலகட்டத்துடன் எத்தகைய வளர்ச்சித் தொடரைக் கொண்டுள்ளதென அறியத் தவறினால், காணப்படும் காலகட்டத்தை எதிர்கால வளர்ச்சியை முன்னேற்ற முடியாது போவதுடன் நிகழ்காலத்ததை மட்டுமன்றி எதிர்காலத்தையும் சீரழித்த பழிக்கு ஆளாக வேண்டிவரும். ஆதலால் உலகிலுள்ள எந்தவொரு மனிதக் கூட்டமும் எப்போதும் தாம் வாழும் தற்காலத்தை முதற்காலத்துடனும்வரப்போகும் பிற்காலத்துடனும் இணைந்து எடைபோட்டுக் கொள்ளுதல் அரசியற்-கலாச்சாரத்தளத்தில் முதற்கட்ட நிபந்தனையாகும்.
சர்வதேச அரசியலில் அமெரிக்காவும் சோவியத்யுூனியனையும் மையங்களாகக் கொண்டு குவித்த இருமைக்குவிவரசியல் (டீipழடயச pழடவைiஉள) 1991 ஆம் ஆண்டு முடிவடைந்து அமெரிக்கா தலைமையிலான ஒருமையக்குவிவரசியல் (ருnipழடயச pழடவைiஉள) ஆரம்பமானது. இரு மையங்களில் ஒன்று வீழ்ந்ததும் அதற்குப் பதிலாக பலமையக்குவிவரசியல் (ஆரடவipழடயச pழடவைiஉள) தோன்றவில்லை. பிராந்திய அரசியல் கூட (சுநபழையெட pழடவைiஉள)எழவில்லை. அமெரிக்கா நேரடியாக ஒருமைக் குவிவரசியலுக்குள் பிரவேசித்தது. அமெரிக்காவின் ஒருமைய ஏகத்துவ அரசியலுக்கு இஸ்லாமிய வட்டாரங்கள் சிலவற்றிலும். கிழக்காசிய பிராந்தியத்திலும் சவால்கள் இருந்தனவே தவிர அவை சர்வதேச அரசியலின் பரந்த பொதுப் போக்காய் அமையவில்லை. வளைகுடாவில் அமெரிக்காவிற்கு ஈராக் சவாலாய் அமைந்தபோது அமெரிக்கா உலகநாடுகளைத் தன்பக்கம் குவித்து ஈராக்கைத் தாக்கியது. அந்த யுத்தத்தில் உலகநாடுகள் இருமையங்களாகக் குவியவில்லை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையிலும் அமெரிக்கா பக்கம் உலகநாடுகள் ஒன்றாய்க் குவிக்கப்பட்டனவே தவிர இரு அணிகளாக நாடுகள் குவியவில்லை. ஒரு மக்கள் கூட்டமானது தான் வாழும் காலகட்டத்தின் தன்மையையும், பண்பையும் சர்வதேசாPதியாகவும், உள்நாட்டு hPதியாகவும் தன்நோக்கு நிலையிலிருந்து எடைபோட வேண்டியது அவசியம். இந்தவகையில் வரலாற்றுக் காலகட்டங்களை புதுயுகம் (நேற நுசய) என்றும் இடைமாறு காலம் (வுசயளெவைழையெட pநசழைன) என்றும், ஆக்ககாலம் (குழசஅயவiஎந pநசழைன) என்றும் இன்னும் பலவாக வகைப்படுத்துவா .
தற்போதைய சூழலில் உலகளாவிய hPதியில் வரலாறு எத்தகைய காலகட்டத்துள் பிரவேசித்துள்ளது என்பதை முதலில் எடைபோட வேண்டும். வன்னியின் தகவல் வறுமைப் பின்னணியிவிருந்து அப்படி ஓர் எடைபோடுதலைச் செய்வது கடினம். ஆனால் அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து, அதாவது அமெரிக்கா தன்னை எவ வாறு ஆக்கிக் கொள்கிறது என்பதிலிருந்து ஒரு குறுக்கு வெட்டான எடை போடலைச் செய்யலாம்.
கௌதம புத்தர், ஜேசுகிறிஸ்து, கால்மாக்ஸ் போன்றோர் உலகை முழு அளவிற் சிந்தித்தனர். அலெக்சாண்டர், நெப்போலியன் பொனபாட் போன்றோர் உலகை முழ அளவில் ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டனர். தம்தம் நிலையிலிருந்து தத்தமது கண்ணுக்குப் பட்ட உலகை அவர்கள் முழு அளவாகக் கொண்டு சிந்தித்தனர், ஆசைப்பட்டனர். அப்படிப் பார்த்தால் இற்றைக்கு 2500 ஆண்டுகளாக இந்த எண்ணமுண்டு 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாதான் தன்னை 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம்' என்று கூறி உலகின் நாற்புறங்களிலும் ஆகப்பெரிய சாம்ராச்சியத்தை நிறுவிக் கொண்டது. ஆயினும் வேறு பல பகுதிகள் இருந்தன. ஆனால் இப்போதுதான் உலகளாவிய அர்த்தத்தில் இந தப் புூமி அமெரிக்காவின் பரந்த அரசியற் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. இதன்படி அமெரிக்கா உலகின் முதலாவது ஏகவல்லரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் நிலையில் இது ஒரு புதுயுகமே. அதாவது முதலாவது ஏகவல்லரசு யுகம். இதனை நல்லது என்று நான் வர்ணிக்கவில்லை. ஆனால் இதுவே இரத்தமும், தசையுமான யாதார்த்தம்.
முதலாளித்துவம் ஒரு யுகம். கொம்யுூனிஸம் இன்னொரு யுகம். கொம்யுூனிஸத்திற்கான இடைமாறு காலகட்டமே சோசலிஸம் என்று மாக்ஸிஸம் கூறுகின்றது. அப்படியாயின் சோசலிஸம் எனும் இடைமாறு காலகட்டத்திற்கு என்ன நடந்தது? வரலாற்றில் இப்போது அதன் நிலை என்ன? இக்கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது முதலில் அவசியம்.
சர்வதேச சோசலிஸத்திற்கு தலைமை தாங்கத் தொடங்கிய சோவியத் யுூனியன் சுமராக முக்கால் நூற்றாண்டின் பின்பு வீழ்ந்து முதலாளித்துவ அமைப்பிற்குத் திரும்பிச் சென்றது. இத்துடன் சர்வதேச சோஸலிஸத்திற்கான தலைமை அரசமைப்பென்பது முடிவுக்கு வந்துள்ளது. சீனா தன்னிடம் உள்நாட்டுச் சோஸலிஸம் இருப்பதாகக் கூறுகிறது. எப்படியோ சர்வதேச சோஸலிஸம் என்பது அரசமைப்பு hPதியாக முடிந்துள்ளதென்பது விவாதத்திற்கிடமற்ற விடயம். அப்படியென்றால் சோஸலிஸம் அரசமைப்பு hPதியாக ஏன் வீழ்ந்தது என்ற கேள்விக்கு விருப்பு - வெறுப்பிற்கப்பால் விடைகாணவேண்டும்.
இதனைப் பின்வருமாறு விளங்குவோம் மாக்ஸ் உன்னதமான சோசலிஸ அமைப்பை விஞ்ஞான புூர்வமாகச் சிந்தித்தார். முதலாளித்துவ ஜனநாயகத்தை விடவும் சோஸலிஸ ஜனநாகம் மேலும் சிறப்பானதே என அவர் விளங்கியிருந்த போதிலும் சோஸலிஸத்திற்கான கட்சிக் கட்டமைப்பை முதலாளித்துவ ஜனநாயகக்கட்சி முறைக்கூடாவே சிந்தித்து வடிவமைத்தார். ஆனால் லெனின் சோஸலிஸக்கட்டமைப்பிற்கு ஏற்றதும், இருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்தை விடச் சிறப்பானதுமான ஜனநாயகத்தை உருவாக்க விரும்பி "ஜனநாயக மத்தியத்துவக் கட்சி முறை" எனும் புதிய அம்சத்தை உருவாக்கினார். சோஸலிஸ சமூகமைப்பிற்கும், நிறுவன அமைப்பிற்கும் வரலாற்றில் முன்னுதாரணமில்லை. ஆதலால் நாம் புதிதாகவே உருவாக்கி அதனைப் பரிசோதித்துப் பார்த்தே முடிவுக்கு வரவேண்டும். என்று லெனின் கூறினார். துரதிஸ்ட வசமமாக அவற்றிக்குப் பின்வந்தோர் ஜனநாயக மத்தியஸ்துவத்தை எதேச்சாதிகாரத்தை நோக்கிப் பிரயோகித்து விட்டனர்.
இதனை விளகுவது கஸ்டமில்லை. மாக்ஸ், லெனின் ஆகியோர் சகல அதிகாரங்களும் பாட்டாளிகளுக்கே என்று கூறினர். ஆனால் பின்வந்தோர் சகல அதிகாரங்களும் எதேச்சாதிகாரிகளுக்கே என்ற தோரணையில் அதனைப் பிரயோகித்து விட்டனர். இதனை வரலாற்று hPதியாகப் பின்வருமாறு நோக்கலாம். அதாவது புரட்சிக்கு முன்பான ரஸ்யாவில் மன்னராட்சிக் கொடுங்கோன்மைப் பொலிஸ் இராச்சியமே (Pழடiஉந ளவயவந)நிலவியது. அந்த மன்னராட்சிக் கொடுங்கோன்மைப் பொலிஸ் இராச்சியக் கலாச்சாரத்தையே லெனினிற்குப் பின்வந்தோர் சோஸலிஸ அரசமைப்புக்கான கலாச்சாரமாகவும் பேணினர்.
மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்திருந்தது போல ரஸ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகமாவது புரட்சிக் கட்டத்தில் வளர்ந்திருக்கவில்லை. மக்களின் அனுபவம் மன்னராட்சி எதேச்சாதிகாரமேதான். இந்தப் பின்னணியில் ஜனநாயகப் பாரம்பரியம் வளர்ந்திராத ரஸ்ய மக்கள் மீது மன்னராட்சி எதேச்சாதிகார பொலிஸ் இராச்சியத்தைப் பிரயோகிப்பது சாத்தியப்பட்டது. இந்த எதேச்சதிகாரம் மக்களுக்கு வாயும், வயிறும் இருப்பதை ஒப்புக்கொண்ட போதிலும் வயிற்றுக்கான ஒரு விநியோகப் பாதையாக மட்டுமே வாயைக் கருதியது. மனிதனை ஒரு சோற்றுப் பிராணியாகவே கருதினர். சீனக்கொம்யுூனிசம் மனிதனுக்குச் சோறாவது போட்டது ஆனால் ரஸ்யாவில் அதுகூட நிகழவில்லை,
அதேவேளை சீனாவும் வரலாற்றில் ஜனநாயகம் பாரம்பரியங்கள் எட்டாது மூலையுள் ஒதுங்கி கிடந்தநாடு. ஆதலால் சீனப்பேரரசுக் கொடுங்கோண்மைக் காலச்சாரத்தையே மா ஓ-சேதுங் தேசியவாதத்தின் பெயராலும், கொம்யுூனிஸத்தின் பெயராலும் பிரயோகிப்பது சாத்தியப்பட்டது. ஆதலால் சீனக் கொம்யுூனிஸமும் அடிப்படையில் சீனப் பேரரசவாதக் கொடுங்கோண்மை எதேச்சாதிகாரத்தை சோசலிஸ அரச இயந்திரத்திற்கான இயக்க சக்தியாய்ப் புூட்டி விட்டது.
"மக்கள் யுகம்", "சாமானியரின் சகாப்தம்" என்று கூறினர். இது மன்னனுக்கு மாறான மக்கள் யுகம் என்றால் மக்கள் அரசியலிற் பங்கெடுப்பதையே இது கருதும். மக்களை அரசியலில் பங்கெடுக்க வைப்பதென்பது ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். ஆனால் மக்கள் யுகம் என்று கூறிக்கொண்டு ஆயுட்கால சக்கரவா த்திகளாய் கொம்யுூனிஸக் கட்சித் தலைவர்கள் சிம்மாசனமேறினர். இந்த நவீன சக்கரவா த்திகளின் எதேச்சாதிகாரத்தின் கீழ் சோஸலிஸம் தோல்வியடைந்தது. அதாவது ஜனநாயகம் இல்லையேல் புதிய எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள், ஊக்கம் என்பன தோன்ற முடியாது. ஆதலால் ஜனநாயகம் இல்லையேல் உற்பத்திச் சக்திகள் வளரமுடியாது. இந்த நிலையில் சோஸலிஸ அரசு முதலாளித்துவ அரசைவிட குறைந்த உற்பத்தியையும், வளர்ச்சியையுமே காட்டியது. இந்த ஒப்பீடும் பொருளாதார வளர்ச்சியின்மையும், உணவுப்பற்றாக்குறையுமே ரஸ்ய மக்கள் முதலாளித்துவத்தின் பக்கம் திரும்பிப்போக காரணமாய் அமைந்தது. லெனின் முதலாளித்துவத்தை விடக் கூடிய ஜனநாயகத்தைத் திட்டமிட்ட போதிலும் பின்வந்தோர் கொடுங்கோண்மை மன்னராட்சிக்குத் திரும்பிச் செல்லவே, ஜனநாயகம் நசிய சமூக வளர்ச்சியையும் நசித்தது. சக்கரவா த்திக் கொடுங்கோண்மைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவதிலிருந்தும், மேலான ஜனநாகத்தையாவது ஏற்பதிலிருந்துமே சோஸலிஸத்தைப் பற்றி இனிமேல் சிந்திக்கலாம்.
முதலாளித்துவத்தை விடவும் பிற்போக்கான மன்னராட்சிக் கொடுங்கோண்மை எதேச்சாதிகாரக் கலாச்சாரமே சோஸலிஸத்தை தோற்கடித்த முதல் எதிரி என்பதை விருப்பு, வெறுப்பிற்கப்பால் ஒப்புக்கொள்ளவேண்டும். அதாவது சர்வதேச சோஸலிஸம் தோற்றுவிட்டதென்பதை அபிப்பிராய பேதமின்றி அனைவரும் ஏற்கின்றனர். அப்படியென்றால் தோற்றதற்கான காரணத்தை விளக்க ஏன் நாம் மறுக்க வேண்டும். "வட்டத்தைக்" கீறிவிட்டு "சதுரம்" என்று சாதித்துக் கொண்டிருக்கக்கூடாது. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் சோஸலிஸத்தின் தோல்வி அதன் ஜனநாயகமின்மையிற் குடி கொண்டுள்ளதென்பது முதலாவது விடயம். மன்னராட்சி எதேச்சாதிகாரங்களுக்கு எதிராக மனிதகுலம் பெரும் விடுதலைப் போராட்டங்களை நடத்திப் பெற்றுக் கொண்ட ஒரு ஜனநாயக உரிமைகளே மக்களின் அரசியற், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான கருவிகளாகும். அந்த ஜனநாயகத்தை மேலும் சிறப்பானதாகத் தீட்டியெடுக்க வேண்டுமே தவிர வரலாறு கழித்து விட்ட மன்னராட்சி எதேச்சதிகாரத்தை கையிலேந்துவதல்ல எமது பணி. அவ வாறு சோஸலிஸ அரசமைப்பானது எதேச்சதிகாரத்தைப் பிரயோகித்ததன் மூலம் அது இரண்டாயிரமாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று சோஸலிஸத்தை பழைய சகதிக்குள் புதைத்துவிட்டது.
மேற்கு ஐரோப்பாவிற்கு அருகே ரஸ்யா அமைந்திருப்பதால் மேற்கைரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகக் காற்றை ரஸ்யா சுவாசிக்கக் கூடியதாக இருந்ததால் அது விரைவிற் குறைந்தபட்ச ஜனநாயகத்தின் பக்கம் திரும்பியது. இவ வாறான நிலையில் முக்கால் நூற்றாண்டின் பின்னாவது ரஸ்யா ஜனநாக சிந்தனையை யாசித்தது. அதேவேளை பேரரச எதேச்சாதிகாரக் கலாச்சரத்துள் மூழ்கியுள்ள ஆசியாவின் ஒதுக்குப்புறச் சீனா ஜனநாயத்தை யாசிக்க இன்னும் சில பத்தாண்டுகளெடுக்குமோ? சீனா இப்போது திறந்த சந்தை முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அடியெடுத்து வைத்துவிட்டது. ஆனால் அரசியற் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்து. இந்த இரண்டுக்குமிடையேயான முரண்பாடு கிளர்ச்சியாய் வெடிக்க பல பத்தாண்டுகளாகும்.
அப்படியாயின் சோஸலிஸம் தோற்றுவிட்டதா? இல்லை; இல்லவேயில்லை. சோஸலிஸத்தை தனது மூக்கிற் காவிச்சென்ற மன்னராட்சிக் கொடுங்கோண்மை எதேச்சாதிகார அரசமைப்புத்தான் பிசகியதே தவிர சோஸலிஸமல்ல.
இத்தனைக்கும் மத்தியில் சோஸலிஸத்தின் உயிர்வாழ்வை வரலாற்றில் பின்வருமாறு அடையாளம் காணலாம். அதாவது சோஸலிஸத்தின் எழுச்சியை எதிர்கொள்வதற்காக, முதலாளித்துவம் தனது அரச அதிகாரத்தை தக்க வைப்பதற்காக, புரட்சியைத் தடுப்பதற்காக சோஸலிஸத்தின் சில கோரிக்கைகளை தானே அமுற்படுத்த தலைப்பட்டு சமூகநலன் பேண் அரசமைப்பு (றுநடகயசந ளுவயவந) என்பதை உருவாக்கியது. முதலாளித்துவம் இதனை எதிh ப்புரட்சி நடவடிக்கையாகவேதான் மேற்கொண்டது. ஆனால் அவ வாறு இதில் எமக்குச் சொல்லும் பாடம் என்னவெனில் முதலாளித்துவம் கூட சோஸலிச இலட்சியம் சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் முதலாளித்துவத்தைத் தக்க வைக்கவேண்டிய அளவிற்கு சோஸலிஸம் வரலாற்றுத் தேவையாகிவிட்டது. அதனால் சோஸலிஸம் வரலாற்றில் இனியும் எழுந்து நிமிரக்கூடிய ஓர் அவசியத்தையும், வரலாற்று நிர்ணயத்தையும் கொண்டுள்ளது என்பதை தெளிவுறப் புரியலாம். சோஸலிஸம் என்பது ஒரு வெறும் மனவிருப்பல்ல. அது ஒரு வரலாற்றுத் தேவையும், விஞ்ஞானபுூர்வமான வரலாற்று வளர்ச்சியைக் கொண்டுள்ளதும் அதற்கேற்ப விஞ்ஞான புூர்வமான அறிவியல் அணுகுமுறையைக் கோரிநிற்பதுமாகும். எனவே சோஸலிஸம் தனது இடைமாறு காலகட்டத்தில் பிழையான அணுகுமுறைகளால் உருமாறிப் போய்விட்டது.
இப்போது இப்படி தர்க்கபுூர்வ முடிவுக்கு வருவோம். சோஸலிஸம் ரஸ்யாவினதும், சீனாவினதும் சீரானதும் பழைய பேரரசுவாத எதேச்சதிகாரத்துக்குட் சிக்குண்டு போனதால் அமெரிக்கா உச்ச ஏகாதிபத்தியத்திற்கான நவீன ஏகப்பேரரசாக தன்னை உலகிற் ஸ்தாபித்துவிட்டது. பண்டையப் பேரரசுகளுக்கும், நவீன ஏகப்பேரரசுக்கும் அப்பால் உலகளாவிய hPதியில் மக்கள் சிறப்பான ஜனநாயகம் நோக்கி முன்னேற வேண்டும். மன்னராட்சி கொடுங்கோண மையைக் காப்பாற்ற, பீரங்கிக் கப்பல்களினதும், ஏவுகணைகளினதும், நவீன கதிரியக்க ஆயுதங்களதும் மிரட்டல் ஜனநாயகத்திற்கும் அப்பால் மக்களுக்கு சுதந்திரமாகச் சிந்திக்கவல்ல,செயற்படவல்ல ஜனநாயகம் வேண்டும். எதேச்சதிகாரத்தால் அமிர்தமே கிடைக்குமாயினும் அது வேண்டாம். பால்பழ முண்ணும் கூண்டுக் கிளியை விடவும் தானியம் பொறுக்கும் சிட்டுக்குருவி மேல் என்ற சிந்தனையின் கீழ் சோஸலிஸத்தை வடிவமைத்தாற்தான் பாலாலும், தேனாலும் மிக்க சோஸலிஸம் சாத்தியப்படும்.
ஆதலால் இப்போதைய எமது காலம் என்பது என்னவெனில் சோஸலிஸம் உருத்திரிந்து விட்ட காலமும், அமெரிக்கா முதலாவது ஏகப் பேரரசாக வந்துவிட்ட யுகமுமாகும்.
"முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம் என்ற ஒரு புதுக்கண்டுபிடிப்பை மாக ஸிஸத்திற்கு லெனின் வழங்கினாh ஆனால் அந்த ஏகாதிபத்தியம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் தொடர்வளர்ச்சியடைந்து செல்கின்றது. ஆதலால் ஏகாதிபத்தியம் பல கட்டங்களைக் கொண்டுள்ளதென்பது தெரிகின்றது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு இருக்கக்கூடிய கட்டங்கள் எத்தனை? இப்போது எத்தனையாவது கட்டத்தில் நாம் நிற்கிறோம்? ஏகப்பேரரசுவாதம் அப்படியாயின் அது எவ வாறானது போன்ற தத்துவாh த்த விடயங்களை மேற்கொண்டு யாரும் ஆராய வேண்டும். சோஸலிஸம் உருத்திரிந்துவிட்டதும் அமெரிக்கா ஏகப்பேரரசாகி விட்டதுமான காலகட்டம்தான் இது என்பதை பெருவெட்டாக வரையறை செய்யலாம். எனவே இத்தகைய சர்வதேச காலகட்டத்தில் உலகிலுள்ள பல்வேறு மக்கள் கூட்டமும் தமது தனி வீடுகூட சூழலுக்கேற்ப எத்தகைய காலகட்டப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன என்பதை சர்வதேச நிலமையுடன் பொருத்தித் தனித்தனியே வரையறை செய்ய வேண்டும்.
இருமையக்குவிவரசியல் செயற்பட்டு வந்த காலத்தில் பொதுவாக உலகநாடுகள், குறிப்பாக சிறிய நாடுகள் மேற்படி இரு மையங்களுக்குமிடையே ஓடிப்பிடித்தும், ஒளித்துப்பிடித்தும் விளையாட முடிந்தது. இரண்டுக்கும் இடையே தப்பியோடவும் முடிந்தது. ஆனால் தற்போதைய ஒருபடைக்குவிப்பு அரசியலானது சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற அரசுகளையே பணியவும் வைத்து விட்டது. அப்படியாயின் சிறியரசுகளின் நிலை முற்றிலும் கதியற்றதாகி விட்டது.
இந்தப் பரிதாபகரமான வரலாற்று இக்கட்டத்திலிருந்து கொண்டே மேற்படி நாடுகள் தமது ஆகக்கூடிய நன்மைக்கான பாத்திரத்தை எடைபோட்டு தம்மை வழிப்படுத்த வேண்டும். இந்தப் பெரும் பரபரப்புக்குள் வைத்தே இந்தியாவின் காலகட்டப் பாத்திரம், இலங்கையின் காலகட்டப் பத்திரம், தமிழீழ மண்ணின் காலகட்டப் பாத்திரமென ஒவ வொரு மக்கள் கூட்டமும் தத்தமது நிலையிலிருந்து இதனை எடைபோட்டு வகைப்படுத்த வேண்டும். இந்த வகையில் இலங்கை, ஈழம் என தனித்தனியே இவற்றின் காலகட்டப் பாத்திரத்தை எடைபோடும் பணி அடுத்த கட்டமாகும். அதனை இனிமேற்தான் ஆராய வேண்டும். துறைசார்ந்த பலரும் முயற்சிக்கலாம்.
மனிதகுலத்தின் வயது சுமாரக இருபது இலட்சம் ஆண்டுகள் கடந்த ஒரு நூற்றாண்டுகால வளர்ச்சியானது அதற்கு முற்பட்ட இலட்சக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியை விடவும் பெரிது. இனி வரப்போகும் சில பத்தாண்டுகால வளர்ச்சி இற்றைவரையான முழுவளர்ச்சியை விடவும் பெரிது. ஏனெனில் மனிதகுல வரலாற்று வளர்ச்சியானது எப்போதும் இதற்கு முற்பட்ட காலகட்ட வளர்ச்சியின் அனைத்iதையும் ஒன்று திரட்டிய கூட்டுவேக வளர்ச்சியைக் கொண்டது.
19ஆம் நூற்றாண்டு மாக்ஸிஸத்தை லெனின் 20ஆம் நூற்றாண்டிற்குரிய மாக்ஸிஸமாக 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளா த்தெடுத்தார். சில குறைபாடுகளுடனாயினும் அது வளர்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு அது தொடர்வளர்ச்சியடையவில்லை. அதேவேளை முதலாளித்துவம் பல்வேறு நிறுவன அமைப்புக்களினதும் பங்களிப்புடன் நேர்கணிய வளர்ச்சியைத் தொடர்ந்தடையலாயிற்று.
முதலாளித்துவத்திற் காணப்படும் அடிப்படை ஜனநாயகமும், நிறுவனங்களின் பலமும் ஊக்குவிப்புக்களும் இவ வாறான முதலாளித்துவ வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. இந்த வகையிற் பார்க்கும் போது சோஸலிஸ சித்தாந்தம் ஸ்தம்பிதமும், குழப்பமும், சிலவேளைகளில் எதிர்நிலை வளர்ச்சியும் அடைந்துள்ளது. இந்நிலையிற் சோஸலிஸம் பொறுத்து ஒரு தத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையுடனும், சமூகப்பொறுப்புணர்ச்சியுடனும் நுணுக்கமாகத் திட்டமிடவேண்டியுள்ளது. வளர்ச்சியென்பது தொடர்ச்சியான மாற்றங்களே என்பதால் முற்றிலும் புதிய சூழலைக் கருத்திற்கெடுத்து பழமை மேன்மைக் கோட்பாட்டுடன் சிறையுண்டு போகாது முற்றிலும் நவீனமாகச் சிந்திக்க வேண்டும் இந்நிலையில் ஒரு சிந்தனை மாற்றம் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
பண்பாடென்றால் ஆடை ஆபரணங்கள் தானென மனதைச் சுருக்கிக்கொள்ளாது செழிப்பான, பரந்த நவீன பண பாட்டு வளர்ச்சிக்கும் போகவேண்டும். அடிமைக் கலாச்சாரங்களைத் தூக்கியெறிந்து ஒவ வொருவரது சுயகௌரவத்தையும், சுதந்திரமான செயற்பாட்டிற்குரிய உரிமைகளையும் பண்பாடென யாசிக்க வேண்டும். சிறப்பான ஜனநாயக மென்பது ஒரு சிறந்த பண்பாடு; ஒரு சிறந்த வாழ்க்கை முறை; ஒரு சிறந்த மனப்பாங்கு, அதற்கூடாக அனைத்து வழிகளிலும் திறந்து, நிமிh ந்த ஒரு நவீன கண்ணோட்டமிக்க பண்பாட்டைத்தான் நாம் முதலர்த்தத்திற் பண்பாடென ஏற்றுக்கொள்ளலாம். இப்போது உலகிற் போராடும் அனைத்து மக்களுக்கும் முதலிற் தேவைப்படுவது ஒரு புதிய சிந்தனை மாற்றமே.
மு. திருநாவுக்கரசு
எங்கு போகப்போகின்றோம்?
அடுத்தது என்ன?
பண்பாடென்றால் ஆடை ஆபரணங்கள் தானென மனதைச் சுருக்கிக்கொள்ளாது செழிப்பான, பரந்த நவீன பண பாட்டு வளர்ச்சிக்கும் போகவேண்டும். அடிமைக் கலாச்சாரங்களைத் தூக்கியெறிந்து ஒவ வொருவரது சுயகௌரவத்தையும், சுதந்திரமான செயற்பாட்டிற்குரிய உரிமைகளையும் பண்பாடென யாசிக்க வேண்டும். சிறப்பான ஜனநாயக மென்பது ஒரு சிறந்த பண்பாடு; ஒரு சிறந்த வாழ்க்கை முறை ; ஒரு சிறந்த மனப்பாங்கு, அதற்கூடாக அனைத்து வழிகளிலும் திறந்து, நிமிh ந்த ஒரு நவீன கண்ணோட்டமிக்கப் பண்பாட்டைத்தான் நாம் முதலர்த்தத்திற் பண்பாடென ஏற்றுக்கொள்ளலாம். இப்போது உலகிற் போராடும் அனைத்து மக்களுக்கும் முதலிற் தேவைப்படுவது ஒரு புதிய சிந்தனை மாற்றமே.
எங்கு நிற்கின்றோம்?
எங்கு போகப்போகின்றோம்?
அடுத்தது என்ன?
இவையே வரலாற்றை முன்னேற்றத் திட்டமிடுவோரின் திறவுகோல்கள். வரலாற்று முன்னேற்றமென்பது எவரினது மனவிருப்பங்களிலும் தங்கிபிருப்பதில்லை. காணப்படும் நிலைமைகளைப் பொருத்தமான வகையிற் கையாள்வதிலேயே முன்னேற்றம் தங்கியுள்ளது. வரலாறு தரும் காலகட்ட வாய்ப்புக்களை அதேஅளவிற்கு விளங்கி அதற்கேயுரிய பங்கையும், பாத்திரத்தையும் வகிப்பதன் மூலம் மட்டுமே வரலாற்றை மேல் நோக்கி உந்த முடியும். இவ வாறு முன்னேற்றத்திற்கேற்ற மேன்மையான பாத்திரம் வகிப்பதற்குரிய முன்நிபந்தனை என்னவெனில் விளங்கிக்கொள்வதும். முன்னேற்றத்திற்கான கருக்களும் விதிகளும் அந்த வரலாற்றுக் கட்டத்தில் எவ வாறு காணப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதும்தான்.
பிரபஞ்சமும் மனித வாழ்வும் இடையறாது மாறிக்கொண்டேயிருக்கின்றன. நேற்றிருந்தது போல் இன்று எதுவுமே இருக்க முடியாது. நேற்றைய அரசியலிலிருந்து இன்றைய அரசியல் மாறியுள்ளது. விஞ்ஞான, தொழில் நுட்ப, சிந்தனை வளர்ச்சியுடனும் அவைசாh ந்து மொத்தத்திலேற்படும் சமூக,அரசியற், பொருளாதார மாற்றங்கள், உரிமை வளர்ச்சிகள், வாழ்நிலையெண்ணங்கள், மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு இயற்கைச் சூழ்நிலைகள் ஆகிய அனைத்தையும் திரட்டியெடுத்து வரலாறு அவ வப்போது மனிதனிடம் ஒருபாத்திரத்தை நீட்டும். அந்தப் பாத்திரத்திற்கேற்ற பங்கை வகிக்குமாறு வரலாறு மனிதனைக் கோரிநிற்கும்.
அவ வாறு அவ வப்போது வரலாறு நீட்டும் பாத்திரத்திற்கேற்ப ஒரு முன்னேற்றகரமான பங்கை மனிதன் வகிக்கின்றானா இல்லையா என்பதிற்தான் மனிதன் முக்கியத்துவமும், முன்னேற்றமும் தங்கியுள்ளதே தவிர வெறும் மனவிருப்பங்களிலும், மனவேகங்களிலும், மனக் கோட்டைகளிலுமல்ல. இந்த நிபந்தனைகளை மீறிச்சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் பெயர்தான் கற்பனாவாதம். கற்பனாவாதம் வளர்ச்சியின் எதிரியென்பதை 19ம் நூற்றாண்டு ஐரோபிப்பிய சிந்தனையாளர்கள் அடையாளங்கண்டனர்.
இந்தக் கற்பனாவாதம் (டுவைழியைnளைஅ) பார்வைக்கு அழகானதாயும், ஆனால் செயலில் அது எதிர் மறையான பலனுக்கே போகும். எனவே வரலாற்றை முன்னேற்றுவதற்கு வரலாற்றில் காணப்படும் வாய்ப்புக்கள் எவை என்பதைக் கண்டறிவதே அவற்றிற்கான முதல் நிபந்தனையும், முதற் பணியுமாகும்.
எமது காலம் எத்தகையது? இதில் எமக்குள் வாய்ப்புக்களும். வாய்ப்பின்மைகளும் எவை? இவற்றிற்கு விடைகாண வேண்டியதுதான் எமது சமூக, அரசியற், கலாச்சாரச் சிந்தனையாளர்களின் முதற்பணி. வாழும் காலகட்டத்தை சாராம்சத்தில் எடைபோடத்தவறினால், எமது காலம் இதற்கு முந்திய காலகட்டத்துடன் எத்தகைய வளர்ச்சித் தொடரைக் கொண்டுள்ளதென அறியத் தவறினால், காணப்படும் காலகட்டத்தை எதிர்கால வளர்ச்சியை முன்னேற்ற முடியாது போவதுடன் நிகழ்காலத்ததை மட்டுமன்றி எதிர்காலத்தையும் சீரழித்த பழிக்கு ஆளாக வேண்டிவரும். ஆதலால் உலகிலுள்ள எந்தவொரு மனிதக் கூட்டமும் எப்போதும் தாம் வாழும் தற்காலத்தை முதற்காலத்துடனும்வரப்போகும் பிற்காலத்துடனும் இணைந்து எடைபோட்டுக் கொள்ளுதல் அரசியற்-கலாச்சாரத்தளத்தில் முதற்கட்ட நிபந்தனையாகும்.
சர்வதேச அரசியலில் அமெரிக்காவும் சோவியத்யுூனியனையும் மையங்களாகக் கொண்டு குவித்த இருமைக்குவிவரசியல் (டீipழடயச pழடவைiஉள) 1991 ஆம் ஆண்டு முடிவடைந்து அமெரிக்கா தலைமையிலான ஒருமையக்குவிவரசியல் (ருnipழடயச pழடவைiஉள) ஆரம்பமானது. இரு மையங்களில் ஒன்று வீழ்ந்ததும் அதற்குப் பதிலாக பலமையக்குவிவரசியல் (ஆரடவipழடயச pழடவைiஉள) தோன்றவில்லை. பிராந்திய அரசியல் கூட (சுநபழையெட pழடவைiஉள)எழவில்லை. அமெரிக்கா நேரடியாக ஒருமைக் குவிவரசியலுக்குள் பிரவேசித்தது. அமெரிக்காவின் ஒருமைய ஏகத்துவ அரசியலுக்கு இஸ்லாமிய வட்டாரங்கள் சிலவற்றிலும். கிழக்காசிய பிராந்தியத்திலும் சவால்கள் இருந்தனவே தவிர அவை சர்வதேச அரசியலின் பரந்த பொதுப் போக்காய் அமையவில்லை. வளைகுடாவில் அமெரிக்காவிற்கு ஈராக் சவாலாய் அமைந்தபோது அமெரிக்கா உலகநாடுகளைத் தன்பக்கம் குவித்து ஈராக்கைத் தாக்கியது. அந்த யுத்தத்தில் உலகநாடுகள் இருமையங்களாகக் குவியவில்லை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையிலும் அமெரிக்கா பக்கம் உலகநாடுகள் ஒன்றாய்க் குவிக்கப்பட்டனவே தவிர இரு அணிகளாக நாடுகள் குவியவில்லை. ஒரு மக்கள் கூட்டமானது தான் வாழும் காலகட்டத்தின் தன்மையையும், பண்பையும் சர்வதேசாPதியாகவும், உள்நாட்டு hPதியாகவும் தன்நோக்கு நிலையிலிருந்து எடைபோட வேண்டியது அவசியம். இந்தவகையில் வரலாற்றுக் காலகட்டங்களை புதுயுகம் (நேற நுசய) என்றும் இடைமாறு காலம் (வுசயளெவைழையெட pநசழைன) என்றும், ஆக்ககாலம் (குழசஅயவiஎந pநசழைன) என்றும் இன்னும் பலவாக வகைப்படுத்துவா .
தற்போதைய சூழலில் உலகளாவிய hPதியில் வரலாறு எத்தகைய காலகட்டத்துள் பிரவேசித்துள்ளது என்பதை முதலில் எடைபோட வேண்டும். வன்னியின் தகவல் வறுமைப் பின்னணியிவிருந்து அப்படி ஓர் எடைபோடுதலைச் செய்வது கடினம். ஆனால் அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து, அதாவது அமெரிக்கா தன்னை எவ வாறு ஆக்கிக் கொள்கிறது என்பதிலிருந்து ஒரு குறுக்கு வெட்டான எடை போடலைச் செய்யலாம்.
கௌதம புத்தர், ஜேசுகிறிஸ்து, கால்மாக்ஸ் போன்றோர் உலகை முழு அளவிற் சிந்தித்தனர். அலெக்சாண்டர், நெப்போலியன் பொனபாட் போன்றோர் உலகை முழ அளவில் ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டனர். தம்தம் நிலையிலிருந்து தத்தமது கண்ணுக்குப் பட்ட உலகை அவர்கள் முழு அளவாகக் கொண்டு சிந்தித்தனர், ஆசைப்பட்டனர். அப்படிப் பார்த்தால் இற்றைக்கு 2500 ஆண்டுகளாக இந்த எண்ணமுண்டு 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாதான் தன்னை 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம்' என்று கூறி உலகின் நாற்புறங்களிலும் ஆகப்பெரிய சாம்ராச்சியத்தை நிறுவிக் கொண்டது. ஆயினும் வேறு பல பகுதிகள் இருந்தன. ஆனால் இப்போதுதான் உலகளாவிய அர்த்தத்தில் இந தப் புூமி அமெரிக்காவின் பரந்த அரசியற் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. இதன்படி அமெரிக்கா உலகின் முதலாவது ஏகவல்லரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் நிலையில் இது ஒரு புதுயுகமே. அதாவது முதலாவது ஏகவல்லரசு யுகம். இதனை நல்லது என்று நான் வர்ணிக்கவில்லை. ஆனால் இதுவே இரத்தமும், தசையுமான யாதார்த்தம்.
முதலாளித்துவம் ஒரு யுகம். கொம்யுூனிஸம் இன்னொரு யுகம். கொம்யுூனிஸத்திற்கான இடைமாறு காலகட்டமே சோசலிஸம் என்று மாக்ஸிஸம் கூறுகின்றது. அப்படியாயின் சோசலிஸம் எனும் இடைமாறு காலகட்டத்திற்கு என்ன நடந்தது? வரலாற்றில் இப்போது அதன் நிலை என்ன? இக்கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது முதலில் அவசியம்.
சர்வதேச சோசலிஸத்திற்கு தலைமை தாங்கத் தொடங்கிய சோவியத் யுூனியன் சுமராக முக்கால் நூற்றாண்டின் பின்பு வீழ்ந்து முதலாளித்துவ அமைப்பிற்குத் திரும்பிச் சென்றது. இத்துடன் சர்வதேச சோஸலிஸத்திற்கான தலைமை அரசமைப்பென்பது முடிவுக்கு வந்துள்ளது. சீனா தன்னிடம் உள்நாட்டுச் சோஸலிஸம் இருப்பதாகக் கூறுகிறது. எப்படியோ சர்வதேச சோஸலிஸம் என்பது அரசமைப்பு hPதியாக முடிந்துள்ளதென்பது விவாதத்திற்கிடமற்ற விடயம். அப்படியென்றால் சோஸலிஸம் அரசமைப்பு hPதியாக ஏன் வீழ்ந்தது என்ற கேள்விக்கு விருப்பு - வெறுப்பிற்கப்பால் விடைகாணவேண்டும்.
இதனைப் பின்வருமாறு விளங்குவோம் மாக்ஸ் உன்னதமான சோசலிஸ அமைப்பை விஞ்ஞான புூர்வமாகச் சிந்தித்தார். முதலாளித்துவ ஜனநாயகத்தை விடவும் சோஸலிஸ ஜனநாகம் மேலும் சிறப்பானதே என அவர் விளங்கியிருந்த போதிலும் சோஸலிஸத்திற்கான கட்சிக் கட்டமைப்பை முதலாளித்துவ ஜனநாயகக்கட்சி முறைக்கூடாவே சிந்தித்து வடிவமைத்தார். ஆனால் லெனின் சோஸலிஸக்கட்டமைப்பிற்கு ஏற்றதும், இருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்தை விடச் சிறப்பானதுமான ஜனநாயகத்தை உருவாக்க விரும்பி "ஜனநாயக மத்தியத்துவக் கட்சி முறை" எனும் புதிய அம்சத்தை உருவாக்கினார். சோஸலிஸ சமூகமைப்பிற்கும், நிறுவன அமைப்பிற்கும் வரலாற்றில் முன்னுதாரணமில்லை. ஆதலால் நாம் புதிதாகவே உருவாக்கி அதனைப் பரிசோதித்துப் பார்த்தே முடிவுக்கு வரவேண்டும். என்று லெனின் கூறினார். துரதிஸ்ட வசமமாக அவற்றிக்குப் பின்வந்தோர் ஜனநாயக மத்தியஸ்துவத்தை எதேச்சாதிகாரத்தை நோக்கிப் பிரயோகித்து விட்டனர்.
இதனை விளகுவது கஸ்டமில்லை. மாக்ஸ், லெனின் ஆகியோர் சகல அதிகாரங்களும் பாட்டாளிகளுக்கே என்று கூறினர். ஆனால் பின்வந்தோர் சகல அதிகாரங்களும் எதேச்சாதிகாரிகளுக்கே என்ற தோரணையில் அதனைப் பிரயோகித்து விட்டனர். இதனை வரலாற்று hPதியாகப் பின்வருமாறு நோக்கலாம். அதாவது புரட்சிக்கு முன்பான ரஸ்யாவில் மன்னராட்சிக் கொடுங்கோன்மைப் பொலிஸ் இராச்சியமே (Pழடiஉந ளவயவந)நிலவியது. அந்த மன்னராட்சிக் கொடுங்கோன்மைப் பொலிஸ் இராச்சியக் கலாச்சாரத்தையே லெனினிற்குப் பின்வந்தோர் சோஸலிஸ அரசமைப்புக்கான கலாச்சாரமாகவும் பேணினர்.
மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்திருந்தது போல ரஸ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகமாவது புரட்சிக் கட்டத்தில் வளர்ந்திருக்கவில்லை. மக்களின் அனுபவம் மன்னராட்சி எதேச்சாதிகாரமேதான். இந்தப் பின்னணியில் ஜனநாயகப் பாரம்பரியம் வளர்ந்திராத ரஸ்ய மக்கள் மீது மன்னராட்சி எதேச்சாதிகார பொலிஸ் இராச்சியத்தைப் பிரயோகிப்பது சாத்தியப்பட்டது. இந்த எதேச்சதிகாரம் மக்களுக்கு வாயும், வயிறும் இருப்பதை ஒப்புக்கொண்ட போதிலும் வயிற்றுக்கான ஒரு விநியோகப் பாதையாக மட்டுமே வாயைக் கருதியது. மனிதனை ஒரு சோற்றுப் பிராணியாகவே கருதினர். சீனக்கொம்யுூனிசம் மனிதனுக்குச் சோறாவது போட்டது ஆனால் ரஸ்யாவில் அதுகூட நிகழவில்லை,
அதேவேளை சீனாவும் வரலாற்றில் ஜனநாயகம் பாரம்பரியங்கள் எட்டாது மூலையுள் ஒதுங்கி கிடந்தநாடு. ஆதலால் சீனப்பேரரசுக் கொடுங்கோண்மைக் காலச்சாரத்தையே மா ஓ-சேதுங் தேசியவாதத்தின் பெயராலும், கொம்யுூனிஸத்தின் பெயராலும் பிரயோகிப்பது சாத்தியப்பட்டது. ஆதலால் சீனக் கொம்யுூனிஸமும் அடிப்படையில் சீனப் பேரரசவாதக் கொடுங்கோண்மை எதேச்சாதிகாரத்தை சோசலிஸ அரச இயந்திரத்திற்கான இயக்க சக்தியாய்ப் புூட்டி விட்டது.
"மக்கள் யுகம்", "சாமானியரின் சகாப்தம்" என்று கூறினர். இது மன்னனுக்கு மாறான மக்கள் யுகம் என்றால் மக்கள் அரசியலிற் பங்கெடுப்பதையே இது கருதும். மக்களை அரசியலில் பங்கெடுக்க வைப்பதென்பது ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். ஆனால் மக்கள் யுகம் என்று கூறிக்கொண்டு ஆயுட்கால சக்கரவா த்திகளாய் கொம்யுூனிஸக் கட்சித் தலைவர்கள் சிம்மாசனமேறினர். இந்த நவீன சக்கரவா த்திகளின் எதேச்சாதிகாரத்தின் கீழ் சோஸலிஸம் தோல்வியடைந்தது. அதாவது ஜனநாயகம் இல்லையேல் புதிய எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள், ஊக்கம் என்பன தோன்ற முடியாது. ஆதலால் ஜனநாயகம் இல்லையேல் உற்பத்திச் சக்திகள் வளரமுடியாது. இந்த நிலையில் சோஸலிஸ அரசு முதலாளித்துவ அரசைவிட குறைந்த உற்பத்தியையும், வளர்ச்சியையுமே காட்டியது. இந்த ஒப்பீடும் பொருளாதார வளர்ச்சியின்மையும், உணவுப்பற்றாக்குறையுமே ரஸ்ய மக்கள் முதலாளித்துவத்தின் பக்கம் திரும்பிப்போக காரணமாய் அமைந்தது. லெனின் முதலாளித்துவத்தை விடக் கூடிய ஜனநாயகத்தைத் திட்டமிட்ட போதிலும் பின்வந்தோர் கொடுங்கோண்மை மன்னராட்சிக்குத் திரும்பிச் செல்லவே, ஜனநாயகம் நசிய சமூக வளர்ச்சியையும் நசித்தது. சக்கரவா த்திக் கொடுங்கோண்மைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவதிலிருந்தும், மேலான ஜனநாகத்தையாவது ஏற்பதிலிருந்துமே சோஸலிஸத்தைப் பற்றி இனிமேல் சிந்திக்கலாம்.
முதலாளித்துவத்தை விடவும் பிற்போக்கான மன்னராட்சிக் கொடுங்கோண்மை எதேச்சாதிகாரக் கலாச்சாரமே சோஸலிஸத்தை தோற்கடித்த முதல் எதிரி என்பதை விருப்பு, வெறுப்பிற்கப்பால் ஒப்புக்கொள்ளவேண்டும். அதாவது சர்வதேச சோஸலிஸம் தோற்றுவிட்டதென்பதை அபிப்பிராய பேதமின்றி அனைவரும் ஏற்கின்றனர். அப்படியென்றால் தோற்றதற்கான காரணத்தை விளக்க ஏன் நாம் மறுக்க வேண்டும். "வட்டத்தைக்" கீறிவிட்டு "சதுரம்" என்று சாதித்துக் கொண்டிருக்கக்கூடாது. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் சோஸலிஸத்தின் தோல்வி அதன் ஜனநாயகமின்மையிற் குடி கொண்டுள்ளதென்பது முதலாவது விடயம். மன்னராட்சி எதேச்சாதிகாரங்களுக்கு எதிராக மனிதகுலம் பெரும் விடுதலைப் போராட்டங்களை நடத்திப் பெற்றுக் கொண்ட ஒரு ஜனநாயக உரிமைகளே மக்களின் அரசியற், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான கருவிகளாகும். அந்த ஜனநாயகத்தை மேலும் சிறப்பானதாகத் தீட்டியெடுக்க வேண்டுமே தவிர வரலாறு கழித்து விட்ட மன்னராட்சி எதேச்சதிகாரத்தை கையிலேந்துவதல்ல எமது பணி. அவ வாறு சோஸலிஸ அரசமைப்பானது எதேச்சதிகாரத்தைப் பிரயோகித்ததன் மூலம் அது இரண்டாயிரமாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று சோஸலிஸத்தை பழைய சகதிக்குள் புதைத்துவிட்டது.
மேற்கு ஐரோப்பாவிற்கு அருகே ரஸ்யா அமைந்திருப்பதால் மேற்கைரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகக் காற்றை ரஸ்யா சுவாசிக்கக் கூடியதாக இருந்ததால் அது விரைவிற் குறைந்தபட்ச ஜனநாயகத்தின் பக்கம் திரும்பியது. இவ வாறான நிலையில் முக்கால் நூற்றாண்டின் பின்னாவது ரஸ்யா ஜனநாக சிந்தனையை யாசித்தது. அதேவேளை பேரரச எதேச்சாதிகாரக் கலாச்சரத்துள் மூழ்கியுள்ள ஆசியாவின் ஒதுக்குப்புறச் சீனா ஜனநாயத்தை யாசிக்க இன்னும் சில பத்தாண்டுகளெடுக்குமோ? சீனா இப்போது திறந்த சந்தை முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அடியெடுத்து வைத்துவிட்டது. ஆனால் அரசியற் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்து. இந்த இரண்டுக்குமிடையேயான முரண்பாடு கிளர்ச்சியாய் வெடிக்க பல பத்தாண்டுகளாகும்.
அப்படியாயின் சோஸலிஸம் தோற்றுவிட்டதா? இல்லை; இல்லவேயில்லை. சோஸலிஸத்தை தனது மூக்கிற் காவிச்சென்ற மன்னராட்சிக் கொடுங்கோண்மை எதேச்சாதிகார அரசமைப்புத்தான் பிசகியதே தவிர சோஸலிஸமல்ல.
இத்தனைக்கும் மத்தியில் சோஸலிஸத்தின் உயிர்வாழ்வை வரலாற்றில் பின்வருமாறு அடையாளம் காணலாம். அதாவது சோஸலிஸத்தின் எழுச்சியை எதிர்கொள்வதற்காக, முதலாளித்துவம் தனது அரச அதிகாரத்தை தக்க வைப்பதற்காக, புரட்சியைத் தடுப்பதற்காக சோஸலிஸத்தின் சில கோரிக்கைகளை தானே அமுற்படுத்த தலைப்பட்டு சமூகநலன் பேண் அரசமைப்பு (றுநடகயசந ளுவயவந) என்பதை உருவாக்கியது. முதலாளித்துவம் இதனை எதிh ப்புரட்சி நடவடிக்கையாகவேதான் மேற்கொண்டது. ஆனால் அவ வாறு இதில் எமக்குச் சொல்லும் பாடம் என்னவெனில் முதலாளித்துவம் கூட சோஸலிச இலட்சியம் சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் முதலாளித்துவத்தைத் தக்க வைக்கவேண்டிய அளவிற்கு சோஸலிஸம் வரலாற்றுத் தேவையாகிவிட்டது. அதனால் சோஸலிஸம் வரலாற்றில் இனியும் எழுந்து நிமிரக்கூடிய ஓர் அவசியத்தையும், வரலாற்று நிர்ணயத்தையும் கொண்டுள்ளது என்பதை தெளிவுறப் புரியலாம். சோஸலிஸம் என்பது ஒரு வெறும் மனவிருப்பல்ல. அது ஒரு வரலாற்றுத் தேவையும், விஞ்ஞானபுூர்வமான வரலாற்று வளர்ச்சியைக் கொண்டுள்ளதும் அதற்கேற்ப விஞ்ஞான புூர்வமான அறிவியல் அணுகுமுறையைக் கோரிநிற்பதுமாகும். எனவே சோஸலிஸம் தனது இடைமாறு காலகட்டத்தில் பிழையான அணுகுமுறைகளால் உருமாறிப் போய்விட்டது.
இப்போது இப்படி தர்க்கபுூர்வ முடிவுக்கு வருவோம். சோஸலிஸம் ரஸ்யாவினதும், சீனாவினதும் சீரானதும் பழைய பேரரசுவாத எதேச்சதிகாரத்துக்குட் சிக்குண்டு போனதால் அமெரிக்கா உச்ச ஏகாதிபத்தியத்திற்கான நவீன ஏகப்பேரரசாக தன்னை உலகிற் ஸ்தாபித்துவிட்டது. பண்டையப் பேரரசுகளுக்கும், நவீன ஏகப்பேரரசுக்கும் அப்பால் உலகளாவிய hPதியில் மக்கள் சிறப்பான ஜனநாயகம் நோக்கி முன்னேற வேண்டும். மன்னராட்சி கொடுங்கோண மையைக் காப்பாற்ற, பீரங்கிக் கப்பல்களினதும், ஏவுகணைகளினதும், நவீன கதிரியக்க ஆயுதங்களதும் மிரட்டல் ஜனநாயகத்திற்கும் அப்பால் மக்களுக்கு சுதந்திரமாகச் சிந்திக்கவல்ல,செயற்படவல்ல ஜனநாயகம் வேண்டும். எதேச்சதிகாரத்தால் அமிர்தமே கிடைக்குமாயினும் அது வேண்டாம். பால்பழ முண்ணும் கூண்டுக் கிளியை விடவும் தானியம் பொறுக்கும் சிட்டுக்குருவி மேல் என்ற சிந்தனையின் கீழ் சோஸலிஸத்தை வடிவமைத்தாற்தான் பாலாலும், தேனாலும் மிக்க சோஸலிஸம் சாத்தியப்படும்.
ஆதலால் இப்போதைய எமது காலம் என்பது என்னவெனில் சோஸலிஸம் உருத்திரிந்து விட்ட காலமும், அமெரிக்கா முதலாவது ஏகப் பேரரசாக வந்துவிட்ட யுகமுமாகும்.
"முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம் என்ற ஒரு புதுக்கண்டுபிடிப்பை மாக ஸிஸத்திற்கு லெனின் வழங்கினாh ஆனால் அந்த ஏகாதிபத்தியம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் தொடர்வளர்ச்சியடைந்து செல்கின்றது. ஆதலால் ஏகாதிபத்தியம் பல கட்டங்களைக் கொண்டுள்ளதென்பது தெரிகின்றது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு இருக்கக்கூடிய கட்டங்கள் எத்தனை? இப்போது எத்தனையாவது கட்டத்தில் நாம் நிற்கிறோம்? ஏகப்பேரரசுவாதம் அப்படியாயின் அது எவ வாறானது போன்ற தத்துவாh த்த விடயங்களை மேற்கொண்டு யாரும் ஆராய வேண்டும். சோஸலிஸம் உருத்திரிந்துவிட்டதும் அமெரிக்கா ஏகப்பேரரசாகி விட்டதுமான காலகட்டம்தான் இது என்பதை பெருவெட்டாக வரையறை செய்யலாம். எனவே இத்தகைய சர்வதேச காலகட்டத்தில் உலகிலுள்ள பல்வேறு மக்கள் கூட்டமும் தமது தனி வீடுகூட சூழலுக்கேற்ப எத்தகைய காலகட்டப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன என்பதை சர்வதேச நிலமையுடன் பொருத்தித் தனித்தனியே வரையறை செய்ய வேண்டும்.
இருமையக்குவிவரசியல் செயற்பட்டு வந்த காலத்தில் பொதுவாக உலகநாடுகள், குறிப்பாக சிறிய நாடுகள் மேற்படி இரு மையங்களுக்குமிடையே ஓடிப்பிடித்தும், ஒளித்துப்பிடித்தும் விளையாட முடிந்தது. இரண்டுக்கும் இடையே தப்பியோடவும் முடிந்தது. ஆனால் தற்போதைய ஒருபடைக்குவிப்பு அரசியலானது சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற அரசுகளையே பணியவும் வைத்து விட்டது. அப்படியாயின் சிறியரசுகளின் நிலை முற்றிலும் கதியற்றதாகி விட்டது.
இந்தப் பரிதாபகரமான வரலாற்று இக்கட்டத்திலிருந்து கொண்டே மேற்படி நாடுகள் தமது ஆகக்கூடிய நன்மைக்கான பாத்திரத்தை எடைபோட்டு தம்மை வழிப்படுத்த வேண்டும். இந்தப் பெரும் பரபரப்புக்குள் வைத்தே இந்தியாவின் காலகட்டப் பாத்திரம், இலங்கையின் காலகட்டப் பத்திரம், தமிழீழ மண்ணின் காலகட்டப் பாத்திரமென ஒவ வொரு மக்கள் கூட்டமும் தத்தமது நிலையிலிருந்து இதனை எடைபோட்டு வகைப்படுத்த வேண்டும். இந்த வகையில் இலங்கை, ஈழம் என தனித்தனியே இவற்றின் காலகட்டப் பாத்திரத்தை எடைபோடும் பணி அடுத்த கட்டமாகும். அதனை இனிமேற்தான் ஆராய வேண்டும். துறைசார்ந்த பலரும் முயற்சிக்கலாம்.
மனிதகுலத்தின் வயது சுமாரக இருபது இலட்சம் ஆண்டுகள் கடந்த ஒரு நூற்றாண்டுகால வளர்ச்சியானது அதற்கு முற்பட்ட இலட்சக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியை விடவும் பெரிது. இனி வரப்போகும் சில பத்தாண்டுகால வளர்ச்சி இற்றைவரையான முழுவளர்ச்சியை விடவும் பெரிது. ஏனெனில் மனிதகுல வரலாற்று வளர்ச்சியானது எப்போதும் இதற்கு முற்பட்ட காலகட்ட வளர்ச்சியின் அனைத்iதையும் ஒன்று திரட்டிய கூட்டுவேக வளர்ச்சியைக் கொண்டது.
19ஆம் நூற்றாண்டு மாக்ஸிஸத்தை லெனின் 20ஆம் நூற்றாண்டிற்குரிய மாக்ஸிஸமாக 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளா த்தெடுத்தார். சில குறைபாடுகளுடனாயினும் அது வளர்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு அது தொடர்வளர்ச்சியடையவில்லை. அதேவேளை முதலாளித்துவம் பல்வேறு நிறுவன அமைப்புக்களினதும் பங்களிப்புடன் நேர்கணிய வளர்ச்சியைத் தொடர்ந்தடையலாயிற்று.
முதலாளித்துவத்திற் காணப்படும் அடிப்படை ஜனநாயகமும், நிறுவனங்களின் பலமும் ஊக்குவிப்புக்களும் இவ வாறான முதலாளித்துவ வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. இந்த வகையிற் பார்க்கும் போது சோஸலிஸ சித்தாந்தம் ஸ்தம்பிதமும், குழப்பமும், சிலவேளைகளில் எதிர்நிலை வளர்ச்சியும் அடைந்துள்ளது. இந்நிலையிற் சோஸலிஸம் பொறுத்து ஒரு தத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையுடனும், சமூகப்பொறுப்புணர்ச்சியுடனும் நுணுக்கமாகத் திட்டமிடவேண்டியுள்ளது. வளர்ச்சியென்பது தொடர்ச்சியான மாற்றங்களே என்பதால் முற்றிலும் புதிய சூழலைக் கருத்திற்கெடுத்து பழமை மேன்மைக் கோட்பாட்டுடன் சிறையுண்டு போகாது முற்றிலும் நவீனமாகச் சிந்திக்க வேண்டும் இந்நிலையில் ஒரு சிந்தனை மாற்றம் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
பண்பாடென்றால் ஆடை ஆபரணங்கள் தானென மனதைச் சுருக்கிக்கொள்ளாது செழிப்பான, பரந்த நவீன பண பாட்டு வளர்ச்சிக்கும் போகவேண்டும். அடிமைக் கலாச்சாரங்களைத் தூக்கியெறிந்து ஒவ வொருவரது சுயகௌரவத்தையும், சுதந்திரமான செயற்பாட்டிற்குரிய உரிமைகளையும் பண்பாடென யாசிக்க வேண்டும். சிறப்பான ஜனநாயக மென்பது ஒரு சிறந்த பண்பாடு; ஒரு சிறந்த வாழ்க்கை முறை; ஒரு சிறந்த மனப்பாங்கு, அதற்கூடாக அனைத்து வழிகளிலும் திறந்து, நிமிh ந்த ஒரு நவீன கண்ணோட்டமிக்க பண்பாட்டைத்தான் நாம் முதலர்த்தத்திற் பண்பாடென ஏற்றுக்கொள்ளலாம். இப்போது உலகிற் போராடும் அனைத்து மக்களுக்கும் முதலிற் தேவைப்படுவது ஒரு புதிய சிந்தனை மாற்றமே.
மு. திருநாவுக்கரசு

