06-22-2003, 08:50 AM
"நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன். விடுதலைப்புலிகளை நாளையும் ஆதரிப்பேன்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியதை அடுத்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் கைதுசெய்யப்பட்டது. தமிழக அரசியலில் மட்டுமல்லாது தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஜெயலலிதாவால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அதிரடி என்று கூட சொல்லலாம். இதற்கு முன்னரும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம் சாட்டி கைது செய்து தனது அரசியல் பணியில் நெஞ்சை விட்டகலாத நிகழ்வொன்றை அரங்கேற்றியிருந்தார்.
இவ்விரு கைது நடவடிக்கைகளும் ஜெயாவின் அரசியல் போக்கினை சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தமிழ் நாட்டில் முறியடிக்க தமிழ் நாட்டு அரசுக்கு மத்திய அரசு விசேட அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் வெளி நாட்டவர் சட்டத்தில் புதிய திருத்தமொன்றை செய்யுமாறும் பிரதமர் நரசிம்மராவின் காலப்பகுதியில் கேட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு யுூலை மாதம் ஜெயலலிதா விடுத்திருந்த அறிக்கையொன்றிலும் கூட ம.தி.மு.க, தி.மு.க. கட்சிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் வைகோ. மற்றும் மு.கருணாநிதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஜெயலலிதா தவறாது குறிப்பிட்டிருந்தார்.
ம.தி.மு.க.வின், வைகோ ஈரோடில் நடாத்திய ஒரு மாநாட்டின் பின்பே ஜெயலலிதா இவ வாறு ஒரு அறிக்கையை விட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் இரு கனவுகளும் ஏதோ ஒரு வகையில் தற்போது நனவாகியிருக்கின்றது. தமிழக அரசு தனது அரசியல் சுய இலாபத்திற்காக தனிப்பட்ட நபர்களை பழிவாங்குவதென்பது இதனு}டே தெளிவாகின்றது.
ஆனால் இவ வாறு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை விடுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிக்க எத்தனிப்பவர்களை கைது செய்வதுமாக இருக்கும் ஜெயலலிதா, 1998 டிசம்பரில் சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை கண்டன மாநாடு நடைபெற்றபோது இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி தமிழ் மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழந்து வருவது வேதனை அளிக்கின்றது என்றும் இம்மக்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு அனுதாபச் செய்திக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார்.
இவ வாறு இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஜெயலலிதா இதயச்சுத்தியுடன் அனுதாபம் தெரிவித்திருந்தால் அம் மக்களின் விடுதலை உரிமைக்காக போராடும் விடுதலை இயக்கத்தை தடை செய்யவும் இவ விடுதலை இயக்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க எத்தனிப்பவர்களை கைது செய்யவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் எதை உணர்த்துகின்றன.
இந்திய அரசியலில் அடுத்ததாக ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என அரசியல் ஊகங்கள் தெரிவிக்கின்றன எனவே தனது நீண்ட அரசியல் நலனுக்காக ஜெயலலிதா இவ வாறான முடிவுகளை எடுக்கின்றாரா என்ற கேள்வியும் எழாமலில்லை.
தற்போது ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு நடைபெற்றுவரும் அமைதிச் செயற்பாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்று புரிந்துணர்வு செயற்பாடுகள் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுக்களை நடாத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் சிறீலங்காவின் பேரினவாதிகளுக்கு ஆதரவும் உற்சாகமும் கொடுக்கும் செயற்பாடாகவே உள்ளன.
இதனிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்த குழுவுக்கு தலைமை தாங்கியவரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சமீபத்தில் தமிழகம் சென்று ஜெயலலிதாவை சந்தித்தபோது போர் நிறுத்தத்தை மீளாய்வு செய்து மீண்டும் யுத்தத்தை தொடருமாறு இலங்கை பிரதமர் ரணிலுக்கு இந்திய பிரதமர் வாஜ்பாயுூடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கதிர்காமர் ஜெயலலிதாவை இச்சந்திப்பின் போது கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க எம். ஜி. ஆரின் சுயசரிதை அடங்கிய நு}ல் ஒன்றை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடையொன்றை பிறப்பித்துள்ளார். எம். ஜி. இராமச்சந்திரனின் சுயசரிதையை வெளியிடவே ஜெயலலிதாவால் ஆக்கபுூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ள இந்த வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இவரால் எவ வாறான முடிவுகளை எடுக்க முடியும் என்பது சொல்லாமலே தெளிவாகின்றது.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையில் ஆரோக்கியமற்ற அசைவுகளை மேற்கொண்டு வரும் ஜெயலலிதாவுடன் சனாதிபதி சந்திரிகாவால் அனுப்பப்பட்ட, சனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையின் பேரில் தமிழகம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சுவார்த்தை நடாத்தியதாக தெரியவருகின்றது.
எது எவ வாறாயினும் இலங்கை தமிழ் மக்களின் விடுதலைப் பக்கங்களில் 'ஜெயா' வின் அசைவுகள் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை போட்டுடைக்கும் செயலாக இருப்பதாகவே தோன்றுகிறது.
எஸ்.வி.ஆர். கஜன்
இது ஜெயலலிதாவால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அதிரடி என்று கூட சொல்லலாம். இதற்கு முன்னரும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம் சாட்டி கைது செய்து தனது அரசியல் பணியில் நெஞ்சை விட்டகலாத நிகழ்வொன்றை அரங்கேற்றியிருந்தார்.
இவ்விரு கைது நடவடிக்கைகளும் ஜெயாவின் அரசியல் போக்கினை சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தமிழ் நாட்டில் முறியடிக்க தமிழ் நாட்டு அரசுக்கு மத்திய அரசு விசேட அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் வெளி நாட்டவர் சட்டத்தில் புதிய திருத்தமொன்றை செய்யுமாறும் பிரதமர் நரசிம்மராவின் காலப்பகுதியில் கேட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு யுூலை மாதம் ஜெயலலிதா விடுத்திருந்த அறிக்கையொன்றிலும் கூட ம.தி.மு.க, தி.மு.க. கட்சிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் வைகோ. மற்றும் மு.கருணாநிதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஜெயலலிதா தவறாது குறிப்பிட்டிருந்தார்.
ம.தி.மு.க.வின், வைகோ ஈரோடில் நடாத்திய ஒரு மாநாட்டின் பின்பே ஜெயலலிதா இவ வாறு ஒரு அறிக்கையை விட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் இரு கனவுகளும் ஏதோ ஒரு வகையில் தற்போது நனவாகியிருக்கின்றது. தமிழக அரசு தனது அரசியல் சுய இலாபத்திற்காக தனிப்பட்ட நபர்களை பழிவாங்குவதென்பது இதனு}டே தெளிவாகின்றது.
ஆனால் இவ வாறு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை விடுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிக்க எத்தனிப்பவர்களை கைது செய்வதுமாக இருக்கும் ஜெயலலிதா, 1998 டிசம்பரில் சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை கண்டன மாநாடு நடைபெற்றபோது இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி தமிழ் மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழந்து வருவது வேதனை அளிக்கின்றது என்றும் இம்மக்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு அனுதாபச் செய்திக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார்.
இவ வாறு இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஜெயலலிதா இதயச்சுத்தியுடன் அனுதாபம் தெரிவித்திருந்தால் அம் மக்களின் விடுதலை உரிமைக்காக போராடும் விடுதலை இயக்கத்தை தடை செய்யவும் இவ விடுதலை இயக்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க எத்தனிப்பவர்களை கைது செய்யவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் எதை உணர்த்துகின்றன.
இந்திய அரசியலில் அடுத்ததாக ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என அரசியல் ஊகங்கள் தெரிவிக்கின்றன எனவே தனது நீண்ட அரசியல் நலனுக்காக ஜெயலலிதா இவ வாறான முடிவுகளை எடுக்கின்றாரா என்ற கேள்வியும் எழாமலில்லை.
தற்போது ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு நடைபெற்றுவரும் அமைதிச் செயற்பாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்று புரிந்துணர்வு செயற்பாடுகள் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுக்களை நடாத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் சிறீலங்காவின் பேரினவாதிகளுக்கு ஆதரவும் உற்சாகமும் கொடுக்கும் செயற்பாடாகவே உள்ளன.
இதனிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்த குழுவுக்கு தலைமை தாங்கியவரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சமீபத்தில் தமிழகம் சென்று ஜெயலலிதாவை சந்தித்தபோது போர் நிறுத்தத்தை மீளாய்வு செய்து மீண்டும் யுத்தத்தை தொடருமாறு இலங்கை பிரதமர் ரணிலுக்கு இந்திய பிரதமர் வாஜ்பாயுூடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கதிர்காமர் ஜெயலலிதாவை இச்சந்திப்பின் போது கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க எம். ஜி. ஆரின் சுயசரிதை அடங்கிய நு}ல் ஒன்றை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடையொன்றை பிறப்பித்துள்ளார். எம். ஜி. இராமச்சந்திரனின் சுயசரிதையை வெளியிடவே ஜெயலலிதாவால் ஆக்கபுூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ள இந்த வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இவரால் எவ வாறான முடிவுகளை எடுக்க முடியும் என்பது சொல்லாமலே தெளிவாகின்றது.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையில் ஆரோக்கியமற்ற அசைவுகளை மேற்கொண்டு வரும் ஜெயலலிதாவுடன் சனாதிபதி சந்திரிகாவால் அனுப்பப்பட்ட, சனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையின் பேரில் தமிழகம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சுவார்த்தை நடாத்தியதாக தெரியவருகின்றது.
எது எவ வாறாயினும் இலங்கை தமிழ் மக்களின் விடுதலைப் பக்கங்களில் 'ஜெயா' வின் அசைவுகள் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை போட்டுடைக்கும் செயலாக இருப்பதாகவே தோன்றுகிறது.
எஸ்.வி.ஆர். கஜன்

