10-29-2005, 07:40 PM
Mathan Wrote:tamilini Wrote:kuruvikal Wrote:நல்ல கவியொன்று...!
பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!
திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. 10 மாசம் சுமந்தது மட்டும் இல்லை. அசைவுகளால் பேசியது முதல்க்கொண்டு உங்கட அசைவைப்புரிஞ்சு உங்கட எண்ணத்தை அறிஞ்சு. உங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரம் செய்து. உங்கட வாழ்க்கையில ஆரம்பம் முதல் கடைசிவரை வாறவங்க அம்மா தான். மனைவி இடையில தான் வாறாங்க. இவங்கள விட தாய்க்கு தனித்தன்மை உண்டு. குழப்பாதீங்க இரண்டையும்.
<b>தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி தான்</b>
இதுதான் முன்னுக்கு நீங்கள் எழுதியது...! இப்போ நாங்கள் சொல்வது... தாயைப் போல ( தாய்க்கு சமானமாக அல்ல..!) மனைவியும் அன்பு செலுத்த முடியும் என்பதையே...! அதுமட்டுமன்றி தாய்க்கு தாரம் நிகரில்லை..அதுபோல் தாரத்துக்கு தாயும் நிகரில்லை... இரண்டாம் நிலை என்பதுக்கு அங்கு இடமுமில்லை...இருவருக்கும் விசேடித்த சில தனிப் பண்புகள் இருப்பதால் அவர்கள் இருவரும் ஏதோ ஒருவகையில் சம நிலைக்குரியவர்களே...! நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்..மனைவியும் தாய்மைக்குரிய பண்புகளை வைத்திருக்கிறாள்..என்பதை..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->