06-22-2003, 08:48 AM
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பத்தாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
இப்பத்தாண்டு காலத்துள்
கடற்புலிகள் பெற்ற துரித இராணுவ வெற்றிகளும், துரித வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போரின்முக்கிய தீர்மானகரமான சக்திகளாக தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். சிறீலங்காத் தரப்பின் தலைவிதியை இராணுவத் தோல்விகளுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தமது கடற்பலத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே காரணம் என்பதை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பத்தாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
கடல்சார் போர் நடவடிக்கைகளில் கடற்புலிகளின் பத்தாண்டுப் பயணம் அரசியல், இராணுவ பரிமாணங்களோடு மூன்று ஈழப்போர்களின் களங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.
இந்தப் பத்தாண்டு கால கடற்புலிகளின் வரலாற்றில் தமிழீழத்தின் 23000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பையும் தாண்டி அவர்களின் தாக்குதல் இங்கு நீண்டிருக்கிறது.
அத்தோடு கடற்புலிகள் தமிழீழ கடற்பரப்பில் தமது ஆழுகையை ஒரு சீரான முறையில் பேணியும் வருகின்றனர்.
சிறீலங்கா கடற்படையினருடன் கடற்புலிகள் பொருதிய அனைத்துக் களங்களிலும் தமது அபரிமிதமான போர் ஆற்றலை வெளிப்படுத்தத் தவறியதில்லை.
இங்கு கடற்புலிகள் இந்த ஒரு தசாப்த காலத்தில் பெற்ற போரியல் பட்டறிவு போர்க்கால வளர்ச்சி: கடல்சார் போர்தாக்குதல் நுட்பம், கடற்போரிற்கான ஆட்பல வலு அதிகரிப்பு என்பவற்றோடு ஒரு கெரில்லாப் போரிற்கு எமது புவியியல் சூழலை விளங்கி கடற்படை ஒன்றை உருவாக்கிய தமிழீழ தேசியத் தலைவரின் மிகச் சிறந்த வழிநடத்தலுமே காரணமாக வருகின்றது.
சிறீலங்கா அரசால் வடபிராந்தியம், கிழக்கு கடற்பிராந்தியம், மேற்குக் கடற்பிராந்தியம், தெற்குக் கடற்பிராந்தியம் என்று நான்கு கடற் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் கடற்பிராந்தியங்கள் ஒவ வொன்றும் ஒவ வொரு இராணுவ பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கின்றது.
இவற்றில் கடற்புலிகள் செலுத்தும் செல்வாக்கானது சிறீலங்கா கடற்படையினருக்கு மாத்திரமின்றி சிறீலங்காவின் முப்படையினருக்கும் பெரும் இராணுவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்புலிகளின் அசைவியக்கமும் தாக்குதல் இலக்கும் மேற்குக் கடற் பிராந்தியத்தையும் தாண்டி தெற்குவரை நீண்டமையானது இராணுவ நெருக்கடிகளை மட்டும் சந்தித்த ஆளும் சிறீலங்கா அரசுகளுக்கு பெரும் அரசியல் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்ற இரட்டிப்பு பரிமாணத்தைத் தோற்றுவித்தது.
கடற்புலிகள் பத்தாண்டு காலத்தில் இரு வேறுபட்ட கடற்சண்டைகளிலும் சமர் களிலும் ஈடுபட்டனர்.
(01) ஆழம் குறைந்த கடற்சமர்
(02) ஆழ் கடற்சமர்
கடற்புலிகளால் ஆழம் குறைந்த கடற் பிரதேசங்களில் சந்தித்த சமர்களில் தமது ஆரம்பகட்ட வளர்ச்சியின் போதே வெற்றிகொண்டு சிறீலங்காப் படைத்தரப்புக்கு பெரும் சவால் விடுத்தனர். அத்தோடு சிறீலங்கா கடற்படையினரின் கரையோர கடல் ரோந்து மற்றும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தினர்.
இது கடற்புலிகளை கடற்சண்டையென்ற பரிமாணத்திலிருந்து முன்னகர்த்தி அவர்களை கடற்சமர்களில் ஈடுபடவைத்ததன் மூலம் பெரும் கடற்போரை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு மாத்தியது.
மூன்றாம்கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் கடற்சமர்களில் ஈடுபடத் தொடங்கி விட்ட கடற்புலிகள், மூன்றாம்கட்ட ஈழப்போரின் இறுதியில் ஆழ்கடற் போர்களில் ஈடுபட்டு கடற்படையின் அசைவியக்கத்தைத் தடுத்து நிறுத்துமளவிற்கு வளர்ச்சி பெற்றிருந்தனர்.
மூன்றாம்கட்ட ஈழப்போரின்போது கடற்படையினரால் வடபுலத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரிற்கான விநியோகத்தை மேற்கொள்ள வேண்டிய தமது பிரதான பணியினை தாம் நினைத்தவாறு மேற்கொள்ள முடியாதவாறு நிலைமையை மாற்றியிருந்தனர்.
திருமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு வரும் விநியோக அணியினை முல்லைத்தீவு கடற்பிரதேசத்தை தாண்டும் நேரம் பகற்பொழுதாக அமையக் கூடியவாறு ஒருங்குபடுத்தியமை இதற்குச் சான்று.
இது கடற்புலிகளால் ஆழ்கடலில் கடற்படையினரை இரவு நடைபெற்ற சமர்களில் வெற்றிகொண்டதன் எதிர் விளைவே ஆகும்.
அத்தோடு கடற்புலிகள் தமது படையியல் கட்டமைப்பினையும் பெரும் சமர்களையும் எதிர்கொள்ளத்தக்க வகையில் புதியபல கட்டமைப்புக்களையும் உருவாக்கி பல இராணுவ வெற்றிகளைப் பெற்றனர்.
இவ வாறு கடற்போரரங்கை தம் கைகளிற்குள் கையகப்படுத்திய கடற்புலிகளின் வெற்றிகளிற்கு அவர்களின் விசேட படையணிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இவற்றில் கடற்புலிகளின் கடற் கரும்புலிகள் படையணியும், விசேட நீரடி நீச்சல் பிரிவின் கடற்புலிகளின் மகளிர் படையணியின் பங்கும் முக்கியமானது.
இதனால் கடற்புலிகளை தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கண்ட துரித வளர்ச்சியின் பயனாகவே பின்னர் பெரும் தொடர் படைத்தளங்களை வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்தது.
இன்றுவரை தொடரும் புலிகளின் இராணுவ மேலாதிக்கத்திற்கு கடற்புலிகளின் பலமே பிரதான பங்காகும். அத்தோடு தரைச்சமர்களில் புலிகள் சக்திமிக்கவர்களாக இருப்பதற்கு கடற்புலிகளே உந்து சக்தியாக இருந்து வருகின்றனர்.
இந்தவகையில் கடற்புலிகளே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரோட்டத்தின் பிரதான சக்தியாக இருந்து வருகின்றனர்.
கடற்புலிகள் தமது போரியற் காலங்களில் சந்தித்த சமர்களில் பிரதானமானவையாக இரண்டு நடவடிக்கைகள் மிக முக்கியமானவையாக வரலாற்றில் பதிவாகியுள்ளன.
கடற்புலிகள் ஓயாத அலைகள் ஒன்று நடவடிக்கையின்போது கடற்படையினரின் முழுப் பலத்துடனும் பட்டப்பகலில் வான்படையினரின் தாக்குதலிற்கு மத்தியில் பொருதியமை பத்தாண்டுகால வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கது.
இந்த திரிஹடபகர இராணுவ நடவடிக்கையில் கடற்படையினரோடு மோதியதன் மூலம் கடற்புலிகள் சிறீலங்கா கடற்படையினருக்கு எதிரான வலுவான சக்தியாக தம்மை வெளிப்படுத்தினர்.
ஆனால் கடற்புலிகளின் போரியற் சாதனையாக மகுடம் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை என்றால் அது ஓயாத அலைகள் மூன்றின் போது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாவில் தரையிறக்கமேயாகும்
இத்தரையிறக்கத்தின் மூலம் புலிகள் இயக்கம் பெற்ற இராணுவ வெற்றி, சர்வதேச நாடுகளுக்கு து}தனுப்பி சிறீலங்கா படைத்தரப்பின் உயிர்காக்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளியது.
அத்தோடு இதன் மூலமாக புலிகள் இயக்கத்தையும் அதன் இராணுவ வெற்றியையும் உலகிற்கு பறை சாற்றியது. மேலும் கடற்புலிகள் கடல் ஆதிக்க சக்தியை தம் வசப்படுத்திக் கொண்டனர்.
இது புலிகள் இயக்கத்தை இராணுவ சமநிலையில் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக கடற்புலிகளே மாறியிருந்தார்கள்.
கடற்புலிகள் தொடர்ச்சியாக கடற்சமர்களில் ஈடுபட்டு சிறீலங்கா கடற்படையினரை ஒரு தற்காப்புப் போர் நடவடிக்கைக்குள் மட்டுப்படுத்தினர்.
ஆரம்பத்தில் கடற்புலிகளை வலுச்சண்டைக்கு இழுத்த சிறீலங்கா கடற்படையை கடற்புலிகள் தேடிச்சென்று தாக்குதல் பொறிக்குள் இருக்க வேண்டிய அளவிற்கு கடற்புலிகள் வளர்ச்சி கண்டிருந்தனர்.
ஒட்டுமொத்தத்தில் கடற்புலிகளின் பத்தாண்டு காலத்தாக்குதல் இலக்கிற்குள் மிகப் பாதுகாப்பான துறைமுகங்கள் எனச் சொல்லப்பட்ட எல்லாத் துறைமுகங்களுமே இலக்காகின.
இப்பத்தாண்டு காலத்துள் கடற்புலிகள் பெற்ற துரித இராணுவ வெற்றிகளும், துரித வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போரின் முக்கிய தீர்மானகரமான சக்திகளாக தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். சிறீலங்காத் தரப்பின் தலைவிதியை இராணுவத் தோல்விகளுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தமது கடற்பலத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே காரணம் என்பதை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
சிறி. இந்திரகுமார்.
இப்பத்தாண்டு காலத்துள்
கடற்புலிகள் பெற்ற துரித இராணுவ வெற்றிகளும், துரித வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போரின்முக்கிய தீர்மானகரமான சக்திகளாக தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். சிறீலங்காத் தரப்பின் தலைவிதியை இராணுவத் தோல்விகளுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தமது கடற்பலத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே காரணம் என்பதை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பத்தாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
கடல்சார் போர் நடவடிக்கைகளில் கடற்புலிகளின் பத்தாண்டுப் பயணம் அரசியல், இராணுவ பரிமாணங்களோடு மூன்று ஈழப்போர்களின் களங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.
இந்தப் பத்தாண்டு கால கடற்புலிகளின் வரலாற்றில் தமிழீழத்தின் 23000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பையும் தாண்டி அவர்களின் தாக்குதல் இங்கு நீண்டிருக்கிறது.
அத்தோடு கடற்புலிகள் தமிழீழ கடற்பரப்பில் தமது ஆழுகையை ஒரு சீரான முறையில் பேணியும் வருகின்றனர்.
சிறீலங்கா கடற்படையினருடன் கடற்புலிகள் பொருதிய அனைத்துக் களங்களிலும் தமது அபரிமிதமான போர் ஆற்றலை வெளிப்படுத்தத் தவறியதில்லை.
இங்கு கடற்புலிகள் இந்த ஒரு தசாப்த காலத்தில் பெற்ற போரியல் பட்டறிவு போர்க்கால வளர்ச்சி: கடல்சார் போர்தாக்குதல் நுட்பம், கடற்போரிற்கான ஆட்பல வலு அதிகரிப்பு என்பவற்றோடு ஒரு கெரில்லாப் போரிற்கு எமது புவியியல் சூழலை விளங்கி கடற்படை ஒன்றை உருவாக்கிய தமிழீழ தேசியத் தலைவரின் மிகச் சிறந்த வழிநடத்தலுமே காரணமாக வருகின்றது.
சிறீலங்கா அரசால் வடபிராந்தியம், கிழக்கு கடற்பிராந்தியம், மேற்குக் கடற்பிராந்தியம், தெற்குக் கடற்பிராந்தியம் என்று நான்கு கடற் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் கடற்பிராந்தியங்கள் ஒவ வொன்றும் ஒவ வொரு இராணுவ பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கின்றது.
இவற்றில் கடற்புலிகள் செலுத்தும் செல்வாக்கானது சிறீலங்கா கடற்படையினருக்கு மாத்திரமின்றி சிறீலங்காவின் முப்படையினருக்கும் பெரும் இராணுவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்புலிகளின் அசைவியக்கமும் தாக்குதல் இலக்கும் மேற்குக் கடற் பிராந்தியத்தையும் தாண்டி தெற்குவரை நீண்டமையானது இராணுவ நெருக்கடிகளை மட்டும் சந்தித்த ஆளும் சிறீலங்கா அரசுகளுக்கு பெரும் அரசியல் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்ற இரட்டிப்பு பரிமாணத்தைத் தோற்றுவித்தது.
கடற்புலிகள் பத்தாண்டு காலத்தில் இரு வேறுபட்ட கடற்சண்டைகளிலும் சமர் களிலும் ஈடுபட்டனர்.
(01) ஆழம் குறைந்த கடற்சமர்
(02) ஆழ் கடற்சமர்
கடற்புலிகளால் ஆழம் குறைந்த கடற் பிரதேசங்களில் சந்தித்த சமர்களில் தமது ஆரம்பகட்ட வளர்ச்சியின் போதே வெற்றிகொண்டு சிறீலங்காப் படைத்தரப்புக்கு பெரும் சவால் விடுத்தனர். அத்தோடு சிறீலங்கா கடற்படையினரின் கரையோர கடல் ரோந்து மற்றும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தினர்.
இது கடற்புலிகளை கடற்சண்டையென்ற பரிமாணத்திலிருந்து முன்னகர்த்தி அவர்களை கடற்சமர்களில் ஈடுபடவைத்ததன் மூலம் பெரும் கடற்போரை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு மாத்தியது.
மூன்றாம்கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் கடற்சமர்களில் ஈடுபடத் தொடங்கி விட்ட கடற்புலிகள், மூன்றாம்கட்ட ஈழப்போரின் இறுதியில் ஆழ்கடற் போர்களில் ஈடுபட்டு கடற்படையின் அசைவியக்கத்தைத் தடுத்து நிறுத்துமளவிற்கு வளர்ச்சி பெற்றிருந்தனர்.
மூன்றாம்கட்ட ஈழப்போரின்போது கடற்படையினரால் வடபுலத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரிற்கான விநியோகத்தை மேற்கொள்ள வேண்டிய தமது பிரதான பணியினை தாம் நினைத்தவாறு மேற்கொள்ள முடியாதவாறு நிலைமையை மாற்றியிருந்தனர்.
திருமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு வரும் விநியோக அணியினை முல்லைத்தீவு கடற்பிரதேசத்தை தாண்டும் நேரம் பகற்பொழுதாக அமையக் கூடியவாறு ஒருங்குபடுத்தியமை இதற்குச் சான்று.
இது கடற்புலிகளால் ஆழ்கடலில் கடற்படையினரை இரவு நடைபெற்ற சமர்களில் வெற்றிகொண்டதன் எதிர் விளைவே ஆகும்.
அத்தோடு கடற்புலிகள் தமது படையியல் கட்டமைப்பினையும் பெரும் சமர்களையும் எதிர்கொள்ளத்தக்க வகையில் புதியபல கட்டமைப்புக்களையும் உருவாக்கி பல இராணுவ வெற்றிகளைப் பெற்றனர்.
இவ வாறு கடற்போரரங்கை தம் கைகளிற்குள் கையகப்படுத்திய கடற்புலிகளின் வெற்றிகளிற்கு அவர்களின் விசேட படையணிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இவற்றில் கடற்புலிகளின் கடற் கரும்புலிகள் படையணியும், விசேட நீரடி நீச்சல் பிரிவின் கடற்புலிகளின் மகளிர் படையணியின் பங்கும் முக்கியமானது.
இதனால் கடற்புலிகளை தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கண்ட துரித வளர்ச்சியின் பயனாகவே பின்னர் பெரும் தொடர் படைத்தளங்களை வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்தது.
இன்றுவரை தொடரும் புலிகளின் இராணுவ மேலாதிக்கத்திற்கு கடற்புலிகளின் பலமே பிரதான பங்காகும். அத்தோடு தரைச்சமர்களில் புலிகள் சக்திமிக்கவர்களாக இருப்பதற்கு கடற்புலிகளே உந்து சக்தியாக இருந்து வருகின்றனர்.
இந்தவகையில் கடற்புலிகளே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரோட்டத்தின் பிரதான சக்தியாக இருந்து வருகின்றனர்.
கடற்புலிகள் தமது போரியற் காலங்களில் சந்தித்த சமர்களில் பிரதானமானவையாக இரண்டு நடவடிக்கைகள் மிக முக்கியமானவையாக வரலாற்றில் பதிவாகியுள்ளன.
கடற்புலிகள் ஓயாத அலைகள் ஒன்று நடவடிக்கையின்போது கடற்படையினரின் முழுப் பலத்துடனும் பட்டப்பகலில் வான்படையினரின் தாக்குதலிற்கு மத்தியில் பொருதியமை பத்தாண்டுகால வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கது.
இந்த திரிஹடபகர இராணுவ நடவடிக்கையில் கடற்படையினரோடு மோதியதன் மூலம் கடற்புலிகள் சிறீலங்கா கடற்படையினருக்கு எதிரான வலுவான சக்தியாக தம்மை வெளிப்படுத்தினர்.
ஆனால் கடற்புலிகளின் போரியற் சாதனையாக மகுடம் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை என்றால் அது ஓயாத அலைகள் மூன்றின் போது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாவில் தரையிறக்கமேயாகும்
இத்தரையிறக்கத்தின் மூலம் புலிகள் இயக்கம் பெற்ற இராணுவ வெற்றி, சர்வதேச நாடுகளுக்கு து}தனுப்பி சிறீலங்கா படைத்தரப்பின் உயிர்காக்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளியது.
அத்தோடு இதன் மூலமாக புலிகள் இயக்கத்தையும் அதன் இராணுவ வெற்றியையும் உலகிற்கு பறை சாற்றியது. மேலும் கடற்புலிகள் கடல் ஆதிக்க சக்தியை தம் வசப்படுத்திக் கொண்டனர்.
இது புலிகள் இயக்கத்தை இராணுவ சமநிலையில் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக கடற்புலிகளே மாறியிருந்தார்கள்.
கடற்புலிகள் தொடர்ச்சியாக கடற்சமர்களில் ஈடுபட்டு சிறீலங்கா கடற்படையினரை ஒரு தற்காப்புப் போர் நடவடிக்கைக்குள் மட்டுப்படுத்தினர்.
ஆரம்பத்தில் கடற்புலிகளை வலுச்சண்டைக்கு இழுத்த சிறீலங்கா கடற்படையை கடற்புலிகள் தேடிச்சென்று தாக்குதல் பொறிக்குள் இருக்க வேண்டிய அளவிற்கு கடற்புலிகள் வளர்ச்சி கண்டிருந்தனர்.
ஒட்டுமொத்தத்தில் கடற்புலிகளின் பத்தாண்டு காலத்தாக்குதல் இலக்கிற்குள் மிகப் பாதுகாப்பான துறைமுகங்கள் எனச் சொல்லப்பட்ட எல்லாத் துறைமுகங்களுமே இலக்காகின.
இப்பத்தாண்டு காலத்துள் கடற்புலிகள் பெற்ற துரித இராணுவ வெற்றிகளும், துரித வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போரின் முக்கிய தீர்மானகரமான சக்திகளாக தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். சிறீலங்காத் தரப்பின் தலைவிதியை இராணுவத் தோல்விகளுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தமது கடற்பலத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே காரணம் என்பதை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
சிறி. இந்திரகுமார்.

