10-29-2005, 02:14 PM
எனது தம்பியும், ஒன்றுவிட்ட தம்பியும் ஒருமுறை கோப்பாயிலே வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்க்கச் சென்றிருந்தார்கள். நாடகம் தொடங்கும் சமயம் பார்த்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை (பேய் மழை என்றும் இப்படியானவற்றைக் கூறுவார்கள்) ஆரம்பித்தது. நாடகத்தை மேடையேறுவதற்காகப் போடப்பட்டிருந்த தற்காலிக மேடை, அதன் சுற்றுப்புறங்கள் எங்கும் ஒரே வெள்ளம். சிறிது நேரத்தில் மேடையையும் காணவில்லை. நாடகம் நடிப்பதற்காக வேடமிட்டிருந்த கட்டபொம்மனும், எட்டப்பனும், வெள்ளையத்தேவனும் அந்த ஆடைகளுடனேயே வெளியே வந்து ஒன்றாக நின்றுகொண்டு மேடையைத் திருத்தியமைப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். அதனைப் பார்த்ததும் சகோதரர்களுக்கு நாடகம் பார்க்கும் ஆவல் மேலும் அதிகமாகிவிட்டது. தொடர்ந்தும் மழை பெய்துகொண்டே இருந்தது. பலவிதமான முயற்சிகளின் பின்னர் எதுவும் செய்ய முடியாத நிலையில் நாடக ஏற்பாட்டாளர்கள் "இன்று நாடகம் நடக்காது" என்று கவலையுடன் அறிவித்தனர்.
தம்பிமார் இருவருக்கும் அழுகையே வந்துவிட்டது. நாடகம் பார்க்கச் சென்றபோது பகல்வேளை ஆனால் இவையெல்லாம் நடந்து முடிய இரவு பதினென்றிற்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் சென்ற "சைக்கிளில்" ஒரு மணி (பெல்) மட்டும்தான் இருந்தது. "லைட்டும்" இல்லை, "பிறேக்கும்" இல்லை. குறுக்கு வழியெங்கும் வெள்ளம் அதிகமாக இருந்ததினால் நடுநிசியில் பிரதான பாதைவழியாகச் செல்வதென்று முடிவெடுத்தார்கள். கோப்பாயிலிருந்து உரும்பிராய்ச் சந்திக்கு வந்து, அங்கிருந்து பாலாலி வீதி வழியாக ஊரெளுவை நோக்கி உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலயத்தைக் கடந்து, அரிசி மிளகாய் அரைக்கும் ஆலை அருகில் வந்துகொண்டிருந்தனர். (இந்த ஆலையை "மில்" என்று ஆங்கிலத்தில்தான் அப்போதும் எல்லோரும் அழைப்பார்கள்)
எங்கும் பயங்கரமான இருள். கோப்பாய்க்கும் உரும்பிராய்க்கும் இடையே ஓர் பெரிய மயானம் இருக்கிறது. சிறுவர்கள் இருவருக்கும் அதனைத் தாண்டி வந்தபோது ஏற்பட்ட அச்சம் அவர்கள் மனங்களில் அப்படியே இருந்தது. அச்சத்தைப் போக்குவதற்காக இடையிடையே ஒருவர் ஏதாவது கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்லியபடியே வந்துகொண்டிருந்தனர். துவிச்சக்கரவண்டியின் முன்னால் அமர்ந்த ஒன்றுவிட்ட தம்பி அதனை ஓட்டிக்கொண்டிருந்தவரை நோக்கி "இப்போது எவ்விடத்தில் இருக்கிறோம்" என்று கேட்டார். அதற்கு எனது தம்பி இடையிடையே எழுந்த மின்னல் வெளிச்சத்தில் நாலாபுறமும் பார்த்துவிட்டு "மில்லடி, மில்லடி" என்றார். அதாவது நாம் அந்த ஆலை அருகில் வந்துவிட்டோம் என்று பொருள்படும்படியாகக் கூறினான். திடீரென முன்னாலிருந்தவர் "சைக்கிளில்" பொருத்தியிருந்த மணியை இரு தடவைகள் ஒலிக்கச் செய்தார். வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த எனது தம்பிக்கு பயம் மேலும் அதிகமாகியது. தன் கண்களுக்குத் தெரியாதபடி யாரோ பாதையின் குறுக்கே சென்றிருக்கவேண்டும் அதுதான் அவன் மணியை அடித்திருக்கிறான் என்று தனக்குள் எண்ணினான். ஆனால் முன்னால் இருந்தவரோ தன் கண்களுக்குத் தெரியாதபடி யாரோ தமக்குக் குறுக்கே சென்றதை வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவர் கண்டிருக்கிறார். அது நிச்சயம் பேயாகத்தான் இருக்கவேண்டும் என்று தனக்குள் எண்ணினான். அடுத்த சில விநாடிகளுக்கு இருவரும் எதுவுமே பேசவில்லை. வண்டியை இறுக்கமாகப் பிடித்தபடியே சென்றுகொண்டிருந்தனர்.
மீண்டும் எனது தம்பி முன்னாலிருந்தவரிடம் மிகுந்த அச்சத்தோடு "நீ எதற்காக அங்கே "சைக்கிள்" மணியை அடித்தாய்?" என்று நடுங்கியபடியே கேட்டார். "நீ தானே "பெல்லடி, பெல்லடி" என்று இரு தடவைகள் கூறினாய்" என்று பதில் கூறினான். "நான் மில்லடி, மில்லடி என்றல்லவா கூறினேன்" என்று பதில் கூறினான் என் தம்பி. மீண்டும் சில விநாடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. திடீரென்று இருவரும் ஒரே நேரத்தில் பெலத்துச் சிரித்தனர். "மில்லடி" என்ற சொல் அவன் காதில் "பெல் - அடி" (மணி - அடி) என்று மாறிக் கேட்டதன் வினையை இன்று நினைத்தாலும் ஒரே சிரிப்புத்தான்.
"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்ய்ய்ய்!" அல்லவா?
தம்பிமார் இருவருக்கும் அழுகையே வந்துவிட்டது. நாடகம் பார்க்கச் சென்றபோது பகல்வேளை ஆனால் இவையெல்லாம் நடந்து முடிய இரவு பதினென்றிற்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் சென்ற "சைக்கிளில்" ஒரு மணி (பெல்) மட்டும்தான் இருந்தது. "லைட்டும்" இல்லை, "பிறேக்கும்" இல்லை. குறுக்கு வழியெங்கும் வெள்ளம் அதிகமாக இருந்ததினால் நடுநிசியில் பிரதான பாதைவழியாகச் செல்வதென்று முடிவெடுத்தார்கள். கோப்பாயிலிருந்து உரும்பிராய்ச் சந்திக்கு வந்து, அங்கிருந்து பாலாலி வீதி வழியாக ஊரெளுவை நோக்கி உரும்பிராய் கற்பக விநாயகர் ஆலயத்தைக் கடந்து, அரிசி மிளகாய் அரைக்கும் ஆலை அருகில் வந்துகொண்டிருந்தனர். (இந்த ஆலையை "மில்" என்று ஆங்கிலத்தில்தான் அப்போதும் எல்லோரும் அழைப்பார்கள்)
எங்கும் பயங்கரமான இருள். கோப்பாய்க்கும் உரும்பிராய்க்கும் இடையே ஓர் பெரிய மயானம் இருக்கிறது. சிறுவர்கள் இருவருக்கும் அதனைத் தாண்டி வந்தபோது ஏற்பட்ட அச்சம் அவர்கள் மனங்களில் அப்படியே இருந்தது. அச்சத்தைப் போக்குவதற்காக இடையிடையே ஒருவர் ஏதாவது கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்லியபடியே வந்துகொண்டிருந்தனர். துவிச்சக்கரவண்டியின் முன்னால் அமர்ந்த ஒன்றுவிட்ட தம்பி அதனை ஓட்டிக்கொண்டிருந்தவரை நோக்கி "இப்போது எவ்விடத்தில் இருக்கிறோம்" என்று கேட்டார். அதற்கு எனது தம்பி இடையிடையே எழுந்த மின்னல் வெளிச்சத்தில் நாலாபுறமும் பார்த்துவிட்டு "மில்லடி, மில்லடி" என்றார். அதாவது நாம் அந்த ஆலை அருகில் வந்துவிட்டோம் என்று பொருள்படும்படியாகக் கூறினான். திடீரென முன்னாலிருந்தவர் "சைக்கிளில்" பொருத்தியிருந்த மணியை இரு தடவைகள் ஒலிக்கச் செய்தார். வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த எனது தம்பிக்கு பயம் மேலும் அதிகமாகியது. தன் கண்களுக்குத் தெரியாதபடி யாரோ பாதையின் குறுக்கே சென்றிருக்கவேண்டும் அதுதான் அவன் மணியை அடித்திருக்கிறான் என்று தனக்குள் எண்ணினான். ஆனால் முன்னால் இருந்தவரோ தன் கண்களுக்குத் தெரியாதபடி யாரோ தமக்குக் குறுக்கே சென்றதை வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவர் கண்டிருக்கிறார். அது நிச்சயம் பேயாகத்தான் இருக்கவேண்டும் என்று தனக்குள் எண்ணினான். அடுத்த சில விநாடிகளுக்கு இருவரும் எதுவுமே பேசவில்லை. வண்டியை இறுக்கமாகப் பிடித்தபடியே சென்றுகொண்டிருந்தனர்.
மீண்டும் எனது தம்பி முன்னாலிருந்தவரிடம் மிகுந்த அச்சத்தோடு "நீ எதற்காக அங்கே "சைக்கிள்" மணியை அடித்தாய்?" என்று நடுங்கியபடியே கேட்டார். "நீ தானே "பெல்லடி, பெல்லடி" என்று இரு தடவைகள் கூறினாய்" என்று பதில் கூறினான். "நான் மில்லடி, மில்லடி என்றல்லவா கூறினேன்" என்று பதில் கூறினான் என் தம்பி. மீண்டும் சில விநாடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. திடீரென்று இருவரும் ஒரே நேரத்தில் பெலத்துச் சிரித்தனர். "மில்லடி" என்ற சொல் அவன் காதில் "பெல் - அடி" (மணி - அடி) என்று மாறிக் கேட்டதன் வினையை இன்று நினைத்தாலும் ஒரே சிரிப்புத்தான்.
"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்ய்ய்ய்!" அல்லவா?

