Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உள்ளங்கள் உறங்கும் வரை....
#1
<img src='http://img493.imageshack.us/img493/4247/pen3jk.jpg' border='0' alt='user posted image'>

<b>ஒரு துளி
உயிர்த்துளி
உணர்வுகள் தேங்கிட
உருவம் வாங்கிட
உள்ளங்கள் போலியாய்
உதிர்க்கின்றன
உண்மைகள் எங்கும்
உறங்குகின்றன...!

உறையும் கையுமாய்
உணர்வுகள் தாண்டி
உணரிகள் நம்பி
உண்மைக்கு
ஒரு திருப்பள்ளி எழுச்சி
அது சாதனை..?!
ஒரு வார்த்தை
உண்மையாய் இருந்தால்
ஏன் இது...??!

உறவுகள் ஊனமாக்க
உளறல்கள் உதிர்கின்றன
இல்லாத ஒன்றுக்காய்
இருப்பதாய் கற்பனை
ஒத்த முனை ஏன் கவராது
கவரும்....
ஆய்ந்து சொல்லி
சாதிக்கத் துடிக்கிறது
ஓர் உள்ளம்
தேவை அது - அதற்காய்
உண்மைகள் மீண்டும்
உறங்குகின்றன...!

உலகம் தட்டை
உண்மை அன்று
இன்றது கோளம்
அங்கு கோழைகள் யாருமிலர்
நாளை மீண்டும்
உண்மைகள் மாறும்
விதிகள் மாற்றும்
மதிகள் கலங்கும்..!
உணர்வுகள் வாங்கிடா
உண்மைகள்
உலகம் உணரும்
அழிவின் விழிம்பில்....!

அதுவரை....
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உள்ளங்கள் உறங்கும் வரை.... - by kuruvikal - 10-28-2005, 11:44 PM
[No subject] - by Birundan - 10-29-2005, 10:03 AM
[No subject] - by sathiri - 10-29-2005, 02:17 PM
[No subject] - by suddykgirl - 10-29-2005, 02:47 PM
[No subject] - by kpriyan - 10-29-2005, 02:48 PM
[No subject] - by tamilini - 10-29-2005, 03:44 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:50 PM
[No subject] - by kuruvikal - 10-31-2005, 10:02 PM
[No subject] - by வெண்ணிலா - 11-01-2005, 07:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)